Friday, September 30, 2011

அற்புதமான அறிவியல் - இன்று ஒரு தகவல்...


உயரமானஇடங்களுக்குசெல்லநம்மஊர்களில்பெரியஏணிகளைபயன்படுத்துவதைநாம்பார்த்திருக்கிறோம்.நகரங்களில் மிகஉயரமானகட்டடங்களுக்கு செல்லமின்ஏணியை (லிப்ட்)பயன்படுத்துகிறார்கள். இதையேநாம் ஏன்விண்வெளிக்குபயன்படுத்தகூடாது என்றுநினைத்ததின் விளைவுதான் இந்தவிண்வெளிஏணி(SPACELADDER). பூமியிலிருந்து விண்வெளிக்கு அடிக்கடிவிண்வெளிஓடங்களைஅனுப்புவதைகாட்டிலும்ஒருஏணிஓன்று இருந்தால்(படத்தில்காட்டியபடி)விண்வெளிவீரர்களுக்குதேவையானகருவிகளும்,பொருட்களும் எளிதாக எடுத்துசெல்லமுடியும். ஏன் நாசாவிண்வெளிஆய்வுநிறுவனம் இந்தமுயற்சியை தொடங்கினது.


 ஏறக்குறையமூன்றுமுறைகள் இதற்க்கான முயற்சிகள்எடுக்கப்பட்டு தோல்விஅடைந்துவிட்ட நிலையில் ஜப்பான்தனது சொந்த செலவில் இப்படி ஒருஏணியைஉருவாக்கமுனைந்துள்ளது. இதற்காககிட்டத்தட்ட 7.3பில்லியன் டாலர்பணம்செலவாகும்எனகணக்கிடப்பட்டுள்ளது. இரும்பைவிட எடைகுறைந்த ஆனால் அதேநேரத்தில் இரும்பைவிட180 மடங்குவலிமைபெற்ற 22000 மைல்நீளத்திற்கு கேபிள்கள் தயாரிக்கப்படும் எனதெரிகிறது. இன்னும்முயற்சிகள் முழுமைபெறாதநிலைமையிலும் ,அறிவியலில்இத்தகையஅற்புதங்கள்நடப்பது சகஜம்தானே. சீக்கிரத்தில்பெரியஏணியைபார்க்கலாம்எனநம்புவோம்....!

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

பௌதீக விதிகளில் ஒன்றை பொய்யாக்கிய கண்டுபிடிப்பு....

Posted Image
பேரண்டத்தில் வேகமாகப் பயணம் செய்யக்கூடியது எது எனும் கேள்விக்கு இதுவரை “ஒளி” என்பதே விடையாக இருந்து வந்தது, ஆனால் அது இப்போது பொய்க்கும் என்ற தோற்றப்பாடு அண்மைய ஆராய்வுகளினால் உருவாக்கப்பட்டுள்ளது.
நியூட்ரினோ.
நியூட்ரினோக்கள் (neutrino) அல்லது நுண்நொதுமிகள் எனப்படுபவை லெப்டான்கள் (Lepton) அல்லது மென்மிகள் எனப்படும் அணுக்கூறின் அடிப்படைத் துகள்கள் வகையில் அடங்குகின்றன. இவை எதிர்மின்னிகள் (இலத்திரன்கள்) போன்று இருந்தாலும் ஏற்றம் அற்ற நடுநிலை கொண்டமையால் நியூட்ரினோக்கள் என அழைக்கப்படுகின்றன. நியூட்ரினோக்கள் வேறு நியூட்ரான்கள் (neutron) அல்லது நொதுமிகள் வேறு; நொதுமிகள் வன்மி அல்லது 

ஆட்ரான் பிரிவுக்குள் அடங்குவன. 
நியூட்ரினோக்கள் பேரண்டத்தில் இருந்து சூரியன் மற்றும் வேறு விண்மீன்களிலிருந்தும் வெளிப்படும் அணுத்துகள்களாகும். கனமற்ற இத்துகள்கள் விண்வெளியிலிருந்து கீழிறங்குகின்றன. நித்தமும் புவியை நோக்கிப் பாய்ந்த வண்ணம் இருக்கும் பல கோடி நியூட்ரினோக்களை ஒரு கருவி மூலம் ஈர்த்து அவற்றை ஆய்வு செய்வதுதான் நியூட்ரினோ ஆய்வகத் திட்டம்.
ஒளியின் வேகமும் ஐன்ஸ்டைனும்.
ஒளியின் வேகம் 299,792,458 மீட்டர்/ செக்கன்கள் (m / s) ஆகும். ஐன்ஸ்டைனின் சிறப்புச் சார்புக் கோட்பாடு ஒளியின் வேகத்தை மையமாகக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது, இதன்படி ஒளியே இப்பிரபஞ்சத்தில் மிகவும் வேகமான பொருளாகும். ஆனால் நியூட்ரினோக்கள் 299,798,454 மீட்டர்/ செக்கன்கள் (m / s) வேகத்தில் பயணித்தாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆய்வு.
சுவிட்சர்லாந்தின் செர்ன் ஆராய்ச்சிக் கூடத்திலிருந்து சுமார் 732 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இத்தாலிய ஆராய்ச்சிக் கூடம் ஒன்றுக்கு அணுவிலும் சிறிய துகள்களான நியூட்ரினோக் கற்றைகளை அனுப்பி அது பயணித்த நேரத்தை அளந்தபோது ஒளி பயணிக்க எடுக்கும் நேரத்தைவிடக் குறைவான நேரத்தில் பயணித்திருப்பதை முடிவுகள் காட்டின. 60 நானோ செக்கன்களால் (0.00000006 செக்கன்கள்) ஒளியைவிட விரைவாக வந்தடைந்ததை அறிந்தார்கள். 

தாங்கள் அளந்தது சரிதானா என்பதை உறுதிசெய்வதற்காக இவர்கள் 15 ஆயிரம் முறை திரும்பத் திரும்பச் செய்து பார்த்திருக்கிறார்கள். ஆனால் அத்தனை முறையிலும் நுண்நொதுமியானது ஒளியை விட வேகமாகப் பயணிப்பதாகவே முடிவுகள் காட்டியிருந்தன. தாங்கள் கண்டறிந்தது உண்மைதானா என்று இவர்களால் இன்னும் அறுதியிட்டுக் கூறமுடியவில்லை.

இந்தப் பரிசோதனைகள் தொடர்பாக பல்வேறு ஆய்வாளர்கள் ஐயம்தெரிவித்துள்ளார்கள். எல்லாத் தரப்பினரும் மேலதிக ஆய்வுகள் தேவை என்று கூறிஉள்ளார்கள். அந்த முடிவு உண்மையானால் பிரபஞ்சத்தின் இயல்பு பற்றிய மிகமுக்கியமான பௌதீக விதிகளில் ஒன்றை பொய்யாக்குவதாக இந்த கண்டுபிடிப்புஅமையும்.ஆகவே இவர்கள் தங்கள் ஆராய்ச்சியின் முடிவுகளை பொதுமன்றத்தில் முன்வைத்து, தாங்கள் எந்த இடத்திலாவது பிழை விட்டிருக்கிறோமா என்பதை பிற விஞ்ஞானிகள் கண்டறிந்து சுட்டிக்காட்ட வேண்டும் என இவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

ஹோர்மோன்களை ஊக்குவிக்கும் வாழைப்பழம்...


வாழைப்பழம் ஒரு சாதாரணப் பழவகையைச் சேர்ந்ததாக இருந்தாலும் அதன் மருத்துவ குணங்கள் அதிசயிக்க வைக்கின்றன.வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது. டிரைப்டோபென் பின்னர் நியாசினாக மாற்றம் அடைகிறது. உடலில் உள்ள ஹோர்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது. நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது. பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது.நம்முடைய உடலில் சுரக்க கூடிய திரவத்தை சமநிலைப்படுத்துகிறது. உடம்பில் உள்ள செல்களை தூய்மையாகவும் நல்ல ஊட்டச்சத்துடனும் வைத்து கொள்கிறது.
வாழைப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்துகள் குடலை சீராக வைக்கிறது. வாழைப்பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டாலோ அல்லது தேன் கலந்து சாப்பிட்டாலோ அவை வயிற்று சம்பந்தமான நோய்களை குறைக்கிறது.ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்கும் வைக்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.
வாழைப்பழத்தை நம்முடைய உணவின் ஒரு பகுதியாக சாப்பிட்டு வந்தால் பக்கவாதத்தால் ஏற்படும் இறப்பு சதவீதம் 40 சதவீதம் குறையும் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. வாழைப்பழம் மனிதனின் மூளைக்கு தேவையான எல்லாப் புரதச் சத்துக்களையும் கொண்டுள்ளது.வாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக்(Natural Sugar) கொண்டுள்ளது. அதாவது சுக்ரோஸ்(Sucrose), பிரக்டோஸ்(Fructose) மற்றும் குளுக்கோஸ்(Glucose) உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான ஃபைபரையும்(Fiber) கொண்டுள்ளது.
இரண்டு வாழைப்பழம் சாப்பிட்ட 1 1/2 மணி நேரத்தில் உடலுக்குத் தேவையான, உடனடியான, உறுதியான, கணிசமான, ஊக்கமுள்ள ஊட்டச்சத்தை கொடுப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.வாழைப்பழம் ஒரு மனிதனுக்கு கிடைக்ககூடிய ஊட்டச்சத்து மட்டுமல்ல பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்தடுப்பு நாசினியும் கூட. இதை நாம் உடலில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மூளை வலிமை(Brain Power): வாழைப்பழத்தை உணவுடன் சேர்த்து கொடுத்து சோதனை செய்து பார்த்தபோது மூளைத்திறன் அதிகரித்ததோடு பொட்டாசியம் நிறைந்த இந்த உணவு அதிகமான கல்வித்திறனை அளிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
வாழையின் ஒவ்வொரு பாகமுமே மருத்துவ குணங்கள் கொண்டவை. நெஞ்சுக்கரிக்கும் போது ஒரு பழம் சாப்பிட்டால் எரிச்சல் நீங்கி விடும். இதன் காரத்தன்மை நெஞ்செரிச்சலை உருவாக்கும் அமிலத்தைச் சமன் செய்து நிவாரணம் அளிக்கிறது.கர்ப்பிணிகள் வாழைப்பழம் சாப்பிட்டால் வயிற்றுப் புரட்டலை தடுக்கும். இதிலுள்ள சர்க்கரை ரத்தத்தில் கலந்து வாந்தியைத் தடுக்கிறது. நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கலைத் தடுக்கும்.
இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் சிவப்பணுக்கள் குறைபடும் இரத்த சோகைக்கும் அருமருந்தாய் அமைகிறது வாழைப்பழம்.குடிபோதையை நீக்க சிறந்தது. இதனை மில்க்ஷேக் செய்து தேன் கலந்து பருகினால் வயிற்றைச் சுத்தம் செய்து உடலுக்கு சக்தியைக் கொடுக்கும். உடலில் நீர்ச்சத்தையும் அதிகரிக்கச் செய்யும்.
மிக ஆரோக்கியமான, ஒரு கெடுதலும் தராத பழவகை இது. இதில் அதிகமான பொட்டாசியம் இருப்பதால் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு சாப்பிடச் சொல்வார்கள்.இதில் சோடியம் உப்பு குறைவாக இருப்பதால் ரத்த அழுத்தக்காரர்கள் சாப்பிடலாம். குழந்தைகளின் ஊட்டத்துக்குச் சிறந்தது. கால்களில் ஆடுசதையில் சட்டென்று பிடித்திழுக்கும். இது பொட்டாசியம் குறைவால் வருகிறது. தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் இதைத் தடுக்கலாம்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

மனிதர்களை அடிமையாக்கிய உப்பு: ஆராய்ச்சியாளர்கள் தகவல்..


எப்படி புகையிலையும், சிலவகை போதை மருந்துகளும் மனித மூளையின் செல்களை தூண்டிவிட்டு தற்காலிகமாக துடிப்புடன் செயல்பட வைக்கின்றனவோ, அதையேதான் உப்பும் செய்கிறதாம்.இப்படித்தான் கூறுகிறார்கள் இது குறித்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள். என்ன? இந்த செய்தியே ஒரு சிட்டிகை உப்பு சாப்பிட்டதைப் போல் இருக்கிறதா?
உயர் ரத்த அழுத்தம் அல்லது இதயக் கோளாறுகளுக்கு இலக்காகலாம். எனவே உப்பைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்ற டாக்டர்களின் அறிவுரைக்கும் செவி சாய்க்காது.உப்பின் மீதுள்ள காதலைக் குறைக்காமல் இருப்பவர்கள் ஏராளம். மீன், எண்ணையில் பொரிக்கப்படுகிற நொறுக்குத்தீனி இவையெல்லாம் உப்பில்லாமல் போனால் எப்படி இருக்கும்? யாருமே விரும்பமாட்டார்கள்.
உப்பு தொடர்பான இருவேறு விதமான ஆராய்ச்சிகளை அமெரிக்க மற்றும் அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் குழு மேற்கொண்டது. முதலில் சில எலிகளுக்கு குறைவாகவும், சிலவற்றுக்கு அதிகமாகவும் உப்புச் செலுத்தப்பட்டு அவற்றின் மூளை செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டன.
மற்றொரு முறையில் சில எலிகளுக்கு சில நாட்கள் வரை உப்பு எதுவும் தராமல் விட்டுவிட்டு பின்னர் உப்பைக் கொடுத்து அவற்றின் மூளைச் செயல்பாடுகளைக் கவனித்தனர்.ஹெராயின், கோகெய்ன் மற்றும் நிகோடின் போன்றவற்றுக்கு அடிமையானவர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருந்தன, உப்புக்காக ஏங்கிப்போன எலிகளின் செயல்பாடுகள். உப்பின் அளவு குறையும் நிலையில் மூளையில் நியூரான்களின் சேர்க்கை நடைபெறுகிறது.
இந்த நியூரான் சேர்க்கைதான் உப்பு உடனடியாக தேவை என்ற உணர்வை அல்லது ஒருவித வேட்கையை ஏற்படுத்துகிறது என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.உப்பு கொடுக்கப்பட்டு அது ரத்தத்துடன் கலப்பதற்கு முன்பே எலிகளிடம் முன்பிருந்த அசாதாரண நிலை முற்றிலுமாக மாறிப்போனது என்ற சுவாரசியமான உண்மையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் உப்பின் அளவைக் குறைத்தபோது எலிகளுக்கு உணவின் மீதே நாட்டம் குறைந்து போனது. உப்பின் சுவை குறித்த தகவல்களும், அது தேவை என்கின்ற எண்ணமும் மூளையில் ஆழப் பதிவாகியிருப்பதனாலேயே நாம் உப்புப் பண்டங்களை விரும்பிச் சாப்பிடுகிறோம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

இன்றைய செய்திகள்.

பிரிட்டனிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தில் புலனாய்வு பொலிஸாரிடம் ஒப்படைப்பு.

பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 50 இலங்கையர்களும் இன்று காலை 10.26ற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
LC6286 என்னும் விமானத்தில் 100 பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் பாதுகாப்புடன் மேற்படி 50 பேரும் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த மேற்படி நபர்களை தற்சமயம் தேசிய குற்றப் புலனாய்வு பிரிவினர் பொறுப்பேற்றுள்ளனர்.இவ்வாறு இலங்கை வந்தவர்களில் 42 ஆண்களும் 8 பெண்களும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.இவர்கள் அனைவரும் குற்றப்புலனாய்வு பிரிப் பொலிஸாரினால் விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, பிரிட்டனில் உள்ள தமிழர்கள் சிலரை மீண்டும் இலங்கைக்கு அனுப்பிவைக்கும் பட்சத்தில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு ஆளாக்கப்படும் சாத்தியம் உள்ளதால் பிரித்தானிய அரசாங்கம் இத்திட்டத்தை மீளாய்வு செய்ய வேண்டும் என பிரித்தானிய மருத்துவ அறக்கட்டளையகம் இன்று தெரிவித்திருந்தது.இந்தநிலையில், புகலிட கோரிக்கை மறுக்கப்பட்ட 50 பேரை வாடகை விமானம் மூலம் பிரித்தானிய எல்லை முகவரகம் பலவந்தமாக திருப்பி அனுப்பியுள்ளது.
இலங்கையில் 2009 மே மாதம் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட சிலர் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டமைக்கு மருத்துவ சான்றுகள் உள்ளன என அறக்கட்டளையகம் குறிப்பிட்டது.இதேவேளை, தமிழீழ விடுதலை புலிகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் மோசமாக நடத்தப்படும் ஆபத்து உள்ளது என பல தொண்டர் நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
தமிழீழ விடுதலை புலிகளுடன் தொடர்புடையவர்கள் என தடுத்து வைக்கப்பட்டவர்கள் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என மனித உரிமை கண்கானிப்பகத்தின் ஆசிய பணிப்பாளர் பிராட் அடம்ஸ் கூறினார்.அவுஸ்திரேலியாவிலிருந்து வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப்பட்டவர்கள் இலங்கைக்கு மீண்ட போது சித்தரவதைக்கு உட்பட்டதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்தது.
கொழும்பில் மேற்கொள்ளப்படும் கட்டிட இடிப்புகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை: ஐ.தே.க.
கொழும்பில் மேற்கொள்ளப்படும் கட்டிட இடிப்புகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ள ஐ.தே.க. தீர்மானித்துள்ளது.நகர பகுதிகளில் வாழும் மக்களின் வீடுகளை உடைக்கும் நடவடிக்கைக்கு எதிராக சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்க ஐக்கிய தேசியக் கட்சி தயாராக உள்ளதென அக்கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த சிந்தனையின் கீழ் வீடுகளை உடைப்பதற்கான தேவையே தற்போது அரசாங்கத்திற்கு உள்ளது எனக் குறிப்பிட்டுள்ள அந்த அறிக்கையானது, கொழும்பிலுள்ள வீடுகளை உடைக்கப் போவதில்லை என தெரிவிக்கும் அரசாங்கம் தேர்தல் நிறைவுபெறும் வரை காத்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி பிரேரணை ஒன்றை நிறைவேற்ற வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ள ஐ.தே.க. வானது, இந்த வீடுகளில் வாழும் குறைந்த வருமானம் பெறும் மக்கள் தற்போது வழக்கு தாக்கல் செய்துள்ளதாக தொpய வருகின்றது.ஐக்கிய தேசியக் கட்சியும் அவர்களுடன் ஒன்றிணைந்து நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து வழக்கை வெற்றிக் கொள்ள உதவி புரியும் எனவும் ஐ.தே.க மேலும் தெரிவித்துள்ளது.
சார்ஜாவில் கொள்ளையில் ஈடுபட்ட இலங்கையர் கைது.
சார்ஜாவில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட ஆறு இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் அறுவரும் சார்ஜா நகரத்தில் அமைந்துள்ள பதினான்கு வர்த்தக நிலையங்களைக் கொள்ளையடித்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அதற்கு மேலதிகமாக அவர்கள் தனியார் வீடுகள் சிலவற்றையும் கொள்ளையடித்துள்ளனர்.சார்ஜா பொலிசார் மேற்கொண்ட சோதனைகளின் போது கைது செய்யப்பட்ட நபர்கள் கொள்ளையடித்த பொருட்கள் சிலவற்றையும் மீட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பொருட்களில் மடிக்கணணிகள் மற்றும் விலையுயர்ந்த செல்லிடத் தொலைபேசிகள் என்பனவும் உள்ளடங்கியிருந்ததாக அறிய முடிகின்றது.
கொழும்பில் சிறுபான்மையினரின் வர்த்தகத்துக்கு ஆப்பு?
கொழும்பில் சிறுபான்மையினரின் கையில் உள்ள வர்த்தகத்துக்கு ஆப்பு வைக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது.அதன் முதற்கட்டமாக கொழும்பின் அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் அம்பாந்தோட்டைக்கு மாற்றி, அதனையே இலங்கையின்; வர்த்தகத் தலைநகரமாக்கும் திட்டம் குறித்து தற்போது அரசு ஆராய்ந்து வருவதாக அறியக் கிடைத்துள்ளது.
கொழும்பில் வர்த்தக நடவடிக்கைகளை விஸ்தரிக்க இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், அம்பாந்தேட்டையில் தேவையான அளவு நிலம் உள்ளதன் காரணமாகவுமே இந்த விடயம் குறித்து ஆராயப்பட்டு வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும்,  அம்பாந்தோட்டை முற்றிலுமாக சிங்களவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்டம் என்பதன் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அம்பாந்தோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாவட்டத்தில் அண்மையில் துறைமுகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டதுடன் விமான நிலைய அமைப்புப் பணிகளும் துரிதமடைந்துள்ளன.இந்த நிலையிலேயே இலங்கையின் வர்த்தக தலைநகராகவும் அது மாற்றப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதுஇவ்வாறான பின்னணியிலேயே கொழும்பின் வர்த்தக நடவடிக்கைகளை அம்பாந்தோட்டைக்கு மாற்றுவதற்கான அடுத்த கட்ட முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது.
ஐ.நா.வின் மீளாய்வை அடுத்து இலங்கை மீதான பிடி இறுகும்: இந்திய ஊடகம்.
ஐ.நா. வின் மீளாய்வை அடுத்து போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை மீதான பிடி இறுகும் என்று இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.சிறிலங்காவில் நடந்து முடிந்த போரின் போது ஐ.நாவின் மனிதாபிமான மற்றும் பாதுகாப்புத் தொடர்பான கடப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்ட விதம் தொடர்பாக மீளாய்வு செய்ய ஐ.நா பொதுச்செயலர் உத்தரவிட்டுள்ளது சிறிலங்காவுக்கு மேலும் பல பிரச்சினைகளை உருவாக்குவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக இந்திய ஊடகம் பிரஸ்தாப செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
இந்த மீளாய்வை மேற்கொள்ள சவூதி அரேபிய நாட்டவரான ஐ.நாவின் முன்னாள் சனத்தொகை நிதியப் பணிப்பாளர் தொராயா ஒபெய்ட்டை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்துள்ளார்.இவர் அடுத்த மாதம் ஆரம்பித்து நான்கு மாதங்களுக்குள் தனது பணியை நிறைவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஐ.நா அதிகாரிகள்> அதன் களப் பணியாளர்கள் மற்றும் சிறிலங்காவில் உள்ள நிபுணர்களின் கருத்துகளையும் இவர் பெற்றுக் கொள்ளவுள்ளார்.
போரின் போது பொதுமக்களைப் பாதுகாக்க ஐ.நாவும் அதன் அமைப்புகளும் தவறி விட்டதாக ஐ.நா நிபுணர் குழு தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்ததுஅத்துடன் போரின் போதான ஐ.நாவின் செயற்பாடுகளை மீளாய்வு செய்ய வேண்டும் என்றும் ஐ.நா நிபுணர் குழு பரிந்துரை செய்திருந்தது.
இந்தநிலையிலேயே பான் கீ மூன் தொராயா ஒபெய்ட்டை ஐ.நாவின் செயற்பாடுகளை மீளாய்வுக்காக நியமித்துள்ளதாகவும், இது சிறிலங்காவுக்கு மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்தலாம் என்றும் இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற இருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைது.
இந்தியாவுக்கு 15 மில்லின் ரூபா பெறுமதியான தங்கக் கட்டிகளை கடத்திச் செல்ல முற்பட்ட இலங்கையர் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.புத்தளம், நீர்கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவரே கைது செய்யப்படவர்களாவர். 
 இவர்கள் 2கிலோ 400 கிராம் எடையுடைய தங்கக் கட்டிகளை முதுகில் மறைத்து வைத்து பெங்களூருக்கு எடுத்துச் செல்ல முற்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக விமான நிலைய பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைப்பற்றப்பட்ட தங்கம் அரசு உடைமையாக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் இருவரிடமும் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக எமது விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கைக்கு எதிரான அனைத்துத் தீர்மானங்களையும் முறியடிப்போம்: அரசாங்கம்.
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக எவ்வகையான தீர்மானங்களை முன்வைத்தாலும் அதனை முறியடிப்போம். போர்க் குற்றச்சாட்டுக்களை மையப்படுத்தி இலங்கைக்கும், சர்வதேசத்திற்கும் இடையில் நடைபெறுகின்ற போராட்டத்திற்கு ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் நாளை பதில் கிடைத்துவிடும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இடம்பெயர்ந்த தமிழர்களும், சர்வதேச அரச சார்பற்ற நிறுவனத்தினரும், மேற்குலக நாட்டவருமே இன்று இலங்கையின் நற்பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் செயற்படுகின்றனர்.
இவர்கள் மிக தீவிரமாக இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு முயற்சிக்கின்ற போதிலும் அதனை பெரும்பாலான நாடுகளின் ஆதரவுகளைப் பெற்று முறியடிக்க தேவையான பொறிமுறையை கையாண்டுள்ளதாகவும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக நேற்று புதன்கிழமை மகாவலி கேந்திர நிலையத்தில் நடைப்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியதாவது:
ஜெனிவாவில் அமைந்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் சாசனத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை கொண்டு வர சர்வதேச மட்டத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.குறிப்பாக கனடா மற்றும் மேற்குலக நாடுகள் உட்பட அரசசார்பற்ற நிறுவனங்கள், சர்வதேசத்தில் வாழும் புலி ஆதரவாளர்கள் என்று பல்சார் கூட்டணி இன்று இலங்கைக்கு எதிரான தீர்மானங்களுக்கு ஆதாரங்களை தயாரித்து வருகின்றன.
இவர்களின் இலங்கைக்கு எதிரான பிரதான ஆதாரமாக ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை கையாளப்பட்டு வருகின்றது.நாளை வெள்ளிக்கிழமை 30ஆம் திகதியே இலங்கைக்கு எதிரான எந்தவொரு தீர்மானத்திற்கும் இறுதி நாளாகும்.ஏனென்றால் மனித உரிமை பேரவையில் தோல்வியடைந்த எந்தவொரு தீர்மானத்தையும் பாதுகாப்புச் சபைக்கோ, பொதுச் சபைக்கோ கொண்டுச் செல்ல முடியாது.
இலங்கைக்கு ஆதரவாக ஜெனிவா மனித உரிமை பேரவையில் ஏராளமான நாடுகள் உள்ளன.எனவே குறிப்பிட்ட சிலரின் செயற்பாடுகள் இலங்கைக்கு சவாலாக அமையாது. எவ்வாறாயினும் நாட்டிற்கு எதிராக முன்வைக்கப்படும் அனைத்து தீர்மானங்களையும் நாம் முறியடிப்போம் என்றார்.
நம்பகமான விசாரணைகளை இலங்கை நடத்த வேண்டும்!- அமெரிக்கா மீண்டும் வலியுறுத்து.
வன்னியில் போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் குறித்து நம்பகத் தன்மை வாய்ந்த விசாரணைகளை இலங்கை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
வாஷிங்டனில் நேற்று முன்தினம் நடத்திய நாளாந்த செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதிப் பேச்சாளர் மார்க் ரோனர் இவ்வாறு வலியுறுத்தினார்.
குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் நம்பகமான விசாரணைகளை நடத்த இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்றார் அவர்.
ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையை பொதுச்செயலர் பான் கீ மூன் அனுப்பி வைத்துள்ளமை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே மார்க் ரோனர் இதனைத் தெரிவித்தார்.
காலாவதியான வீசாக்களுடன் இலங்கையில் தங்கியிருப்போரை கண்டுபிடிக்க விசேட பிரிவு.
காலாவதியான வீசாக்களுடன் இலங்கையில் தங்கியிருப்போரை கண்டுபிடிப்பதற்கு விசேட பிரிவொன்று நியமிக்கப்பட உள்ளது.இலங்கையில் தங்கியிருப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள வீசா காலத்தைத் தாண்டி தொடர்ந்தும் தங்கியிருக்கும் வெளிநாட்டு பிரஜைகளை கைது செய்யும் நோக்கில் இந்தப் பிரிவு நியமிக்கப்பட உள்ளது.
இலங்கைக் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தினால் இந்த விசேட பிரிவு உருவாக்கப்பட உள்ளது.சட்டவிரோதமான முறையில் தங்கியிருக்கும் வெளிநாட்டுப் பிரஜைகள் பற்றிய தகவல்களைத் திரட்டி அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூளானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டவர்கள் தங்கியிருக்கக் கூடிய இடங்களில் விசேட சோதனையை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
மைக்கல் ஜாக்சனின் இறுதி நாட்கள்: குழப்பத்தில் நீதிபதிகள்.
மைக்கல் ஜாக்சனின் நண்பரான நடன இயக்குநர் கெனி ஒட்டேகாவும் ஜாக்சனின் தனிப்பட்ட வைத்தியர் கொன்றட் முரேயினால் அவரது உடல்நிலை கவனிக்கப்படவில்லை என்றார்.2009 ஜுலை 25ல் ஜாக்சனின் இறப்பு வைத்தியரால் அறியாமல் இடம்பெற்றது என்பதை முரே மறுத்துள்ளார். ஆனால் ஜாக்சன் சக்திமிக்க மயக்கமருந்தைப் பயன்படுத்தியதால் இறந்துள்ளார் என்பதை அரச விசாரணையாளர் உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
லொஸ் ஏஞ்சல்சில் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வைத்தியர் முரேயின் விசாரணையில் முதலாவது சாட்சியாக நடன இயக்குநர் ஒட்டேகா அழைக்கப்பட்டிருந்தார். இதில் அவர் ஜுன் 19 இல் ஒத்திகைக்காக ஜாக்சன் வந்திருந்த போது எவ்வாறு கவலைப்படத்தக்க நிலையில் இருந்தார் என்று விபரித்தார்.ஜாக்சன் தன்னுடன் உரையாடியபோதும் அவர் சரியான நிலையில் இல்லையென்பதைத் தான் கண்டுகொண்டதாகவும் அதனால் அன்று ஒத்திகை வைக்கவில்லையென்றும் வைத்தியருக்கு அழைப்பு விடுத்தபோது அவரை அணுகமுடியவில்லையென்றும் அதனால் அவருக்குத் தான் உணவூட்டிவிட்டுப் படுக்கையில் போர்வையால் மூடிப் படுக்கவைத்ததாகவும் குறிப்பிட்டார்.
அதன் பின்னர் 20ஆம் திகதி ஜாக்சனின் வீட்டிற்குச் சென்றிருந்தபோது அங்கு நின்ற வைத்தியர் ஜாக்சனை ஒத்திகை செய்யவிடாமல் அவரது உடல்நிலையை ஒட்டேகா முன்னேறவிடாமல் தடுத்ததாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.ஆனால் ஒத்திகை செய்யக்கூடிய நிலையில் ஜாக்சன் இருக்கவில்லை என்பதை ஒட்டேகா தெளிவுபடுத்தினார். அதன்பின்னர் 23இலும் 24இலும் அவர் ஒத்திகைக்கு வந்திருந்தார் என்றும் அவரை அப்போது பார்த்தபோது முற்றிலும் வித்தியாசமான நபராகத் தெரிந்தார் என்றும் குறிப்பிட்டார்.
அவர் அவ்விரு நாட்களும் சிறப்பாக நடனமாடினார் என்று கூறினார். அதுதான் மைக்கல் ஜாக்சின் இறுதி மேடை நடனமாகும். இந்த நடனத்தை நீதிமன்றமும் பார்த்தது.வைத்தியர் முரே அவருக்கு உடனடியாக மயக்கத்தைக் கொண்டுவரும் propofol மருந்தினைக் கொடுத்துவிட்டு அலட்சியமாக அவரது அறையைவிட்டுச் சென்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.எனினும் வைத்தியருக்காக வாதாடிய சட்டவாளர்கள் அம்மருந்தினை ஜாக்சன்தான் வைத்தியர் வெளியில் இருந்த சமயத்தில் அளவுக்கதிகமாகச் செலுத்தியிருந்தார் என்று கூறினர்.
இந்தியாவை சமாளிப்பதற்காக தான் ஹக்கானி அமைப்புக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிக்கிறது: முஷாரப்.
ஆப்கானிஸ்தானை பாகிஸ்தானுக்கு எதிராக திருப்பப் பார்க்கிறது இந்தியா என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் குற்றம்சாட்டியுள்ளார்.எனவே அதை சமாளிக்கத் தான் பாகிஸ்தான் ஹக்கானி தீவிரவாத அமைப்புக்கு ஆதரவளித்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.ஹக்கானி தீவிரவாத அமைப்பு தொடர்பாக பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே கடும் மோதல் மூண்டுள்ளது.
பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கும், ஹக்கானி தீவிரவாத அமைப்பிற்கும் தொடர்பு உள்ளது என்று அமெரிக்கா குற்றம்சாட்டியது. இதனால் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர் கடுப்பாகினார்.அமெரிக்கா எங்களைக் குற்றம் கூறுகிறது. ஆனால் அமெரி்ககாவின் சிஐஏவுக்கும் உலகில் உள்ள பல தீவிரவாத அமைப்புகளுக்கும் தொடர்பு உள்ளது. ஏன் ஹக்கானி அமைப்பு பாகிஸ்தானில் செயல்பட்டாலும் அதை துவக்கி ஊக்குவித்து வருவது சிஐஏ தான். சிஐஏவின் செல்லப்பிள்ளை ஹக்கானி அமைப்பு என்று அமெரிக்கா மீது பதிலுக்கு குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கும், ஹக்கானி அமைப்புக்கும் தொடர்பு உண்டு என்று அநநாட்டின் முன்னாள் அதிபர் முஷாரப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் டெய்லி டெலிகிராப் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, நான் பதவியில் இருந்தால் பாகிஸ்தானை எவ்வாறு காப்பாற்றுவது என்று தான் யோசித்திருப்பேன். இந்தியா, ஆப்கானிஸ்தானை பாகிஸ்தானுக்கு எதிராக திருப்ப முயலும் போது நாங்கள் எங்கள் நாட்டை பாதுகாககத் தான் நினைப்போம்.வடக்கு வசிரிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹக்கானி அமைப்புக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாகிஸ்தான் அமெரிக்காவுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
கடலுக்குள் சொகுசு வாழ்க்கை: விஞ்ஞானிகள் தகவல்.
ஹெலிபேட், நீச்சல் குளம், ஏராளமான குடியிருப்புகளுடன் கூடிய கப்பல் போன்ற பிரமாண்ட மிதவையை தயாரித்தால் எதிர்காலத்தில் கடலிலேயே வாழ்க்கை நடத்தலாம் என்கின்றனர் கட்டிட கலை நிபுணர்கள்.
ஐரோப்பிய நாடான மொனாக்கோவில் ஆண்டுதோறும் சொகுசு கப்பல்கள் கண்காட்சி நடக்கும். அதிநவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட படகு வகைகள், சொகுசு கப்பல்கள் ஆகியவை இடம்பெறும். எதிர்காலத்தில் வர இருக்கிற டிசைன்கள் பற்றியும் கப்பல் கட்டுமான நிபுணர்கள் விளக்கம் அளிப்பார்கள்.
இந்த ஆண்டு கண்காட்சியில் இங்கிலாந்தின் சவுத்ஆம்டன் நகரை சேர்ந்த பிஎம்டி நீகல் ஜீ என்ற கட்டுமான கன்சல்டன்சி நிறுவனமும் பங்கேற்றது. அது அளித்த “பிராஜக்ட் உடோபியா” என்ற பிரமாண்ட திட்டம் பலரையும் கவர்ந்தது.இது பற்றி நீகல் நிறுவனத்தின் நிர்வாகி ஹன்ட்ஸ் கண்காட்சியில் தெரிவித்ததாவது: உலகில் பெரும்பாலான பகுதி நீர். எனவே, நிலத்தில் மட்டும்தான் வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற லாஜிக் வெகு காலம் சரிவராது.கடலிலும் வாழ்க்கை நடத்தும் அவசியம்கூட எதிர்காலத்தில் ஏற்படலாம். அதை சமாளிப்பதே இதன் நோக்கம். இத்திட்டத்தின் கீழ் பிரமாண்ட மிதவை ஒன்று உருவாக்கப்படும்.
ஹெலிகாப்டர்கள் வந்து இறங்கக்கூடிய ஹெலிபேட் வசதி, நீச்சல் குளங்கள், 11 தளங்களில் குடியிருப்பு வசதிகள் அதில் இருக்கும். பிரமாண்ட 4 நங்கூரமும் இதில் இருக்கும்.நிரந்தரமாக தங்கும் நாட்களில் 4 நங்கூரத்தையும் கடலில் இறக்கிவிடலாம். பெரும் சூறாவளி, சுனாமியைக்கூட தாக்குப்பிடிக்கும் வகையில் மிதவையும் நங்கூரமும் உறுதியாக அமைக்கப்படும். கடலில் ஒரே இடத்தில் இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.
குறைந்த வேகத்தில் மிதவையை அப்படியே நகர்த்தி இன்னொரு இடத்துக்கும் கொண்டு செல்ல முடியும். கடைகள், ஹொட்டல்கள், பார் ஆகியவை மிதவையிலேயே இருக்கும். தேவைப்பட்டால் சிறு படகுகளை பயன்படுத்தி எப்போது வேண்டுமானாலும் கடலோர நகரத்துக்கு செல்லலாம்.உடோபியா மிதவைக்கான தொழில்நுட்ப திட்டம் தயாராக உள்ளது. எவ்வளவு செலவாகும் என்று மதிப்பிடப்பட்டு வருகிறது.
சவுதியில் பெண் டிரைவருக்கு வழங்கப்பட்ட தண்டனை ரத்து.
பெண் டிரைவர்களுக்கு மன்னர் விதித்திருந்த தடையை மீறியதற்காக சவூதி பெண் ஒருவருக்கு 10 கசையடிகள் வழங்குமாறு நீதிமன்றம் விதித்திருந்த தீர்ப்பை சவூதி மன்னர் அப்துல்லா ரத்து செய்துள்ளார்.
மன்னரின் இந்த முடிவு குறித்து தகவல் தெரிவித்த அதிகாரி அதுகுறித்து விரிவாகப் பேச மறுத்துவிட்டார்.முன்னதாக பெண் டிரைவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மீறி கார் ஓட்டியதற்காக சவூதி நீதிமன்றம் ஷைமா ஜஸ்டைனா என்பவருக்கு 10 கசையடிகள் தண்டனை வழங்குமாறு சவூதி நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
பெண்கள் உரிமை குறித்து மன்னர் பேசிவரும் நிலையில் பெண் டிரைவர் ஒருவருக்கு இவ்வாறு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.இந்த நிலையில் அந்த தண்டனை உத்தரவை மன்னர் ரத்து செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பழங்குடியின பகுதியில் பதுங்கியுள்ள கடாபியை பிடிக்க புது முயற்சி.
அல்ஜீரிய எல்லையில் பழங்குடியினர் பாதுகாப்பில் கடாபி பதுங்கி உள்ளார் என்று லிபியாவின் புதிய ஆட்சியாளர்கள் கூறியுள்ளனர்.லிபியாவில் 42 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி நடத்திய கடாபி தலைமறைவாகி விட்டார். உள்நாட்டுக் கலவரத்தின் மூலம் நாட்டை கைப்பற்றி உள்ள இடைக்கால மாற்று கவுன்சில் நிர்வாகிகள் அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் புதிய அரசு அடுத்த வாரம் பதவியேற்கும் என்று அறிவித்துள்ளனர். இதுகுறித்து கவுன்சில் நிர்வாகிகள் கூறியதாவது: கடாபியின் ஆதரவாளர்கள் சிர்தே பகுதியில் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதற்கு பதிலடி கொடுத்து வருகிறோம்.
கடாபியை பிடிக்கும் வரை லிபியாவுக்கு ஆபத்து இருந்து கொண்டே இருக்கும். அல்ஜீரிய எல்லை பகுதியில் உள்ள நொமாடிக் பழங்குடியினரின் பாதுகாப்பில் கடாபி பதுங்கி இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
அவர்கள் கடும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அந்த பகுதியில் சிக்கியுள்ள பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து ஐ.நா உள்பட உலக நாடுகள் கவலை தெரிவித்து வருகின்றன.அல்ஜீரிய எல்லையில் உள்ள கதாம்ஸ் நகரில் துரெக் பழங்குடியினரின் பாதுகாப்பில் கடாபி பதுங்கி இருப்பதாக மற்றொரு தகவலும் வந்துள்ளது. அதனால் பல வழிகளில் கடாபியை தேடி வருகிறோம். பழங்குடியினரிடம் பேச்சுவார்த்தையும் ஒருபக்கம் நடக்கிறது.
கார் வெடிகுண்டு வெடித்து 11 வயது சிறுமி உட்பட 8 பேர் பலி.
ரஷ்யாவில் கார் வெடிகுண்டு வெடித்து 8 பேர் பலியாயினர். ஆறு பேர் படுகாயம் அடைந்தனர்.ரஷ்யாவின் தாஜெஸ்தான் மாகாணத்தில் உள்ள லொவாஷின்ஸ்கி மாவட்டத்தில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் நேற்று சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில் 11 வயது சிறுமி உட்பட 8 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியாயினர். ஆறு பேர் படுகாயம் அடைந்தனர்.
தாஜெஸ்தான் மாகாணத்தில் பல்வேறு இனத்தவர்கள் வாழ்கின்றனர். குறிப்பாக முஸ்லிம்களின் ஆதிக்கம் இங்குள்ளது. இந்த பகுதியில் தினமும் வன்முறை நிகழ்ந்து வருகிறது.அண்டை நாடான செசன்யாவில் முஸ்லிம்கள் 2 பிரிவாக மோதலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் ரஷ்ய பகுதிக்குள் ஊடுருவி வன்முறைகளில் ஈடுபட்டு வருவதாக தாஜெஸ்தான் மாவட்ட பொலிசார் தெரிவித்தனர்.
பாகிஸ்தானியர் கொலை வழக்கு: 17 இந்தியர்கள் கைது.
ஷார்ஜாவில் நடந்த கொலை வழக்கில் 17 இந்தியர்கள் மீண்டும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.ஐக்கிய அரபு எமிரேட்டைச் சேர்ந்த ஷார்ஜாவில் கடந்த 2009ம் ஆண்டு பாகிஸ்தானியர் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக அங்கு வசிக்கும் இந்தியர்கள் 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஷார்ஜா கோர்ட்டு வழக்கை விசாரித்து 17 பேருக்கும் மரண தண்டனை விதித்தது.இந்த நிலையில் கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்துக்கு ரூ.4 கோடி நிவாரணம் வழங்க 17 பேரும் முன்வந்தனர். இதையடுத்து அவர்களை கோர்ட்டு விடுதலை செய்தது. இதை எதிர்த்து கொலை சம்பவத்தின்போது காயம் அடைந்த 2 பேர் மீண்டும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இதையடுத்து 17 இந்தியர்களும் மீண்டும் கைதாகி ஷார்ஜா சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். நாடு திரும்ப இருந்த நிலையில் ஒரு நாளுக்கு முன்னதாக அவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிலிப்பைன்சில் சூறாவளி: பலி எண்ணிக்கை 31ஆக உயர்ந்தது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் நெசட் சூறாவளி தாக்கியதில் பலியானோர் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஒரு மாதமாகவே பிலிப்பைன்சில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாட்டின் வடக்கு பகுதியில் நெசட் சூறாவளி செவ்வாயன்று தாக்கியது.
இந்த புயல் நேற்று சீனாவை நோக்கி நகர்ந்தது. இதையடுத்து கடும் சூறைக் காற்று வீசியதுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.

இதனால் தலைநகர் மணிலா வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது. சூறாவளியால் ரூ. 110 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் விமான விபத்து: 18 பேர் பலி.
இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியில் 18 பேருடன் சென்ற சிறிய விமானம் ஒன்று கீழே விழுந்து விபத்துக்குள்ளானதாக போக்குவரத்து அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
வடசுமத்ராவின் பஹோரக் கிராமத்தில் அந்த விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் 15 பயணிகள் மற்றும் 3 ஊழியர்கள் இருந்தனர்.விபத்து குறித்து உள்ளூர் கிராமத்தினர் தகவல் அளித்ததாகவும், சம்பவ இடத்தை அடைய மீட்புக் குழுவினர் முயற்சித்து வருவதாகவும் போக்குவரத்து அமைச்சக செய்தித் தொடர்பாளர் பம்பாங் எர்வான் தெரிவித்தார்.
பிரிட்டனில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் கைது.
பிரிட்டனில் சட்டவிரோதமாக தங்கி பணியாற்றி வந்த 27 இந்தியர்களை அந்நாட்டு குடியேற்ற அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பிரிட்டன் தலைநகர் லண்டனின் மேற்குப் பகுதியில் உள்ள ஏஷியன் சூப்பர் மார்க்கெட், மான்செஸ்டரில் கட்டுமானம் நடந்து கொண்டிருந்த ஓர் இடம் ஆகியவற்றில் கடந்த இருவாரங்களில் பிரிட்டன் குடியேற்ற அதிகாரிகள் நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக பிரிட்டனில் தங்கி பணியாற்றி வந்த 27 இந்தியர்களைக் கைது செய்தனர்.
இதுகுறித்து குடியேற்றத் துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,"பிரிட்டனில் வேலை வழங்குவோர், தங்கள் பணியாளர்கள் அனைவரும் சட்டப்பூர்வமாக பிரிட்டனில் தங்கியிருக்க உரிமை பெற்றுள்ளனரா என்பதை சோதிக்க வேண்டும். கைது செய்யப்பட்டவர்கள் அவர்களின் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவர்” என்றார்.
சூப்பர் மார்க்கெட் மற்றும் கட்டுமான நிறுவனம் இரண்டும் தங்களிடம் இருந்து கைது செய்யப்பட்ட நபர்கள் சட்டப்பூர்வமாக குடியேறியவர்கள் என்பதை நிரூபிக்கத் தவறினால் ஒரு நபருக்குத் தலா 7 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று உலக கடல்சார் தினம்.
கடற்கொள்ளை என்பது சர்வதேச அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ள பிரச்னை. இதனால் பல்வேறு இழப்புகளை உலகநாடுகள் சந்திக்கின்றன.
கடல் குற்றங்களை தடுத்து நிறுத்துவது, பாதுகாப்பு, சட்ட விதிகள் ஆகியவற்றில் சர்வதேச ஒத்துழைப்பை வலியுறுத்தும் விதமாக ஆண்டுதோறும் செப்டம்பர் 29ம் திகதி சர்வதேச கடல்சார் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இத்தினம் உலக கடல்சார் நிறுவனத்தால் 167 நாடுகளில் கடைபிடிக்கப்படுகிறது.உலகின் பொருளாதார வளர்ச்சியில் கடல்சார் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. உலகின் பெரும்பாலான சரக்கு போக்குவரத்து கப்பல் மூலமே நடைபெறுகிறது.
கப்பலுக்கு பாதுகாப்பளிப்பது, கடற்கொள்ளையர்களிடமிருந்து பிணைய கைதிகளை விடுதலை செய்வது, கடற்கொள்ளையர்களை ஒழிப்பதில் சர்வதேச ஒத்துழைப்பு, கடற்கொள்ளையர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல் ஆகிய முக்கிய நோக்கங்களை இத்தினம் வலியுறுத்துகிறது.
உலக நாடுகளுக்கு சோமாலியா கடற்கொள்ளையர்கள் சவாலாக விளங்குகின்றனர். 12 மாதங்களில் சோமாலியா கடற் பகுதியில் மட்டும் 286 கடற்கொள்ளையர்களின் தாக்குதல் சம்பவங்கள் நடந்தேறியுள்ளன.
இவர்கள் இப்பகுதியில் செல்லும் கப்பல்களை கடத்தி கொள்ளையடிப்பதுடன் அதில் பயணிக்கும் மாலுமிகளையும் பிணையக் கைதிகளாக பிடித்துக்கொள்கின்றனர்.இதுவரை பிணையக் கைதிகளாக பிடிக்கப்பட்ட 1,130 மாலுமிகளில் 714 பேர் பணம் கொடுத்து மீட்கப்பட்டுள்ளனர் என உலக கடல்சார் நிறுவனம் தெரிவிக்கிறது. உலக நாடுகள் அனைத்தும் உறுதியான நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே இவர்களை ஒழிக்க முடியும்.
புதிய ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது சீனா.
சீனா தரையில் இருந்து விண்ணில் உள்ள இலக்கைத் தாக்கும் புதிய ஏவுகணை ஒன்றை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி பரிசோதித்துள்ளது.
சீனாவின் ஷென்யாங் ராணுவ மண்டலத்தில் உள்ள பாதுகாப்பு பிரிவில் இருந்து ஹோங்கி 16 அல்லது ரெட் ப்ளாக் 16 என்ற ஏவுகணை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
இந்த ஏவுகணை தரையில் இருந்து விண்ணில் உள்ள இலக்கைத் தாக்கும். அதோடு விண்ணில் மிக அதிக உயரத்தில் உள்ள மற்றும் மிகக் குறைவான உயரத்தில் உள்ள இலக்குகளையும் தாக்கும் திறன் படைத்தது.சமீபத்தில் தான் இதே ரக ஏவுகணைகள் இரண்டை சீனா வெற்றிகரமாக பரிசோதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கிரீஸ் சிக்கன நடவடிக்கைகளை ஆய்வு செய்ய ஐரோப்பிய யூனியன் குழு இன்று ஏதென்ஸ் வருகை.
கிரீஸ் தான் பெற்ற கடன் தொகைக்கு ஈடாக மேற்கொண்டுள்ள சிக்கன நடவடிக்கைகளை ஆய்வு செய்ய ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட மூன்று அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்று ஏதென்ஸ் செல்கின்றனர்.இந்நிலையில் ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட மூன்று அமைப்புகளிடம் இருந்து கிரீஸ் தனது அடுத்த கட்ட தவணையை விரைவில் பெறும் என ஜேர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய யூனியன், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நிதியமைப்பு ஆகிய மூன்று அமைப்புகள் முன்வைத்த நிபந்தனைகளின்படி கிரீஸ் பார்லிமென்ட்டில் புதிய சொத்து வரி மசோதா நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில் மூன்று அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்று கிரீஸ் தலைநகர் ஏதென்சிற்குச் சென்று கடன் தவணை பெறுவதற்காக முன்வைக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைகளை கிரீஸ் மேற்கொண்டிருக்கிறதா என்பதை ஆய்வு செய்கின்றனர்.இந்த ஆய்வில் கிரீஸ் மேற்கொண்ட சிக்கன நடவடிக்கைகள் அவர்களுக்கு திருப்தி அளிக்கும் பட்சத்தில் முதல் தவணையான 110 பில்லியன் யூரோவில் இருந்து 8 பில்லியன் யூரோ கிரீசுக்கு வழங்கப்படும்.
இதற்கிடையில் கிரீஸ் பிரதமர் ஜார்ஜ் பப்பண்ட்ரீ, ஜேர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல்லை நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கிரீஸ் தனது சக்தியை மீறி நிதிப் பற்றாக்குறையை குறைக்கும் நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளது. 2010 நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை 5 சதவீதம் குறைந்துள்ளது எனத் தெரிவித்தார்.
ஜேர்மனியின் ஆதரவு: தொடர்ந்து பேட்டியளித்த ஜேர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல் கூறியதாவது: கிரீஸ் தனது கடன் பிரச்னையில் இருந்து மீள்வதற்கான முழு ஆதரவையும் ஜேர்மனி அளிக்கும்.
அந்நாடு தொடர்ந்து யூரோ மண்டலத்தில் நீடிக்கும். கடன் தவணைக்காக நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகளை கிரீஸ் முழுமையாக அமல்படுத்த வேண்டும். அப்போதுதான் ஆய்வுக் குழுவிடம் இருந்து சாதகமான பதிலைப் பெற முடியும்.அதேபோல் ஆய்வுக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில்தான் எதிர்காலத்தில் கிரீசுக்கு ஜேர்மனி உதவி செய்யும்.
பல பரிந்துரைகள்: கிரீஸ் மற்றும் யூரோ மண்டல கடன் நெருக்கடியைக் குறைக்கப் பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் அந்நாட்டிற்குக் கடன் கொடுத்த தனியார் நிதி நிறுவனங்கள் தங்கள் கடனில் 20 சதவீதத்தைத் தள்ளுபடி செய்வதும் ஒன்று.
அதேபோல் ஒட்டுமொத்த அரசுக் கடனில் 50 சதவீதத்தைத் தள்ளுபடி செய்வது மற்றொன்று. யூரோ மண்டலத்தை கிரீஸ் கடன் நெருக்கடி பாதிக்காத வகையில் ஐரோப்பிய வங்கிகளுக்கு அதிகளவில் பணம் அளிப்பது யூரோ மண்டல கடன் நெருக்கடியைத் தீர்க்க உருவாக்கப்பட்ட ஐரோப்பிய நிலைத்த நிதி அமைப்பின் 440 பில்லியன் யூரோ நிதியை 2 டிரில்லியன் யூரோவாக அதிகரிப்பது உள்ளிட்ட ஆலோசனைகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
ஐரோப்பிய நிலைத்த நிதி அமைப்பின் நிதியை அதிகரிப்பது தொடர்பாக இன்று ஜேர்மனி பார்லிமென்ட்டில் வாக்கெடுப்பு நடக்க உள்ளது.
குற்றச்சாட்டு: பிரிக்ஸ், ஜி 20 நாடுகள், கனடா, ஜப்பான் நாடுகள், யூரோ கடன் பிரச்னைக்கு உதவுவதாக வாக்களித்துள்ளன. எனினும் இவை அனைத்தும் இன்னும் வார்த்தை அளவிலேயே உள்ளன.
அதேநேரம் ஐரோப்பிய தலைவர்கள் இப்பிரச்னைக்கு விரைந்து முடிவெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் கூறப்படுகிறது. கிரீஸ் நாட்டில் அரசின் சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்து மக்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.கிரீஸ் நாடு கடன் நெருக்கடியில் சிக்கிய பின் அதில் இருந்து மீள ஐரோப்பிய யூனியன், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நிதியமைப்பு ஆகியவற்றிடம் இருந்து கடந்த 2010 மே மாதம் 110 பில்லியன் யூரோ(ஒரு பில்லியன் - 100 கோடி, ஒரு யூரோ - ரூ.65) முதல் கடன் தவணையாகப் பெற்றது. இதற்கு யூரோ மண்டலத்தின் 17 நாடுகளும் ஒப்புதல் அளித்தன.
இதையடுத்து கடந்த ஜூலை மாதம் 109 பில்லியன் யூரோ இரண்டாவது தவணை அளிக்க ஐரோப்பிய யூனியன் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. இதற்கு யூரோ மண்டல நாடுகளில் பெரும்பாலானவை இன்னும் அனுமதி அளிக்கவில்லை. அதேநேரம் கடனை அடைப்பதற்கான கூடுதல் உறுதிகளை பல நாடுகள் எதிர்பார்க்கின்றன.இந்த இரு கடன் தவணைகளைப் பெற கிரீஸ் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
இந்நிலையில் அக்டோபர் 15ம் திகதிக்குப் பின் அரசு ஊழியர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட செலவுகளுக்கு பணம் கையிருப்பில் இருக்காது. அதனால் முதல் தவணை 110 பில்லியன் யூரோவில் இருந்து தர வேண்டிய 8 பில்லியன் யூரோவை உடனடியாகத் தர வேண்டும் என கிரீஸ் கோரியது.
கடந்த இருவாரங்களுக்கு முன் கூடிய ஐரோப்பிய நிதியமைச்சர்கள் கூட்டத்தில் கிரீசுக்கு 8 பில்லியன் யூரோ கொடுப்பது குறித்து அக்டோபர் முதல் வாரத்தில் ஆலோசித்து முடிவெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது.
ஆனால் அத்தொகையைக் கொடுப்பதற்கு முன் ஏற்கனவே விதிக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைகளை கிரீஸ் மேற்கொண்டிருக்கிறதா என்பதை நேரில் ஆய்வு செய்ய முடிவெடுக்கப்பட்டது.ஐரோப்பாவின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் தற்போது மிகப் பெரிய கடன் நெருக்கடியை நாம் எதிர்கொள்கிறோம். இந்த நெருக்கடி தீயில் குளித்து வெளியில் வருவது போன்றது.
பிரான்சில் பட்ஜெட்டுகளை குறைக்க உத்தரவு.
பிரான்ஸ் தனது பட்ஜெட்டில் சலுகைகளை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரான்ஸில் அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட் வரும் புதன் கிழமை தாக்கல் செய்யப்படவுள்ளது. ‌இந்த பட்ஜெட்டில் இரண்டாவது உலகப்‌‌போருக்கு பின் முதன் முறையாக சலுகைகள் குறைக்கப்படவுள்ளன.
ஆனால் பொருளாதார நிபுணர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில் 2012ம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டில் சலுகைகளை குறைப்பதால் மட்டுமே கடன் சுமை‌ பற்றாக்குறையை சமாளிப்பது போதுமானதாக இருக்காது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பழிக்கு பழி வாங்குவோம்: அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் மிரட்டல்.
அமெரிக்கா, பாகிஸ்தான் இடையேயான சிக்கலை மேலும் அதிகப்படுத்தும் விதத்தில் ஐ.எஸ்.ஐ தலைவர் அகமது சுஜா பாஷா, சி.ஐ.ஏ தலைவர் டேவிட் பீட்ரசிடம் மிரட்டல் விடுத்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஹக்கானி குழுவை "வெளிநாட்டில் இயங்கும் பயங்கரவாதக் குழு" என அறிவிக்கும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியுள்ளது. அமெரிக்கா, பாகிஸ்தான் இடையேயான சிக்கல் மேலும் தீவிரம் அடையாமல் இருக்க  இரு தரப்பிலும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பாகிஸ்தானுக்கான அமெரிக்கத் தூதர் கேமரூன் முன்டர் நேற்று மீண்டும் பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர் சல்மான் பஷீரையும், அதிபர் ஆசிப் அலி சர்தாரியையும் சந்தித்தார்.
அதிபர் சர்தாரி, பிரதமர் யூசுப் ரசா கிலானியை சந்தித்துப் பேசினார். இன்று நடக்க உள்ள அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடர்பாக இருவரும் விவாதித்ததாக அதிபர் மாளிகை கூறியது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க சிறப்புத் தூதர் மார்க் கிராஸ்மேன் அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் உசேன் ஹக்கானியிடம் தொலைபேசியில் பேசினார்.
மிரட்டல் விடுத்த பாஷா: பதட்டத்தைத் தணிக்கும் முயற்சிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க பதட்டத்தை அதிகரிக்கும் முயற்சிகளும் மறுபுறம் அரங்கேறி வருகின்றன. இரு தரப்பிலும் மீண்டும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகள் அள்ளிவீசப்பட்டு வருகின்றன.
இதன் மையமாக சமீபத்தில் வாஷிங்டனுக்குச் சென்ற ஐ.எஸ்.ஐ தலைவர் அகமது சுஜா பாஷா பாகிஸ்தான் பழங்குடியினப் பகுதிகளில் இனி ஒரு முறை அமெரிக்கா தன்னிச்சையாகத் தாக்குதல் நடத்துமானால் அதற்குப் பழிவாங்கும் சூழலுக்கு பாகிஸ்தான் தள்ளப்படும் என சி.ஐ.ஏ தலைவர் டேவிட் பீட்ரசிடம் நேரில் எச்சரித்துள்ளதாக ஐ.எஸ்.ஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பதிலடிக்குத் தயார்: நேற்று முன்தினம் நடந்த பாகிஸ்தான் பார்லிமென்ட் நிலைக் குழுக் கூட்டத்தில் பாகிஸ்தான் பழங்குடியினப் பகுதிகளில் பதுங்கியுள்ள ஹக்கானி குழு மீது அமெரிக்கா தன்னிச்சையாகத் தாக்குதல் நடத்தினால் பொறுத்துக் கொள்ள முடியாது என எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர்.
அப்படி அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அதற்குப் பதிலடி கொடுக்கவும் பாகிஸ்தான் தயாராக இருப்பதாக நிலைக் குழுத் தலைவர் ஜாவேத் அஷ்ரப் காஜி தெரிவித்தார். பெஷாவர் ஐகோர்ட் வளாகத்தில் நேற்று நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் கிலானி,"ஒற்றுமை, பாதுகாப்பு, இறையாண்மை மிக்க பாகிஸ்தான் என்ற நோக்கத்தின் கீழ் நாம் ஒன்றிணைந்து நிற்க வேண்டும். அதன் மூலம் தான் நாடு தற்போதைய சிக்கல்களை சமாளிக்க முடியும்" என்றார்.
பாகிஸ்தான் தனது நிலையில் பிடிவாதத்துடன் இருப்பதைப் போலவே அமெரிக்காவும் தனது நிலையை விட்டுக் கொடுப்பதாகத் தெரியவில்லை. அமெரிக்க ராணுவத் தளபதி மைக் முல்லன், ஐ.எஸ்.ஐ மற்றும் ஹக்கானி குழு இடையிலான தொடர்பு பற்றி குற்றம்சாட்டிய 22ம் திகதி மாலை அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் டெக்சாஸ் மாகாண ஜனநாயகக் கட்சி உறுப்பினர் டெட் போ, பாகிஸ்தானுக்கான அமெரிக்க நிதி முழுவதையும் தடை செய்யும் வகையிலான மசோதாவை தாக்கல் செய்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
சபையில் பேசிய டெட் போ,"நாம் வழங்கும் நிதியை பாகிஸ்தான் நமக்கு எதிராக போர் தொடுக்கும் பயங்கரவாதிகளுக்கு அள்ளி விடுகிறது. நாம் தொடர்ந்து நமது எதிரிக்கு நிதி வழங்குகிறோம். நம்மை வெறுக்கவும் நமக்கு குண்டு வைக்கவும் நாம் அந்நாட்டிற்கு நிதி வழங்கி வருகிறோம்" என்று காட்டமாகத் தெரிவித்தார்.
அமெரிக்கா உறுதி: வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகைக்குப் பேட்டியளித்த மைக் முல்லன்,"நான் பாகிஸ்தானின் நண்பன். ஆனால் அவர்கள் ஹக்கானி குழுவுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். அதனால் தான் நான் அவர்களின் மீது குற்றம்சாட்ட வேண்டி வந்தது" என்று தெரிவித்தார்.
வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னே நேற்று அளித்த பேட்டியில்,"அமெரிக்கா தனது பார்வையில் தெளிவாக உள்ளது. காபூல் தாக்குதலுக்கு ஹக்கானி குழுதான் பொறுப்பு. அதனால் அக்குழு மீது பாகிஸ்தான் விரைந்து நடவடிக்கை எடுத்தே தீர வேண்டும்" என்று கூறினார்.
அமெரிக்கா, பாகிஸ்தான் உறவுச் சிக்கலை சமாதானப்படுத்த சவுதி அரேபியா தலையிட்டு முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியாயின. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நுலண்டு,"இரு நாடுகளும் தெளிவான நேரடித் தொடர்பில் உள்ளன. அதனால் மூன்றாவது நாடு ஒன்றின் தலையீடு அவசியமில்லை" என்றார்.
பென்டகன் அதிகாரிகள் கூறுகையில்,"ஐ.எஸ்.ஐ பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி, தொழில்நுட்ப உதவி, ஆளுதவி என அனைத்தையும் வழங்குகிறது. துவக்க காலம் முதல் இன்று வரையிலான அதற்குரிய ஆதாரங்களை ஏற்கனவே பாகிஸ்தானிடம் வழங்கியுள்ளோம். ஆனால் காபூல் தாக்குதலால் பாகிஸ்தான் தனது அனைத்து எல்லைகளையும் மீறிவிட்டது. அதனால்தான் வேறு வழியின்றி பாதுகாப்பு அமைச்சகம் வெளிப்படையாகக் குற்றம்சாட்டியது" என்றனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Thursday, September 29, 2011

{war zone2100}போர் மண்டலம் 2100 3D விளையாட்டை தரவிறக்கம் செய்வதற்கு..


போர் மண்டலம் 2100 ஒரு 3D நிகழ் நேர வியூகம் கணணி விளையாட்டாக உருவாக்கப்பட்டு உள்ளது.இது பம்ப்கின் ஸ்டுடியோஸ்சால் உருவாக்கப்பட்டது(ஆவணப்படுத்தப்பட்ட வலைத்தளம்) மற்றும் Eidos ஆல் வெளியிடப்பட்டு உள்ளது.
இறுதியில் 2004 Warzone குனு பொது மக்கள் உரிமத்தின் கீழ் பொது காப்புரிமை வைத்திருப்பவர்கள் Eidos-இன்டராக்டிவ் முடிவு வெளியிடப்பட்டது மற்றும் Warzone 2100 உயிர்த்தெழுதலுக்கு திட்டம் உதவுகிறது.பல முக்கிய அம்சங்களை Earth2150 ஒப்பிடும் போதும் அது தனிப்பட்ட சில அம்சங்களை கொண்டுள்ளது. இது பல்வேறு ரேடார் தொழில்நுட்பங்கள், பீரங்கி மற்றும் எதிர் மின்கலம் தொழில்நுட்பங்களை அதிக கவனம், விளையாட்டு முன்னேற்றம் போன்ற சினிமா புதுப்பிப்புகள் அதே போல் வெவ்வேறு வாகன வடிவமைப்பு முறை உள்ளிட்டிருக்கிறது.
இந்த வெளியீடு ப்ளே ஸ்டேஷனுக்காகவும் இசை டிராக்கை உள்ளடக்குகிறது. 3 திரைகள் மற்றும் பல விளையாட்டுகள் நல்ல வரைபடத்தை முன்னோட்ட மற்றும் AI ஸ்லைடர்: சில வரைகலை போலிஷ் அல்லாத 4 சரியான அம்சம் விகிதம் பின்னணி படங்கள் மற்றும் வீடியோக்கள் காட்டுவது போல் வடிவமைக்கப்பட்டது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

தினமும் பழச்சாறு அருந்தினால் புற்றுநோய் ஏற்படும்: ஆய்வில் தகவல்..


தினமும் காலையில் எழுந்ததும் பழச்சாறு குடிப்பது உடல் நலத்துக்கு நல்லது என்ற பொதுவான கருத்து நிலவுகிறது.தற்போது இது உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்று ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. தினசரி பழச்சாறு சாப்பிடும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அதில் பழச்சாறு சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் ஆபத்து ஏற்படுவது தெரியவந்தது. அதில் உள்ள சர்க்கரை புற்றுநோயை உருவாக்குவது கண்டறியப்பட்டது.குறிப்பாக டப்பாக்களிலும், பாக்கெட்டுகளிலும் அடைக்கப்படும் பழச்சாறுகளில் அவை கெட்டுப்போகாமல் இருக்க பல மூலப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.அவை குடல் புற்றுநோயை ஏற்படுத்துகின்றன. நாள் ஒன்றுக்கு 3 டம்ளருக்கு மேல் குடிப்பவர்களுக்கு இது போன்ற புற்றுநோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

இன்றைய செய்திகள்.

யாழ்பாணத்தில் உப்பு விளையுது!
யாழ்ப்பாணம் கைதடி பரவதி கடலில் உப்பு விளைந்து கிடப்பதை கண்ட மக்கள் உப்பினை சைக்கில்களிலும் இயந்திரங்களிலும் அள்ளிவருகின்றனர்.கோப்பாய் ,கைதடி, இருபாலை போன்ற இடங்களில் இருந்து வரும் மக்கள் கொழுத்தும் வெய்யில் என்றும் பாராமல் உப்பினை அள்ளி வருகின்றனர். யாழ்ப்பாண கடைகளுக்கு 1 கிலோ 6 ருபாவுக்கு கொடுக்கின்றனர். இம்முறைதான் இவ்உப்புகூடுதலாக காணப்படுகின்றது.மழை வருவதற்கு முன்னம் இவற்றை அள்ளி விட வேண்டும் என்று கொழுத்தும் வெய்யில் என்று பாராமல் வேலை செய்கின்றனர்.




முச்சக்கர வாகன சவாரியில் ரணில்...
எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க கொழும்பிலுள்ள முச்சக்கர வாகன சாரதிளுடன் மாளிகாவத்தை பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை சந்திப்பொன்றை மேற்கொண்டார். இதன்போது முச்சக்கர வாகன சாரதிகளின் பிரச்சினைகளை கேட்டறிந்ததுடன் முச்சக்கர வாகனத்தில் ரணில் பயணம் செய்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களான கரு ஜயசுரிய, ரவி கருணாநாயக்க மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாநகர மேயர் வேட்பாளர் ஏ.ஜே.எம்.முஸம்மில் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


இலங்கையில் போதைப் பொருள் விற்பனையின் பிரதான நபர் மேர்வின்: விக்கிலீக்ஸ்.

இலங்கையில் போதைப் பொருள் விற்பனையின் பிரதான நபராக அமைச்சர் மேர்வின் செயற்பட்டதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 2010 ஆண்டு பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி இலங்கையின் அமெரிக்கத் தூதுவர் பற்றீஸியா புற்றினிஸ் A leaked US embassy cable reviled “drug kingpins in SriLanka have political patrons in the government”. என்ற தலைப்பில் அனுப்பியிருந்த இராஜதந்திர தகவலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டிருந்ததாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கை அரசுக்கு போதைப் பொருள் வர்த்தகர்களும் ஆதரவு வழங்கியுள்ளனர். இவர்களில் பிரதான நபராக அமைச்சர் மேர்வின் சில்வா செயற்பட்டுள்ளார்.இலங்கையில் முஸ்லிம்களே போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவதாகக் காட்டி அவர்களை ஓர் இக்கட்டான நிலைக்கு உட்படுத்தும் செயற்பாடுகளில் பொலிஸார் ஈடுபட்டனர் எனவும் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் அவரது மகன் மாலக சில்வா ஆகியோர் 'எக்டாஸி' என்ற பெயரில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டதாகவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இறுதிப் போரின்போது பிளேக்'கின் கேள்விக்கு ஏளனமாக பதிலளித்த கோத்தபாய!- விக்கிலீக்ஸ் தகவல்.
வன்னியில் இறுதிப் போர் நடைபெற்ற காலப்பகுதியில் அரசினால் பிரகடனப்படுத்தப்பட்ட பாதுகாப்பு வலய பகுதிகளில் ஷெல் தாக்குதல்களில் பெரும் எண்ணிக்கையில் பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட் ஓ பிளேக், பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச'வைத் தொடர்பு கொண்டு கூறினார். 
அதற்கு பாதுகாப்புச் செயலர் "காலநிலை சீரின்மையால் இரண்டு நாட்கள் ஜெட் போர் விமானங்கள் பறக்கவில்லையே'' என்று ஏளனமாகப் பதிலளித்துள்ளார் என்று "விக்கிலீக்ஸ்" தகவல் வெளியிட்டுள்ளது.
யுத்த காலப்பகுதியில் அமெரிக்கத் தூதுவராகக் கொழும்பில் இருந்த பிளேக் இதுபற்றி வாஷிங்டனில் உள்ள இராஜாங்கத் திணைக்களம் மற்றும் தூதரகங்களுக்கு 2009 மார்ச் 12 ம் திகதி அனுப்பி வைத்துள்ள தகவல் குறிப்பிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் மேலும் தெரிவித்துள்ளது.
இதுபற்றி மேலும் தெரியவருவதாவது:
2009 மார்ச் 10 ம் திகதி பாதுகாப்பு வலயத்தில் பலத்த ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஐ.நா அறிக்கை கூறுவதாகவும், இதில் 124 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 254 பேர் காயமுற்றதாகவும் ஐ.நா பிரதிநிதி தமக்குத் தெரியப்படுத்தியுள்ளதாகவும் பிளேக் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து 2009 மார்ச் 12ம் திகதி பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச'வைச் சந்தித்து, பொதுமக்கள் தங்கியுள்ள பாதுகாப்பு வலயம் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று பலமுறை வலியுறுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாதுகாப்பு வலயப் பகுதியில் விடுதலைப் புலிகளின் பீரங்கி நிலைகள் இருந்தாலும் கூட ஷெல் தாக்குதலை நடத்த வேண்டாம் என்றும் கோத்தபாய ராஜபக்சவிடம் கேட்டுக்கொண்டதாகவும் பிளேக் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு கோத்தபாய ராஜபக்ச, சீரற்ற காலநிலையால் இரண்டு நாட்களாக ஜெட் விமானங்கள் பறக்கவில்லையே என்று தொடர்பில்லாமல், ஏளனமாகப் பதிலளித்ததுடன் பொதுமக்கள் கொல்லப்பட்டனரா என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பியதாகவும் விக்கிலீக்ஸ் கூறியுள்ளது.
தேர்தல் நடவடிக்கைகளில் அரசாங்கம் தன்னைக் கைவிட்டுவிட்டது: மிலிந்த மொரகொட.
கொழும்பு மாநகரசபைக்கான தேர்தல் பிரசாரத்தில் அரசாங்கம் தன்னை கைவிட்டுவிட்டதாக மேயர் வேட்பாளர் மிலிந்த மொரகொட குறைப்பட்டுக்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் அனைவரும் உச்சகட்ட ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்ததன் பேரிலேயே தான் கொழும்பு மாநகரசபைக்கான தேர்தலில் மேயர் வேட்பாளராக போட்டியிட முன்வந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் யாரும் அவ்வாறு இதுவரை தனது தேர்தல் நடவடிக்கைகளுக்குப் போதுமான ஆதரவை வழங்கவில்லை என்று தனது நண்பர்களிடம் அவர் குறைப்பட்டுக் கொண்டுள்ளார்.
அத்துடன் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோர் தங்கள் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வதில் மட்டுமே கவனம் செலுத்துவதாக மொரகொட கொழும்பு மாவட்டத்தின் முக்கிய அமைச்சர் ஒருவரிடமும் புகார் செய்துள்ளார்.
இதேவேளை தற்போதைய நிலையில் மொரகொடவின் தேர்தல் பிரச்சாரம் கொழும்பு மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளதாக ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.
இலங்கையின் போர்க்குற்றங்கள் அரச தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பு.
இலங்கையில் போர் நடைபெற்ற காலத்தில் அரச தொலைக்காட்சியிலும் போர்க்குற்றங்கள் தொடர்பான காணொளிகள்  ஒளிபரப்பாகியுள்ளன
போரில் இறுதிக்கட்டங்களில் சிறிலங்காப் படையினரால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றிய ஆதாரங்கள் பலவற்றை சிறிலங்கா அரச தொலைக்காட்சி மூலமே மேற்குலகம் திரட்டியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்யப்பட்ட பகுதிகளில் இருந்த பொதுமக்களின் குடியிருப்புகள், மருத்துவமனைகள் மீது ஆட்டிலறித் தாக்குதல்களை நடத்தியதையும் சிறிலங்கா மீதான போர்க்குற்றங்களில் ஒன்றாக ஐ.நா நிபுணர் குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசாங்கமே தாக்குதல் தவிர்ப்பு வலயமாக அறிவித்த பகுதியில் - கனரக ஆயுதங்களை பயன்படுத்தப் போவதில்லை என்று அறிவித்த பின்னரும் – பொதுமக்கள் மீது பீரங்கித் தாக்குதலை நடத்தியுள்ளதற்கான ஆதாரங்களை அரசாங்கத் தொலைக்காட்சியே வழங்கியுள்ளது.
இதுபற்றிய தகவல் பரிமாற்றக் குறிப்பு ஒன்றை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
2009 மார்ச் 11ம் நாள் கொழும்பில் இருந்து அமெரிக்கத் தூதுவர் பிளேக் அனுப்பிய சிறிலங்கா நிலைமைகள் குறித்த 29வது அறிக்கையில் இதுபற்றிய தகவல் ஒன்றைக் குறிப்பிட்டுள்ளார்.
2009 மார்ச் 10ம் நாள் பாதுகாப்பு வலயத்தில் பலத்த பீரங்கித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஐ.நா அறிக்கை கூறுவதாகவும், அன்றைய நாள் 124 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 254 பேர் காயமுற்றதாகவும் ஐ.நா பிரதிநிதி தமக்குத் தெரியப்படுத்தியதாகவும் பிளேக் அனுப்பிய தகவலில் கூறப்பட்டுள்ளது.
அன்றைய நாள் பாதுகாப்பு வலயத்தில் 'மிகமோசமான நாள்' என்று பிளேக் தனது அறிக்கையில் கூறியுள்ளதாக விக்கிலீக்ஸ் கூறுகின்றது.
ஆட்டிலறிகள் உள்ளிட்ட கனரக ஆயுதங்களைப் பாவிப்பதை நிறுத்தி விட்டதாக, சிறிலங்கா அரசாங்கம் அனைத்துலக சமூகத்துக்கு வாக்குறுதி கொடுத்திருந்த போதும்- புலிகள் நிலைகள் மீது சிறிலங்காப் படையினர் ஆட்டிலறித் தாக்குதல்களை நடத்தும் காணொளிக் காட்சியை அரச தொலைக்காட்சி அன்றைய நாளும் மார்ச் 11ல் ஒளிபரப்பியுள்ளதாகவும் பிளேக் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஐரிஎன் தொலைக்காட்சியில் இந்தக் காணாளி ஒளிபரப்பப்பட்டதாகவும், இது பற்றி மறுநாளான மார்ச் 12ம் நாள் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவை சந்திக்கும் போது எதிர்ப்புத் தெரிவிக்கவுள்ளதாகவும் பிளேக் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாகவும் விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
சீனாவிடமிருந்து கடனாகப் பெற்ற ஒவ்வொரு 100 ரூபாவிற்கும் அரசு 1000 ரூபா செலுத்துகிறது!- ரவி குற்றச்சாட்டு.
அரசாங்கம், சீனாவிடமிருந்து 100 ரூபா கடனாகப் பெற்றுக் கொண்டு, ஆயிரம் ரூபாவை திருப்பிச் செலுத்துவதாகவும், இந்தப் பணம் அனைத்தையும் மக்களே செலுத்த நேரிட்டுள்ளதாகவும்  ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் ரவி கருணாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டில் போலியான அபிவிருத்தியே காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிதி மோசடிகளில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சக்வித்தி ரணசிங்க பாணியில் அரசாங்கம் அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
மட்டக்குளிப் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அதிகமான வட்டிக்கு கடன் வாங்கி அதில் நகரம் முன்னேற்றமடைந்துள்ளது என சர்வதேசத்திற் காண்பிக்கும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
லிபியாவைப் போன்றதொரு நிலைமை இலங்கையில் ஏற்படுத்த முடியாது!– மங்கள.
லிபியாவைப் போன்றதொரு நிலைமையை இலங்கையில் ஏற்படுத்த முடியாது என ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நாட்டில் சர்வாதிகார நிலைமை ஏற்பட்டுள்ளது என்ற போதிலும், அது லிபியாவைப் போன்றதொரு நிலைமையாக மாற்ற முடியாது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் கொழும்பு நகரை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகரசபை உள்ளிட்ட முக்கிய ஐந்து நகரசபைகளை உள்ளடக்கி நகர அதிகாரசபையொன்று உருவாக்கப்பட உள்ளதாகவும், இதனை ஜனநாயக நடவடிக்கையாகக் கருத முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வளைகுடாவின் 10 பணக்கார இந்தியர்கள்: கேரளா ஆதிக்கம்.
வளைகுடாவில் வாழும் பணக்கார இந்தியா்கள் பத்து நபா்களை பிரபல அமீரக நாளிதழ் வெளியிட்டுள்ளது.
வளைகுடாவின் பணக்கார இந்தியர்களின் பட்டியலை துபாயிலிருந்து வெளியாகும் பிரபல வர்த்தக ஏடு ஒன்று வெளியிட்டுள்ளது.இப்பட்டியலில் உள்ள பத்து நபர்களில் எட்டு நபர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழில் செய்பவர்களாகவும் நான்கு நபர்கள் மலையாளிகளாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
1.மிக்கி ஜகதியானி – 3.2 பில்லியன் டாலர்
மும்பையை பூர்விமாக கொண்ட மிக்கி ஸ்பால்ஷ், உள்ளிட்ட பல பேஷன் பிராண்டுகளை கொண்ட லேண்ட் மார்க் ரீடெய்ல் ஸ்டோர்களை நடத்தி வருகிறார். துபாயை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இவரின் சாம்ராஜ்யம் வளைகுடா, ஐரோப்பா, ஆசியா என பல இடங்களில் 600 ஸ்டோர்களை நடத்தி வரும் இவரின் குழுமத்தில் 30,000 நபர்கள் பணி புரிகின்றனர்.
2. யூசுப் அலி – 1.75 பில்லியன் டாலர்
வளைகுடாவில் லூலூவை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. வளைகுடாவில் லூலூ உள்ளிட்ட பல நிறுவனங்களை நடத்தும் இவரின் எம்.கே குழுமத்தில் 30 நாடுகளை சார்ந்த 25,000 நபர்கள் பணிபுரிகின்றனர். கேரளாவை பூர்விமாக கொண்ட யூசுப் அலி அமீரகத்தை தலைமையகமாக கொண்டு தன் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தி வருகிறார். இந்திய அரசால் பத்மஸ்ரீ பட்டம் கொடுக்கப்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
3.பி.ஆர் ஷெட்டி – 1.72 பில்லியன் டாலர்
கர்நாடகவை சார்ந்த பி.ஆர். ஷெட்டி குவைத் போரின் போது கிடைத்த ஏற்றுமதி ஆர்டரை வைத்து தன் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்திய ஷெட்டி தற்போது நியூ மெடிக்கல் செண்டர் மற்றும் யூ.ஏ.ஈ எக்ஸ்சேஞ் உள்ளிட்டவற்றை நடத்தி வரும் இவரும் அமீரகத்தை மையமாக கொண்டு தொழில் நடத்துபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
4.சாப்ரியா குடும்பம் – 1.3 பில்லியன் டாலர்
அமீரகத்தில் எலக்ட்ரானிக்ஸ் வாங்கும் எவருக்கும் ஜம்போவை தெரியாமல் இருக்க முடியாது. மும்பையில் ரேடியா பாகங்கள் டீலராக இருந்த மனு சாப்ரியா தான் சோனி, நோக்கியா உள்ளிட்ட எலக்ட்ரிக் ஜாம்பாவான்களின் டீலர். அவரின் மறைவுக்கு பின் வாரிசு பிரச்சனை இருந்தாலும் அமீரகத்தின் மிக முக்கிய குழுமமாக இருந்து வருகிறது.
5.பி.என்.சி.மேனன் – 1.2 பில்லியன் டாலர்
கேரளாவில் பிறந்த மேனன் 1976ல் ஓமனுக்கு சென்று பார்டனருடன் இண்டீரியர் நிறுவனத்தை ஆரம்பித்தவர். ஓமனில் ஆரம்பித்தது போன்று பெங்களூரில் ஷோபா டெவலப்பர்ஸை ஆரம்பித்து ரியல் எஸ்டேட்டில் கலக்கிய மேனனின் நிறுவனம் ஓமனின் மிக முக்கிய நிறுவனங்களில் ஒன்று.
6.சன்னி வர்கீஸ் – 950 மில்லியன் டாலர்
 கேரளாவை சார்ந்த சன்னி வர்கிஸ், தொடக்கத்தில் ஆரம்பித்த ஒற்றை பள்ளியை இன்று 11 நாடுகளில் 1 இலட்சம் மாணவர்கள் படிக்கும் 100 பள்ளிகளாக ஜெம்ஸ் நிறுவனம் வியாபித்திருக்கிறது. அதிக கட்டணம் வசூலிப்பதாக சர்ச்சையில் அடிபட்டாலும் பத்மஸ்ரீ விருது வாங்கிய சன்னி வர்கீஸ் வளைகுடாவில் கல்வி சேவையில் முக்கிய நபரே.
7.ராஜன் கிலாசந்த் – 900 மில்லியன் டாலர்
 மும்பையில் 60 வருடங்களுக்கு முன் டோட்ஸல் குழுமத்தை ஆரம்பித்த ராஜன் கிலாசந்த் இன்று தன் குழுமத்தை எஞ்சினியரிங், கனிம வளம், வர்த்தகம் போன்றவற்றில் மத்திய கிழக்கில் முக்கிய ஒன்றாக நிறுவியுள்ளார்.
8.டோனி ஜாசன்மால் – 900 மில்லியன் டாலர்
 ஈராக்கில் 1919ல் ஒரு சிறு கடையாக ஆரம்பித்த ஜாசன்மால் அமீரகத்தில் இன்று பரிச்சயமான கடைகளில் ஒன்று. வீட்டு பொருட்கள், பிரிண்ட் மீடியா என்று பல்வேறு பொருட்களின் பிரத்யேக டீலராக விளங்கும் ஜாசன்மால் 5 நாடுகளில் 100 ஸ்டோர்களை வைத்துள்ளது.
9.பகாரானி – 820 மில்லியன் டாலர்
 1944ல் தென் ஆப்பிரிக்காவின் தொடங்கப்பட்ட சோய்த்ராம் இன்று அமீரகத்தை அடிப்படையாக கொண்டு 25 கடைகளை கொண்டு மிகப் பெரிய ரீடெய்ல் ஜாம்பாவானாக திகழ்கிறது
10. டாக்டர் முஹமது அலி – 725 மில்லியன் டாலர்
பட்டியலில் உள்ள 10 பேரில் 2 வது ஓமனை சார்ந்தவரான முஹமது அலி கேரளாவை பூர்விகமாக கொண்டவர். அவர் ஆரம்பித்த கல்பார் எஞ்சினியரிங் மற்றும் காண்டிராக்டிங் நிறுவனத்தில் சுமார் 27,000 நபர்கள் பணிபுரிகின்றனர்.
ஆக்கிரமிப்பாளர்கள் அராஜகம்: பாலஸ்தீனத்தில் சிறுவன் படுகொலை.
யூத ஆக்கிரமிப்பாளர்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட பாலஸ்தீன சிறுவன் மரணமடைந்துள்ளான்.
யூத ஆக்கிரமிப்பாளர்களால் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டு படுகாயமடைந்த எட்டு வயது பாலஸ்தீன் சிறுவன் ஃபரீட் ஜாபர் மருத்துவ சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில் மரணமடைந்துள்ளான்.
மேற்குக் கரை நகரான அல் கலீலில் தெருவோரமாய்ச் சென்று கொண்டிருந்த போது யூத ஆக்கிரமிப்பாளர் தனது வாகனத்தால் சிறுவனை மோதிவிட்டு சென்றனர். படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த சிறுவன் ஜாபரை அருகில் இருந்தவர்கள் கிர்யத் அர்பா மருத்துவமனையில் சேர்த்தனர்.
மிக மோசமான காயங்களோடு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சிறுவன் ஜாபர், அவசர சிகிச்சைக்காக ஹதாஸ்ஸா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளான். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளான்.
பாலஸ்தீன் மேற்குக்கரை பிராந்தியத்தில் சட்டவிரோத இஸ்ரேலியக் குடியேற்றவாசிகளால் பாலஸ்தீன பொது மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைத் தாக்குதல்கள் நாளுக்கு நாள் மிக வேகமாக அதிகரித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடைந்த செயற்கைகோளின் பாகங்களை தேடும் பணி தீவிரம்.
காற்று மண்டலத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்கா 6 டன் எடையுள்ள ஒரு செயற்கை கோளை விண்ணுக்கு அனுப்பியது.கடந்த 1995ம் ஆண்டு அது செயல் இழந்தது. அதைத்தொடர்ந்து அந்த செயற்கை கோள் படிப்படியாக பூமியை நோக்கி நகர்ந்து வந்தது. பின்னர் புவிஈர்ப்பு சக்தி காரணமாக கடந்த சனிக்கிழமை வட அமெரிக்காவில் வடகிழக்கு பகுதியில் விழுந்தது.
தொடக்கத்தில் அந்த செயற்கை கோளின் உடைந்து சிதறிய துண்டுகள் கனடாவில் விழுந்ததாக கூறப்பட்டது. ஆனால் அந்த சிதறல்கள் அங்கு விழவில்லை.எனவே நாசா விஞ்ஞானிகள் உடைந்த செயற்கை கோள் சிதறல் விழுந்த இடத்தை தற்போது கணித்துள்ளனர். அதன்படி அவை அமெரிக்க கண்டத்தில் பசிபிக் கடல் பகுதியில் விழுந்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
உடைந்து சிதறிய சில துண்டுகள் கிறிஸ்துமஸ் தீவில் இருந்து தென் மேற்கில் 420 கிலோ மீ்ற்றர் தூரத்தில் விழுந்திருக்கலாம். மேலும் உடைந்த 25 துண்டுகள் அதில் இருந்து 800 கிலோ மீற்றர் சுற்றளவில் சிதறி கிடக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.செயற்கைகோளின் உடைந்த உதிரி பாகங்கள் எங்கு விழுந்தது என சரியாக கண்டுபிடிக்க முடியாமல் நாசா விஞ்ஞானிகள் திணறி வருகின்றனர். எனவே அவற்றை தேடும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
எகிப்தில் விரைவில் தேர்தல் நடைபெறும்: ஆளும் ராணுவ கட்சி அறிவிப்பு.
எகிப்தில் மக்கள் புரட்சியின் மூலம் கடந்த பிப்ரவரி மாதம் அதிபர் முபாரக்கின் ஆட்சி முடிவுக்கு வந்தது. தற்போது அங்கு ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது.போராட்டத்தின் போது புதிய அதிபர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என மக்கள் தெரிவித்தனர். அதை தற்போது ஆளும் ராணுவ ஆட்சி ஒப்புக் கொண்டது.
செப்டம்பர் 30ந் திகதிக்குள் அதிபர் தேர்தல் நடைபெறும் திகதி அறிவிக்கப்படும் என தெரிவித்து இருந்தது.அதன்படி அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 28ந் திகதி நடைபெறும் என ஆட்சி அதிகாரம் பெற்றுள்ள சுப்ரீம் கவுன்சில் நேற்று அறிவித்தது.தேர்தல் முடிவு வருகிற ஜனவரி 10ந் திகதி வெளியிடப்பட உள்ளது. இதை உலக நாடுகள் வரவேற்றுள்ளன.
பிலிப்பைன்ஸ் புயல் மழைக்கு 16 பேர் பலி.
பிலிப்பைன்ஸ் நாட்டில் புயல் மழைக்கு 16 பேர் பலியாகி உள்ளனர். பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நேற்று நசட் புயல் தாக்கியது.மழைக்காலம் என்பதால் ஏற்கனவே ஒரு மாதமாக அங்கு கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் புயல் காரணமாகவும் பலத்த மழை கொட்டியது.
வேகமாக காற்று வீசியதால் கடல் அலைகள் பனை மர உயரத்துக்கு எழும்பி தாழ்வான பகுதிகளுக்குள் புகுந்தது. மணிலா நகரமே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. வீடுகள், ஓட்டல்கள், மருத்துவமனைகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.தாழ்வான பகுதிகளில் வசித்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் ராணுவத்தினரும் பொலிசாரும் ஈடுபட்டுள்ளனர். மழைக்கு இதுவரை 16 பேர் பலியாகி உள்ளனர்.
மணிலாவில் 2009ம் ஆண்டு கடும் சூறாவளி தாக்கியது. அப்போது 12 மணி நேரம் விடாமல் பலத்த மழை கொட்டியது. இதில் 500க்கும் அதிகமானோர் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரான்சில் சிமெண்ட் ஆலை மூடப்படும் அபாயம்.
லாபார்ஜ் சிமெண்ட் ஆலையில் உள்ள ப்ராங்கி தளம் மூடப்படும் என்ற அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து 12 அதிகாரிகள் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர்.
இந்த உண்ணாவிரத போராட்டம் தற்பொழுது 8வது நாளை எட்டியுள்ளது. இருந்தாலும் திங்களன்று இந்த உண்ணாவிரத போராட்டம் பல அதிகாரிகளால் அலட்சியம் செய்யப்பட்டது.எதிர்வரும் 2012ம் ஆண்டில் அதிக உற்பத்தி செலவுகளை குறைக்கும் விதத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. இந்த சிமெண்ட் ஆலையானது 1930 ஆண்டு தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து லாபார்ஜின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், இந்த ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உரிய வசதிகள் செய்து தரப்படும் என உறுதியளித்தார்.இவர்களது வேலைநிறுத்தப் போராட்டம் பிரான்ஸ் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.ப்ராங்கி தளமானது மிகப்பெரிய சிமெண்ட் ஆலையாக கருதப்படுகிறது. இவ்வாலையில் 500 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரொரன்ரோ நகர மேயரின் திட்டத்திற்கு எதிர்ப்பு.
துணை மேயரின் ஒவ்வொரு வீதிகளிலும் தனியார் வரியறவிடல் கட்டடங்களைக் கட்டப்போகும் திட்டத்திற்கு ரொரன்ரோ நகரசபை எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.ரொரன்ரோவின் மதிப்பீட்டு நாளில் மேயர் போர்ட்டினால் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற தர்க்கத்தில் இதுபற்றியும் வேறுபல விடயங்கள்பற்றியும் வாதிடப்பட்டது.
பல மணித்தியாலங்களாக வாதிடப்பட்டதன் பின்னர் செலாவணியைத் தவிர்ப்பதற்காக நூதனசாலைகளை மூடுவது, ரொரன்ரோ மிருகக்காட்சிசாலையினை அகற்றுவது, நகருக்குச் சொந்தமான 3 திரையரங்குகளை விற்பது போன்ற விடயங்கள் பற்றியும் வாதிடப்பட்ட பின்னர் இப்படியான புதிய கட்டடத்தைத் திறப்பதுபற்றி எதுவும் கூறாமல் வாயடைத்துப்போயிருந்தார் துணை மேயர்.
பின்னர் அவர் தான் அதை ஒரு கருத்தாகவே குறிப்பிட்டதாகவும் முன்னால் கவுன்சிலராக இருந்த போல் சுதர்லான்ட் கூறிய கருத்தையே தான் கூறியதாகத் தெரிவித்தார்.இவர்களது ஒன்றுகூடலில் முதன்மையாக 28 மில்லியன் டொலர் பண வெட்டுக்கள் பற்றியே விவாதிக்கப்பட்டது. அத்துடன் ரொரன்ரோ நகரின் பண ஒதுக்கீடு தற்போது 774 மில்லியன் டொலர் என்று மேயர் குறிப்பிட்டார். இது அண்மைக்காலத்தைவிடவும் உயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
எனினும் பண நெருக்கடியினால் சில பராமரிப்புகளை நிறுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர் சிலர் நில உரிமை மாற்றத்தினால் ரொரன்ரோவிற்கு இவ்வருடன் எதிர்பார்த்ததைவிடவும் 33 வீதம் வருமானவரி அதிகமாகக் கிடைத்ததாகத் தெரிவித்தனர்.இதனால் நகரத்திற்கு 80 மில்லியன் டொலர் கிடைத்துள்ளதென்றதோடு நகரத்தைப் பாதுகாக்க எம்மிடம் போதுமானளவு நிதி உள்ளதென்பதை மேயர் மறுக்கக்கூடாதென்றனர்.
சீனாவில் இரண்டு இளம் புத்த பிக்குகள் தீக்குளிப்பு.
சீனாவின் தென் மேற்குப் பகுதியில் உள்ள கீர்த்தி மடாலயத்தில் 2 இளம் புத்த பிக்குகள் தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டனர்.
அவ்விருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். திபெத்திய மடாலயங்களில் பொலிஸ், ராணுவ கண்காணிப்பும் கட்டுப்பாடும் அதிகரித்து வருவதைக் கண்டித்தும் மதச் சுதந்திரத்தில் சீன அரசு தொடர்ந்து தலையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவ்விரு புத்த பிக்குகளும் தீ வைத்துக் கொண்டனர்.
இதையடுத்து சிசுவான் மாகாணத்தில் உள்ள அபா என்று அழைக்கப்படும் அந்தப் பகுதி பொலிசாரால் சுற்றி வளைக்கப்பட்டது. அங்கிருப்பவர்கள் செய்தி ஊடகங்களைத் தொடர்புகொள்ளாமல் இருக்க சாலைகளில் பொலிசார் வாகனத் தணிக்கை சோதனை உள்ளிட்டவற்றைத் தொடங்கினர்.
செல்பேசிகள் வழியாக யாரும் எழுத்துருவில் தகவல் அனுப்ப முடியாதபடிக்கு தடை ஏற்படுத்தப்பட்டது. இணையதளத் தொடர்பும் துண்டிக்கப்பட்டிருக்கிறது.
திங்கள்கிழமை பிற்பகல் முதல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்கூட அந்த மடாலயங்கள் பகுதிக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. எங்கு பார்த்தாலும் பொலிஸ் தலைகளாகவே காணப்படுகின்றன.
விவாகரத்து வழக்கு: தாய் - மகளை சுட்டுக்கொன்ற மர்ம வாலிபர்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை சேர்ந்தவர் நஜ்மா பீபீ(40). இவர் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. எனவே அவர் தனது மகள் சிட்ரா(18) மற்றும் நசீர்(28) என்ற வாலிபருடன் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.பின்னர் அவர்களுடன் தனது காரில் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். அப்போது அவர்களை பின் தொடர்ந்த மர்ம வாலிபர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
அதில் நஜ்மா பீபீ, அவரது மகள் சிட்ரா மற்றும் நசீர் ஆகிய 3 பேரும் பரிதாபமாக இறந்தனர். அவர்கள் எதற்காக சுட்டுக்கொல்லப்பட்டனர் என தெரியவில்லை. தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற நஜ்மா பீபீ கடுமையாக போராடி வந்தார்.எனவே அவரது கணவர் கூலிப்படையை ஏவி அவர்களை சுட்டுக்கொன்று இருக்கலாம் என பொலிசார் கருதுகின்றனர். எனவே அவரிடம் விசாரணை நடக்கிறது. சமீபெகாலமாக பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் அங்கு 1,500 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரஞ்சு நிறத்திற்கு மாறிய அவுஸ்திரேலிய முதலை.
அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ளது கீலாங். இப்பகுதியில் உள்ள பாதுகாக்கப்பட்ட பெரிய ஏரியில் ஸ்நாப்பி என்ற முதலை உள்ளது. இது 8 அடி நீளம் உடையது.
முதலைக்குரிய அனைத்து குணங்களுடனும் பார்வையாளர்களை மிரட்டி வந்தது. இதை பார்க்க ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த முதலை திடீரென நிறம் மாற தொடங்கியது.
தற்போது ஆரஞ்சு நிறத்துக்கு ஸ்நாப்பி முதலை மாறிவிட்டது. இந்த அதிசயத்தை காண பார்வையாளர்களின் எண்ணிக்கை முன்பைவிட அதிகரித்து விட்டது.முதலை நிறம் மாறியது வியப்பாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் முதலையின் நிறம் மாற்றத்துக்கான காரணங்கள் குறித்து ஆராய மருத்துவர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தியர்களுக்கு பொதுமன்னிப்பு: 50000 பேர் நாடு திரும்பினர்.
வேலைக்கான விசா, ஹஜ் பயணம் மற்றும் சுற்றுலா விசாவில் இந்தியாவில் இருந்து லட்சக்கணக்கானோர் சவுதி செல்கின்றனர்.இவர்களில் பலர் விசா காலம் முடிந்த பின்னரும் அங்கு தங்கியுள்ளனர். இவர்களின் பெரும்பாலோர் திறமையற்ற ஊழியர்கள்.
அவ்வாறாக சட்ட விரோதமாக தங்கியுள்ள இந்தியர்கள் மீது அந்நாட்டு அரசு உரிய நடவடிக்கை எடுத்தது. அதனால் பலர் நாடு திரும்ப முடியாமல் தவித்தனர்.இதையறிந்த இந்திய தூதரக அதிகாரிகள் சவுதி அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்திய தூதரகத்தின் தீவிர முயற்சி காரணமாக சட்ட விரோதமாக தங்கியிருந்த இந்தியர்களுக்கு சவுதி அரசு பொது மன்னிப்பு வழங்கியது.இதையடுத்து சவுதியில் இருந்து இதுவரை 50,000 பேர் நாடு திரும்பியுள்ளனர் என்று இந்திய தூதரக முதன்மை செயலர் பருபால் தெரிவித்தார்.
ரஷ்ய அதிபர் கோபம்: நிதியமைச்சர் பதவி ராஜினாமா.
தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பின் போது நிதியமைச்சரை ரஷ்ய அதிபர் திமித்ரி மெத்வதேவ் கண்டித்தார். இதையடுத்து நிதியமைச்சர் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்தார்.ரஷ்யாவில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் நடக்கிறது. தற்போதைய பிரதமர் விளாடிமிர் புடின் அதிபர் பதவிக்கு போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
இவருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதேபோல் அதிபர் திமித்ரி மெத்வதேவ் பிரதமர் பதவிக்கு வருவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மெத்வதேவ் பிரதமரானால் அவரது அமைச்சரவையில் பணியாற்ற மாட்டேன்.எனக்கு அவருக்கும் பொருளாதார கொள்கை முடிவுகள் விஷயத்தில் நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன என்று ரஷ்ய நிதியமைச்சர் அலெக்ஸி குட்ரின் கடந்த சனிக்கிழமை கூறியிருந்தார்.
இதில் அதிருப்தி அடைந்த அதிபர் மெத்வதேவ் தொலைக்காட்சிக்கு நேற்று பேட்டி அளிக்கையில், எனது கொள்கையை விமர்சித்த நிதியமைச்சர் அலெக்ஸி அதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். அதிபரின் முடிவுகளை அரசு அமல்படுத்துவதில் கருத்து வேறுபாடு இருந்தால் ஒரே வழிதான் உள்ளது. அவர் பதவியை ராஜினாமா செய்யட்டும் என்று கோபமாக கூறினார்.தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் மெத்வதேவ் கடுமையாக பேசியதை அடுத்து நிதியமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக அலெக்ஸி ராஜினாமா செய்தார்.
கடந்த 2000ம் ஆண்டு முதல் நிதியமைச்சர் பதவியில் உள்ள அலெக்ஸி ரஷ்ய பொருளாதார மேம்பாட்டுக்கு பல நல்ல கொள்கைகளை கொண்டு வந்தவர்.அவரது ராஜினாமா ரஷ்ய பொருளாதாரத்தை நிச்சயம் பாதிக்கும். அத்துடன் அடுத்த ஆண்டு நடக்கும் அதிபர் தேர்தலிலும் எதிரொலிக்கும். அவரது இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது என்று நிபுணர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
ஹக்கானி அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: அமெரிக்கா வலியுறுத்தல்.
தலிபான் அமைப்பினைச் சேர்ந்த ஹக்கானி தீவிரவாத அமைப்புக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என அமெரிக்கா கூறியுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க ராணுவ தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜார்ஜ் லிட்டில் நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: ஹக்கானி அமைப்புக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காது என அந்நாட்டு பிரதமர் உள்ளிட்டோர் அறிவித்துள்ளனர்.
எது எப்படியோ அந்த அமைப்புக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்றுதான் அமெரிக்கா எதிர்பார்க்கிறது. இது தொடர்பான திட்டவட்ட தகவல் அந்த நாட்டுக்கு கடந்த வாரம் அனுப்பப்பட்டுள்ளது.பாகிஸ்தான் எல்லையையொட்டியுள்ள பகுதிகளில் தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ளது. அவர்கள் ஆப்கானிஸ்தானில் பணியாற்றும் அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் படைகள் மீது தாக்குதல் நடத்துவது வாடிக்கையாக உள்ளது.
அந்த தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதுதான் அமெரிக்கா அனுப்பிய தகவலில் உள்ளது என்றார் லிட்டில். ஹக்கானி அமைப்பு தீவிரவாதிகளுக்கு மிகவும் பத்திரமான இடமாக பாகிஸ்தான் திகழ்கிறது.ஹக்கானி தீவிரவாதிகளால் ஏற்படும் பிரச்னை மோசமானதாக உள்ளது என்று மற்றொரு அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஹக்கானி மீது நடவடிக்கை எடுக்கமுடியாது என பாகிஸ்தான் கூறி வருவது பத்திரிகைகளில் வெளியாகி உள்ளது. எனினும் இந்த விஷயத்தில் அமெரிக்காவின் முடிவு தெளிவாக உள்ளது என வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் மார்க் டோனர் தெரிவித்துள்ளார்.
ஜலாலுதீன் ஹக்கானி என்பவரால் நிர்மாணிக்கப்பட்டு அவரது மகன் சிராஜுதீன் என்பவரால் நடத்தப்பட்டுவரும் இந்த இயக்கம் 2008லிருந்து அமெரிக்காவால் தடை செய்யப்பட்டுள்ளது. இப்போது அதை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பது பற்றி பரிசீலிக்கப்பட்டுவருகிறது என்றும் டோனர் தெரிவித்தார்.
சீனாவில் ரயில்கள் மோதி விபத்து: 245 பேர் காயம்.
சீனாவில் இரு அதிவேக ரயில்கள் மோதி செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளாகின. இதில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் இல்லை. 245 பேர் காயமடைந்தனர்.
பெரும்பாலோருக்கு லேசான காயமே ஏற்பட்டுள்ளது. சிலருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. பலருக்கு கை,கால் எலும்புகள் முறிந்துள்ளன. இவர்கள் அனைவரும் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சீனாவின் வர்த்தக நகரான ஷாங்காயில் சுரங்கப்பாதையில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்தது. சிக்னல் கோளாறால் விபத்து ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இரு ரயில்களும் மோதிக் கொண்டதில் சில ரயில் பெட்டிகள் சேதம் அடைந்தன. இந்த விபத்து குறித்து அறிந்ததும் விரைந்து வந்த பாதுகாப்புப் படையினர், பயணிகள் அனைவரையும் பத்திரமாக மீட்டனர். இரு ரயில்களில் இருந்தும் மொத்தம் 500 பயணிகள் மீட்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.சீனாவில் கடந்த சில மாதங்களுக்குள் சிக்னல் கோளாறல் ஏற்படும் இரண்டாவது விபத்தாகும் இது. முன்னதாக ஜூலை மாதம் அங்கு புல்லட் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 40 பேர் இறந்தனர். 200 பேர் காயமடைந்தனர்.
மின்னலே காரணம், சிக்னல்களை சரிவரப் பராமரிக்காதுதான் ரயில்கள் விபத்துக்கு காரணம் என்று அந்நாட்டு மக்கள் குற்றம்சுமத்தியுள்ளனர். ஆனால் இதை அந்நாட்டு ரயில்வேத் துறை மறுத்துள்ளது.மழைக் காலத்தில் இடி, மின்னலால் இதுபோன்று ரயில் சிக்னல்கள் அடிக்கடி கோளாறாகி வருவதாக அந்நாட்டு ரயில்வேத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கு நேசக்கரம் நீட்டும் சீனா.
அமெரிக்கா உடனான பாகிஸ்தான் உறவில் விரிசல் விழத் துவங்கியுள்ள நிலையில் ஐ.எஸ்.ஐ தலைவர் அகமது சுஜா பாஷா சவுதி அரேபியா சென்றுள்ளார்.
அதேநேரம் இஸ்லாமாபாத்திற்கு நேற்று வந்த சீன துணைப் பிரதமர் மெங் ஜியான்ஷூவூ சீனாவின் முழு ஆதரவும் பாகிஸ்தானுக்கு உண்டு என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். இதற்கிடையில் ஹக்கானி குழு மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தே தீர வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது.அமெரிக்கா, பாகிஸ்தான் உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் சவுதி அரேபியா இவ்விஷயத்தில் தலையிட்டு சமரசம் செய்து வைக்க முயன்று வருகிறது. இதன் முதற்கட்டமாக ஐ.எஸ்.ஐ தலைவர் அகமது சுஜா பாஷா நேற்று முன்தினம் திடீரென சவுதி அரேபியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
அதேநேரம் சவுதி உளவுத் துறை அதிகாரிகள் குழு ஒன்று இஸ்லாமாபாத்திற்கு வந்துள்ளது. ஆனால் அமெரிக்கா - பாகிஸ்தான் உறவுச் சிக்கல் குறித்து விவாதிக்கத்தான் அக்குழு வந்திருக்கிறதா என்பது தெரியவில்லை. ஆனால் பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் அதர் அப்பாஸ், பாஷா இஸ்லாமபாத்தில் தான் உள்ளதாகத் தெரிவித்தார்.
இதற்கிடையில் பாகிஸ்தானுக்கான அமெரிக்கத் தூதர் கேமரூன் முன்டருடன், பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர் சல்மான் பஷீர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். அமெரிக்கத் தூதரக செய்தித் தொடர்பாளர் மார்க் ஸ்டோர்த் இது வழக்கமான சந்திப்பு என்று தெரிவித்தார்.
இந்த ஒட்டுமொத்த சந்திப்புகளும் ஒருபுறம் அமெரிக்காவை சமாதானப்படுத்த முயன்று கொண்டே மறுபுறம் சீனாவுடனான தனது நெருக்கத்தை வெளியுலகுக்குத் தெரியப்படுத்தும் பாகிஸ்தானின் முயற்சிகளாக நிபுணர்களால் கருதப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் சீன துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான மெங் ஜியான்ஷூவூ இஸ்லாமாபாத் வந்தார். வெள்ள நிவாரணப் பணிகள், மறுவாழ்வுப் பணிகள், பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம் ஆகியவற்றுக்காக 250 மில்லியன் டொலர் மதிப்பில் இருதரப்பிலும் நேற்று முன்தினம் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பயங்கரவாதத்துக்கு எதிராகவும், இந்த மண்டலத்தில் அமைதி நிலவவும் பாகிஸ்தானுக்கு சீனா தனது முழு ஆதரவையும் அளிக்கும் எனக் கூறிய மெங்,"இந்தாண்டு சீனா, பாகிஸ்தான் உறவின் 60வது ஆண்டு. இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவே நான் இங்கு வந்துள்ளேன்” என்றார்.
பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, ராணுவத் தலைமைத் தளபதி அஷ்பாக் கயானி, உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக், ராணுவ தளபதி காலித் ஷமீம் வைன் ஆகியோரையும் மெங் நேற்று சந்தித்துப் பேசினார்.பாகிஸ்தான் சீனாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொள்வதில் தீவிரமாக இயங்கி வருவதாக பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் “எக்ஸ்பிரஸ் டிரிபியூன்” பத்திரிகை தெரிவித்துள்ளது. சமீபத்தில் பீஜிங் சென்றிருந்த பிரதமர் யூசுப் ரசா கிலானி இருதரப்பும் உடனடியாக ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
ஆனால் அப்படி ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டால் சீனா, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா, இந்தியா உறவுகளில் சிக்கல் உருவாகும் எனக் கூறி சீனத் தலைமை அப்போதைக்கு கிலானியை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துவிட்டதாக அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF