Saturday, April 30, 2011

உங்கள் கணினி பாஸ்வேர்ட் மறந்து போனால்…


























விண்டோஸ் எக்ஸ்பி இயங்கு தளத்தில் பயனர் கணக்கை (user account) உருவாக்கி அதனை எவரும் அணுகா வண்ணம் பாஸ்வர்ட் மூலம் பாதுகாப்பளிக்கவும் முடியும் என்பது நீங்கள் அறிந்த விடயமே.
அப்படி நீங்கள் உருவாக்கும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்ட் ஒருவேளை மறந்து போனால் விண்டோஸில் டிபோல்டாக உருவாக்கப்படும் அட்மினிஸ்ட் ரேட்டர் (administrator) கணக்கு மூலம் லாக் ஓன் செய்து அதனை நீக்க முடியும். இந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குப் பாஸ்வர்ட் இட்டுக் கொள்வோரும் உண்டு. இப்போது அந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக் குரிய பாஸ்வர்டும் மற்ந்து போனால் என்ன செய்வது?

அதற்கும் ஒரு தீர்விருக்கிறது. எனினும் இந்த வழிமுறை ஓரளவு சிக்கலானது. விண்டோஸைப் புதிதாக நிறுவும் முறையை அறிந்திருப்போருக்கு இது இலகுவான விடயமே.முதலில் கணினியை இயக்கி சிடியிலிருந்து பூட் ஆகுமாறு பயோஸ் (BIOS) செட்டப்பில் மாற்றி விடுங்கள். கணினியை மறுபடி இயக்கி விண்டோஸ் எக்ஸ்பீ சிடியை ட்ரைவிலிட Press any key to boot from CD எனும் செய்தி திரையில் தோன்றும். அப்போது ஒரு விசையை அழுத்த சிடியிலிருந்து கணினி பூட் ஆக ஆரம்பிக்கும். இது விண்டோஸை நிறுவும் செயற்பாட்டில் முதற்படியாகும்.

இந்த செயற்பாட்டில் கணினியைப் பரிசோதித்து பைல்கள் லோட் செய்யப்பட்டதும் Licensing Agreement திரை தோன்றும். அப்போது
F8 விசையை அழுத்தியதும் வரும் திரையில் புதிதாக விண்டோஸை நிறுவுவதா அல்லது ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளதை சரி செய்வதா (Repair) என வினவும். அப்போது கீபோர்டில் R கீயை அழுத்தி ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள விண்டோஸை சரி செய்வதற்கான விருப்பை தெரிவு செய்யவும்.

அடுத்து கணினி மறுபடி இயங்க ஆரம்பித்து (restart) ஒரு சில நிமிடங்களில் திரையின் இடது புறத்தில் Installing Devices எனும் செயற்பாடு நடைபெறக் காணலாம். இந்த இடத்தில்தான் நீங்கள் செயற்பட வேண்டியுள்ளது. இங்கு கீபோர்டில்
SHIFT + F10 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துங்கள். அப்போது திரையில் கமாண்ட் விண்டோ தோன்றும். கமாண்ட் ப்ரொம்டில் NUSRMGR.CPL என டைப் செய்து எண்டர் கீயை அழுத்த கண்ட்ரோல் பேனலிலுள்ள User Accounts விண்டோ திறக்கக் காணலாம். இங்கு நீங்கள் விரும்பும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ நீக்கவோ முடியும்.,

ஒரு யூசர் கணக்கில் நுளையும்போது அதாவது லொக்-ஓன் செய்யும் போது பாஸ்வர்டை வினவாமல் செய்ய அதே கமாண்ட் ப்ரொம்டில்
control userpasswords2 என டைப் செய்து எண்டர் கீயை அழுத்துங்கள். அங்கு அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ அல்லது நீக்கவோ (Reset password) ரீசெட் பாஸ்வர்ட் பட்டனில் க்ளிக் செய்து மாற்றிக் கொள்ளலாம்.மாற்றங்கல் செய்த பின்னர் அந்த டயலொக் பொக்ஸை மூடிவிட்டு விண்டோஸ் ரிபெயாரிங் செயற்பாடு பூர்த்தியாகும் வரை அதனைத் தொடர வேண்டும்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

மொழி தெரியாதவர்களுக்கு மொழி பெயர்த்துக் கொடுக்கும் மூக்குக் கண்ணாடி.


மக்களிடையே தொடர்புக்கு மிகவும் அடிப்படையானது மொழி. இன்று அறிவியல் வளர்ச்சியால் உலகமே சுருங்கிவிட்டது.அதனால் பலமொழிகளை அறிந்து வைத்திருப்பது நமக்க அவசியமாகிறது. குறைந்தபட்சமாக தாய்மொழி, தேசியமொழி, உலகப்பொதுமொழி ஆகியவற்றையாவது அறிந்திருக்க வேண்டும்.
சிலர் பொது இடங்களில் பலமொழிகளை பேசி அசர வைப்பார்கள். பலர் தாய்மொழியைத் தவிர மற்றமொழி தெரியாமல் விழி பிதுங்க நிற்பார்கள். படித்த சிலர்கூட பொது இடங்களில் இருக்கும் அறிவிப்புகள் வேறு மொழியில் இருந்தால் கண்டும் காணாமல் சென்று விடுவார்கள். படிக்கும் குழந்தைகளுக்கும் மற்ற மொழிப் பாடங்கள் சிரமமாக இருக்கும்.இவர்களுக்கு உதவும் வகையில் மொழிபெயர்க்கும் கண்ணாடி வந்திருக்கிறது. இந்த மூக்குக்கண்ணாடியுடன் இணைந்து ஒரு டிரான்ஸ்லேட்டர்(மொழிபெயர்க்கும்) கருவி இருக்கும். இது ஒரு கமெராவும், மைக்ரோ போனும் இணைந்த கருவியாகும்.
இந்த கண்ணாடியை அணிந்து கொண்டு நீங்கள் வாசிக்கும் போது மைக்ரோபோன் வேலை செய்து அதை மெமரி கருவிக்கு அனுப்பும். அங்கிருந்து அதற்கான மொழிபெயர்ப்பு வார்த்தை உங்களுக்குத் தெரியும் படியாக காட்டப்படும்.இதனால் நீங்கள் எளிதில் அறிவிப்புகளையோ, பத்திரிகைகளையோ வாசித்து அறிந்து கொள்ள முடியும். இந்தக்கருவி ஜப்பான் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு சோதனை முறையில் வெற்றி கிடைத்துவிட்டது.
ஆனால் நாம் வாசிக்கும் வேகத்துக்கு மொழி பெயர்க்கும் வேகம் இல்லை. எனவே இதன் வேகத்தை அதிகரிக்கவும், வார்த்தைகளை மொழிபெயர்த்து உச்சரித்து சொல்லும் வகையில் மாற்றவும் ஆய்வுகள் நடந்து வருகிறது. படிக்கும் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது, மொழித்தடுமாற்றம் உடைய பலருக்கும் இந்தக் கண்ணாடி உபயோகப்படும் என்பதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

இன்றைய செய்திகள்.

அமெரிக்காவின் அவசர செய்தியுடன் வருகின்றார் பிளேக்!
அமெரிக்காவின் தென்னாசிய விவகாரங்களுக்கான உதவி வெளிவிவகார அமைச்சரும், இலங்கைக்கான முன்னாள் தூதுவரும் ஆன ரொபேட் ஓ பிளேக் அவசர விஜயம் ஒன்றை மேற்கொண்டு எதிர்வரும் 03 ஆம் திகதி கொழும்பு வருகின்றார். ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவால் இலங்கைக்கு எதிராக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையால் சர்வதேச அரசியல் மற்றும் இராஜதந்திர நிலைமைகளில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டு இருக்கின்றது. 

இந்நிலையில் பிளேக்கின் திடீர் விஜயம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் அவதானிகள் மற்றும் இராஜதந்திரிகள் ஆகியோரால் நோக்கப்படுகின்றது. அமெரிக்க அரசின் மிக முக்கிய செய்திகளுடன் பிளேக் வருகின்றார் என்றும் இவர் இலங்கை அரசின் உயர் மட்ட அமைச்சர்களை சந்தித்து உரையாடுவார் என்றும் அவசியம் ஏற்படும் பட்சத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவையும் சந்திப்பார் என்றும் தெரிகின்றது. 

இவரை எதிர்கொள்கின்றமைக்கான தயார்ப்படுத்தல்களில் இலங்கை அரசும் மும்முரமாக ஈடுபட்டு உள்ளது.ஆனால் இது ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த விஜயம் என்றும் இவ்விஜயத்தின்போது ஜனாதிபதி மஹிந்தவை பிளேக் சந்திக்க மாட்டார் என்றும் சில தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும் இடையிலான கப்பல் சேவை மே 10 முதல் ஆரம்பம்!

கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை மே மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக துறைமுக விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.இருநாடுகளுக்கும் இடையிலான பயணிகள் கப்பல்சேவை இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அமைக்க திட்டமிடப்பட்டிருந்ததாகவும், தொழில்நுட்பக் கோளாறுகளினால் இந்தக் கப்பல் சேவையை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. 


வாரத்தில் மூன்று நாட்கள் நடத்தப்படவுள்ள இந்தச் சேவைக்கு இந்தியா மூன்று கப்பல்களையும், இலங்கை இரண்டு கப்பல்களையும் பயன்படுத்தவுள்ளதாகவும் அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த 12 ஆம் திகதி தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையில் இலங்கை கப்பல் கூட்டுத்தாபனம் சேவையில் ஈடுபடுத்தவுள்ள பயணிகள் கப்பலான ‘ஸ்கொட்டியா பிறின்சஸ்‘ வெள்ளோட்டம் விடப்பட்டது. 


ஒவ்வொரு கப்பலிலும் நீச்சல் தடாகம், நூலகம், உணவகங்கள், சூதாட்ட விடுதிகள் என்பனவும் அமைக்கப்பட்டுள்ளது. ஆயிரத்து 44 பயணிகளையும், 300 வாகனங்களையும் இந்தக் கப்பல் ஒரே தடவையில் ஏற்றிச் செல்லும் வசதிகளைக் கொண்டுள்ளது. இந்தச் சேவைக்கு இருவழிப் பயணக் கட்டணமாக 10 ஆயிரம் ரூபாவை அறிவிடத் திட்டமிட்டுள்ள அரசாங்கம் கொழும்புத் துறைமுகத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு, சுங்கத் திணைக்களம், காவல்துறை நிலையங்களை வேகமாக அமைத்து வருகிறது.

யுத்தத்திற்குப் பின்னரே இலங்கை அரசுக்கு எதிரிகள் அதிகரித்துள்ளனராம்!

யுத்தம் இடம்பெற்ற போது தமிழீழ விடுதலைப்புலிகள் மாத்திரமே எதிரியாக இருந்தனர். ஆனால் போர் முடிவடைந்த பின்னர் பல எதிரிகள் இலங்கைக்கு எதிராக உருவாகி உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அரசதரப்பை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள அந்த செய்தியில், முன்னர் விடுதலைப்புலிகளும் தமிழ் மக்களும் தான் அரச தரப்பின் எதிரிகளாக காணப்பட்டனர். ஆனால் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னர் அரசு எதிர்கொள்ளும் எதிரிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது. இதற்கான காரணம் தமிழ் மக்களின் நடவடிக்கைகள் அனைத்துலக மட்டத்திற்கு வேகமாக பரவியுள்ளமையாகும். 


தற்போது அமெரிக்க, பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகளும் மற்றும் அனைத்துலக மன்னிப்புச்சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், புலம்பெயர் தமிழ் சமூகம் ஆகியனவும் இலங்கையின் எதிரிகளாக உருமாற்றம் பெற்றுள்ளன. இவர்களை முறியடிப்பதற்கு அரசானது வெளிவிவகார அமைச்சினுள் இரு பிரிவுகளை உருவாக்கியுள்ளது. 


அவற்றில் ஒரு பிரிவு புலம்பெயர் தமிழ் மக்களின் நடவடிக்கைகளையும், மற்றைய பிரிவு அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளையும் கையாள்வதற்காக அமைக்கப்பட்டுள்ளன. சிறந்த அனுபவமும் ஆற்றலும் கொண்ட இராஜதந்திரிகளை கொண்டிராத வெளிவிவகார அமைச்சு தனித்து நின்று இவர்களை முறியடிக்க முடியாது என அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை மீதான சர்வதேச விசாரணை குறித்து ஐ.நா. செயலாளர் நாயகம் இதுவரை நடவடிக்கையில்லை.

இலங்கை மீதான சர்வதேச விசாரணைகள் குறித்து ஐ.நா. செயலாளர் நாயகம் இதுவரை எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதாக இன்னர்சிற்றி பிரஸ் தெரிவிக்கின்றது.ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சில் மற்றும் பொதுச் சபை என்பவற்றின் இணக்கம் கிடைக்குமிடத்து மட்டுமே ஐக்கிய நாடுகள் சபையின் பிரமாணங்களின் பிரகாரம் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகள் குறித்து விசாரிப்பதற்கென சர்வதேச விசாரணையொன்றுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆயினும் ஐ.நா. செயலாளர் நாயகம் அது தொடர்பில் இதுவரை பாதுகாப்புக் கவுன்சிலிடமோ அல்லது பொதுச்சபையிடமோ எதுவித ஆலோசனைகளையும் கோரவில்லை என்று இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.ஆயினும் இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையொன்றின் அவசியம் குறித்து சுருக்கமான குறிப்பொன்று மட்டும் இடப்பட்டுள்ளதை பாதுகாப்புக் கவுன்சிலின் தலைவர் நெஸ்டோ ஒசோரியோ உறுதிப்படுத்தியுள்ளார்.
தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வுக்கான வாக்குறுதியை அடுத்து நிபுணர்குழு அறிக்கையில் இலங்கைக்கு ஆதரவளிக்க இந்தியா முடிவு.
தமிழ் மக்களைத் திருப்திப்படுத்தத் தக்கதான அதிகாரப் பகிர்வொன்று குறித்த இலங்கையின் வாக்குறுதியையடுத்து நிபுணர்குழு அறிக்கை விடயத்தில் இலங்கைக்கு ஆதரவளிக்க இந்தியா முன்வந்துள்ளது.ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் இந்தியாவின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலின் போதே பிரஸ்தாப வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.
யுத்தம் நிறைவடைந்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும் இலங்கை அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவோ, அதிகாரப் பகிர்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ இல்லை என்பது குறித்து கடும் தொனியில் இந்தியப் பிரதமர் தனது விசனத்தை வெளிப்படுத்தியுள்ளதாக அலரி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறைந்த பட்சம் எதிர்வரும் மூன்று மாத காலத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்று உறுதியாக வாக்களித்தால்  மட்டுமே நிபுணர் குழு அறிக்கை விடயத்தில் இலங்கைக்குச் சார்பாக செயற்பட முடியும் என்று இந்தியப் பிரதமர் விடாப்பிடியாக தெரிவித்துள்ளார்.
வேறு வழியின்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவ்வாறான வாக்குறுதியை அளித்த பின்னரே நிபுணர்குழு அறிக்கை விடயத்தில் இந்தியா ஓரளவுக்கு இலங்கைக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளது. ஆயினும் அதனை முழுமையாக ஆராய்ந்த பின்பே இறுதி நிலைப்பாட்டை அறிவிக்க முடியும் என்றும் இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இனிதே முடிந்தது வில்லியம் : மிடில்டன் 'ராஜ திருமணம்'

இளவரசர் வில்லியம், கேட் மிடில்டன் ஆகியோரின் திருமணம், வ்ஸ்ட்மினிஸ்டர் தேவாலயத்தில் இன்று இனிதே நடந்தேறியது. சுமார் 30 வருடங்களுக்கு பிறகு இங்கிலாந்து அரச குடும்பத்தில் இடம்பெற்ற கோலாகலமான திருமண நிகழ்வு இது ஆகும்.திருமண பந்தத்தில் கணவனாக தான் ஏற்கும் வில்லியமுக்கு 'என் அன்பையும், ஆதரவையும், கௌரவத்தையும் வழங்குவேன் என கேட் மிடில்டன் திருமண உறுதிமொழி வழங்கினார்.
ஆனால், வில்லியமின் தாயார் இளவரசி டயானா இளவரசர் சார்ல்ஸுடனான தனது திருமணத்தின் போது, 'கணவனக்கு கீழ் படிந்து நடப்பேன்' என்ற வரிகளை தனது திருமண உறுதிமொழியில் சொல்லாதது பொலவே, கேட் மிடில்டனும் அவ்வார்த்தைகளை சொல்லவில்லை.


இதை ஏற்கனவே எதிர்பார்த்திருந்த ஊடகங்களுக்கு இச்சம்பவம் நல்ல தீணியாக அமைந்துவிட்டது.இளவரசர் வில்லியம், வேல்ஸிலிருந்து எடுக்கப்பட்ட தங்கத்தை கொண்டு உருவாக்கப்பட்ட மோதிரத்தை, கேட் மிடில்டனுக்கு அணிவித்தார்.


திருமண வைபவத்தை தொடர்ந்து, பொதுமக்கள் முன்னணியில், வில்லியம், மிடில்டனை முத்தமிட்டுக்கொள்ள, அரச ஜெட் விமானங்கள் வான வேடிக்கை நிகழ்வு இடம்பெற்றது. அதற்கடுத்து மணமகன், மணமகள் ஆகியோரின் ஊர்வலம் இடம்பெற்றது.தொடர்ந்து விருந்துபசார நிகழ்வு இடம்பெறுகிறது. எனினும் மகாராணியார் எலிசபெத் மற்றும் அவரது கணவர் பிலிப் கோமகன் ஆகியோர் அதில் கலந்துகொள்ள மாட்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது.


தமது பிரசன்னம் வில்லியம் மற்றும் கேட் மீதான கவனத்தை திசை திருப்பி விடுமென மகாராணியார் கருதுகிறார். மேலும்,  அவர்கள் தமது மகிழ்ச்சியை சுதந்திரமாக பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பை வழங்குவதே இவர்கள் இந்நிகழ்வில் பங்கு பெறாமைக்கான பிரதான காரணமென பகிங்ஹாக் பேச்சாளர் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றியில் முடிந்தது.
அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று இலக்கைத் தாக்கக் கூடிய ஹட்ப்-8 என்ற ஏவுகணையை பாகிஸ்தான் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணையானது 350 கிலோ மீற்றர் தூரம் வரை சென்று தாக்கக்கூடியது.
இந்த ஏவுகணை எந்த இடத்தில் இருந்து ஏவி சோதனை செய்யப்பட்டது என்பது தெரிவிக்கப்படவில்லை. எனினும் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது என பாகிஸ்தான் ராணுவம் அறிவித்தது.இந்த ரக ஏவுகணை முதன் முதலில் கடந்த 2007ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சோதனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பக்ரைனில் போராட்டத்திற்கு காரணமான 4 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை.
எகிப்து மற்றும் துனிஷிய போராட்டத்தைத் தொடர்ந்து வளைகுடா நாடான பக்ரைனில் கடந்த மார்ச் மாதம் முதல் போராட்டம் வெடித்தது.அங்கு மன்னருக்கு எதிராக பொது மக்கள் பெரும் போராட்டம் நடத்தினார்கள். அதில் 30 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து சவுதி அரேபியா ராணுவத்தின் உதவியுடன் போராட்டம் ஒடுக்கப்பட்டது.
தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. போராட்டத்தின் போது எதிர்க்கட்சி பிரமுகர்கள் 7 பேர் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களை கொலை செய்ய அவர்கள் முன் கூட்டியே திட்டமிட்டதாக புகார் கூறப்பட்டது. போராட்டத்தின் போது 2 பொலிசார் கொல்லப்பட்டனர்.
அதற்கான வீடியோ ஆதாரங்களும் வெளியிடப்பட்டன. அவர்கள் மீது ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று 4 பேருக்கு மரண தண்டனை விதித்து ராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மற்ற 3 பேரின் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே 4 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு பக்ரைனின் மனித உரிமை அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அங்கு மீண்டும் கடுமையான போராட்டம் ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளது.
சீனாவில் மக்கள் தொகை 134 கோடியை எட்டியது.
சீனாவில் தற்போதைய மக்கள் தொகை 134 கோடி என்று கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.சீனாவில் 2010ம் ஆண்டு இறுதியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கியது. அதற்கு முன் 2000ம் ஆண்டில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி சீனாவில் இப்போதைய மக்கள்தொகை 134 கோடி. அவர்களில் சுமார் 50 சதவீத மக்கள் நாட்டின் நகரங்களில் வசிக்கின்றனர். 2000ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது இது 36 சதவீதமாக இருந்தது. 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் எண்ணிக்கையை இப்போது 3 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்த மக்கள்தொகையில் அவர்களது பங்கு 13.3 சதவீதம்.
எனினும் முந்தைய கணக்கெடுப்புகளுடன் ஒப்பிடுகையில் கடந்த 10 ஆண்டுகளில் மக்கள்தொகை அதிகரிப்பு வேகம் குறைந்துள்ளது தெரியவந்தது. "ஒரு குடும்பம், ஒரு குழந்தை" என்ற அரசின் கொள்கையே இதற்கு காரணம் என்று கருதப்படுகிறது.
மக்கள்தொகை வளர்ச்சி வேகம் குறைந்ததால் உழைக்கும் வயதினர் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும், குறிப்பாக கிராமங்களில் வேலைக்கு ஆளின்றி பொருளாதார வளர்ச்சி தடைபடலாம் என்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பில் கூறப்பட்டுள்ளது.
14 அல்லது அதற்கு குறைந்த வயதினர் 16.6 சதவீதம். இது 2000ம் ஆண்டைவிட 6.29 சதவீதம் குறைவாகும். குழந்தைகளில் 6 ஆணுக்கு 5 பெண் குழந்தைகள் இருப்பதாகவும், அதனால் பின்னாளில் திருமணம் செய்வதில் பிரச்சனைகள் ஏற்படலாம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் மக்களிடம் ஆரோக்கியம் இல்லை: ஆய்வுத் தகவல்.
உலகிலேயே உடற்பயிற்சி செய்பவர்கள் மிகக் குறைவாக உள்ள நாடு பிரிட்டன் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.ஐரோப்பா கண்டத்திலேயே உடல் பருமனான ஆண்களை அதிகம் கொண்டுள்ள நாடும் பிரிட்டன் தான். இதனால் அந்த நாட்டில் இதயம், நுரையீரல் தொடர்பான நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இது தவிர சர்க்கரை நோய், புற்றுநோய், வலிப்பு மற்றும் உடல் எடை அதிகரிப்பால் ஏற்படும் நோய்களும் அந்நாட்டு மக்களுக்கு அதிகரித்து வருகிறது. அந்நாட்டு மக்களில் சுமார் 63 சதவீதம் பேர் வாரத்துக்கு 30 நிமிடங்கள் கூட உடற்பயிற்சி மேற்கொள்வது இல்லை என்று உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
சர்வதேச அளவில் ஒப்பிடும் போது அவுஸ்திரேலியா மக்களில் பலர் பிரிட்டனைச் சேர்ந்தவர்களை விட உடல் எடை அதிகம் உள்ளவர்களாக உள்ளனர். செளதி அரேபியா, ஆர்ஜென்டீனா ஆகிய நாடுகளில் உள்ள மக்களிடையே உடல்ரீதியாக செய்யக்கூடிய பணிகள் பெருமளவில் குறைந்து விட்டன.
நடப்பது, சைக்கிளில் செல்வது, ஓடியாடி விளையாடுவது போன்றவை 25 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே பெருமளவில் குறைந்து வருகிறது. இதுபோன்ற உடல்ரீதியான இயக்கங்கள் குறைவதால் நோய்களால் எளிதில் பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 32 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.
சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அனைத்து நாடுகளிலும் வெகுவேகமாக அதிகரித்து வருகிறது. இந்த நோயால் 2008ம் ஆண்டில் 3 கோடியே 60 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த எண்ணிக்கை 2030ல் 5 கோடியே 20 லட்சமாக உயரும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
சிரியாவில் வன்முறை: 700க்கும் மேற்பட்டோர் தப்பி ஓட்டம்.
சிரியாவில் அதிபருக்கு எதிரான போராட்டம் வலுத்து வருகிறது. ராணுவம் போராட்டக்காரர்களை ஒடுக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது.தற்போது லெபனான் எல்லையில் உள்ள தால் கலாக் நகரில் போராட்டம் கடுமையாகி உள்ளது. எனவே அங்கு போராட்டக்காரர்களை அடக்கும் முயற்சியில் ராணுவம் தீவிரமாக உள்ளது.
எனவே அங்கு வாழும் 25 ஆயிரம் மக்களை விரட்டியடித்து வெளியேற்றி வருகிறது. எனவே அந்நகர மக்கள் தங்கள் குழந்தைகளுடன் ஊரை விட்டு வெளியேறி வருகின்றனர்.தால் அல்காக் நகரம் லெபனான் எல்லையில் இருந்து 2 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது. எனவே அங்கிருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறும் மக்கள் லெபனானில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
படுக்கைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களுடன் செல்கின்றனர். லெபனானின் அக்கர் மாவட்டத்தில் உள்ள வாடி காலெட் நகரில் குவிந்த வண்ணம் உள்ளனர். சிரியாவில் இருந்து சுமார் 700 பேர் லெபனானுக்கு தப்பி சென்றுள்ளதாகவும், அவர்கள் தங்கள் உறவினர்கள் வீட்டில் தங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

முதல் அணு மின் உலை வெற்றிகரமாக குளிர்விப்பு! - ஜப்பான்

ஜப்பானில் கடந்த மாதம் 11 ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி போன்றவற்றால் பாதிக்கப்பட்ட புகுஷிமா மின் அணு உலைகளில் முதலாவது அணு உலையை மீண்டும் வெற்றிகரமாக குளிர்வித்துள்ளதாக ஜப்பானின் அணு உலை பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
சுனாமியின் தாக்கத்தால் கடுமையாக பாதிக்கபப்ட்டிருந்த புகுஷிமா அணு மின் அலைகளிலிருந்து கசிந்த கதிர்வீச்சினால் பல்லாயிரக்கணக்கான மக்களு அதன் தாக்கம் பரவும் சந்தர்ப்பம் இருந்தது. இதையடுத்து குறித்த அணு மின் உலை பகுதிக்குள் நுழைவதற்கு பொதுமக்களுக்கு தடை விதிக்கப்படது.
ஜப்பான் அணு உலை பாதுகாப்பு அமைப்பு, கதிர்வீச்சை கட்டுப்படுத்தவும், அதனை சரி செய்யவும் தீவிரமான பணிகளில் இறங்கியது. எனினும் தொடர்ந்து பல தடவைகள் குளிர்விக்கும் முயற்சி தோல்வியில் முடிந்ததுடன், கதிர்வீச்சு தாக்கம் பன்மடங்கு அதிகரித்தது.
தாய்ப்பாலில் தாக்கம் செலுத்தும் வரை இதன் தாக்கம் இருந்தது. இந்நிலையில் மேலை நாடுகளின் உதவிடன், குளிர்விக்கும் குழாயை சரிசெய்து தற்பொது அதனூடாக டன் கணக்கில் தண்ணீரை குளிர்விக்கும் குழாய் மூலம் செலுத்தி வருகிறது ஜப்பான்.இதனால் புகுஷிமாவின் முதல் அணு உலை மீண்டும் வெற்றிகரமாக செயற்படுகிறது என அணு உலை பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

மோசமான சூறாவளியால் உருக்குலைந்த அமெரிக்காவின் அலபாமா நகரம்! ஏராளமானோர் உயிரிழப்பு .

அமெரிக்காவின் தென்பகுதியைத் தாக்கிய கடும் சூறாவளியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 300 ஐ எட்டலாம் என்று அஞ்சப்படுகின்றது. 24 மணிநேரமாக அமெரிக்காவின் தென் பகுதியில் ஆறு மாநிலங்களை வாட்டி வதைத்த சூறாவளியில் இறந்த 294 பேரின் சடலங்கள் இதுவரை கண்டெடுக்கப் பட்டுள்ளன. 

பத்து லட்சம் பேருக்கான மின் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. அலபாமா மாநிலமே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு தான் உயிரிழப்புக்களும் அதிகம். இங்கு இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட 207 பேர் சூறாவளிக்குப் பலியாகியுள்ளனர்.மாகாண ஆளுனரும் மற்றைய உயர் அதிகாரிகளும் இங்கு விரிவான மதிப்பீடு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சூறாவளி, பாதிக்கப்பட்ட பகுதி மக்களின் வாழ்க்கையை தலை கீழாகப் புரட்டிப்போட்டுள்ளது. மக்கள் உணர்வு ரீதியாகவும் பாதிக்கப்பட்டவர்களாகக் காணப்படுகின்றனர்.

1950க்குப் பின் அமெரிக்க வரலாற்றில் மோசமான பாதிப்புக்களையும், உயிர் இழப்புக்களையும் ஏற்படுத்திய கோரமான சூறாவளி இதுவென்று கூறப்படுகின்றது. பல வீடுகளும் வர்த்தகக் கட்டிடங்களும் உருக்குலைந்து போயுள்ளன. அழகிய கட்டமைப்புக் கொண்ட முக்கிய நகரங்கள் இப்போது குப்பை மேடுகளாகக் காடசியளிக்கின்றன.மேலும் சடலங்களைத் தேடி கண்டுபிடிப்பதிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்குவதிலும், இழப்புக்களை மதிப்பீடு செய்வதிலும் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.



ஆப்கன் போரில் சிறிய அளவே அக்கறை காட்டும் ஒபாமா.

ஆப்கானிஸ்தானில் நடத்தி வரும் போர் நிலையில் மாற்றம் ஏற்படுத்தும் தேசிய பாதுகாப்பு அணியில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மாற்றம் கொண்டு வந்தார்.
சி.ஐ.ஏ தலைவரான லியோன் பனேட்டாவை பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமித்தார். மூத்த தூதரக அதிகாரியான ரயான் குரோக்கரை காபூல் தூதராக நியமித்தார். லெப்டின்ட் ஜெனரல் ஜான் ஆலனை ஆப்கானிஸ்தான் போரின் தளபதியாக ஒபாமா நியமித்துள்ளார்.ஈராக் போரின் போது அமெரிக்க நிலைப்பாட்டின் முக்கிய மூளையாக செயல்பட்டு வரும் ஆப்கானிஸ்தானில் தற்போதைய நேட்டோ கொமாண்டராக செயல்படுபவருமான ஜெனரல் டேவிட் பெட்ராசை உளவுத் துறை செயல்பாடுகளை கவனிக்க சி.ஐ.ஏ தலைவராகவும் ஒபாமா நியமித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் புதிய போர் நிலையை மேற்கொண்டுள்ளோம். அங்கு பாதுகாப்பு நிலையை உறுதிப்படுத்தவும், ஆப்கன் மக்கள் மேம்பாட்டுக்காகவும் நீண்ட பங்களிப்பை மேற்கொண்டு வருகிறோம் என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தெரிவித்தார்.ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்கத் துருப்புகள் கோடைக் காலத்தில் இருந்து படிப்படியாக குறைக்கப்படுகிறது. தலிபான்களால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் பங்களிப்பு சிறிய அளவில் இருந்தால் போதும் என்ற நிலைக்கு அமெரிக்கா வந்துள்ளதை ஒபாமா அறிவிப்பு சுட்டிக்காட்டுகிறது.
பாலஸ்தீன ஒற்றுமை ஒப்பந்தத்தில் சந்தேகம் உள்ளது: ஜேர்மனி.
பாலஸ்தீனத்தில் பதா மற்றும் ஹமாஸ் என இரு அணிகள் உள்ளன. இந்த இரு பிரிவுகளின் ஒற்றுமை ஒப்பந்தம் குறித்து இஸ்ரேலும், அமெரிக்காவும் ஐயம் கொண்டுள்ளன.இந்த நாடுகளின் வரிசையில் ஜேர்மனியும் இணைந்துள்ளது. ஹமாஸ் பிரிவினர் காசா திட்டுப் பகுதியை நிர்வகித்து வரும் பிரிவினம் ஆவார்கள். இவர்கள் தீவிரவாத மற்றும் வன்முறை நடவடிக்கைகள் மூலம் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என நினைப்பவர்கள்.
ஹமாஸ் அணுகு முறை குறித்து ஜேர்மனி வெளியுறவுத் துறை அமைச்சர் குய்டோ வெஸ்டர் வெலே கூறுகையில்,"ஹமாஸ் அமைப்பினர் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு எங்களுக்கு ஏற்ற கூட்டாளியாக இல்லை. இஸ்ரேலுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் அமைப்பாக உள்ள ஹமாஸ் பிரிவுடன் இணைந்து செயல்பட முடியாது" என தெரிவித்துள்ளார்.
யூதர்கள் நாடு விடயத்தில் ஹமாஸ் தீவிரவாதி நிலையை கடைபிடிக்கும் வரை ஜேர்மனியின் நிலையில் மாற்றம் இருக்காது. பாலஸ்தீனத்தின் பதா மற்றும் ஹமாஸ் பிரிவுகள் இடையே ஏற்படும் ஸ்திரமான உடன்பாடு குறித்து ஜேர்மனி நுணுக்கமாக ஆய்வு செய்யும் என்றும் குய்லே தெரிவித்தார்.
எகிப்தில் ஹமாஸ் மற்றும் பதா பிரிவினர் ரகசியப் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சு வார்த்தையை தொடர்ந்து பல ஆண்டுகள் நீடித்து கசப்புணர்வை மறந்து இடைக்கால ஒன்றுபட்ட அரசை உருவாக்க விரும்புகிறோம். ஒரு ஆண்டிற்குள் தேர்தல் நடத்தவும் விரும்புகிறோம் என தெரிவித்தனர்.தற்போது பதா அமைப்பினர் மேற்கு கரைப் பகுதியையும், ஹமாஸ் அமைப்பினர் காசா திட்டுப் பகுதியையும் நிர்வகித்து வருகிறார்கள்.
தாய்லாந்து-கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்.
தாய்லாந்து-கம்போடியா இடையே கடந்த ஒரு வார காலமாக போர் நடந்து வந்தது. இப்போது தற்காலிகமாக போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து கம்போடிய அரசு செய்தி தொடர்பாளர் பெய்ஷிப்ஹான் கூறியதாவது: தாய்லாந்து-கம்போடிய எல்லையில் உள்ள போனோபெம் டான்கிராக் பகுதியில் பழ‌மையான கோயில் உள்ளது. இதை ஆக்கிரமிப்பதில் கடந்த வியாழக்கிழமை முதல் சண்டை ஏற்பட்டு வந்தது.
உள்நாட்டு அரசியல் காரணங்களுக்காக இந்த சண்டை ஏற்பட்டது. இந்நிலையில் இரு தரப்பிலும் சுமார் 40 நிமிடங்கள் நடந்த பேச்சுவார்த்தையின் படி போர் நிறுத்தம் செய்வது என ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.இதன்படி போரின் போது மூடப்பட்டிருந்த எல்லைப்புறம் மீண்டும் திறப்பது எனவும், தாய்லாந்தில் வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பொதுத்தேர்தல் நடக்கவிருப்பதால் அண்டை நாடுகளில் நல்லுறவு வேண்டியும் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.
தாய்லாந்து தரப்பில் அந்நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த போர் நிறுத்த ஒப்பந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். முன்னதாக இந்த போரினால் இதுவரை 15க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எல்லைப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் பயங்கர சூறைக்காற்று: ஒருவர் பலி.
தெற்கு மற்றும் கிழக்கு ஒண்டோரியா பகுதிகளில் மணிக்கு 120 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசியது. வியாழக்கிழமை கியூபெக்கிலும் பலத்த காற்று பாதிப்பை ஏற்படுத்தியது.புயல்காற்றுக்கு ஒருவர் பலியானார். ஏராளமான படகுகள் தண்ணீரில் மூழ்கின. 3 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
காலை 11 மணிக்கு முன்னதாக பயங்கர காற்று தொடர்பான எச்சரிக்கையை கனடா சுற்றுச் சூழல் வெளியிட்டது. தீவிர வேகம் நயாகராவை தாக்கிய ஹாமில்டன் வழியாக இந்த இயற்கை பேரிடர் தாக்குதல் நடந்தது. வடக்கு கடற்கரைப் பகுதியான லேக் ஒண்டோரியாவிலும் பிரின்ஸ் எட்வர்டு கவுண்டியிலும் தாக்குதல் ஏற்பட்டது.
ஒண்டோரியாவின் கிரிம்சி பகுதியில் காற்றில் வேகத்தில் பறந்த காரேஜ் கதவு 70 வயது முதியவரைத் தாக்கியது. இதில் அவர் உயிரிழந்தார். புயல் காற்றுக்கு ஒண்டோரியா மற்றும் கியூபெக் பகுதியில் ஏராளமானவர்கள் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாயின.பர்லிங்டன் ஸ்கைவே பாலம் மற்றும் கார்டன் சிட்டி பாலம் பலத்த காற்று காரணமாக சில மணி நேரங்கள் மூடப்பட்டன. ஹாமில்டன் துறைமுகத்தில் 5 படகில் பயணித்த மாணவர்கள் மீட்கப்பட்டனர்.
புயல்காற்று எச்சரிக்கை மதியம் 1 மணிக்கு முடிந்தது. ஒண்டோரியாவில் 1 லட்சம் வீடுகளில் மின் இணைப்பை சரி செய்ய ஹைட்ரோ குழுவினர் தீவிரமாக செயலாற்றினர். ஒட்டாவாவில் 20 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.செயிண்ட் காதரின்ஸ் பகுதியில் 30 ஆயிரம் வீடுகளிலும், ஹாமில்டனில் 6 ஆயிரத்து 500 வீடுகளிலும் மின் இணைப்பு காற்றால் துண்டிக்கப்பட்டது. கியூபெக்கில் 90 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என வியாழக்கிழமை எச்சரிக்கப்பட்டது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Friday, April 29, 2011

பல வியாதிகளை தண்ணீரால் குணப்படுத்தலாம்.


தினமும் அதிகாலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது இப்போது பிரபலமாகி வருகிறது.
1. காலையில் எழுந்ததும் பல் துலக்கும் முன்பே 4 x 160ml டம்ளர் தண்ணீர் அருந்துங்கள்.
2. பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிடங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவாயினும் உட்கொள்ளக் கூடாது.
3. 45 நிமிடங்களுக்குப் பின் வழமையான உங்கள் உணவை உட்கொள்ளலாம்.
4. காலை உணவின் பின் 15 நிமிடங்களுக்கும், மதிய மற்றும் இரவு உணவின் போது 2 மணி நேரங்களுக்கும் எதுவும் உட்கொள்ள வேண்டாம்.
5. முதியோர், நோயாளிகள் மற்றும் 4 டம்ளர் நீரை எடுத்த எடுப்பிலேயே அருந்த முடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 4 டம்ளர் அளவு நீர் அருந்த பழகலாம்.
மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றும் நோயாளிகள் தமது நோய் நீங்கி சுகமடையலாம். மற்றவர்கள் ஆரோக்கியமான வாழ்கையை சந்தோஷிக்கலாம். எந்த நோய்க்கு எத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்ற விபரங்கள் பின்வருமாறு:
உயர் இரத்த அழுத்தம் - 30 நாட்கள்.
வாய்வுக் கோளாறுகள் - 10 நாட்கள்.
சர்க்கரை வியாதி - 30 நாட்கள்.
புற்றுநோய் - 180 நாட்கள்.
காசநோய் - 90 நாட்கள்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

தனி மனித சுதந்திரத்திற்கு தடை போடும் புதிய தொழில்நுட்பம்: ஐபோனின் அடுத்த பரிணாமம்.


வெளியே சென்று சிறிது நேரம் தாமதம் ஆனாலே ஏன் இவ்வளவு தாமதம்? எங்கு சென்றீர்கள்? என்று ஆயிரம் கேள்விகள் கேட்கப்படும்.சொன்னால் தானே பிரச்சனை ஆகிவிடுமே. அதனால் "ஓபீசில் ஓவர் டைம்" என்று சமாளிப்பவர்கள் உண்டு. ஆனால் ஆப்பிள் ஐபோன் வைத்திருப்பவர்கள் இப்படி சொல்ல முடியாது.
காலையில் வீட்டில் இருந்து புறப்பட்டது முதல் மாலையில் வீடு வந்து சேர்கிற வரையில் எங்கெங்கு போனோம் என்பதை ஐபோனில் உள்ள "டிராக்கர்" வசதி தெரிவித்து விடும்.இதற்கு அமெரிக்காவில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. பேசுவது, எஸ்.எம்.எஸ் மட்டுமின்றி கமெரா, மீடியா பிளேயர் மற்றும் 3ஜி இணைப்புகள், ஜிபிஎஸ் வசதி, இமெயில், இணையம் உள்பட பல்வேறு வசதிகள் கொண்டவை ஸ்மார்ட்போன்கள்.
உலக அளவில் இதில் முன்னணியில் இருப்பது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன். இதில் ஜிபிஎஸ் உதவியுடன் செயல்படும் "டிராக்கர்" என்ற மென்பொருள் உள்ளது. ஐபோன் எந்த இடத்தில் இருக்கிறது என்பது இதன் உதவியுடன் தொடர்ந்து பதிவாகும்.எத்தனை மணிக்கு எந்த இடத்தில் ஐபோன் இருந்தது என்பது நமது கணணியில் நிமிட வாரியாக தானாக பதிவாகிவிடும். ஏறக்குறைய டைரி போல இதை பயன்படுத்த முடியும். இந்த வசதி வேண்டாம் என்று மறுக்க முடியாது.
நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் உங்களது இருப்பிடம் பற்றிய அனைத்து தகவல்களும் கணணியில் சேகரமாகிக் கொண்டே இருக்கும். வேண்டாத நண்பர்களோ, வெறுப்பில் இருக்கும் மனைவியோ இதன் மூலம் உங்களை உளவு பார்க்க முடியும்.தனிப்பட்ட வாழ்வில் பல சிக்கல்களை ஏற்படுத்தும் இந்த வசதியை ஐபோன் ரத்து செய்ய வேண்டும் என்று அமெரிக்காவை சேர்ந்த நிபுணர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

காலையில் வரும் மாரடைப்பு ஆபத்தானது: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்.


ஏனைய நேரங்களில் வரும் மாரடைப்பை விட காலை நேர மாரடைப்பு ஆபத்தானது என்று புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.காலை ஆறு மணி முதல் மதியம் வரையிலான மாரடைப்பு, ஒரு நாளின் ஏனைய நேரங்களில் ஏற்படும் மாரடைப்பை விட இருதயத் தசைகளை ஐந்து மடங்கு அதிகம் பாதிப்படையச் செய்கின்றது.இதற்கு மிக முக்கிய காரணம் ஒருவர் காலையில் கண் விழித்ததும் ஏற்படுகின்ற உடலின் இரத்த ஓட்டம், ஹோர்மோன் மட்டம் என்பனவற்றின் செயற்பாட்டுகள் அதிகரிப்பதே என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
பெரும்பாலும் மாரடைப்புக்கள் ஏனைய நேரங்களை விட காலை நேரத்தில் தான் அதிகம் ஏற்படவும் செய்கின்றன. இவை தான் பெரும் ஆபத்தானவை என்றும் புதிய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.ஸ்பெயினின் மெட்ரிட் நகரில் உள்ள தேசிய இருதய நோய் ஆராய்ச்சிப் பிரிவின் விஞ்ஞானிகள் இது குறித்த ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வின் முடிவிலேயே இது தெரியவந்துள்ளது.
2003க்கும் 2009க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 811 நோயாளிகள் மத்தியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.இருதயத்துக்கான இரத்த ஓட்டத்தில் நீண்டகாலம் நீடித்த தடை காரணமாக மாரடைப்பு ஏற்பட்டவர்களே இந்த நோயாளிகள். இவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்ட காலநேரம் மற்றும் அந்த மார்பு வலி இருதயத் தசைகளில் ஏற்படுத்திய தாக்கம் என்பன ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
காலை ஆறு மணிக்கும், நண்பகலுக்கும் இடைப்பட்ட நேரத்தில் ஏற்படும் மாரடைப்பு வலி 21 சதவீதம் அதிக தாக்கம் கொண்டது என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் இவர்களுள் அதிகமானவர்களுக்கு இந்த காலப்பகுதியில்தான் மாரடைப்பும் ஏற்பட்டுள்ளது.காலைவேளையில் ஏற்படும் மாரடைப்பு மோசமாக இருப்பதன் காரணம் இயற்கையாக இந்த நேரத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்களே என்று டொக்டர்கள் நம்புகின்றனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

மூளை செயல்பாட்டை பாதிக்கும் சோர்வு: சுவாரஸ்ய ஆய்வு


சோர்வு அதிகமாகின்ற போது மனிதன் தன்னை அறியாமலேயே தவறுகளைச் செய்கின்றான்.மூளையின் பெரும் பகுதி விழித்துள்ள நிலையிலும் ஒரு சிறு பகுதி கண் இமைக்கும் நேரம் சோர்வடைதால், ஞாபகத்தோடு தொடர்புடைய பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.அமெரிக்காவின் விஸ்கொன்ஸின் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் எலிகளின் மூளைச் செயற்பாட்டை ஆராய்ந்து இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.பகல் நேரத்தில் எலிகளை விழித்திருக்கச் செய்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. பொதுவாக பகல்பொழுதில் எலிகள் தூங்குவது தான் வழக்கம்.
இந்த வேளையில் எலிகளின் மூளையில் பெரும்பகுதி சுறுசுறுப்பாக இருந்தாலும், அது விழித்துள்ள நிலையிலும் கூட ஒரு சிறு பகுதி உறக்கம் கொள்கின்றது.இவ்வாறு அவற்றை நீண்ட நேரம் விழித்திருக்கச் செய்கின்ற போது மூளையின் அநேக கலங்கள் ஓய்வெடுக்கின்றன. இதை மூளையின் குட்டித்தூக்கம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இது எலிகளின் செயற்பாட்டை குறிப்பாக சில விடயங்களில் கவனம் செலுத்தும் ஆற்றலைப் பாதிக்கின்றதா என்றும் ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர்.எனவே மனித மூளையில் ஏற்படும் இலேசான சோர்வு சில சிறிய தவறுகளுக்குக் காரணமாகின்றன என்பது தான் ஆய்வாளர்களின் முடிவாகும்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

எந்த விளம்பரமும் இல்லாமல் கோப்புகளை இலகுவாக அனுப்ப.

GETT
கணணியில் உள்ள கோப்புகளை இணையம் வழியாக இலவசமாக அனுப்புவதற்கு பல தளங்கள் உண்டு.ஆனால் பாதுகாப்பாகவும், எளிதாகவும் அனுப்புவதற்கு ஒரு இணையதளம் உதவி செய்கிறது. கோப்புகளை மற்றவருக்கு அனுப்ப வேண்டும் என்றால் நாம் உடனடியாக செல்லும் இணையதளம் Rapidshare, megaupload தான். இன்னும் எண்ணற்ற தளங்கள் உண்டு.
இந்தத் தளங்களில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை என்னவெனில் நீங்கள் பணம் கொடுத்த பயனாளராக இருந்தால் வேகமாகவும், இல்லை இலவசமாக என்றால் வேகம் குறைவாகவும் தான் தரவிறக்கம் ஆகும்.இது மட்டுமின்றி ஆங்காங்கே விளம்பரங்கள் வந்து நம்மை தொல்லை கொடுப்பதும் உண்டு. இப்படி அனைத்து பிரச்சனைகளையும் நீக்கி எளிதாக கோப்புகளை பதிவேற்றம் செய்யவும் தரவிறக்கவும் நமக்கு ஒரு தளம் உதவுகிறது.
இத்தளம் பார்ப்பதற்கு மட்டுமல்ல இதன் சேவையும் எளிதாகவும் அனைவரும் பயன்படுத்தும் வகையிலும் உள்ளது. இத்தளத்திற்கு  இடது பக்கம் இருக்கும் Read more என்பதை சொடுக்கி நாம் பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் என்ற இரண்டையும் கொடுத்து ஒரு புதிய பயனாளர் கணக்கு உருவாக்கி கொள்ளலாம்.
அடுத்ததாக Select Files என்ற பொத்தானை சொடுக்கி நாம் பதிவேற்றம் செய்ய வேண்டிய கோப்புகளை குறிப்பிட வேண்டும். பதிவேற்றிய பின் கிடைக்கும் இணையதள முகவரியை சேமித்து யாருக்கு இந்த கோப்பை அனுப்ப வேண்டுமோ அவருக்கு இந்த முகவரியை அனுப்பினால் போதும். அவர் இந்த முகவரியை சொடுக்கி எளிதாக நாம் பதிவேற்றம் செய்த கோப்புகளை தரவிறக்கலாம்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Win Mate: கணணியை சுத்தம் செய்வதற்கு.


கணணியில் ஒவ்வொரு வேலை செய்வதற்கும் தனித்தனி மென்பொருளை நாடாமல் Win Mate என்ற மென்பொருளின் மூலம் பல்வேறு வேலைகளையும் ஒரே நேரத்தில் செய்யலாம். இதனை முதலில் உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளுங்கள். அதன் பின் பின்வரும் விண்டோ ஓபன் ஆகும்.


அதிலே Scan and Clean என்பதை கிளிக் செய்ததும் Pc Diagnosis, Junk Cleans, Trace Clean, Registry Clean, Duplicate File Scan ஆகிய Tabகள் காணப்படும்.உங்களுக்கு தேவையான Tab ஐ தெரிவு செய்ததும் தானாகவே செயற்பாடு தொடங்கி விடும். அது போலவே Junk Clean Tabஐ கிளிக் செய்து தேவையற்ற கோப்புகளை டிக் செய்து அழிக்கலாம். Trace Clean, Registry Clean போன்றவற்றின் செயற்பாடும் Junk Clean Tab மாதிரி தான்.
Duplicate File Scan எனும் Tabஐ தேர்ந்தெடுத்தால் நம் கணனியில் உள்ள Duplicate Fileகளை அழிக்கலாம். அதற்கு கோப்பறைகளை தெரிவு செய்ய வேண்டும். பின்னர் Start Scan எனும் பட்டனை அழுத்த வேண்டும்.
Program Manager பகுதியிலே கணனியில் நிறுவியுள்ள ப்ரோகிராம்களை Uninstall செய்யலாம். General Tool என்பதிலே இருக்கும் Utilities என்பதிலும் பல்வேறு வசதிகள் காணப்படுகின்றது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

யார் இவர்கள்? என்கிற கேள்விக்கு இன்னமும் பதில் இல்லை.

சீனாவில் உள்ள பூங்கா ஒன்றில் இருக்கும் பாதுகாப்புக் கமராவில் கடந்த மாத இறுதியில் பிடிக்கப்பட்ட வீடியோவில் அதிசய உருவங்கள் நடந்து செல்கின்ற காட்சிகள் தென்படுகின்றன.யார் இவர்கள்? என்கிற கேள்விக்கு இன்னமும் பதில் இல்லை.இவர்கள் வேற்றுக் கிரகவாசிகளா? நிபுணர்கள் பதில் சொல்லத் தெரியாமல் விழி பிதுங்குகின்றனர்.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

இன்றைய செய்திகள்.

போர்க்குற்றங்கள் தொடர்பில் கோத்தாபய ராஜபக்ஷவை விசாரிக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது.


இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை விசாரிக்க அமெரிக்க சட்டத்துறை தீர்மானித்துள்ளது.தனிப்பட்ட விஜயமொன்றின் பிரகாரம் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தற்போது அமெரிக்காவில் தங்கியிருக்கின்றார். அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ள அவர் அந்நாட்டுக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தியே அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார்.
அதே நேரம் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கையில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மீதும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளன.
அதன் காரணமாக நிபுணர் குழு அறிக்கையின் விடயங்கள் தொடர்பில் அவரிடம் விசாரணையொன்றை மேற்கொள்ள அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களம் (Department of Homeland Security) மற்றும்  சட்டத் திணைக்களம் (Department of Justice) ஆகியன தீர்மானித்துள்ளன.
அது மாத்திரமன்றி அமெரிக்காவிலுள்ள மனித உரிமை அமைப்புகள் பலவும் தமது நாட்டுக் குடியுரிமை பெற்றுள்ள கோத்தாபய ராஜபக்ஷ இலங்கையின் போர்க்குற்றங்களில் சம்பந்தப்பட்டுள்ளதால் அவரைக் கைதுசெய்து விசாரிக்குமாறு கோரும் மனுக்களைத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக நடைபயணப் போராட்டம்.
ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக இலங்கையின் சினிமாக் கலைஞரொருவர் தனியாக நடைபயணப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளார்.தென்னிலங்கையின் மாத்தறையில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்மிகு அரச மரத்தடியில் இன்று காலை ஆரம்பமாகியுள்ள நிபுணர் குழுவுக்கு எதிரான அவரது நடைபயணம் கொழும்பில் முடிவடையவுள்ளது. 
"இலங்கை எங்கள் நாடு, பான் கீ மூனுடையதல்ல" என்ற பேனருடன் அவர் தன் நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார். மனிதர்களை விழிப்பூட்டும் நடைபயணம் என்று தனது நடைபயணத்துக்கு அவர் பெயர் சூட்டிக் கொண்டுள்ளார்.அத்துடன் இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கை மீளப் பெறப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.
சமாதானத்தை கட்டியெழுப்ப மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை நிபுணர் குழு புரிந்து கொள்ளவில்லை: கோத்தாபய ராஜபக்ஷ
சமாதானத்தை கட்டியெழுப்ப மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை நிபுணர் குழு புரிந்து கொள்ளவில்லை என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.அதற்குப் பதிலாக சமாதானத்தை நிலைநாட்டுவதில் பாரிய பங்காற்றிய இராணுவத்தினர் மீது குற்றஞ்சாட்டும் முயற்சிகளையே நிபுணர் குழு மேற்கொண்டுள்ளது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மணிலா டைம்ஸ் செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய நோ்காணலிலேயே பாதுகாப்புச்  செயலாளார் கோத்தாபய ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.யுத்தம் நிறைவுற்ற பின் ஒரு வருடத்துக்கும் குறைவான குறுகிய காலத்துக்குள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஒன்றரை இலட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் பூர்த்தி செய்திருந்தது. அது குறித்து சர்வதேச நிறுவனங்கள் பலவும் பாராட்டுத் தெரிவித்திருந்தன.
ஆனால் இவையெல்லாவற்றையும் புறந்தள்ளி விட்டு ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவானது இலங்கை தொடர்பில் தவறான கருத்துக்களை பரப்ப திட்டமிட்ட முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இராணுவத்தினருக்கெதிராக போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கின்றது.
அந்த வகையில் தாருஸ்மன் குழுவினர் இலங்கை தொடர்பாக அளித்துள்ள அறிக்கை மற்றும் அதன் பரிந்துரைகள் மிகவும் அநீதியானதாகும்.ஆனால் இலங்கை தொடர்ந்தும் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருப்பதை அவர்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நிபுணர் குழு அறிக்கைக்கு இலங்கை உணர்ச்சி வசப்படுவதை விடுத்து பதிலளிப்பது அவசியம் - ரொஹான் குணரட்ன.
ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் உணர்ச்சிவசப்படுவதனை விடவும் உரிய பதிலளிப்பது அவசியமானது என  சர்வதேச பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.நிபுணர் குழு இலங்கைக்கு விஜயம் செய்யவில்லை எனவும், சர்வதேச ஊடகங்கள், மனித உரிமை அமைப்புக்கள் போன்றவற்றிடமிருந்து தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக தமது பக்க நியாயங்களை எடுத்துரைப்பதற்கு இலங்கைக்கு அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்களிடமிருந்து அதிகளவு தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மில்லியனுக்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ள போதிலும், ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு இந்த விடயங்கள் பற்றி ஆலோசனை வழங்க நிபுணர் குழு நியமிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
நிபுணர் குழுவின் அறிக்கை இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயற்திறன் இன்மையை வெளிப்படையாக காட்டுகின்றது என குறிப்பிட்டுள்ள அவர், வெளிவிவகார அமைச்சு காத்திரமாக செயற்பட்டிருந்தால் நிபுணர் குழு அறிக்கை பகிரங்கப்படுத்தப்படுவதனை தடுத்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இறுதிக்கட்ட யுத்தம் மற்றும் யுத்தத்தின் பின்னரான நடவடிக்கைகள் குறித்து இலங்கை அரசாங்கம் சரியான பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.இதேவேளை, ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எந்தவிதமான பதிலையும் அளிக்க கூடாது என்பதே பெரும்பான்மையான இலங்கை அரசியல்வாதிகளின் நிலைப்பாடாகக் காணப்படுகின்றது.

1974 ற்கு பிறகு அமெரிக்காவை தாக்கியுள்ள மிக மோசமான டோர்னாடோ : இதுவரை 250 பேர் பலி.

அமெரிக்காவின் தென் கிழக்கு பகுதிகளான அலபாமா, அர்கனாஸ், ஒக்லாஹாமா மிஸூரி ஆகிய பிரதேசங்களை கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக கடுமையாக தாக்கிவரும் புயல் கற்று மற்றும் டோர்னாடோ சூராவளி காற்றினால் இதுவரை 250 ற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வருடத்தில் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ள மிக மோசமான அனர்த்தமாக இது பதிவாகியுள்ளது. நேற்று முன் தினம் புதன்கிழமை அலபாமாவை தாக்கிய புயல் காற்றில் 162 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது இவ் எண்ணிக்கை 250 ஆக அதிகரித்துள்ளது.

இரு நாட்களுக்கு முன்னர், புயல் காற்றில் சிக்கி சின்னாபின்னமான வீடுகள் போக, சில கட்டிடங்கள் எஞ்சியிருந்தன. நேற்று மீண்டும் இப்பகுதிகளில் வீசிய புயல் காற்றினால், அவையும் முற்றாக தேசமாகியுள்ளன.அல்பாமா,அர்கன்ஸாஸ், ஜோர்ஜியா, இலினொய்ஸ், கெண்டகி, மிசிசிப்பி, மிஸூரி, ஓக்லஹோமா, டென்னெஸ் பகுதிகள் இப்புயல் காற்றில் கடுமையாக பாதிப்படைந்துளன.

பாதிப்படைந்த இடங்களை பார்வையிடுவதற்காக சம்பவ இடங்களிற்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா விரைந்துள்ளார்.2000 ற்கு அதிகமான இராணுவ துருப்புக்கள் மீட்பு பணிகளுக்கென களமிறக்கபப்ட்டுள்ளன. முன்னதாக, இதே போன்றதொரு டோர்னாடோ புயல் காற்று 1974ம் ஆண்டு ஏப்ரல் 3ம் திகதி இடம்பெற்ற போது 310 பேர் உயிரிழந்தனர்.

அதற்கடுத்து அமெரிக்காவை தாக்கிய மிக மோசமான டோர்னேடோவாக இது பதிவாகியுள்ளது. கடந்த திங்கட்கிழமை முதல் 300 க்கு அதிகமான டோர்னாடோக்கள், இப்பகுதிகளை தாக்கியுள்ளன. கடந்த புதன் கிழமை மாத்திரம் 130 டோர்னேடோக்கள் வீசியுள்ளன.இதேவேளை இன்று சனிக்கிழமையும், அப்பகுதிகளில் கடுமையான புயல்காற்றுடன் கூடிய மழைபெய்யக்கூடும் என அமெரிக்க வானிலை மைய நிலையம் அறிவித்துள்ளது.
தென்கொரியாவில் உடைந்த பல்லும் விலை போகும் அதிசயம்.
தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருப்பதால் தென்கொரியாவில் அதன் பயன்பாடு குறைந்து வருகிறது.அதே சமயம் விலை உயர்வை பயன்படுத்தி தென்கொரிய மக்கள் தங்களின் தங்கப் பற்களை விற்றும் வருவாய் ஈட்டி வருகின்றனர். தென்கொரிய மக்கள் பல் மருத்துவர்களிடம் தங்களின் தேய்ந்து போன தங்கப் பற்களை திரும்பக் கேட்காமல் புதிய பற்களை பொருத்திச் செல்வது தான் வழக்கம்.
ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அகற்றப்பட்ட தங்களது பழைய தங்கப் பற்களை மருத்துவரிடம் இருந்து கேட்டு வாங்கிச் சென்று கடைகளில் விற்று விடுகின்றனர்.கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் இருந்து தங்கப் பற்கள், பற்குழியை அடைக்க பயன்படுத்திய தங்கப் பொடி உள்ளிட்டவற்றை வாங்கியுள்ளதாக "கோல்டு செவன்" என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நம் சங் வூ தெரிவித்தார்.
தென்கொரியாவில் பழைய தங்கப் பல் ஒன்றுக்கு 40 ஆயிரம் வொன் முதல் ஒரு லட்சம் வொன்(ரூ.1700 - ரூ.4240) வரை கிடைக்கிறது. இந்நாட்டில் குழந்தைகளின் முதலாண்டு பிறந்த நாளின் போது 3.75 கிராம் கொண்ட தங்க மோதிரம் பரிசளிப்பது பாரம்பரிய வழக்கம்.தங்கம் விலை உயர்வு காரணமாக இப்போது ஒரு கிராம் கொண்ட மோதிரங்களுக்கு கூட கிராக்கி அதிகரித்துள்ளது. மேலும் 18 காரட் கொண்ட தங்க மோதிரங்களுக்கு பதிலாக 9 காரட் கொண்ட தங்க மோதிரங்களை நகை கடைக்காரர்கள் அதிகளவில் விற்பனை செய்ய தொடங்கியுள்ளனர்.
அரச திருமணம்: விழாக்கோலம் பூண்டது லண்டன்.
இங்கிலாந்து இளவரசர் வில்லியம், கதே மிடில்டன் திருமணம் லண்டனில் நாளை நடைபெறுகிறது.இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. நாளை நடைபெறும் திருமண ஊர்வலத்துக்கு நேற்று ஒத்திகை பார்க்கப்பட்டது. இதில் கதே பெற்றோர் மற்றும் இளவரசர் ஹாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இங்கிலாந்து மக்களுக்கு அரச குடும்பத்தினர் மீது தனிப் பாசம் உள்ளது. அதிலும் குறிப்பாக இளவரசர் வில்லியம் மற்றும் ஹாரி மீது அதிக பாசம் வைத்துள்ளனர். இளவரசி டயானா மறைந்த போது சிறுவர்களாக இருந்த வில்லியம் மற்றும் ஹாரி ஆகியோர் தாயின் சடலத்தின் பின்னால் சோகத்துடன் அணிவகுத்து சென்ற போது இங்கிலாந்து மக்கள் பலர் கண்ணீர் விட்டனர்.
நீண்ட இடைவெளிக்குப்பின் அரச குடும்பத்தில் நடைபெறும் முக்கிய திருமணம் என்பதால், இங்கிலாந்து மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். திருமணம் நடைபெறும் வெஸ்ட் மின்ஸ்டர் அபே பகுதியில் மக்கள் இப்போதே உற்சாகத்துடன் குவியத் தொடங்கியுள்ளனர்.
இங்கிலாந்து மக்கள் சுமார் 6 லட்சம் பேர் நாளை லண்டனில் கூடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. சாலை முழுவதும் தேசிய கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. திருமண ஊர்வலம் நாளை காலை ராணுவ அணிவகுப்புடன் தொடங்குகிறது. இதில் ஆயிரம் வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.காலை 10.15 மணிக்கு மாப்பிள்ளை வில்லியம், இளவரசர் ஹாரி ஆகியோர் வெஸ்ட்மின்ஸ்டர் அபே பகுதிக்கு வருகின்றனர். மணப்பெண் கதே தனது பெற்றோருடன் லண்டனில் உள்ள காரிங் ஓட்டலில் இருந்து 10.51 மணிக்கு புறப்படுகிறார்.
திருமண சடங்குகள் 11 மணிக்கு தொடங்குகின்றன. பின் புதுமண தம்பதியருடன் பிரம்மாண்ட ஊர்வலம் தொடங்கும். இந்த ஊர்வலம் பக்கிங்காம் அரண்மனையை மதியம் 12.30 மணிக்கு சென்றடையும். மதியம் 1.25 மணியளவில் அரண்மனையின் பால்கனியில் ராணி எலிசபெத் மற்றும் புதுமணத் தம்பதியர் நின்றபடி மக்களின் வாழ்த்துக்களை ஏற்பர்.அதைத் தொடர்ந்து விமானப்படை விமானங்களின் அணி வகுப்பு நடக்கிறது. இங்கிலாந்து அரச குடும்பத்தின் திருமண நிகழ்ச்சியை உலகம் முழுவதும் சுமார் 200 கோடி பேர் தொலைக்காட்சி மூலம் பார்ப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
விழாக்கோலத்துக்கு லண்டன் தயாராகி வரும் நிலையில் நாளை லண்டனில் கன மழை பெய்வதற்கு 70 சதவீத வாய்ப்புகள் இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. திருமணத்துக்கு வந்துள்ள வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் அரச குடும்பத்தினருக்கு ராணி எலிசபெத் இன்று இரவு பிரமாண்ட விருந்தளிக்கிறார்.
இளவரசர் வில்லியமின் திருமணத்தை கண்டுகளிக்க இங்கு கிளிக் செய்யவும்.
விண்ணில் சீனாவின் புதிய ஆய்வுக் கூடம்.
எதிர் வரும் 2020ம் ஆண்டுக்குள் 60 டன் எடையுள்ள மிகப்பெரிய விண்வெளி ஆய்வுக்கூடத்தை விண்ணில் நிறுவ சீனா தயாராகி வருகிறது.இதற்கான மாதிரி சோதனைக்கூடம் ஒப்புதலை பெற்றுள்ள நிலையில் அடுத்தகட்ட பணிகள் தொடங்கியுள்ளன. புதிய சோதனைக்கூடத்துக்கான பெயரை பரிந்துரைக்கும்படி வல்லுநர்கள் மற்றும் பொதுமக்களிடம் ஆலோசனை  கேட்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில் புதிய சோதனைக்கூடத்தை விண்வெளியில் நிறுவுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்து வருகிறது. இதன் முதல் முயற்சியாக பொருட்களை சுமந்து செல்லும் கார்கோ விண்கலம் தயார் நிலையில் உள்ளது.விண்ணில் ஆய்வுக்கூடத்தை நிறுவ தேவையான பொருட்களை இது சுமந்து செல்லும். முதல் மாதிரி ஆய்வுக்கூடமானது 18.1 மீற்றர் நீளமும், 4.2 மீற்றர் விட்டமும், 20 முதல் 22 டன் எடை கொண்டதாக அமைக்கப்பட்டு செயல்படத் துவங்கும். பின்னர் படிப்படியாக விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணில் அமைக்க உள்ள இந்த சர்வதேச விண்வெளி மையத்துக்கு "டியான்காங்-1" என்று பெயரிடப்படலாம் என்று தெரிகிறது. இந்த மையத்தை வெறுமனே ஆராய்ச்சிக்காக மட்டும் பயன்படுத்தாமல் ஒரு சுற்றுலா தளம் அளவுக்கு மாற்றவும் சீன விண்வெளி ஆராய்ச்சி துறை திட்டமிட்டுள்ளது.அங்கு குடியிருப்பு போன்ற தொகுப்புகளை உருவாக்கி பலரை அனுப்பவும் திட்டமிட்டிருக்கின்றனர்.
தனது பிறப்புச் சான்றிதழை சமர்பித்தார் ஒபாமா.
நீண்ட கால சர்ச்சைக்குப் பிறகு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது பிறந்த இடம் குறித்த தகவலை வெளியிட்டார்.கடந்த 2008ம் ஆண்டில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் வேட்பாளராக ஒபாமா போட்டியிட்டார். அப்போது இவரின் பிறப்பு மற்றும் இருப்பிடம் குறித்த சர்ச்சை ஒன்று எழுந்தது.
இருப்பினும் நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று அதிபர் பதவியில் அமர்ந்தார். இருந்தாலும் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினர் அதிபரின் மீது சந்தேகங்களை எழுப்பி வந்தன.இந்நிலையில் வரும் 2012ம் ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ள ஒபாமா தன்னுடைய பிறந்த இடம் குறித்த சான்றிதழை வெளியிட்டார்.
அதில் ஹவாய் தீவின் ஹோனோலுநகரில் 1961ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4ம் திகதி பிறந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிர்கட்சிகளின் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குனர் டான் பெபியர் தெரிவித்தார்.அதிபர் பதவி மற்றும் துணை அதிபர் பதவிகளுக்கு போட்டியிடுபவர்கள் அமெரிக்க பிரஜையாக இருக்க வேண்டும் என்பது நியதியாகும்.
பாகிஸ்தானில் தொடர் தாக்குதல்: அதிர்ச்சியில் உறைந்த மக்கள்.
நேற்று முன்தினம் பாகிஸ்தானில் ராணுவ பேருந்து ஒன்றை தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்த்தனர். இச்சம்பவத்தில் 6 பேர் பலியானார்கள்.இந்நிலையில் இன்று மேலும் ஒரு ராணுவ பேருந்தை தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்த்துள்ளனர். பாகிஸ்தானில் உள்ள துறைமுக நகரமான கராச்சியில் இருந்து ராணுவ அதிகாரிகளை ஏற்றிக் கொண்டு வந்த பேருந்தே இத்தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.அப்போது அந்த பேருந்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் பேருந்தில் இருந்த ராணுவ அதிகாரிகள் தூக்கி வீசப்பட்டனர். பேருந்தில் பயணம் செய்த ஏராளமான வீரர்கள் பலியாகி விட்டனர்.
அவர்கள் எத்தனை பேர் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. 2 பேர் மட்டும் இறந்து இருப்பதாக முதல் கட்ட தகவலில் பொலிசார் தெரிவித்தனர். மேலும் 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் கராச்சி நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.கடந்த இரண்டு நாட்களில் ஏற்பட்ட மூன்றாவது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
தனது மூன்று குழந்தைகளைக் கொன்ற தாய்க்கு 16 ஆண்டு சிறைத் தண்டனை.
மூன்று குழந்தைகளைக் கொன்ற தாய் தெரசா ரிகிக்கு 16 ஆண்டு கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.கடந்த ஓகஸ்ட் மாதம் தனது எடின்பர்க் இல்லத்தில் 47 வயது ரிகி தனது 8 வயது இரட்டையர் குழந்தைகள் ஆஸ்டின், லூக் மற்றும் 5 வயது மகள் செசிலியா ஆகியோரைக் கத்தியால் குத்திக் கொன்றார். குழந்தைகளை வைத்துக் கொள்வது தொடர்பான கருத்து வேறுபாட்டில் அவர் இந்த தீவிர முடிவை எடுத்தார்.
குழந்தைகள் ரத்த வெள்ளத்தில் அடுத்தடுத்து இறந்து கிடந்தனர். கட்டிடத்தில் எரிவாயு வெடிப்பு ஏற்பட்ட போது அந்தக் குழந்தைகள் கொடூரமாகக் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தைகளைக் கொன்ற அமெரிக்கா தாய் ரிகி தானும் தற்கொலைக்கு முயன்று இரண்டாவது மாடியில் இருந்து குதித்துள்ளார். இதில் அவர் மோசமாக காயம் அடைந்தார்.
கிளார்சோ உயர் நீதிமன்றம் அவருக்கு 16 ஆண்டு கால சிறைத் தண்டனையை இன்று விதித்தது. ரிகியும் அவரது கணவர் பாங்குலேவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். பாங்குலே ஷெல் பிரிட்டன் என்ஜினியர் ஆவார்.குழந்தைகளை தங்கள் வசம் வைத்துக் கொள்வது தொடர்பாக இருவருக்கும் இடையே சட்டப் போராட்டம் நீடித்து வந்தது. இந்த நிலையில் ரிக் தனது குழந்தைகளைக் கொன்றுள்ளார்.
சீனாவில் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய நச்சு கலந்த பால்பவுடர் கைப்பற்றப்பட்டது.
சீனாவின் தெற்குபகுதியைச் சேர்ந்த ஒரு நகரத்தில் "மெலமைன்" எனப்படும் நச்சுப்பொருள் கலந்த 26 டன் பால்பவுடரை அந்நாட்டு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.மெலனைன் என்ற ரசாயனப் பொருள் பால்பவுடரில் கலந்துள்ள புரதச் சத்துக்களை அளவிட்டு அறிவதற்காக பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு விதமான நச்சுப் பொருளும் கூட.சீனாவில் உள்ள சோங்கிங் என்ற நகரில் இருக்கும் ஐஸ்கிரீம் தயாரிக்கும் கடையில் இருந்து மெலமைன் கலந்த 26 டன் பால்பவுடரை பொலிசார் கைப்பற்றினர்.
இந்த பால்பவுடர் முழுவதும் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. இன்னும் உபயோகப்படுத்தப்படவில்லை. இந்த வழக்கு விசாரணை குறித்து ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களைப் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.சீனாவில் 2008ல் "மெலமைன்" கலந்த பாலை குடித்ததால் ஆறு குழந்தைகள் பலியாகினர். மேலும் மூன்று லட்சம் குழந்தைகள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடத்தப்பட்ட 4 பிரெஞ்சு நபர்களின் வீடியோவை அல்கொய்தா வெளியிட்டது.
வடக்கு ஆப்பிரிக்க பிரிவைச் சேர்ந்த அல்கொய்தா தீவிரவாதிகள் நைஜீரியாவில் கடத்திச் சென்ற 4 பிரெஞ்சு நபர்களின் புதிய வீடியோவை வெளியிட்டனர்.ஆப்கானிஸ்தானில் இருந்து பிரான்ஸ் துருப்புகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்பது அல்கொய்தா தீவிரவாதிகளின் கோரிக்கை ஆகும். கோரிக்கை ஏற்கப்படாத பட்சத்தில் கடத்தப்பட்ட பிரெஞ்சு நபர்களுக்கு விபரீத விளைவு ஏற்படும் என அல்கொய்தா பிரிவினர் எச்சரித்து உள்ளனர்.
கடந்த செப்டம்பர் மாதம் கடத்திச் செல்லப்பட்ட பிரெஞ்சு நபர்களின் வீடியோ டேப்பை செவ்வாய்க்கிழமை அல்கொய்தா அமைப்பினர் வெளியிட்டனர். பிரெஞ்சு நபர்கள் முழங்காலிட்டபடி நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களைச் சுற்றி துப்பாக்கிகளை ஏந்தியவாறு அல்கொய்தாவினர் நிற்கின்றனர்.பிணை நபர்களாக கொண்டு செல்லப்பட்டவர்களின் முகங்கள் மறைக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 11 மற்றும் 13ம் திகதிகள் இடையே ஓடியோச் செய்தியும் தரப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் போரில் பிரான்சுக்கு முழு ஈடுபாடு கிடையாது. எனவே அந்த துருப்புகள் உடனடியாக அங்கிருந்து விலக வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சர்கோசி உடனடியாக பதிலளிக்க வேண்டும் என அல்கொய்தாவினர் எச்சரித்துள்ளனர்.நைஜீரியாவில் கடந்த செப்டம்பர் மாதம் 4 பிரெஞ்சு அரிவா மற்றும் வின்சி ஊழியர்கள் உள்பட 7 அயல் நாட்டவர்களை அல்கொய்தா தீவிரவாதிகள் கடத்தினர்.
அரச திருமணத்தில் எங்களுக்கு முழு ஈடுபாடு இல்லை: பிரிட்டன் மக்கள்
பிரிட்டனில் பொருளாதார நெருக்கடி காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர்.
இந்நிலையில் நடக்கவிருக்கும் இளவரசர் வில்லியம் திருமணத்தில் பிரிட்டன் மக்கள் அதிகளவில் ஈடுபாடு காட்டவில்லை. பிரிட்டனில் அரச குடும்ப திருமணங்களைப் பொறுத்தவரை உலகப் போர், பொருளாதார நெருக்கடி என்பன போன்ற ஒருவித நெருக்கடி காலகட்டங்களிலேயே நடந்திருக்கின்றன.

இளவரசர் வில்லியமின் திருமணமும் இதற்கு விதிவிலக்கல்ல. பிரிட்டன் தற்போது பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இதனால் அங்கு ஆயிரக்கணக்கானோர் தங்கள் வேலையை இழந்து விட்டனர். பெட்ரோல் விலை அதிகரித்துள்ளது. பிரிட்டன் நாணயமான பவுண்ட்டின் நிலை பலவீனமாக இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
பிரிட்டன் மக்களின் மனநிலையும் வேறு விதமாக உள்ளது. இவ்வளவு பொருளாதார நெருக்கடியில் இப்படி ஆடம்பரமாக திருமணம் நடத்த வேண்டுமா என்று அவர்கள் கோபத்தில் உள்ளனர். அதனால் அவர்கள் திருமண விருந்தில் கலந்து கொள்ள விரும்பவில்லை என்றும், அரச பரம்பரை நீடிப்பதை விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஆனால் திருமணத்திற்கு ஆகும் செலவு அனைத்தையும் அரச குடும்பமும், மணமகள் கதே மிடில்டன் குடும்பமும் பகிர்ந்து கொள்ளும் என்று பக்கிங்ஹாம் அரண்மனை சமீபத்தில் குறிப்பிட்டிருந்தது. திருமணத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடு உள்ளிட்ட சிலவற்றுக்கு மட்டும் அரசு செலவழிக்கும் என்று தெளிவாக்கப்பட்டிருந்தது.
சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 35 சதவீதம் பேர் அவரவர் வீடுகளில் தொலைக்காட்சி மூலம் திருமணத்தைப் பார்க்கப் போவதாகவும், 35 சதவீதம் பேர் திருமணத்தைப் புறக்கணிக்கப் போவதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சிரியா மீது ஐரோப்பிய தடை: ஜேர்மனி தீவிர ஆர்வம்


சிரியா நாட்டில் அரசு துருப்புகளுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சிரியா மீதான ஐரோப்பிய தடைக்கு ஜேர்மனி தீவிர ஆதரவு தெரிவித்துள்ளது. ஜேர்மனி நிலை குறித்து அரசுச் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் செய்பெர்ட் பெர்லினில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,"சிரியத் துருப்புகள் கடுமையான மனித உரிமை மீறலை மேற்கொண்டுள்ளது. எனவே ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொள்ளும் கடுமையான நடவடிக்கைக்கு ஜேர்மனி முழு ஆதரவு அளிக்கும்" என்றார்.
இந்த தடை நடவடிக்கையின்படி சிரியா அதிகாரிகள் பயணம் மேற்கொள்ள கட்டுப்பாடு கொண்டு வரப்படும். அவர்களது சொத்துக்களும் முடக்கப்படும். அதே போன்று ஐரோப்பிய ஒன்றியம் மூலமாக அளிக்கப்படும் பொருளாதார உதவிகளும் நிறுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஆண்ட்ரியாஸ் பெஸ்கே கூறியதாவது: பிரஸ்சல்ஸ் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெறும் ஒரு கூட்டத்திற்கு ஜேர்மனி அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றிய தடை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துகிறது.



இந்தக் கூட்டத்தில் சிரியா மீது கடும் தடை நடவடிக்கை எடுப்பதற்கான கருத்துருவை ஜேர்மனி அளிக்கிறது. சிரியாவில் நிலவும் பதட்ட நிலையைக் குறித்து விவாதிக்க ஐ.நா முடிவு எடுத்ததை ஜேர்மனி வரவேற்றுள்ளது.
பாதுகாப்புக் கவுன்சிலில் ஜேர்மனி நிரந்தரமற்ற உறுப்பினராக உள்ளது. சிரியா மனித உரிமைக் கவுன்சிலில் இடம்பெறுவதற்கு ஜேர்மனி எதிர்ப்பு தெரிவிக்கிறது என்றும் அரசு செய்தித் தொடர்பாளர் செய்பெர்ட் கூறினார்.

கனடாவின் மணிடோபா மாகாணத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


சில ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரால் மணிடோபா மாகாணத்திற்கு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.அருகாமையில் உள்ள சாஸ்க் கட்ச்வான் பகுதியிலும் வெள்ள நீர் ஊடுருவும் நிலை உள்ளது. மணிடோபா மாகாண அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.
கியூ அபெல்லே ஆறு, அசினிபோய்னே ஆறு மற்றும் சோரிஸ் ஒட்டிய பகுதிகளில் வெள்ள நீர் புகும் அபாயம் உள்ளது. லே டெலிவர் அருகே ரெட் ஆறு நீர் மட்டம் 784.15 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.வின்னிபெக் பகுதியில் ஜேம்ஸ் அவென்யூவில் கண்காணிக்கப்பட்டதில் ரெட் ஆறு நீர் மட்டம் குறைந்தது. இருப்பினும் அசிபோய்னே பகுதியில் நீர் வரத்து அதிகரிக்கும் என அதிகாரிகள் கூறினர். சாஸ்க் கட்ச் வான் பகுதியிலும் வெள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ரேமோமர் என்ற இடத்திலேயே ஒரு பெண் உட்பட பலர் வீட்டில் மழை நீர் சூழ்ந்ததில் பரிதவித்து நின்றனர். மழை வெள்ளம் காரணமாக மக்கள் கார் பயன்படுத்துவதை தவிர்க்கின்றனர். மழை நீரில் சிக்கிக் கொண்ட வாகனங்கள் பழுதடைந்து பாதி வழியிலேயே நிற்கின்றன.வெள்ள நீர் ஆற்றில் மட்டும் அல்ல முக்கியச் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றனது. மழை வெள்ளப் பாதிப்பால் தூய்மையான குடிநீர் பெறுவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. பெருக்கெடுத்து ஓடி வரும் வெள்ள நீரால் மக்கள் தங்கள் அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்வதிலும் சிரமம் ஏற்பட்டது.


கடாபியை கொலை செய்யவே நேட்டோ படை முயற்சிக்கிறது: ரஷ்ய பிரதமர் குற்றச்சாட்டு.

லிபிய அதிபர் கடாபியை கொலை செய்யவே அவரது அரண்மனை மீது நேட்டோ படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதின் குற்றம் சாட்டியுள்ளார்.லிபிய தலைநகர் திரிபோலியில் உள்ள அரண்மனையில் கடாபி தங்கியுள்ளார். 2 நாட்களுக்கு முன் இந்த கட்டிடத்தின் மீது நேட்டோ படை விமான தாக்குதல் நடத்தியது. அதில் கட்டிடத்தின் ஒரு பகுதி பலமாக சேதமடைந்தது.
இந்நிலையில் டென்மார்க் சென்றுள்ள ரஷ்ய பிரதமர் புதின் இது பற்றி கூறியதாவது: லிபியாவில் நடக்கும் உள்நாட்டு கலவரத்தால் தடை செய்யப்பட்ட பகுதியில் விமானம் பறக்க கூடாது என ஐ.நா உத்தரவை ஏற்றுக் கொள்ளலாம்.ஆனால் ஒவ்வொரு இரவும் கடாபி தங்கியிருக்கும் கட்டிடம் மீது நேட்டோ படை விமான தாக்குதல் நடத்துகிறது. ஏனெனில் கடாபியை கொலை செய்யவே நேட்டோ முயற்சிக்கிறது.
இல்லையெனில் கடாபி தங்கியிருக்கும் கட்டிடம் மீது ஏன் தாக்குதல் நடத்த வேண்டும். அதன் உள்நோக்கம் கடாபியை கொல்ல வேண்டும் என்பதே என்று புதின் தெரிவித்தார்.இதற்கு மறுப்பு தெரிவித்த நேட்டோ படை கமாண்டர் சார்லஸ் பவுச்சர்டு கூறுகையில்,"கடாபி அரண்மனையில் இருக்கும் ராணுவ வீரர்களை நோக்கியே தாக்குதல் நடத்துகிறோம். கடாபியை குறிவைத்து அல்ல" என்று தெரிவித்தார்.
இந்தியாவுடன் மேம்பட்ட உறவை ஏற்படுத்த வேண்டும்: கனடா
இந்தியாவுடனான ஒருங்கிணைந்த உறவை அனைத்து துறைகளிலும் மேம்படுத்த வேண்டும் என்று கனடாவின் எதிர்க்கட்சியான சுதந்திர கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.கனடா-இந்தியா அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த வட்ட மேஜை கலந்தாய்வில் இந்த முடிவு வலியுறுத்தப்பட்டது. இந்தியாவுடன் வர்த்தக உறவு மட்டுமின்றி, குடியேற்றம், சுற்றுலா, கல்வி உள்ளிட்ட துறைகளிலும் உறவுகளை மேம்படுத்த வேண்டும் என்று சுதந்திர கட்சியின் முன்னணி தலைவர்கள் வலியுறுத்தினர்.
இந்தக் கூட்டத்தில் சுதந்திர கட்சியின் முக்கிய தலைவர்களான பாப் ரே, ஜான் மெக்கலம், மரியா மின்னா, ராப் ஓலிபன்ட், ராணா சர்க்கார் ஆகியோர் பங்கேற்றனர். இந்தியா-கனடா இடையிலான உறவு மேலும் வலுவடைந்து வருவதற்கு கனிஷ்கா விமான விபத்தில் கனடா காட்டி வரும் ஒத்துழைப்பே காரணம் என பாப் ரே சுட்டிக்காட்டினார்.முந்தைய சுதந்திர கட்சி ஆட்சியிலிருந்த போது ஜி8 அமைப்பிலிருந்து முன்னேறி ஜி20 நாடுகள் பட்டியலில் கனடா சேர வேண்டியதன் அவசியம் உணரப்பட்டது. இந்த அமைப்பில் வளரும் நாடுகளான இந்தியாவும் இடம்பெற்றுள்ளதை ரே சுட்டிக் காட்டினார்.
இந்தியாவுக்கு கனடா குழு பயணம் மேற்கொண்டு இரு நாடுகளிடையிலான உறவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று மெக்கலம் குறிப்பிட்டார். இந்திய மாணவர்களைக் கவர்வதில் அவுஸ்திரேலியா அதிக தீவிரம் காட்டி வருகிறது. இதே போல விசா வழங்கும் நடைமுறைகள் தளர்த்தப்பட்டால் இந்திய மாணவர்கள் கனடாவுக்கு வருவது அதிகரிக்கும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
நிறுவனங்களுக்கான வரி 18 சதவீதமாகத் தொடர வேண்டும் என்றும் இதன் மூலம் வரி செலுத்துவோர் சேமிக்கும் அளவு 600 கோடி டொலராக உயரும் என்றும் அவர் கூறினார். நிறுவன காப்பீடு பிரிமீயம் முறையில் மாற்றம் செய்தால் வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை குறையும் என்று குறிப்பிட்ட ராப் ஒலிபன்ட், 20 ஆண்டுகளுக்கு முன்னரே குஜராத் மாநிலம் மிகச் சிறப்பாக முன்னேறும் என குறிப்பிட்டதாகக் கூறினார்.
அல் கொய்தா அமைப்புக்கு ஆட்களை தெரிவு செய்யும் மசூதிகளின் பட்டியல் வெளியீடு.
உலகத்தையே அதிர வைக்கும் அல் கொய்தா அமைப்பினர் தங்களுக்கு தேவையான பயங்கரவாதிகளைத் தெரிவு செய்யும் மசூதிகளின் பட்டியலை அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் கண்டறிந்துள்ளது.ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகளில் வலுவான தளத்தைக் கொண்டுள்ள அல் கொய்தா பயங்கரவாதிகள் உலகையே அச்சுறுத்தும் வகையிலான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இருப்பினும் கனடாவின் மொன்றியல் நகரிலிருந்து கராச்சி வரையில் மசூதிகள் இஸ்லாமிய மையங்களில் அல் கொய்தா அமைப்புக்கு ஆள் சேர்க்கும் இடங்களின் பட்டியலை பென்டகன் தயாரித்துள்ளது.
இந்த பட்டியலில் கியூபாவில் உள்ள குவாந்தநாமோ வளைகுடா, மொன்றியலில் உள்ள அல்சுனா மசூதி, கராச்சியில் உள்ள அபு பகிர் சர்வதேச பல்கலைக்கழகம், ஏமனில் உள்ள திமஜ் மையம், வடக்கு லண்டனில் உள்ள பின்ஸ்பரி பூங்கா மசூதி, இத்தாலியின் மிலன் நகரில் உள்ள மசூதி, பிரான்ஸின் லியோன் நகரில் உள்ள லினெக் மையம், காபூலில் உள்ள வாஸிர் அக்பர் கான் மசூதி ஆகியவற்றில் அல் கொய்தா அமைப்புக்கு ஆள் சேர்ப்பு நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அல் கொய்தா அமைப்பினர் தங்களது மையத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுவதை பிரான்ஸில் உள்ள லெனக் மைய காப்பாளர் மறுத்துள்ளார். சிறந்த நன்னடத்தையுடன் செயல்படுவதால் உலகிலேயே மிகவும் பிரபலமாக இந்த மையம் விளங்குகிறது.
அப்படியிருக்கும் போது இதுபோன்ற முட்டாள் தனமான செயல்களில் இந்த மையம் ஈடுபடுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அமெரிக்காவுக்கான பிரான்ஸ் தூதரிடம் தங்களது கண்டனத்தைத் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.இதுபோன்ற தகவல்களை வெளியிடுவது திட்டமிட்டே மசூதியின் மீது களங்கம் கற்பிக்கும் நடவடிக்கையாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF