Saturday, January 14, 2012

பனிச்சறுக்கலில் சூரப்புலியான காகம்!

காகங்கள் பொதுவாக புத்திசாதுரியம் மிக்கவை. ஆம், ஜாடியின் அடியில் இருந்த நீரை ஒவ்வொரு கல்லாகப் போட்டு மேலே வரச் செய்து தந்திரமாக நீரைப் பருகிய பெருமை காகத்தையே சாரும்.


இது நாங்கள் பாலர் வகுப்பில் படித்த கதையின் சுருக்கம். விலங்குகளை, பறவைகளை நாம் பொதுவாக ஐந்தறிவு உள்ளவை என்கின்றோம்... ஆனால் இந்தக் காகத்தின் ஆச்சரியமான செயலைப் பாருங்கள்...பனிபடர்ந்த கட்டிடம் ஒன்றின் கூரையின் மேற்பரப்பிலிருந்து ஜோராக பனிச்சறுக்கு விளையாடுகிறது.இந்தக் காகம் தான் தற்போது இன்டர்நெட்டில் பறவைகள் ஸ்டாராக மாறியுள்ளது. 


இந்த வீடியோ Youtube இல் சக்கை போடு போடுகின்றது.  48 மணி நேரத்துக்குள் அரை மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் புத்திசாலிக் காகத்தின் தந்திரமான செயற்பாட்டைப் பார்த்து விட்டனர்.ஒரு நிமிடமும் 24 செக்கன்களும் ஓடும் இந்த வீடியோவானது காகம் ஒரு ஜாடி ஒன்றின் மூடியின் மேல் இருந்தே பனிச்சறுக்கு விளையாடுகின்றது.ஒவ்வொரு முறையும் சறுக்கி கீழே வந்த பின்னர் அலகினால் மூடியைக் கொத்திக் கொண்டு மேல் சென்று திரும்பவும் கீழே வருகின்றது.இந்த குறும்புக்காரக் காகம் உண்மையில் பறவைகளுக்கே முன்னுதாரணமாகத் திகழ்கின்றது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF