Wednesday, March 31, 2010

கணினிக்கு ரீஸ்டோரேஷன் அவசியமா? : ஓர் அலசல்

பொதுவாக விண்டோஸ் இயங்குதளங்களை பயன்படுத்த துவங்கிவிட்டாலே வைரஸ் தாக்கம்,இயங்குதளம் Crash ஆவது போன்ற பிரச்சனைகள் எப்போது எழும் என்றே கூறமுடியாது. “நேற்றிரவு கூட நன்றாக தானே கணினியை இயக்கினேன் ஆனால் இன்று காலையில் கணினி மக்கர் பண்ணுதேன்னு” நம்மில் எத்தனை பேர் புலம்புவோம் அல்லவா?

இதுபோன்று விண்டோஸ் செயலிழந்து மக்கர் பண்ணும் போது தான் இந்த ரீஸ்டோரேஷனின் அவசியம் நமக்கு தெரிய வரும்.

ரீஸ்டோரஷன் என்றால் என்ன?

கணினி நல்ல நிலையில் இயங்கிக்கொண்டு இருக்கும்போது அதனை பேக்-அப் செய்து இதர பார்ட்டிஷனில் சேமித்து, கணினி மக்கர் செய்யும்போது சேமித்த கணினியின் பேக்-அப்பை கொண்டு கணினியின் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதே ரீஸ்டோரேஷன் ஆகும்.

பொதுவாக கணினியை இரண்டு வகையாக பிரிப்போம் ஒன்று Branded மற்றொன்று Assembled இதில் Branded கணினியாக‌ இருந்து அதனை நீங்கள் Genuine OS உடன் வாங்கினால் அந்த கணினி தயாரிப்பாளரே உங்களுக்கு ஒரு ரீஸ்டொரேஷன் cd/dvd யை அளிப்பார் (Dell,Acer,HP etc..). விண்டோஸில் ஏதாவது பிழை ஏற்பட்டு பூட் ஆக மறுக்கும் போது இந்த cd/dvd யை போட்டு ரீஸ்டோரேஷன் செய்துகொண்டு நீங்கள் கணினியை எந்த தேதியில் வாங்கினீர்களோ அந்த தேதியின் நிலமைக்கு கொண்டு வரலாம்.

இதே Branded கணினியை Free DOS ஸாக வாங்கினீர்க்ளேயானால், இந்த ரீஸ்டோரேஷன் சாத்தியம் இல்லை. இந்த சூழ்நிலையில் நாம் தான் ரீஸ்டோரேஷன் உருவாக்க வேண்டும் (IBM,DELL,ACER etc without OS).

அடுத்ததாக Assembled கணினி, இது நமக்கு ஏற்ற கணினியை நாமே தனித்தனியாக வாங்கி சர்வீஸ் Engg மூலமாக உருவாக்குவது ஆகும். அவ்வாறு கணினியின் பாகங்களை கடையில் வாங்கும்போது நம்மில் பலரும் விண்டோஸ் தொகுப்பை பணம் செலுத்தி வாங்குவது கிடையாது. எனவே தான் Pirated விண்டோஸ் தொகுப்புகளை உலகில் அதிகமாக பயன்படுத்துவது ஆசியாவில் தான் என்று ஒரு ஆய்வறிக்கை கூறுகின்றது. என்ன செய்வது மைக்ரோசாப்டின் விண்டோஸ் தொகுப்புகளின் விலை அப்படி. அதே நேரத்தில் பைரேட் செய்து பயன்படுத்துவதும் தவறு.

இந்த ரீஸ்டோரேஷனால் என்ன பயன்?

கணினி நல்ல நிலமையில் இயங்கிக்கொண்டிருக்கும் போதே ரீஸ்டோரேஷன் உருவாக்குவதால் சில நன்மைகள் நமக்கு கிட்டும்.

வன்தட்டை (Hard Disk) பார்மேட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை, ஆகையால் கணினியின் வந்தட்டிற்க்கு பாதுகாப்பு கிடைக்கின்றது. வன்தட்டை அடிக்கடி பார்மேட் செய்வது நல்லதல்ல.

விண்டோஸ் சிடியை தேடி அலைய வேண்டாம்.

டிரைவர் சிடி இல்லையே என்ற கவலை வேண்டாம்.

மேலும் நீங்கள் விண்டோஸ் Genuine தொகுப்பு பயன்படுத்தினால் அதனை மைக்ரோசாப்டில் வருடத்திற்கு 4 முறை மட்டுமே இணையத்தில் ஆக்டிவேஷன் செய்ய இயலும்.

விண்டோஸை புதிதாக நிறுவும் நேரத்தை காட்டிலும் விரைவாக ரீஸ்டோரேஷனை செய்து கணினியை இயக்கி விடலாம்.

இதுபோன்ற நன்மைகள் இருப்பதால் கணினியை உங்களது தேவையான மென்பொருட்களை நிறுவிய பின் ரீஸ்டோரேஷன் உருவாக்கி அதனை பேக் அப் செய்து பாதுகாப்பாக சேமித்துவைப்பது சாலச்சிறந்தது.

நம்மில் பலரும் இதனை செய்வது கிடையாது. விண்டோஸில் பிழை ஏற்பட்டு கணினி பூட் ஆக மக்கர் பண்ணும் போது உடனே பார்மேட் செய்து விண்டோஸை புதிதாக நிறுவிவிடுவோம். பல சர்வீஸ் Engg களும் பரவலாக இதைத்தான் செய்கிறார்கள்.

நாங்கள் எங்களின் பல வாடிக்கையாளர்களுக்கு பல கணினிகளை Assembling செய்து தந்திருக்கின்றோம், தந்துகொண்டும் இருக்கிறோம். இவ்வாறு செய்யும் போது கண்டிப்பாக நாங்கள் அவர்களுக்கு ரீஸ்டோரேஷன் செய்து எங்களது தகவலையும் அந்த ரீஸ்டோரேஷன் மென்பொருளிலேயே எடிட் செய்து தந்துவிடுவோம். கணினி மக்கர் செய்யும் போது அவர்களது கணினியில் ரீஸ்டோரேஷன் செய்து 30 நிமிடத்தில் கணினியை இயக்கிவிடுவோம்(Hardware ல் பிழை இல்லாமல் இருந்தால்).

இதுபோல நீங்களும் ரீஸ்டோரேஷன் உருவாக்கிக்கொண்டு ரீஸ்டோரேஷன் செய்ய கற்றுக்கொண்டால் கணினியில் பிழை ஏற்படும் போது எளிமையாக ரீஸ்டோரேஷன் செய்துகொள்ளலாம்.

இவ்வாறு ரீஸ்டோரேஷன் உருவாக்க எந்த மென்பொருள் பயன்படுத்தலாம் என்று நீங்கள் நினைக்கலாம். நாங்கள் எங்களது வாடிக்கையாளருக்கு பயன்படுத்துவது Drive Image XML என்ற இலவச மென்பொருளைத்தான். பொதுவாக ரீஸ்டோரேஷன் செய்யும் மென்பொருள்கள் எல்லாம் விலைகொடுத்து வாங்கும் சூழ்நிலையில் Drive Image XML இன் பயன்பாடு நன்றாக இருக்கின்றது.

இதனை கணினியில் நிறுவி பேக்-அப் செய்யலாம். பேக்-அப் செய்யும் போது அந்த கோப்பின் அளவை குறைக்க Compression ம் வைத்திருக்கின்றனர். இது விண்டோஸ்,விஸ்டா,விண்டோஸ்7 க்கு சப்போர்ட் செய்கின்றது. FAT,FAT16,FAT32,NTFS format களை ஆதரிக்கின்றது.

Drive Image XML இன் குறைபாடு

இலவசமாக கிடைக்கும் இந்த Drive Image XML இல் உங்களது விண்டோஸ் பூட் ஆகவில்லை என்றால் ரீஸ்டோர் செய்வதில் ஒரு சிக்கல் இருக்கின்றது.

அதாவது Drive Image XML அளிக்கும் இலவச plug in ஐ வைத்து நீங்களாக தான் Windows Pre Enviroinment அல்லது Bart Pre Enviroinment துணைக்கொண்டு bootable cd உருவாக்கி தான் உங்களது கணினியை ரீஸ்டோரேஷன் செய்ய இயலும் என்பது சாதாரண கணினி பயனாளர்களுக்கு சாத்தியமில்லை என்பது கொஞ்சம் வருதப்படவேண்டிய விஷயம். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

செவ்வாய் கிரகம் செல்லத் தயார்..

விண்வெளி ஆய்வில் பல்வேறு உலக நாடுகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. குறிப்பாக சீனாவும் இந்தியாவும் நிலவுப்பயணத்தில் அதிக கவனம் செலுத்துகின்றன.


இந்த நிலையில் அமெரிக்கா, ரஷியா நாடுகள் சிவப்பு கிரகம் என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தை ஆராய்வதில் தீவிரம் காட்டுகின்றன. ஏற்கனவே அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிலையம் செவ்வாய் கிரகத்துக்கு ஆய்வுக் கலங்களை அனுப்பி உள்ளது. இந்த கலங்கள் அங்கு பல்வேறு ஆய்வுகளை செய்து தகவல்களை அனுப்பி வருகிறது.

இந்த தகவல்களின் அடிப்படையில் அடுத்த கட்டமாக செவ்வாய் கிரகத்துக்கு விண்வெளி வீரர்களை அனுப்பி ஆய்வு செய்யப்போகிறார்கள். இவர்கள் அங்கு தங்கி இருந்து பல்வேறு ஆய்வுப்பணிகளில் ஈடுபடப் போகிறார்கள். இந்த பயணத்துக்கு வீரர்களை தயார் செய்யும் பணிகள் ரஷியாவில் உள்ள விண்வெளி ஆய்வு நிலையத்தில் நடந்து வருகிறது.

பூமியில் இருந்து செவ்வாய் கிரகத்துக்கு செல்ல சுமார் 250 நாட்கள் ராக்கெட்டில் பயணம் செய்ய வேண்டும். பின்னர் அங்கு 30 நாட்கள் வரை தங்கி இருந்து ஆய்வுகள் நடத்த வேண்டும். அதன்பின்னர் அங்கிருந்து புறப்பட்டால் சுமார் 240 நாட்கள் பயணம் செய்தால் தான் பூமியை வந்தடைய முடியும். ஆக மொத்தம் சுமார் 520 நாட்கள் பூமியை விட்டு விண்வெளியில் இருக்க வேண்டும்.

இதை தாங்கும் அளவுக்கு விண்வெளி வீரர்களின் உடல் தகுதி சிறப்பாக இருக்க வேண்டும். எனவே அத்தகைய தகுதி உள்ளவர்களை தேர்வு செய்ய சோதனைகள் நடக்கிறது. பல்வேறு உடல்தகுதி, கல்வித்தகுதி தேர்வுகளில் வெற்றி பெற்ற 11 பேர்களை தேர்ந்து எடுத்து அவர்களை ஒரு அறையில் 520 நாட்கள் அடைத்து வைத்து சோதனை செய்யப்போகிறார்கள். இந்த அறை ராக்கெட்டில் இருப்பது போன்ற உணர்வை தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ராக்கெட்டில் பயணம் செய்யும் போது இருக்கும் எடையற்ற தன்மையுடன் இந்த தங்கும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கி அங்கு தங்கி இருந்து ஆய்வு நடத்துவது போன்ற ஒத்திகை மற்றும் பயிற்சிகளும் இவர்களுக்கு அளிக்கப்படுகிறது.

ரஷியாவைச்சேர்ந்த 5 என்ஜினீயர்கள், 2 டாக்டர்கள் மற்றும் பிரான்சு, பெல்ஜியம், இத்தாலி, மற்றும் சீனா ஆகிய நாடுகளைச்சேர்ந்த தலா ஒரு விண்வெளி வீரர்கள் இந்த சோதனைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சோதனைகள் அடுத்த மாதம் தொடங்கி 520 நாட்களுக்கு நடைபெறும். இவர்கள் தங்கி இருக்கும் போது அவர்களது உடலில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணித்து ஆலோசனைகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

பிக் பேங் சோதனை : புரோட்டான் கதிர்கள் சாதனை வேகத்தில் மோதல்

பிரப‌ஞ்ச‌‌ம் தோ‌ன்‌றிய ரக‌சிய‌த்தை‌க் க‌ண்டு‌பிடி‌க்கு‌ம் முய‌ற்‌சி‌யாக ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் உருவா‌க்‌கியு‌ள்ள '‌பி‌க்-பே‌ங்' சோதனை சாலையில், உலகளவில் இதுவரை இல்லாத வகையில் புரோட்டான் கதிர்களை அதிவேகமாக விஞ்ஞானிகள் மோதச் செய்துள்ளனர்.


இதுவரை அதிவேகம் எனக் கருதப்பட்ட வேகத்தை விட இன்று விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் 3 மடங்கு வேகமாக புரோட்டான் கதிர்கள் நேரெதிரே மோதிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி‌‌க்-பே‌ங் ஆ‌ய்வு: சுமா‌ர் 14 ‌பி‌ல்‌லிய‌ன் (ஒரு பில்லியன்=100 கோடி) ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்னா‌ல் ஏ‌ற்ப‌ட்ட ‌மிக‌ப்பெ‌ரிய அணு‌மோதலினால் ஏற்பட்ட பெருவெடிப்பின் விளைவாகவே ‌பிரப‌ஞ்ச‌ம் தோ‌ன்‌‌றியது எ‌ன்ற ‌பி‌க்-பே‌ங் (பெரு வெடி‌ப்பு) கோ‌ட்பாடே இ‌ன்றளவு‌ம் ந‌ம்ப‌ப்ப‌ட்டு வரு‌கிறது. பூ‌மி உருவா‌கி அதில் உ‌யி‌ர்க‌ள் தோ‌ன்றவு‌ம் இதுவே காரண‌ம் எ‌ன்று கருத‌ப்படு‌கிறது.

இ‌ந்‌நிலை‌யி‌‌ல் ‌பிரப‌ஞ்ச‌ம் தோ‌ன்‌றிய போது உருவான அணு மோதலை செயற்கையாக உருவா‌க்‌கி, அத‌ன் மூல‌ம் ‌பிரப‌ஞ்ச‌ம் தோ‌ன்‌றிய ரக‌சிய‌‌த்தை‌க் க‌ண்ட‌றிய 80க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட நாடுகளை‌ச் சே‌ர்‌ந்த பல ஆயிரம் ‌வி‌ஞ்ஞா‌னிக‌ளு‌ம், பொ‌றியாள‌ர்களு‌ம் பல ஆண்டுகளாக முய‌ற்‌சி‌த்து வரு‌கி‌ன்றன‌ர்.

சுமார் 5.95 பில்லியன் டாலர் செலவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு தற்போது 10 பில்லியன் டாலர் என்ற அளவை நெருங்கியுள்ளது. இந்த ஆய்வுக்காக ‌பிரா‌ன்‌ஸ்-சு‌வி‌ட்ச‌ர்லா‌ந்து எ‌ல்லை‌யி‌ல் பூ‌மி‌க்கு அடி‌யி‌ல் 100 ‌மீட்டர் ஆழ‌த்‌தி‌ல் 27 ‌‌கி.‌மீ. நீள வட்ட வடிவிலான சுரங்கப்பாதையை அமைத்து, அதில் பி‌ங்-பே‌ங் சோதனை‌யை கடந்த 2008 செப்டம்பரில் துவக்கினர்.

சுரங்கத்தின் 2 இடங்களில் இரு‌ந்து புரோ‌ட்டா‌ன் கதிர்களை செலு‌‌த்‌தி நேரு‌க்கு நே‌ர் மோத‌வி‌ட்டு, அ‌‌ப்போது உருவாகு‌ம் மா‌ற்ற‌ங்களை ஆ‌யிர‌க்கண‌க்கான கரு‌விக‌ள் மூல‌‌ம் ஆ‌ய்வு செ‌ய்து ‌பிரப‌‌ஞ்ச‌ம் தோ‌ன்‌றிய ரக‌சிய‌த்தை‌க் க‌ண்டு‌பிடி‌க்க விஞ்ஞானிகள் ‌திட்டமிட்டனர்.

இதற்காக உருவாக்கப்பட்ட ராட்சத ஹட்ரான் கொலைடர் (Large Hadron Collider-LHC) இயந்திரத்தில் இன்று 7 டிரில்லியன் எலக்ட்ரான் வோல்ட் அளவில் புரோட்டான் கதிர்களை மோதச் செய்தனர்.

முன்னதாக புரோட்டான் கதிர்களை மோதச் செய்யும் பணியில் கோளாறு ஏற்பட்டதால் விஞ்ஞானிகள் சில மணி நேரம் தவித்தனர். எனினும், கோளாறுகளை சீரமைத்து அடுத்த சில மணி நேரத்திலேயே மீண்டும் புரோட்டான் கதிர்களை அதிவேகத்தில் மோதச் செய்து விஞ்ஞானிகள் புதிய சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2008இல் நடத்தப்பட்ட முதற்கட்ட ஆய்வில் 2.36 டிரில்லியன் எலக்ட்ரான் வோல்ட் வேகத்திலேயே புரோட்டான் கதிர்கள் மோதல் நடைபெற்றது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Friday, March 26, 2010

30 ஆயிரம் ஆண்டுக்கு முன் வாழ்ந்த ஆதிகால மனிதனின் எலும்புகள் கண்டுபிடிப்பு

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சைபீரிய நாட்டு குகையில் வினோதமான ஒரு உயிரினத்தின் எலும்பு துண்டுகளை தொல்லியல் நிபுணர்கள் கண்டுபிடித்தனர்.


அந்த உயிரினத்தின் கைவிரல்கள் மிகவும் சிறியதாக இருந்தன. எனவே, எலும்பை கொண்டு டி.என்.ஏ. சோதனை நடத்தப்பட்டது.

அப்போது, இந்த எலும்புகள் ஆதிகால மனிதனுடையது என்று தெரிய வந்தது. மேலும் அந்த மனிதன் 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவனாக இருக்கலாம் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்த எலும்புகளை வைத்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

கூகிள் குரோம் புதிய பதிப்பு 4 வெளியீடு!

கூகிள் தனது வலை உலாவியான குரோமின் புதிய பதிப்பை அண்மையில் வெளியிட்டுள்ளது. முன்பை விட அதிக பாதுகாப்புகள் மற்றும்

சில பிழைகளை நீக்கி சரிசெய்து வெளியிட்டுள்ளது.இப்போதைய தொழில்நுட்பம் மற்றும் சவால்களை எதிர்கொள்ளுமாறு உருவாக்கப்பட்டுள்ளது.

பழைய பதிப்புகளை வைத்து உள்ளோர் புதிய பதிப்பை மேம்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள். இந்த புதிய பதிப்பில் முன்பை விட வேகம், பாதுகாப்பு, எளிமை போன்றவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

தரவிறக்கச்சுட்டி பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Wednesday, March 24, 2010

மனதை படிக்கும் கம்ப்யூட்டர் வடிவமைப்பு

பிரிட்டனை சேர்ந்த விஞ்ஞானிகள், மனிதர்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை படிக்கும் வகையிலான கம்ப்யூட்டரை வடிவமைத்துள்ளனர்.


இதுகுறித்து, லண்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி மற்றும் அவரது சகாக்கள் கூறியதாவது,

கம்ப்யூட்டரால், மனிதர்களின் மூளையை ஸ்கேன் செய்வதன் மூலம், அவர்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை புரிந்து கொண்டு, அவற்றை அப்படியே வெளிப்படுத்த முடியும். இதற்காக, பத்து தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களிடம் ஆய்வு நடத்தப் பட்டது. இவர்களுக்கு சில பெண்கள் கடிதங்களை தபால் பெட்டியில் போடுவது, பேப்பர் கப்பில் காபி அருந்துவது போன்ற காட்சிகள் அடங்கிய, சில வினாடிகள் மட்டுமே ஒளிபரப்பாகக் கூடிய படம் காண்பிக்கப்பட்டது.

அதன் பின், அவர்கள் என்ன பார்த்தனர் என்பதை திரும்ப நினைவுப்படுத்தி பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். அப்போது ஸ்கேனர் கருவி மூலம் மூளையில் ஏற்படும் ரத்த ஓட்ட மாறுதல்களை வைத்து, அதன் செயல்பாடு பதிவு செய்யப்பட்டது. பின்னர், அந்த எலக்ட்ரிக்கல் தகவல்களை, அதற்கென உருவாக்கப்பட்ட கம்ப்யூட்டர் புரோகிராம் மூலம் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டவர்கள் நினைவு கூர்ந்ததை, 50 சதவீதம் துல்லியமாக வெளிப்படுத்தப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Tuesday, March 23, 2010

டி.என்.ஏ (DNA) என்பது என்ன?

டி.என்.ஏ என்பதை இனக்கீற்று அமிலம் எனத் தமிழில் கூறலாம். DNA என்பது deoxyribonucleic acid என்னும் ஆங்கிலத் தொடரின் சுருக்கமாகும். மனித உயிரைக் கட்டுப்படுத்தும் அடிப்படை அலகு இதுவே. இது நியூகிளியோடைட்ஸ் எனும் வேதி அலகுகளின் தொடர்களிலிருந்து பெறப்படும் மிகவும் சிக்கலான பொருளாகும். ஒரு புதிய உயிரினம் வளர்ச்சியுறுவதற்கான எல்லா அறிவுறுத்தல்களும் டி.என்.ஏ மூலக் கூறாகக் (molecule) குறிப்பிடப்படுகின்றன. ஓர் ஏணியை முறுக்கியது போன்று இதன் வடிவம் விளங்குகிறது. இரு செங்குத்தான நீண்ட புரியிழைகள், அமினோ அமில இணைகளான தொடர் படிகளால் இணைக்கப்படுகின்றன; இவை குறிப்பிட்ட சில வழிகளால் மட்டுமே இணைக்கப்பட முடியும். இந்த அமினோ அமில இணைகளின் அமைப்பு டி.என்.ஏ மூலக்கூறின் குறியீடாக விளங்குகிறது; இவ்விணைப்புகளின் குழுக்கள் மரபணுக்கூறுகளாக (genes) விளங்குகின்றன. ஒவ்வொரு டி.என்.ஏ மூலக் கூறும் ஒரு இலட்சம் முதல் 10 இலட்சம் அணுக்களால் கட்டமைக்கப்படுகிறது. ஒரு முழு மனிதத் தொகுதியில் 46 குரோமோசாம்கள் உள்ளன: இதில் 23 தாயின் முட்டை உயிரணுவிலிருந்தும் மற்ற 23 தந்தையின் விந்தணுவிலிருந்தும் வந்தவை. ஒரு உயிரணு பிரியும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு குரோமோசோமிலுமுள்ள டி.என்.ஏவின் ஒவ்வொரு துண்டும் நகல் எடுக்கப்படுகிறது.

டி.என்.ஏ மூலக்கூறு மிக நீண்டது, மென்மையானது; ஸ்பேகெட்டி (spaghetti) என்னும் இத்தாலியத் தின்பண்ட நூலிழையின் 5 மைல் நீள அளவுக்கு இது அமையும்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

மனித உடலியல்


மனித உடலின் முக்கிய உறுப்பு மண்டலங்கள் என்னென்ன?


உடலின் பல்வேறு உறுப்புகளைக் கண்டறிந்தே மனித உடற்கூறியல் ஆய்வுசெய்யப்படுகிறது. உடலுறுப்புகளின் அமைப்புகள் மற்றும் அவற்றின் செயற்பாடுகள்ஆகியவற்றின் அடிப்படையில் அவை பல்வேறு குழுக்களாக அல்லது மண்டலங்களாகப்
பிரிக்கப்படுகின்றன. அக்குழுக்கள் பின்வருமாறு:

எலும்பு (skeletal) மண்டலம்,

தசை (muscular) மண்டலம்,

நரம்பு (nervous) மண்டலம்,

நாளமில்லா சுரப்பி (endocrine) மண்டலம்,

மூச்சு (respiratory) மண்டலம்,

இதயக் குருதி நாள (cardiovascular) மண்டலம்,

நிணநீர் நாள (lymph vascular) மண்டலம்,

செரிமான (digestive) மண்டலம்,

கழிவு (excretory) மண்டலம் மற்றும்

இனப்பெருக்க (reproductive) மண்டலம்

உடலின் மிகப் பெரிய பகுதியாக விளங்குவது தோல் பகுதியாகும். வளர்ந்த ஒருமனித உடலில் சுமார் 2 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள தோல் பகுதி, உடலைநீரிலிலிருந்தும் வெப்பத்திலிருந்தும் பாதுகாக்கும் போர்வையாக விளங்குகிறது. மிகவும்சிக்கல் நிறைந்த, பெருமளவு செயல்களைச் செய்யும் உறுப்பாக மனித உடலில்விளங்குவது ஈரல் (liver) ஆகும்.

ஒருவரின் சிதைந்து போன உடலுறுப்பை நீக்கி, வேறொரு கொடையாளியிடமிருந்துபெறப்பட்ட நல்ல உறுப்பை அறுவை சிகிச்சை மூலம் மாற்றிப் பொருத்துவதற்கு உறுப்புமாற்று அறுவை சிகிச்சை (transplantation surgery) எனப் பெயர். தற்போது இதயம், ஈரல்,சிறுநீரகங்கள், நுரையீரல்கள் ஆகிய உறுப்புகளை அறுவை சிகிச்சை வாயிலாக மாற்றிப்பொருத்த முடியும்.

ஓர் உயிரணுவின் (cell) உள்ளே என்ன இருக்கிறது?

தாவரம், விலங்கு, மனிதர் ஆகிய அனைத்து உயிரினங்களும் உயிரணுக்களால் ஆனவையே. இவ்வுயிரணுக்களில் சைடோபிளாசம் (cytoplasm) எனப்படும் பாகு (jelly) போன்ற நீர்மப் பொருளே நிரம்பியுள்ளது.

ஒவ்வொரு உயிரணுவும் மிக மெல்லிய சவ்வு போன்ற பொருளால், நீர் நிரம்பிய பலூன் (balloon) போன்று ஒன்றிணைக்கப்படுகிறது. உயிரணுவின் உள்ளே சைட்டோபிளாசம், குறிப்பிட்ட நுண் உறுப்புப் பகுதிகளில் (organells) அடங்கியிருக்கும். உயிரணுக்களின் செயல்பாட்டை இவையே கட்டுப்படுத்துகின்றன; எடுத்துக்காட்டாக புரதங்களின் (proteins) உற்பத்தியைக் குறிப்பிடலாம்.

மைட்டோகாண்டிரியா (mitochondria) எனப்படும் மிகச் சிறு நுண்ணுறுப்புகள் உயிர்வளியைப் பயன்படுத்தி உனவுப் பொருளைத் துகள்களாக மாற்றி, உயிரணுக்களுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகின்றன.

அணு உட்கருப் (nucleus) பகுதியில் நூலிழை போன்ற 46 குரோமோசாம்கள் அடங்கியுள்ளன; இவையே உயிரணுவின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துபவை.

குடல்களின் சுவர்ப் பகுதியில் உள்ள உயிரணுக்கள் சில நாட்கள் மட்டுமே உயிர் வாழ்பவை; ஆனால் மூளைப் பகுதியின் நரம்பிலுள்ள உயிரணுக்கள் நம் வாழ்நாள் முழுதும் உயிர் வாழ்பவை.

உயிரணுக்கள் வாழ்வதற்கு உணவு, உயிர்வளி, நீர்மச் சூழல் ஆகியன இன்றியமையாதன. இரத்தம் மற்றும் பிற உடல் திரவங்கள் உணவையும் நீர்ப்பொருளையும் அளிக்கின்றன. கழிவுப் பொருட்களையும் இவையே வெளியேற்றுகின்றன. உயிரணுவுக்குத் தேவைப்படும் உணவு மற்றும் வேதிப்பொருட்களையும் இரத்தமே அளிக்கிறது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Monday, March 22, 2010

My Documents - Folder Location -ஐ வேறு Drive க்கு மாற்றுவது எப்படி?

வழக்கமாக My Documents


C:\Documents and Settings\உங்கள் User Name\My Documents என்று இருக்கும்.

ஒருவேளை உங்கள் System Drive -ல் இடபற்றாகுறை, மற்றும் இதர காரணங்களுக்காக நீங்கள் My Documents ஐ வேறு டிரைவிற்கு மாற்ற வேண்டுமென்றால்,

1. தேவையான டிரைவில் "My Documents" Folder -ஐ Create செய்து கொள்ளவும்.

2. My Computer -ஐ திறந்து கொண்டு, அதில் இடது புறமுள்ள Common Task pane-ல் உள்ள "My Documents" -ஐ ரைட் கிளிக் செய்து Properties -க்கு செல்லவும். (வலதுபுறமுள்ள "My Documents Folder"-ல் அல்ல.)

3. இதில் Target எனும் இடத்தில் நீங்கள் புதியதாக உருவாக்கிய "My Documents"- Folder-ன் சரியான பாதையை டைப் செய்து Apply -ல் கிளிக் செய்யவும்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

எந்த ஒரு ஃபைலையும் மற்றொரு ஃபைலுக்குள் மறைத்து வைக்க ஒரு வித்தை!...

Hide any file inside any other file.

உங்கள் ஹார்ட் டிஸ்க் NTFS ஆக இருந்தால் இது சாத்தியமாகும். FAT32 வில் இந்த வித்தை பலிக்காது.

உதாரணமாக Solitaire ஃபைலை (Sol.exe) ஒரு டெக்ஸ்ட் (Text) ஃபைலுக்குள் மறைத்து வைக்க என்ன செய்ய வேண்டும்...

நீங்கள் 'C' ட்ரைவை உபயோகிப்பதாக வைத்துக்கொள்வோம்.

1. 'TEST' என்ற போல்டரை உருவாக்கவும்.(C:\TEST) எந்த பெயர் வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம்.

2. அந்த போல்டருக்குள் ஒரு டெக்ஸ்ட் ஃபைலை (Text Document) உருவாக்கி, அதனுள் ஏதாவது டைப் செய்து விட்டு அந்த ஃபைலுக்கு container.txt என பெயரிட்டு சேமித்து கொள்ளவும். (இந்த டெக்ஸ்ட் ஃபைலுக்குள் தான் Sol.exe ஃபைலை மறைத்து வைக்க போகிறோம்)

3. \windows\system32 என்ற போல்டரிலிருந்து sol.exe ஃபைலை C:\TEST க்கு காப்பி செய்யவும்.

4. இப்பொழுது Command Window ஐ திறந்து கொண்டு, C:\TEST போல்டருக்கு சென்று “Type Sol.exe > container.txt:sol.exe” இதை டைப் செய்து என்டர் அடிக்கவும்.

5. திரையில் எந்த மாற்றமும் தெரியாது. அந்த டெக்ஸ்ட் ஃபைலின் அளவு + .Sol.exe ஃபைலின் அளவு 50 கேபி ஆகியிருக்கும். அந்த டெக்ஸ்ட் ஃபைலை திறந்து பார்த்தால், நீங்கள் முன்பு டைப் செய்திருந்த அனைத்தும் அப்படியே இருக்கும்.

6. நீங்கள் C:\TEST. போல்டரில் காப்பி செய்த Sol.exe ஃபைலை அழித்துவிடவும்.

7. இப்பொழுது மறைத்து வைத்த ஃபைலை எப்படி திறப்பது? கீழ்கண்ட கட்டளையை கொடுக்கவும்.

“start c:\test\container.txt:sol.exe”

அவ்ளோதான்.

இப்படி எந்த வகை ஃபைலையும், இன்னொரு எந்த வகை ஃபைலுக்குள்ளும் மறைத்து வைக்கலாம். (உங்கள் ஹார்ட் டிஸ்க் NTFS ஆக இருக்கும் பட்சத்தில்..)

குறிப்பு:- நீங்கள் மறைத்து வைக்கும் ஃபைலின் பெயரை மறந்துவிட்டால் சிரமம். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

விண்டோஸ் 7 ல் சிஸ்டம் ரீஸ்டோர் பாயிண்ட் உருவாக்குவது எப்படி?


சிஸ்டம் ரீஸ்டோர் பாயிண்ட் பல சமயங்களில் நமக்கு பேருதவியாக இருக்கும். புதிதாக ஏதாவது மென்பொருள் பதிந்த பின்னரோ அல்லது புதிதாக ஏதாவது வன்பொருள் நிறுவிய பின்னரோ கணினியின் இயங்குதளம் பாதிக்கப்பட்டு சரிவர இயங்காமல் போய்விடுகிறது.


இது போன்ற சமயங்களில் நாம் ஏற்கனவே ஏதாவது ஒரு தேதியில் சிஸ்டம் ரீஸ்டோர் பாயிண்ட் உருவாக்கியிருந்தால், அந்த குறிப்பிட்ட தேதிக்கு கணினியை ரீஸ்டோர் செய்ய முடிவதால், நமது முக்கியமான டேட்டாக்களை இழக்காமலிருக்க முடியும். இந்த வசதி Windows Me பதிப்பிலிருந்து மைக்ரோ சாப்டினால் தரப்பட்டுள்ளது. (Windows 98 -ல் டாஸ் ப்ராம்ப்ட்டில் Scanreg / Restore என்ற கட்டளை கொடுத்து பயன் படுத்தலாம்.)

எப்பொழுதுமே புதிதாக எதாவது மென்பொருள் அல்லது வன்பொருள் நிறுவுவதற்கு முன்னதாக ஒரு சிஸ்டம் ரீஸ்டோர் பாயிண்ட் உருவாக்குவது பாதுகாப்பானதாகும்.

இந்த வசதி விண்டோஸ் எக்ஸ்பியில் All Programs -> Accessories -> System Tools -> System Restore சென்றால் கிடைக்கும்.

விண்டோஸ் ஏழில் இந்த வசதி சற்று வித்தியாசமாக தரப்பட்டுள்ளது.

My Computer ல் வலது கிளிக் செய்து Properties செல்லவும். இனி வரும் டயலாக் பாக்ஸில் இடதுபுற பேனில் System Protection என்பதை கிளிக் செய்யவும்.

இனி திறக்கும் System Properties திரையில் System Protection என்ற டேபில் 'Create' என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.

அடுத்து உங்களுக்கு இந்த ரீஸ்டோர் பாயிண்ட் எப்பொழுது எந்த நிகழ்விற்கு முன் உருவாக்கினோம் என்பதை நினைவூட்டும் வகையில் ஒரு விபரத்தை டைப் செய்து Create கிளிக் செய்யுங்கள்.

அவ்வளவுதான்!
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

கண்ணுக்கு தெரியாத (Invisible Folder) ஃபோல்டரை உருவாக்குவது எப்படி?

கண்ணுக்கு தெரியாத (Invisible Folder) ஃபோல்டரை (Hidden - அல்ல) உருவாக்குவது எப்படி?


1. எந்த ஃபோல்டரை கண்ணுக்கு புலப்படாமல் (Invisible Folder) செய்ய வேண்டுமோ, அந்த ஃபோல்டரை ரைட் கிளிக் (Right Click) செய்து 'Rename' கிளிக் செய்யவும்.


2. புதுப்பெயரை இடும் பொழுது Alt கீயை அழுத்திக் கொண்டு '0160' ( Numeric Pad-ல்) டைப் செய்து என்டர் அடிக்கவும்.

(இப்பொழுது ஃபோல்டரின் பெயர் மறைந்துவிடும்.)

3. ஃபோல்டரில் ரைட் கிளிக் செய்து Properties -ல் Customize tab கிளிக் செய்து Change Icon கிளிக் செய்யவும். இதில் நிறைய ஐகான்கள் (Icons) இருக்கும் Scroll செய்து பார்த்தால் அவற்றிற்கு இடையில் வெற்று (Blank) ஐகான்களும் இருக்கும். அதில் ஒன்றை தேர்ந்தெடுக்கவும். Apply மற்றும் Ok.

கண்ணுக்கு தெரியாத போல்டர் ரெடி! பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

ஜி-மெயில் : எக்ஸ்ட்ரா டிரைவ்

நம் கம்ப்யூட்டரில் மட்டுமின்றி வேறு ஒரு இடத்தில் நம் பைல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவே நாம் விரும்புவோம். சிடிக்களிலும், மேக்னடிக் டேப்களிலும் பைல்களைப் பதிந்து பாதுகாக்கலாம்.


ஆனால் இவற்றை நாம் செல்லும் இடத்திற்கு எடுத்துச் செல்வது கடினம். மேலும் இவையும் நிலையாகப் பல ஆண்டுகளுக்கு இவற்றைக் கொண்டிருக்குமா என்பதுவும் ஐயமே.

ஆன்லைனில் பல தளங்கள், மாதக்கட்டணம் பெற்றுக் கொண்டு நம் பைல்களை ஸ்டோர் செய்து வைக்கின்றன. இதற்கென பல நிலைகளில் கட்டணங்கள் அடங்கிய திட்டங்களை வழங்குகின்றன. ஆனால் இவற்றின் நம்பகத்தன்மையும் முழுமையானதாக இல்லை.

இந்த வகையில் இலவசமாக சேவை செய்திடும் சிலதளங்கள், பாதுகாப்பிற்கு அனுப்பப்படும் பைல்களின் அளவு, தன்மை, தளங்களுக்கான இணைப்பு ஆகியவை குறித்து பல வரையறைகளைக் கொண்டுள்ளன. எனவே இவற்றை எந்த அளவிற்கு நம்பிக்கையுடன் நம் பைல்களை அப்லோட் செய்து வைக்க முடியும் என்பது கேள்விக் குறியே. ஆனால் நம் அருகிலேயே ஓர் அருமையான ஆன்லைன் சேவிங் தளம் உள்ளது என்பதனை நாம் எண்ணிப் பார்ப்பதில்லை. அதுதான் ஜிமெயில். உலகில் இயங்கும் இமெயில் சேவைகளில் தலையானதும் மிகச் சிறந்ததுவும் ஜிமெயில் என அனைவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஜிமெயில் ஸ்பாம் மெயில்களைத் தடுப்பதில் சிறப்பாகச் செயல்படுகிறது. நம் செயல்பாடுகளுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது. 7 ஜிபிக்கும் மேலாக நம் மெயில்கள் மற்றும் இணைப்புகளுக்கு இடம் தருகிறது. இந்த அளவும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுள்ளது. நமக்கு ஜிமெயில் தரும் இட வசதியில், மிகக் குறைந்த அளவே நாம் பயன்படுத்துகிறோம். ஜிமெயில் தளம் சென்றவுடன் இந்த செய்தி நமக்குக் காட்டப்படும். எனவே இந்த பயன்படுத்தாத ஜிமெயில் டிரைவ் இடத்தை ஏன் நாம் நம் பைல்களைப் பாதுகாத்து வைக்கும் இடமாகப் பயன்படுத்தக் கூடாது.

இந்த வகையில் ஜிமெயில் டிரைவ் என்ற ஒரு வசதியை கூகுள் தருகிறது. ஜிமெயில் டிரைவ் நம் கம்ப்யூட்டரில் உள்ள மை கம்ப்யூட்டரில் ஒரு சிஸ்டம் பார்ட்டிஷனை ஏற்படுத்துகிறது. இதனை நம் விண்டோஸ் எக்ஸ்புளோரருடன் இணைக்கிறது. ஆன்லைனில் கூகுள் தரும் டிரைவ் இடத்தை, நம் கம்ப்யூட்டரில் உள்ள டிரைவ் போலப் பயன்படுத்தும் வசதியினைத் தருகிறது. நம் கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்ட ஒரு டிரைவ் போல இந்த ஆன்லைன் ஜிமெயில் டிரைவ் இயங்குகிறது. எனவே பைல்களை உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள டிரைவிலிருந்து ட்ராக் அண்ட் ட்ராப் வசதி மூலம் இந்த ஆன்லைன் டிரைவில் இழுத்துவிட்டு காப்பி செய்திடலாம். இதிலும் சில வரையறைகள் உள்ளன. பைல் ஒன்று 25 எம்பி என்ற அளவிலே தான் இருக்க வேண்டும். இந்த வரையறையைச் சமாளிக்க ஜிமெயில் டிரைவ், பைலைப் பிரித்து அடுக்கி வைத்துக் கொள்கிறது.

புதிய போல்டர்களை உருவாக்குவது, பைல்களை காப்பி, பேஸ்ட் மற்றும் டெலீட் செயல்பாடுகளுக்கு உள்ளாக்குவது போன்றவற்றை ஜிமெயில் டிரைவில் மேற்கொண்டாலும், இதற்கென தனியாக ஒரு டிரைவ் எழுத்து தரப்படுவதில்லை.

மேலும் பைல்களின் பெயர்கள் 40 கேரக்டர்களுக்கு மேல் இருக்கக் கூடாது. உங்களிடம் ஜிமெயில் அக்கவுண்ட் இருந்தால், இந்த ஜிமெயில் டிரைவினை எப்படிப் பெறுவது என்று பார்ப்போம்.

முதலில் உள்ள முகவரிக்கு செல்லவும். இந்த இணையப் பக்கத்தில் கீழாக ஸ்குரோல் செய்து செல்லவும். இதில் இரண்டு டவுண்லோட் லிங்க் தரப்பட்டுள்ளது. இதில் ஏதாவது ஒன்றில் கிளிக் செய்து அதனை எளிதாக இயக்கும் வகையில் டெஸ்க் டாப்பில் வைத்துக் கொள்ளவும். அடுத்து gmailfs115.zip இந்த பைலை அன்ஸிப் செய்திடவும். அனைத்து பைல்களையும் எக்ஸ்ட்ராக்ட் செய்து பெற்ற பின்னர் gmailfs115 என்ற போல்டருக்குச் செலல்வும். பின் இதில் உள்ள செட் அப் பைல் மீது டபுள் கிளிக் செய்திடவும். இப்போது பைல் திறக்கும் செயலுக்கான எச்சரிகை வந்தால், அதனைக் கண்டு கொள்ளாமல் கீதண கட்டளை கொடுக்கவும்.

இந்த புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரில் முழுமையாக இன்ஸ்டால் ஆகும். உங்கள் கம்ப்யூட்டரில் சில மாற்றங்களை ஏற்படுத்தும். பின் உங்கள் கம்ப்யூட்டரில் மை கம்ப்யூட்டரைத் திறந்து பார்த்தால், அங்கே Other என்ற வகையில் புதியதாக டிரைவ் ஒன்று இருப்பதனைப் பார்க்கலாம். பின் GMail Drive என்பதில் டபுள் கிளிக் செய்திடவும். இங்கே லாக் இன் விண்டோ திறக்கப்படும். இங்கு கிடைக்கும் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களுக்கான பீல்டுகளில் உங்கள் ஜிமெயில் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டினைத் தரவும்.இதில் உள்ள ஆட்டோ லாக் இன் டிக் செய்து வைத்தால், அடுத்த முறை இன்டர்நெட் இணைப்பு கிடைத்தவுடன், நீங்கள் தானாகவே லாக் இன் செய்துவிடுவீர்கள்.

லாக் இன் தகவல்களைத் தந்த பின் ஓகே கிளிக் செய்திடும் முன் சில ஆப்ஷன்களை நீங்கள் படித்தறியலாம். More பட்டனை அழுத்தினால் இவை கிடைக்கும். இதில் 'Preserve Filenames' என்ற ஆப்ஷனைக் கட்டாயம் தேர்ந்தெடுக்கவும்.

அடுத்து மிக முக்கியமானதான Use Secure HTTP என்ற ஆப்ஷனைக் கட்டாயம் தேர்ந்தெடுக்கவும். இது உங்கள் கம்ப்யூட்டருக்கும் ஜிமெயிலுக்கும் உள்ள இணைப்பிற்குப் பாதுகாப்பளிக்கும்.

இறுதியாக Use Draft Folder என்ற ஆப்ஷனையும் தேர்ந்தெடுக்கவும். இது உங்கள் பைல்களை ட்ராப்ட் போல்டருக்கு அனுப்பும். உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸுக்குத் தொல்லை கொடுக்காது.

முக்கியமான அனைத்து செட்டிங்ஸ் மேற்கொண்ட பின், ஜிமெயிலுக்கு இணைப்பை ஏற்படுத்த ஓகே கிளிக் செய்திடவும். அடுத்து ஜிமெயில் டிரைவ் காட்டப்படும். இதில் பைல்களை இழுத்துச் சென்று விடலாம். பைல்கள் அனைத்தும் ஜிமெயில் ட்ராப்ட் போல்டரில் விழும். பைல் மாற்ற வேகம் உங்கள் இன்டர்நெட் இணைப்பைப் பொறுத்து இருக்கும்.
"This menu is visible to the users when right-clicking the GMail Drive icon in Windows Explorer"

"The users have to type down their GMail user account and password in order to use the GMail Drive"
"After clicking the More button one can activate a secure HTTP connection or the username and the password for a proxy"

"The users will see this progress bar while posting a file to the GMail Drive"

"The users will easily see in Windows Explorer the content of the GMail Drive"



தரவிறக்கச் சுட்டி பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Sunday, March 21, 2010

கனவு காணுவதற்கு அடிப்படைக் காரணங்கள் என்ன?

நமது பயமோ அல்லது மனஅழுத்தமோ நாம் காணும் கனவுகளுக்கு அடிப்படையான காரணங்களாக அமைகின்றன. இதைத் தொடர்ச்சி அனுமானம் என்று சொல்கிறார்கள். பரீட்சைக்குப் போகும்போது 'ஐயோ, எப்படி எழுதப்போகிறோமோ!' என்று பயத்துடன் இருந்தால் உங்கள் கனவுகள் அது சம்பந்தமானதாக இருக்கும்.


எதைப்பற்றி அதிகம் நினைக்கிறோமோ அவை கனவுகளில் வருகின்றன. நீங்கள் கிரிக்கெட் விளையாடுபவராக அல்லது ரசிகராக இருந்தால் உங்கள் கனவுகள் அதைச் சுற்றியே பெரும்பாலும் அமையும். யாரிடமாவது நாம் மிக அன்பு செலுத்தினாலோ அல்லது யாரையாவது காதலித்தாலோ அவர்களைப் பற்றிய கனவு காண்பீர்கள்.

அடுத்து எழும் கேள்வி, போதை மருந்துகள் கனவுகளைத் தூண்டுமா என்பது.

'தூண்டும்' என்று சொல்ல முடியாவிட்டாலும் அவைகள் கனவுகளைப் பயமானதாகவும், விரிவாகவும் ஆக்குகின்றன என்று சொல்லலாம். எல்.டோபா என்ற மருந்தைப் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுத்தபோது இந்த உண்மை அறியப்பட்டது.

ஆனாலும், போதை மருந்துகளுக்கும் கனவுகளுக்கும் உள்ள தொடர்பு பற்றிய முழுமையான ஆய்வு இதுவரை நடைபெறவில்லை.

யாரெல்லாம் கனவு காண்கிறார்கள?

மிருகங்கள் கனவு காணுமா என்ற கேள்விக்கு நிச்சயமான பதில் இல்லை. ஆய்வில் சொல்ல முடிவதெல்லாம் மிருகங்களுக்கும் விரைவுக் கண்ணசைவுகள் இருக்கின்றன என்பதுதான். இந்தக் கண்ணசைவு நேரங்களில் நமக்குப் பெரும்பாலும் கனவுகள் வருகின்றன.

குட்டி போட்டுப் பால் கொடுக்கும் இனம் எல்லாவற்றிற்கும் இந்த விரைவுக் கண்ணசைவுகள் உண்டு. ஆனால் இதை மட்டும் வைத்து அவைகள் கனவு காண்கின்றன என்று உறுதிப்படுத்த முடியாது. மனிதர்களுக்கும் இந்த மாதிரியான நேரங்களில் கனவு வர வேண்டும் என்பது கட்டாயமில்லை அல்லவா!

அடுத்து எழும் வினா, கண்பார்வையில்லாதவர்கள் கனவு காண்பார்களா? அவர்கள் கனவுகள் எப்படியிருக்கும்?

நாம் காணும் கனவுகள் நேரில் நடப்பதைப்போல அவ்வளவு தெளிவாகவும், விரிவாகவும் இருப்பதுதான் இந்த சந்தேகத்திற்குக் காரணம். நிச்சயம் கண்பார்வை இல்லாதவர்களும் கனவு காண்கிறார்கள்.

குழந்தைகள் காணும் கனவுகள் எப்படிப்பட்டதாக இருக்கும்?

தூக்கப் பரிசோதனை செய்தபோது அவர்கள் அடிக்கடி கனவு காண்பதில்லை மற்றும் அவர்கள் காணும் கனவுகள் சுவாரசியமற்றதாக, உப்புச் சப்பில்லாதவையாகவே அமைகின்றன என அறிய முடிந்தது.

ஐந்தாவது படிக்கும் வயது வரும்போது சிறுவர்கள் நன்றாகவே கனவு காண்கிறார்கள்.

கனவுகள் ஏன் நினைவில் நிற்பதில்லை?

நாம் தூக்க நிலையில் கனவு காண்பதால் அந்தக் கனவிற்கு அப்போது அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இது கிட்டத்தட்டப் பழக்கமானவர்கள் காரை டிரைவ் செய்து கொண்டுபோவது போலத்தான். மனம் எங்கேயோ இருந்தாலும் அனிச்சையாக செயல் நடந்து கொண்டிருக்கும். அதனால்தான் நாம் நமது கனவுகளில் 95 லிருந்து 99 சதவிகிதம் வரை நினைவில் வைக்க முடிவதில்லை. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

கனவுகள் Dreams

கனவுகள் என்றால் என்ன?


                                           What Is The Dreams ?
1. நாம் அசந்திருக்கும்போது நமது மூளை மிகக்குறைந்த அளவில் வேலை செய்யும் நேரங்களில் படக்காட்சிகள் போல நிகழ்வதுதான் கனவுகள் என்பது. அந்த நேரங்களில் வேறெந்த வெளித் தூண்டுதல்களும் மனதிற்குள் நுழைவதில்லை.

ஆமாம். நாம் தூங்கும்போது மட்டும் கனவு காண்பதில்லை. நம்மை மறந்து ஓய்வு நிலையில் விழிப்புடன் இருக்கும்போதுகூட ஏதோ காட்சிகள் நம் முன் விரிகின்றன. திடீரென ஏதோ கனவு கண்டோமே என்று திடுக்கிட்டு விழிக்கிறோம்.

இந்த மாதிரி ஓய்வாக இருக்கும்போது கனவு காண்பவர்கள் விழிப்புடன்தான் இருக்கிறார்கள் என்று கூறுகின்றன ஆராய்ச்சிகள். இந்த நிகழ்வுகள் தூங்கும்போதுதான் கனவுகள் வரும் என்ற தவறான முடிவைத் தகர்க்கின்றன.

2. கனவு என்பது நாம் அனுபவிப்பது, உணர்வது. கனவில் நடப்பவைகள் அப்போது உண்மையாகவே நிகழ்வதைப் போலத் தோன்றுகின்றன. அப்போது நாம் நமது புலன்களைப் பயன்படுத்துகிறோம், பார்க்கிறோம், கேட்கிறோம்.

கனவுகளில் எப்போதுமே நாம் தான் கதாநாயகனாக இருப்போம். நமக்கு அல்லது நம்மைச் சுற்றிய நிகழ்வுகளைத் தான் பெரும்பாலும் கனவு காண்கிறோம். பல சமயங்களில் நமது உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாது திடுக்கிட்டு விழிக்கிறோம். அருகிலிருப்பவர்கள், 'என்னாயிற்று உனக்கு?'என்று கேட்குமளவுக்கு உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறோம்

3. கனவு என்பது நம் அடுத்தநாள் நினைவில் நிற்பது. எனவே இதனைக் கனவு அனுபவத்தின் 'நினைவுகள்' என்றுகூடச் சொல்லலாம்.

4. கனவு என்பது நாம் வாய் மூலமாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ மற்றவர்களுக்குக் கொடுக்கும் ஒரு ரிப்போர்ட். கனவில் நாம் கண்ட நிகழ்ச்சியை வேறு யாரும் பார்க்கவும் முடியாது, கனவு காணும்போது நாம் நேரடியாகக் கனவை மற்றவர்களுக்கு விளக்கவும் முடியாது.

கனவைப்பற்றிய இந்த நான்கு செய்திகளையும் இணைத்து சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், "கனவு என்பது நாம் சாதாரணமாக அயர்ந்து இருக்கும் நிலையில் நம் மனக்கண்முன் நடைபெறும் நிகழ்ச்சிகளின் ஒரு நினைவு" என்று சொல்லலாம்.

இன்னும் விளங்கும்படியாகச் சொல்ல வேண்டுமென்றால் நாம் நம்மையும் சூழ்நிலையையும் மறந்திருக்கும் நிலையில் நமது மனதுக்குள் தானாக அரங்கேறும் சின்ன நாடகங்கள் என்றும் கூறலாம். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

கணனியை எப்போதும் மேம்படுத்திய நிலையில் வைத்திருக்க உதவும் குறிப்புக்கள்

கணனியின் இயங்கு தளம் டிவைஸ் டிரைவர்ஸ் மற்றும் மென்பொருட்களை எப்போதும் மேன்படுத்திய நிலையில் வைத்திருப்பது முக்கியமாகும். ஹக்கெர்களிடமிருந்து பாதுகாப்பாக வைத்திருக்கவும் இது உதவும். ஆனால் எங்கிருந்து ஆரம்பிப்பது எதைச் செய்வது என்று விழிப்பவர்களுக்கான சில டிப்ஸ்கள்.


1. அப்டேட் ஐ ஆரம்பிக்க முதல் ஒருமுறை கணனியை சுத்தப்படுத்தல் நல்லது அப்டேட் இன் பின்னர் வேகப்படுத்த இது உதவும். தேவையற்ற மென்பொருட்களை முறையாக நீக்கிவிடுதல் இணைய உலாவிகளின் ஹிஸ்டரி ஐ நீக்கிவிடுதல் ஒருமுறை டிஸ்க் கிளீனப் செய்தல் போன்றவை.

2. விண்டோஸ் தானியங்கி மேன்படுத்தல் மென்பொருளை (விண்டோஸ் அப்டேட்) எப்போதும் இயங்கு நிலையில் வைத்திருப்பது முக்கியம். இதை சரிபார்க்க Start - Control panel - Automatic update எனும் ஒழுங்கில் சென்று கிளிக் செய்ததும் திறக்கும் விண்டோவில் Automatic என்பது தெரிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். (விண்டோஸ் பதிவு செய்யப்படாத பதிப்பை ஹக்கிங் செய்து நிறுவி இருப்பவர்களுக்கு இந்த நடைமுறை பொருந்தாது)

3. கணனியிலுள்ள ஏனைய மென்பொருட்கள் மேன்படுத்த FileHippo வின் அப்டேட் செக்கர் எனும் இலவச மென்பொருளை பயன்படுத்தலாம். இந்த மென்பொருள் உங்கள் சிஸ்டத்தை தானாக நிறுவப்பட்டுள்ள அனைத்து மென்பொருட்களையும் ஸ்கானிங் செய்து அவற்றின் புதிய பதிப்பின் தகவல்களை தரும்.

4.மேன்படுத்த விரும்பாத மென்பொருட்களை தவிர்க்க ஆப்ஸனும் உண்டு. படத்தில் உள்ளது போன்று மேன்படுத்த வேண்டிவற்றின் விபரங்கள் காட்டப்படும். தேவையானதை தேர்வு செய்து அப்டேட் ஐ நிறுவிக்கொள்ளலாம். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Saturday, March 20, 2010

விலங்குகளை விட மோசமான முறையில் கொல்லப்படும் ஆதிவாசிகள்(ஆடு, மாடுகளை கூட இப்படிக் கொல்வார்களா எனத் தெரியாது.வீடியோ இணைப்பு)

இப்படி, கொடூரமாக துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்படுவது தங்களது உரிமைகளை கேட்டு ஊர்வலமாக வந்த குற்றத்திற்காக மட்டுமே. காவல்துறை, சட்டம் ஒழுங்கு போன்றவைகள் எல்லாம் ஆதிவாசிகளை காக்க இல்லை என்பதை மற்றும் ஒருமுறை வீடியோ ஆதரத்துடன் நிறுபித்துள்ளது இந்திய தேசம்.

ஆடு, மாடுகளை கூட இப்படிக் கொல்வார்களா எனத் தெரியாது.

ஒடுக்கப்பட்ட மக்கள், ஆதிவாசிகள், பழங்குடியினர் ஏன் போராளிக்குழுக்களின் பின் செல்கின்றனர் என அப்பாவியாக வினவும் "காமன் மேன்" கள் தவறாமல் காண வேண்டிய காணொளி.

இது போன்ற ஏராளமான கொடூரங்(ன்)களை கேள்விப் பட்டிருப்பினும் வீடியோ இணைப்புடன் காணும் பொழுது நெஞ்சம் பதறுகின்றது. இன்னமும், காந்தி தேசம், அகிம்சை, மக்களாட்சி என புழுகித் திரிபவர்கள் திரும்பவும் ஒருமுறை காணொளி இணைப்பினை காணவும்...

வீடியோ இணைப்பு பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Thursday, March 18, 2010

நோக்கியா மொபைல் ட்ரிக்ஸ்

By pressing x + # (where x is any number) will show the telephone number stored in that particular location.


For example, pressing 125 in idle mode and then pressing "#" later, will show the 125th number stored when the number are entered in your phone-book.

*3370#
Activate Enhanced Full Rate Codec (EFR) - Your phone uses the best sound quality but talk time is reduced my approx. 5%
#3370#
Deactivate Enhanced Full Rate Codec (EFR) OR *3370# ( Favourite )
*#4720#
Activate Half Rate Codec - Your phone uses a lower quality sound but you should gain approx 30% more Talk Time.
*#4720#
Deactivate Half Rate Codec.
*#0000#
Displays your phones software version,
1st Line : Software Version,
2nd Line : Software Release Date,
3rd Line : Compression Type. ( Favourite )
*#9999#
Phones software version if *#0000# does not work.
*#06#
For checking the International Mobile Equipment Identity (IMEI Number). ( Favourite )
#pw+1234567890+1#
Provider Lock Status. (use the "*" button to obtain the "p,w" and "+" symbols).
#pw+1234567890+2#
Network Lock Status. (use the "*" button to obtain the "p,w" and "+" symbols).
#pw+1234567890+3#
Country Lock Status. (use the "*" button to obtain the "p,w" and "+" symbols)
#pw+1234567890+4#
SIM Card Lock Status. (use the "*" button to obtain the "p,w"and "+" symbols).
*#147#
(vodafone) this lets you know who called you last.
*#1471#
Last call (Only vodofone).
*#21#
Allows you to check the number that "All Calls" are diverted to
*#2640#
Displays security code in use.
*#30#
Lets you see the private number.
*#43#
Allows you to check the "Call Waiting" status of your phone.
*#61#
Allows you to check the number that "On No Reply" calls are diverted to.
*#62#
Allows you to check the number that "Divert If Unreachable (no service)" calls are diverted to.
*#67#
Allows you to check the number that "On Busy Calls" are diverted to.
*#67705646#
Removes operator logo on 3310 & 3330
*#73#
Reset phone timers and game scores.
*#746025625#
Displays the SIM Clock status, if your phone supports this power saving feature"SIM Clock Stop Allowed", it means you will get the best standby time possible.
*#7760#
Manufactures code.
*#7780#
Restore factory settings.
*#8110#
Software version for the nokia 8110.
*#92702689#
Displays -
1.Serial Number,
2.Date Made,
3.Purchase Date,
4.Date of last repair (0000 for no repairs),
5.Transfer User Data.
To exit this mode you need to switch your phone off then on again. ( Favourite )
*#94870345123456789#
Deactivate the PWM-Mem.
**21*number#
Turn on "All Calls" diverting to the phone number entered.
**61*number#
Turn on "No Reply" diverting to the phone number entered.
**67*number#
Turn on "On Busy" diverting to the phone number entered. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Tally 4.5 அல்லது பழைய DOS விளையாட்டுகளை Windows XP/Vista வில் நிறுவ

என்னதான் விண்டோஸ் XP, Vista, 7 என புதிது புதிதாக இயங்குதளங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உபயோகத்தில் இருந்தாலும், DOS தான் நமக்கு புடிச்ச OS என MS-DOS ஐ விரும்புபவர்கள் ஏராளம். ஆனால் DOS இயங்குதளத்தில் வடிவமைக்கப்பட்ட மென்பொருட்கள், விளையாட்டுகள் மற்றும் கருவிகள் பெரும்பாலும் விண்டோஸ் XP /Vista வில் இயங்குவதில்லை.


இது போன்ற பயன்பாடுகள், விளையாட்டுகள் மற்றும் கருவிகளை தற்பொழுது பயன்படுத்தப்பட்டு வருகின்ற Windows Xp, Vista & Windows 7 ஆகிய இயங்குதளங்களில் எப்படி இயங்க வைக்கலாம்?

சமீபத்தில் Tally 4.5 ஐ பழைய DOS இயங்குதள கணினியில் பயன்படுத்தி வரும் நண்பர் ஒருவர், Tally 4.5 ஐ Windows XP யில் பயன்படுத்த முடியுமா எனக் கேட்டிருந்தார். Tally 4.5 இல் உள்ள டேட்டாக்களை Tally 7.2 விற்கு மாற்ற கருவி இருப்பதை சுட்டி காட்டி. அவருடைய இந்த பிரச்னையை எப்படி தீர்ப்பது என பார்க்கலாம்.

இதற்காக D-Fend Reloaded 0.9.1 என்ற மென்பொருளை பயன்படுத்தப் போகிறோம். (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது) இதனை தரவிறக்கி உங்கள் கணினியில் பதிந்து கொள்ளுங்கள்.
இந்த Wizard தொடருங்கள்.



Accept all settings க்ளிக் செய்து கொள்ளுங்கள். Wizard முடிந்த பிறகு D-Fend Reloaded ஐ திறந்து கொள்ளுங்கள்.

இந்த விண்டோவில் ADD எனும் டூல்பார் பட்டனை க்ளிக் செய்து ADD DOSBOX profile மெனுவை க்ளிக் செய்யுங்கள். அடுத்து வரும் திரையில்,

Profile பெயர் மற்றும் Program file லொகேஷனை browse செய்து கொடுங்கள். தேவைப்பட்டால் ஐகானை தேர்வு செய்து கொண்டு OK பொத்தானை க்ளிக் செய்யுங்கள்.

இனி வலது புற பேனில் Tally 4.5 பட்டியலிடப் பட்டிருப்பதை பார்க்கலாம். இதற்கு மேல் Tally 4.5 ஐ இயக்க D-Fend Reloaded ஐ திறந்து கொண்டு Tally 4.5 ஐ க்ளிக் செய்தால் போதுமானது.

இதோ Windows XP யில் Tally 4.5


இதே முறையில் மற்ற பழைய டாஸ் விளையாட்டுகளையும் பயன்படுத்த முடியும். ஆனால் இதனுடைய நிலைத்தன்மை எப்படி இருக்கும் என்பது தொடர்ந்து உபயோகித்து பார்த்தால் மட்டுமே அறிந்து கொள்ள இயலும்.


D-Fend Reloaded 0.9.1 installer பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Spitzer Spies Earliest Black Holes


The Spitzer Space Telescope has found what appear to be two of the earliest and most primitive supermassive black holes known. "We have found what are likely first-generation quasars, born in a dust-free medium and at the earliest stages of evolution," said Linhua Jiang of the University of Arizona, Tucson, lead author of a paper published this week in Nature.


A quasar is a compact region in the center of a massive galaxy surrounding the central supermassive black hole.

As shown by the image we posted earlier today from the Planck mission, our galaxy – and the Universe – is littered with dust. But scientists believe the very early universe didn't have any dust — which tells them that the most primitive quasars should also be dust-free. But nobody had seen any "clean" quasars — until now.

Spitzer has identified two — the smallest on record — about 13 billion light-years away from Earth. The quasars, called J0005-0006 and J0303-0019, were first unveiled in visible light using data from the Sloan Digital Sky Survey. That discovery team, which included Jiang, was led by Xiaohui Fan, a coauthor of the recent paper. NASA's Chandra X-ray Observatory had also observed X-rays from one of the objects. X-rays, ultraviolet and optical light stream out from quasars as the gas surrounding them is swallowed.

"Quasars emit an enormous amount of light, making them detectable literally at the edge of the observable universe," said Fan.

When Jiang and his colleagues set out to observe J0005-0006 and J0303-0019 with Spitzer between 2006 and 2009, their targets didn't stand out much from the usual quasar bunch. Spitzer measured infrared light from the objects along with 19 others, all belonging to a class of the most distant quasars known. Each quasar is anchored by a supermassive black hole weighing more than 100 million suns.


Of the 21 quasars, J0005-0006 and J0303-0019 lacked characteristic signatures of hot dust, the Spitzer data showed. Spitzer's infrared sight makes the space telescope ideally suited to detect the warm glow of dust that has been heated by feeding black holes.

"We think these early black holes are forming around the time when the dust was first forming in the universe, less than one billion years after the Big Bang," said Fan. "The primordial universe did not contain any molecules that could coagulate to form dust. The elements necessary for this process were produced and pumped into the universe later by stars."

The astronomers also observed that the amount of hot dust in a quasar goes up with the mass of its black hole. As a black hole grows, dust has more time to materialize around it. The black holes at the cores of J0005-0006 and J0303-0019 have the smallest measured masses known in the early universe, indicating they are particularly young, and at a stage when dust has not yet formed around them.

The Spitzer observations were made before the telescope ran out of its liquid coolant in May 2009, beginning its "warm" mission. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

மிகச்சிறந்த இலவச ஆன்டி-வைரஸ்

பணம் கொடுத்து 'ஆன்டி- வைரஸ்' வாங்க முடியாத வாடிக்கையாளர்கள் தங்களுடைய மென்பொருட்களை பயன்படுத்தியாவது பார்க்கட்டுமே என்ற எண்ணத்தில் வழங்கப்படும் 'ஆன்டி-வைரஸ்' தான் "இலவச ஆன்டி-வைரஸ்".


இந்தவகை மென்பொருட்களில் பணம் கொடுத்து வாங்கும் ஆன்டி-வைரஸில் இருப்பதை விட கொஞ்சம் குறைவான பாதுகாப்பு வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கும்,சில வாடிக்கையாளர்கள் தங்கள் கணினுக்கு முழுமையான பாதுகாப்பு வேண்டும் என்ற எண்ணத்தில் பணம் கொடுத்தே ஆன்டி-வைரஸை வாங்கிக்கொள்வார்கள்.

ஆனால் என்னதான் பணம் கொடுத்து நாம் கணினியில் ஆன்டி-வைரஸ் போட்டுக் கொண்டாலும் புதுபுது வைரஸ்களின் அட்டகாசம் இன்றைக்கும் தாங்க முடியாததாகத்தான் உள்ளது.

குறிப்பாக நாம் இணையதளங்களில் உலவும்போது கண்டிப்பாக வைரைஸ்களின் தொல்லைகள் அதிகமாக இருக்கும்.அவை நாம் இணையதளங்களிருந்து ஏதாவது தரவிறக்கம் செய்யும்போது வைரஸும் அதன் கூடவே சேர்ந்து வந்து நம் கணினியில் உட்கார்ந்து கொள்ளும்.

இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் (வந்து கொஞ்ச நாள் ஆன) இலவச Microsoft Security Essentials என்ற மென்பொருள்.

பல கணினி உபயோகிப்பாளர்கள் பயன்படுத்தி பார்த்த வரையில் மிக அதிகபட்ச பாதுகாப்பை வழங்கும் ஆன்டிவைரசாக Microsoft Security Essentials மென்பொருள் செயல்படுகிறது.குறிப்பாக இணையதளங்களில் நாம் உலவும்போது இந்த ஆண்டிவைரஸ் அதிகபட்ச இணைய பாதுகாப்பை நமக்கு தருகிறது.இந்த இலவச ஆன்டிவைரஸ்' நாம் பணம் கொடுத்து வாங்கும் ஆன்டிவைரஸ் தரும் அதிகபட்ச பாதுகாப்பை ஒத்த பாதுகாப்பை நமது கணினுக்கும் வழங்குகிறது.

அது மட்டுமல்லாமல் அதுவே தானாக அடிக்கடி தன்னை புதுப்பித்துக் கொள்வதால் நமது கணினிக்கு நல்ல பாதுகாப்பும் கிடைக்கிறது,இந்த ஆன்டிவைரஸை பயன்படுத்திப் பார்த்த பலபேர் இதன் செயல்திறனை வெகுவாக பாராட்டுகிறார்கள்.

தரவிறக்கச் சுட்டி பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்!

செல்போன்கள் இன்றைய அத்தியாவசியங்களில் தவிர்க்கவே முடியாத அளவுக்கு மாறிவிட்டது. ஆனால் இதே செல்போனால் மனிதனுக்கு வரும் ஆபத்துகள், உடல் நலக் கோளாறுகள் குறித்து நாளும் ஒரு செய்தி வெளியாகி புளியைக் கரைத்து வருகிறது.


அமெரிக்காவின் சுற்றுச்சூழல் அமைப்பு (ஈடபிள்யூஜி) சமீபத்தில் ஒரு செல்போன் பட்டியலை வெளியிட்டது.

இதில் ஆப்பிள், எல்ஜி, சாம்சங், எச்டிசி, மோட்டாரோலா, பிளாக்பெரி உள்ளிட்ட 10 முன்னணி நிறுவன பிராண்ட் செல்போன்களைப் பயன்படுத்துவதால் அணுக்கதிர் வீச்சு பாதிக்கப்பட்டு மூளைப் புற்று நோய், இதயம் பாதிப்பு உள்ளிட்ட கொடிய நோய்கள் உண்டாக வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு செல்போனும் வெளிப்படுத்தும் கதிர்வீச்சின் அளவை வைத்து இந்த லிஸ்ட் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ரேடியேஷன் அளவை Specific Absorption Rate எனப்படும் SAR அலகைக் கொண்டு கணக்கிடுகிறார்கள்.

அந்த லிஸ்ட்:

மோட்டாரோலா ட்ராய்ட் (Motorola Droid)

அதிகபட்ச ரேடியேஷன் – 1.50 W/kg

காதில் வைக்கும் போது SAR அளவு – 1.49 W/kg

உடலின் பாகத்தில் வைக்கும் போது – 1.50 W/kg

ஆப்பிள் ஐபோன் 3 ஜி – ஜிஎஸ்எம் 850 (Apple iPhone 3G S)

அதிகபட்ச ரேடியேஷன் – 1.19 W/kg

காதில் வைக்கும் போது SAR அளவு – 0.63 W/kg

உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.52 W/kg

எச்டிசி நெக்ஸஸ் ஒன் (HTC Nexus One)

அதிகபட்ச ரேடியேஷன் – 1.39 W/kg

காதில் வைக்கும் போது SAR அளவு – 0.87 W/kg

உடலின் பாகத்தில் வைக்கும் போது – 1.39 W/kg

பிளாக்பெர்ரி – போல்ட் 9700 (Blackberry Bold 9700)

அதிகபட்ச ரேடியேஷன் – 1.55 W/kg

காதில் வைக்கும் போது SAR அளவு – 1.55 W/kg

உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.77 W/kg

சாம்சங் இன்ஸ்டிங்க்ட் எச்டி (Samsung Instinct HD)

அதிகபட்ச ரேடியேஷன் – 1.16 W/kg

காதில் வைக்கும் போது SAR அளவு – 1.16 W/kg

உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.71 W/kg

மோட்டாரோலா க்ளிக் (Motorola Cliq)

அதிகபட்ச ரேடியேஷன் – 1.10 W/kg

காதில் வைக்கும் போது SAR அளவு – 0.69 W/kg

உடலின் பாகத்தில் வைக்கும் போது – 1.10 W/kg

மோட்டாரோலா ப்ரட் (Motorola Brute i680)

அதிகபட்ச ரேடியேஷன் – 0.86 W/kg

காதில் வைக்கும் போது SAR அளவு – 0.59 W/kg

உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.86 W/kg

பேண்டக் இம்பாக்ட் (Pantech Impact)

அதிகபட்ச ரேடியேஷன் – 0.92 W/kg

காதில் வைக்கும் போது SAR அளவு – 0.72 W/kg

உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.92W/kg

எல்ஜி சாக்லேட் டச் (LG Chocolate Touch)

அதிகபட்ச ரேடியேஷன் – 0.46 W/kg

காதில் வைக்கும் போது SAR அளவு – 1.46 W/kg

உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.79W/kg

சாம்ஸங் மிதிக் (Samsung Mythic)

அதிகபட்ச ரேடியேஷன் – 1.08 W/kg

காதில் வைக்கும் போது SAR அளவு – 0.67 W/kg

உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.64W/kg

ஜிஎஸ் எம் 1900 மாடல் இது.

மோட்டாரோலா மற்றும் சாம்சங் குழும தயாரிப்புகளே இந்த பட்டியலில் அதிகமாக இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே செல்போன் வாங்கும் வாங்கும் முன் அல்லது பயன்படுத்தும் முன் இந்த கதிர்வீச்சு சமாச்சாரத்தையும் கவனத்தில் கொள்ளவும்! பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Wednesday, March 17, 2010

மடிக்கணினி வாங்கும் முன்

தற்போது அனைத்துக் கணினிகளின் விலை மாபெரும் வீழ்ச்சியடைந்துள்ளது. உயர்தரமான அதிக வசதிகள், பயன்பாடுகள் கொண்ட கணினியைக்கூட இன்று மிகக் குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

வழக்கமான நிலைக்கணினியை போலவே மடிக்கணினி இன்று மிகப்பரவலாகப் பயன்பட்டு வருகிறது. ஏறத்தாழ இரண்டின் விலையும் ஒரே அளவில் தான் இருக்கின்றன். அப்படியிருக்கையில் இன்னும் ஏன் நிலைக்கணினி? புறப்படுங்கள் மடிக்கணினிக்கு...


மடிக்கணினி வாங்க தயாராகிவிட்டீர்கள் அல்லவா? இதோ மடிக்கணினி வாங்குவதற்கு முன்பான சில யோசனைகள்...

மடிக்கணினி வாங்கும் முன் முக்கியமாக கவனிக்க வேண்டியவை :

1எடை மற்றும் அளவு
2இணைப்புத்திறன்
3மின்கலங்கள்
4பாதுகாப்புத் தன்மை
5மேம்பாட்டு வசதி
6உத்தரவாதம் மற்றும் ஆதரவு

எடை மற்றும் அளவு



மடிக்கணினி வாங்குவதற்கான கருத்துருக்களில் மிக முக்கியமானது எடை மற்றும் அளவு. பல்வேறு இடங்களுக்கு தொடர்ந்து பயணித்து வருபவர் மெல்லிய மற்றும் எடை குறைவான மடிக்கணினிகளையே வாங்க வேண்டும். அதிக எடை கொண்டவற்றை எடுத்துச்செலவதும் பயன்படுத்துவதும் மிகக் கடினம். நிலைக்கணினிகளை இடம்பெயர்க்கும் மடிக்கணினி சிறந்ததுதான் என்றாலும் அதனை பயண நேரங்களில் பயன்படுத்துவது சற்று கடினமே.

இணைப்புத்திறன்

இணையம் மற்றும் அலுவலக வலைப்பின்னலில் இணைக்கும் இணைப்புத்திறனை அவசியம் பெற்றிருக்க வேண்டும். ஒரே நேரத்தில் பல இணைப்புகளை ஏற்கும் திறனை பெற்றிருப்பதோடு சில சமயங்களில் பங்கீட்டு இணைய வலைப்பின்னல் வசிதியை வழங்கவிருப்பதாகவும் இருக்க வேண்டும். Wi-Fi இணைப்புத்திறன் பெற்றிருப்பின் சாலச் சிறந்தது.

மின்கலங்கள்




நடமாடும் அலுவலக பயனீட்டாளர்களுக்கு அதிக வாழ்நாள் தன்மை கொண்ட மின்கலங்களே பொருத்தமானதாகும். அதுமட்டுமில்லாது மற்றும் ஒரு மின்கலத்தை இணைக்கும் வசிதியும் இருக்க வேண்டும். மின்சார வசதி இல்லாத இடங்களிலும், பயணம் மேற்கொள்ளும் போதும் இது மிக உதவியாக இருக்கும். மேலும் மின்கலங்களை புத்துயிரூட்ட (RECHARGE ) ஆகும் நேரத்தையும் கருத்தில் கொண்டு வாங்க வேண்டும்.


பாதுகாப்புத் தன்மை

இன்று அதிகம் களவுபோவது செல்லிடைப்பேசிகளை அடுத்து மடிக்கணினிகளே. ஆதலால் பாதுகாப்புத் தன்மைப் பற்றி அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது. மேம்பட்ட பாதுகாப்புத் தன்மை கொண்ட மடிக்கணினி நம்முடைய பணத்தையும் அச்ச உணர்வையும் பெருமளவு குறைக்கும்.

மேம்பாட்டு வசதி

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நம்முடைய மடிக்கணினியையும் மேம்படுத்தும் வசதி மிகவும் அவசியமாகிறது. நினைவகம் (RAM MEMORY ), கொள்ளளவகம் (HARDDISK ), செயலகம் (PROCESSOR) போன்றவற்றை மேம்படுத்துவது மிக எளிமையானதாக இருக்க வேண்டும். உள்ளிணைந்த (On Board ) வசதி மேம்பாட்டு வசதியினை தடுத்து விடுவதால் அத்தகையவற்றை தவிர்ப்பது நல்லது. மேலும் அளவில் மிகச்சிறியவற்றை தேர்ந்தெடுப்பதினால், அதனை பயன்படுத்துவது கடினமானதாகவும் காயமேற்படுத்துவதாகும் இருப்பதினால் சற்று பெரிய மடிக்கணினிகளையே வாங்குவது நல்லது.

உத்தரவாதம் மற்றும் ஆதரவு

24x7 ஆதரவு அளிக்கும் நிறுவனத்திடம் மட்டிமே மடிக்கணினிகளை வாங்க வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு குறையாத உத்தரவாதம் மற்றும் ஆதரவு இருக்க வேண்டும்.பிரச்சனைக்குரிய அனைத்து பாகங்களையும் சரி செய்தோ அல்லது மாற்று பாகங்களை அளித்தோ ஏற்றிட வேண்டுமென்பதை வாங்கும்போதே உறுதி செய்துகொள்ள வேண்டும். பிரச்சனைகளுக்குத் தீர்வு உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலும் கிடைப்பின் மிகு நன்மையளிக்கும்.

நல்ல மடிக்கணினி வாங்கிட என் வாழ்த்துக்கள்!!!


  பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Monday, March 15, 2010

விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க


புதிதாக ஒரு இயங்கு தளம் அல்லது ஒரு இயங்கு தளத்தின் புதிய பதிப்பு வெளிவரும் போது சில மென்பொருள்களை அவற்றில் இயக்க முடிவதில்லை.


உதாரணமாக விண்டோஸ் எக்ஸ்பீ பதிப்பு வெளி வந்த போது அதில் எக்ஸ்பீயிற்கு முன்னைய பதிப்புகளில் இயங்கிய ப்ரோக்ரம்களை இயக்க முடியாமல் போனது. அதன் பிறகு வெளிவந்த விஸ்டா பதிப்பிலும் அதே நிலைமைதான். இவ்வாறே இப்போது வெளி வந்துள்ள விண்டோஸ் செவனிலும் அதே நிலைமை தொடர்கிறது.

ஒரு இயங்கு தளத்தை மேம்படுத்தி அதன் புதிய பதிப்பை வெளியிடும்போது பழைய எப்லிகேசன்களும் இயங்கத் தக்கதாக அதற்கு ஒத்திசையும் வண்ணம் உருவாக்கவே முயற்சிக்கப்படும். இதனை பேக்வர்ட் கம்படிபிலிட்டி (Backward Compatibility) எனப்படும் இருந்தாலும் சில எப்லிகேசன்களை இவ்வாறு இயக்க முடிவதில்லை எனினும் இந்த சிக்கலுக்கு தீர்வாக மைக்ட்ரோஸொப்ட் நிறுவனம் தனது புதிய இயங்கு தளங்களில் பழைய ப்ரோக்ரம்களையும் இயக்கக் கூடிய வசதியை எக்ஸ்பீ, விஸ்டா மற்றும் விண்டொஸ் செவன் பதிப்புகளிலும் வழங்கி வருகிறது.

உதாரணமாக விண்டோஸ் எக்ஸ்பீயில் முறையாக இயங்கிய ஒரு ப்ரோக்ரம் விஸ்டாவிற்கு மாறிய பிறகு இயங்க மறுத்தால் அந்த குறிப்பிட்ட ப்ரோக்ரமுக்கு மட்டும் தேவையான செட்டிங்கை மாற்றி இயங்க வைக்கும் வசதி உள்ளது. அதற்குப் பின்வரும் வழி முறையைக் கையாளுங்கள்.

இயக்க விரும்பும் ப்ரோக்ரமுக்குரிய .exe பைலின் மேல் ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவிலிருந்து Properties தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் டயலொக் பொக்ஸில் compatibility டேபில் க்ளிக் செய்யுங்கள். அடுத்து Run this program in compatibility mode for என்பதைத் தெரிவு செய்யுங்கள். பின்னர் விண்டோஸின் உரிய பதிப்பைத் தெரிவு செய்து விட்டு ஓகே சொல்லுங்கள்.

அப்படியும் அது இயங்காது போனால் மேலும் சில தெரிவுகளை மேற்கொள்ளலாம். உதாரணமாக அதே டயலொக் பொக்ஸில் Run this program as an administrator என்பதைத் தெரிவு செய்து இயக்கிப் பாருங்கள்.

ப்ரோக்ரம்ஸ் லிஸ்டில் உள்ள Program Compatibility Wizard மூலமாகவும் ஒரு ப்ரோக்ரம் இயங்கு தளத்துடன் ஒத்திசைகிறதா என்பதைப் பரீட்சித்துப் பார்க்கலாம்.

சரி, இந்த .exe பைலை எங்கே போய்த் தேடுவது? எங்கும் போக வேண்டாம் . (மை) கம்பியூட்டர் விண்டோவில் C ட்ரைவில் ப்ரோக்ரம் பைல்ஸ் போல்டரைத் திறந்து பாருங்கள். நீங்கள் இயக்க விரும்பும் ப்ரோக்ரமுக் குரிய போல்டரும் அங்கு காணப்படும். அந்த போல்டரில் .exe பைலைக் காணலாம் பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம்

உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம் நமது உடலின் வெப்பநிலை கூடினாலோ, குறைந்தாலோ உடல் நோய்வாய்ப்படும். நமது இயக்கத்துக்கு ஏற்ப வெப்ப ஆற்றல் வெளிப்படும். மாறுபடவும் செய்யும்.


இப்படி உடல் இயக்கத்தால் ஏற்படும் அதிகப்படியான வெப்பத்தை சேகரித்து அந்த ஆற்றலைக் கொண்டு எலக்ட்ரானிக் கருவிகளை இயக்க ஒரு கருவி தயாரித்துள்ளது எம்.ஐ.டி. பல்கலைக்கழகம்.

நடப்பது, ஓடுவது என எந்த வேலையில் ஈடுபட்டாலும் குறிப்பிட்ட அளவில் ஆற்றல் செலவாகிறது. அதில் ஒரு பகுதி வெப்ப ஆற்றலாக வெளியேறுகிறது. இந்த வெப்ப ஆற்றலையும், சுற்றுப்புறத்தில் உள்ள காற்றில் உள்ள ஆற்றலையும் கிரகித்து மின்ஆற்றலாக சேமிக்கிறது இந்தக் கருவி. இதைக் கொண்டு 2 வாட் மின்சாரத்துக்கும் குறைவான பயன்பாட்டில் இயங்கும் எலக்ட்ரானிக் கருவிகளை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

செல்போன் உள்ளிட்ட பல்வேறு எலக்ட்ரானிக் கருவிகள் மிகக் குறைந்த மின் ஆற்றலில் இயங்கக்கூடியவை. எனவே இந்த கருவியில் சேமிக்கும் மின் ஆற்றலைக் கொண்டு இனி செல்போன்களை சார்ஜ் செய்ய முடியும். சார்ஜரை தேடிக் கொண்டோ, தூக்கிக் கொண்டோ திரிய வேண்டாம். அனைவரும் பயன்படுத்தலாம் இந்த லாபமான கருவியை. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Friday, March 12, 2010

கடுமையான பூகம்பத்தால் சிலி 10 அடி தூரம் நகர்வு

கடந்த மாதம் (பிப்ரவரி) சிலி நாட்டில் மேற்கு கடற்கரையில் 8.8 ரிக்டர் அளவில் கடுமையான பூகம்பம் ஏற்பட்டது. இதில் 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் படு காயம் அடைந்தனர்.பூகம்பத்தினால் வீடுகளை இழந்த மக்கள் அங்கிருந்து வெளியேறி பிரேசில், போர் டலேசா போன்ற நாடுகளில் குடியேறி வருகின்றனர்.



இந்த நிலையில் பூகம்பத்தால் சிலியில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து 4 பல் கலைக்கழகங்கள், பல நிறுவனங்கள், புவியியல் வல்லுனர்கள் ஆய்வுகள் மேற் கொண்டனர்.


இதில், சிலி நாட்டில் உள்ள நகரங்கள் மேற்கு நோக்கி 10 அடி தூரம் நகர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது. தலைநகரான சாண்டியாகோ 11 அங்குலம் அளவுக்கு விலகி நகர்ந்துள்ளது.


வல்பாறைசோ, மென்டோஷா, அர்ஜென்டினா போன்ற நகரங்களும் வழக்கத்தை விட நகர்ந்துள்ளன. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

டைனோசர்களை மொத்தமாக அழித்த ராட்சத எரி நட்சத்திரம்!

ராட்சத விலங்கான டைனோசர்களை ஒட்டுமொத்தமாக அழித்தது பூமியைத் தாக்கிய ராட்சத எரிநட்சத்திரம் தான் என்று விஞ்ஞானிகள் குழு ஒன்று தெரிவித்துள்ளது.பூமியில் முன்பு வலம் வந்து கொண்டிருந்த ராட்சத பாலூட்டிகளான டைனோசர்கள் எப்படி மறைந்தன என்பது தொடர்ந்து மர்மமாகவே இருந்து வருகிறது.



பூமியின் தென் பகுதியில் (இப்போது இந்தியா உள்ள பகுதி) மிகப் பெரிய அளவிலான எரிமலைகள் வெடித்துச் சிதறியதால் டைனோசர்கள் அழி்ந்ததாக ஒரு கருத்தும், எரி நட்சத்திரம் தாக்கியதால்தான் டைனோசர்கள் இறந்ததாக இன்னொரு கருத்தையும் விஞ்ஞானிகள் கொண்டுள்ளனர்.


எரிமலை வெடித்ததாக கூறும் விஞ்ஞானிகள், கிட்டத்தட்ட 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு அவை தொடர்ந்து வெடித்துச் சிதறிக் கொண்டிருந்ததாக தெரிவித்தனர்.


இந்த சர்ச்சைக்கு தற்போது 41 விஞ்ஞானிகளைக் கொண்ட குழு ஒன்று தீர்வைக் கூறியுள்ளது. ஐரோப்பா, அமெரிக்கா, மெக்சிகோ, கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இந்த விஞ்ஞானிகள் குழு சயின்ஸ் இதழில் தனது ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது.


கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இந்தக் குழுவினர் ஆய்வுகள் நடத்தி வந்தனர். தற்போது ஆய்வு முடிவை இக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.


அதன்படி, கிட்டத்தட்ட 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியைத் தாக்கியது ஒரு ராட்சத எரிநட்சத்திரம். இதன் காரணமாக பூமியில் இருந்து வந்த பாதி அளவிலான உயிரினங்கள் கூண்டோடு அழிந்தன. அதில் டைனோசர்களும் ஒன்று.


பூமியைத் தாக்கிய அந்த எரிநட்சத்திரத்தின் அளவு 15 கிலோமீட்டர் அகலம் உடையதாகும். தற்போது மெக்சிகோ உள்ள பகுதி அன்று சிக்கக்ஸிலப் என்று அறியப்பட்டது. அந்த இடத்தில்தான் இந்த எரிகல் வந்து மோதியது.


இதன் காரணமாக பூமிப் பந்தின் பெரும் பகுதியில் பெரும் தீப்பிழம்புகள் தோன்றின. 10 ரிக்டருக்கும் மேலான நிலநடுக்கங்கள் பூமியை சிதறடித்தன. கண்டங்களில் பெருமளவில் நிலமாற்றங்கள் ஏற்பட்டன. இதனால் ராட்சத சுனாமிகள் தோன்றி பூமிப் பரப்பில் பாதியை அழித்து விட்டது.


ஹீரோஷிமாவைத் தாக்கிய அணு குண்டின் சக்தியை விட பல கோடி மடங்கு அதிக அளவிலான வேகத்துடனும், சக்தியுடனும் அந்த ராட்சத எரிநட்சத்திரம் பூமியைத் தாக்கியுள்ளது. இதனால்தான் பூமியே சிதறுண்டு போயுள்ளது.


இந்த தாக்குதலில் பூமியில் இருந்து வந்த உயிரினங்களில் பாதிக்கும் மேலானவை பூண்டோடு அழிந்து போய் விட்டன. அவற்றில் டைனோசர்களும் ஒன்று.


எரிநட்சத்திரம் தாக்கியதால் ஏற்பட்ட பெரும் பிரளயத்தால் பூமியின் பெரும்பாலான பகுதிகளை இருள் சூழ்ந்தது. இதனால் ஏற்பட்ட புதிய சூழலைத் தாக்குப் பிடிக்க முடியாமல்தான் டைனோசர்கள் அழிந்து போயுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த ஆய்வுக் குழுவில் இடம் பெற்றிருந்தவர்களில் ஒருவரான ஜெர்மனி விஞ்ஞானி பீட்டர் ஷூல்ட் கூறுகையில், 65.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் அழிந்ததாக நமக்கு தடயங்கள் உள்ளன. இதை வைத்துப் பார்க்கும்போது அப்போது பூமியைத் தாக்கிய எரிநட்சத்திரம்தான் இதற்குக் காரணம் எனத் தெரிய வருகிறது.


மேலும் இந்தியாவில் ஏற்பட்ட பெரும் எரிமலை வெடிப்புகளால் டைனோசர்கள் இறந்ததாக கூற முடியாத அளவுக்கு எங்களது ஆய்வு முடிவுகள் உள்ளன.


டைனோசர்கள் அழிந்த காலத்தில் ஏற்பட்ட பிரளயத்திற்குப் பின்னர்தான் மனிதர்கள் சக்தி வாய்ந்த உயிரினங்களாக பூமியில் உருவெடுத்தனர். எனவே இந்தப் பிரளயம், மனித குல வளர்ச்சிக்கு அடிக்கல்லாக அமைந்தது என்று கூடச் சொல்லலாம் என்றார். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Saturday, March 6, 2010

சிலி நிலநடுக்கத்தால் பூமியின் மையக்கோட்டில் பாதிப்பு


சிலி நாட்டில் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி ஏற்பட்ட 8.8 ரிக்டர் நிலநடுக்கம் காரணமாக பூமியின் மையக்கோட்டில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு நாளின் மொத்த கால அவகாசத்தில் 1.26 மைக்ரோ செகண்ட் குறையும் என நாசா விஞ்ஞானிகளின் முதற்கட்ட கணிப்புகள் தெரிவிக்கின்றன.


இதுதொடர்பாக சி.என்.என் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியில்,
பயங்கர நிலநடுக்கம் ஏற்படும் போது பூமியில் உள்ள பாறைகள் இடம்பெயரும். இதன் காரணமாக பூமி சுழலும் வேகம் மாறுவதால், ஒருநாளின் கால அவகாசமும் மாறுபடும்.

நாசாவில் பணியாற்றும் புவியியல் விஞ்ஞானி ரிச்சர்ட் க்ராஸ் என்பவர் கணினியின் உதவியுடன் நடத்திய ஆய்வில், கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி சிலியில் ஏற்பட்ட 8.8. ரிக்டர் நிலநடுக்கம் காரணமாக பூமியின் மையக்கோடு 8 செ.மீ. சாய்ந்துள்ளதையும், இதன் காரணமாக நாளின் காலஅவகாசம் 1.26 மைக்ரோ செகண்ட் அளவு குறைந்துள்ளதையும் கண்டறிந்துள்ளார்.

கடந்த 2004இல் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட 9.1 ரிக்டர் நிலநடுக்கத்தால் பூமியின் சுழலும் வேகம் அதிகரித்தது. அதனால் நாளின் காலஅவகாசம் 6.8 மைக்ரோ செகண்ட் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு: ஒரு நொடியில் மில்லியனில் ஒரு பகுதியே மைக்ரோ செகண்ட் எனப்படும். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Wednesday, March 3, 2010

கோழிக்குஞ்சுகளின் விழித்திரை மனிதனை விட விசேஷமானது

கோழிகளின் விழித்திரை மனிதனின் விழித்திரையை விட வண்ணங்களை பகுத்துணரும் சக்தி மிக்கது, என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

வாஷிங்டன் பல்கலைக் கழக விஞ்ஞானி ஜோசப் கார்போ இது குறித்து கூறியதாவது,

மனிதனின் விழித்திரையை விட பறவைகளின் விழித்திரை சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.

இதனால் தான் வானத்தில் வட்டமிடும் கழுகு கீழே கிடக்கும் சிறிய சுண்டெலியை கூட கூர்ந்து பார்த்து வேட்டையாடுகிறது. பாலூட்டிகள், பறவைகள் எல்லாம் ஒரே மூதாதையரை கொண்டவை. டைனோசர் உள்ளிட்ட ராட்சத விலங்குகள் கூட இரவில் வேட்டையாடும் குணம் கொண்டவையாக இருந்தவை. கும்மிருட்டிலும் கூட சுற்றுப் புறங்களை தெளிவாக பார்க்கும் திறன் வாய்ந்தவையாக இருந்தன. நாளடைவில் இந்த பழக்கம் பகலில் வேட்டையாட துவங்கியதும் மங்க துவங்கி விட்டது. ஆனால், இந்த விசேஷ குணத்தை பறவைகள் இன்று வரை கட்டி காக்கின்றன.

குறிப்பாக, கோழிகள் அதை விட கோழி குஞ்சுகளுக்கு வண்ணங்களை பிரித்தறியும் வகையில் விழித்திரை பிரமாதமாக உள்ளது. மனிதனை பொறுத்தவரை சிகப்பு, நீலம், பச்சை வண்ணங்களை கூர்ந்து அறிய முடிகிறது. ஆனால், கோழிக்குஞ்சுகளின் விழித்திரை புறஊதா கதிர்களை கூட பகுத்துணரும் தன்மை வாய்ந்தவை.இதனால், தான் கோழிகள் தனது இணையை அதன் இறகுகளை வைத்து அடையாளம் காண்கின்றன.

இதேபோன்ற குணம் மற்ற பறவைகளுக்கும் உள்ளன. இதன் காரணமாக தான் சில பறவைகள் வண்ண மிகு பழங்களை சுவைப்பதில் ஆர்வம் காட்டுகின்றன.மனிதர்களுக்கு 200 வகையான பாரம்பரிய குறைபாடுகளின் காரணமாக குருட்டு தன்மை ஏற்படுகிறது. கோழிக்குஞ்சுகளின் விழித்திரையிலிருந்து ஸ்டெம் செல்லை பிரித்தெடுத்து மனிதர்களுக்கு பொருத்துவதன் மூலம் குருட்டு தன்மை மற்றும் நிறக்குருடு குறைப் பாட்டை போக்கமுடியும், என நம்புகிறோம். இது தொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. இவ்வாறு ஜோசப் கார்போ கூறினார். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF