Thursday, September 30, 2010

Hertz இந்த ஹெர்ட்ஸ் எதனைக் குறிக்கிறது?


கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் பற்றிப் பேசுகையில் நாம் அடிக்கடி ''மெகா ஹெர்ட்ஸ்'' மற்றும் ''கிகா ஹெர்ட்ஸ்'' என்று பேசுகிறோம், படிக்கிறோம். இந்த ஹெர்ட்ஸ் எதனைக் குறிக்கிறது? ஏன் இந்த பெயர் வந்தது

ஹெர்ட்ஸ் என்பதனை சுருக்கமாக Hz என்று எழுதுகிறோம். இது Hertz என்பதன் சுருக்கம். இது ஜெர்மன் பிசிக்ஸ் விஞ்ஞானி Heinrich Rudolf என்பவரின் குடும்ப பெயர். ரேடியோ மற்றும் எலக்ட்ரிக்கல் அலைவரிசையினை மெட்ரிக் முறையில் அளந்திட இந்த பெயர் வைக்கப்பட்டது. ஒரு ஹெர்ட்ஸ் என்பது ஒரு விநாடியில் ஏற்படும் ஒரு சுற்று அல்லது அசைவு (ரேடியோ அலைவரிசையில்) கம்ப்யூட்டரைப் பொறுத்த வரை இது மானிட்டருடன் அதிகம் சம்பந்தப்படுத்தி பேசப்படுகிறது.

சி.ஆர்.டி. மானிட்டர் (டிவி பெட்டி போல இருப்பது) அதன் ஸ்கிரீன் இமேஜை தொடர்ந்து காட்டாமல் விட்டு விட்டுத் தான் காட்டுகிறது. ஆனால் அதனை நாம் நம் கண்களால் பார்த்தால் கண் கெட்டுப் போகும். எனவே தான் விநாடியில் பலமுறை இது விட்டு விட்டுக் காட்டப்படுகையில் இடைவெளி தெரிவதில்லை. எடுத்துக் காட்டாக 85 Hz என்பதில் விநாடி நேரத்தில் 85 முறை இமேஜ் பின் வாங்கப்பட்டு மீண்டும் காட்டப்படுகிறது. அத்தனை முறை காட்டப்படுவதனாலேயே இமேஜ் அப்படியே நிலையாக நிற்பது போல நாம் உணர்கிறோம்.

மெஹா ஹெர்ட்ஸ் Mehahertz (MHz) ஒரு மெஹா ஹெர்ட்ஸ் என்பது பத்து லட்சம் சுற்றுகளாகும். அதாவது ஒரு விநாடியில் பத்து லட்சம் சுற்றுகள் ஏற்படுகின்றன. இது எப்படி ஏற்படுகிறது என்பதனை படமாகவோ அல்லது வேறு வழியாகவோ விளக்குவது கஷ்டம். கம்ப்யூட்டர் பிராசசரைப் பொறுத்தவரை மெஹா ஹெர்ட்ஸ் என்பது மிகவும் சாதாரணம். ஒரு கம்ப்யூட்டர் பிராசசர் உள்ளாக அமைந்த ஒரு கடிகார துடிப்பினை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. ஒவ்வொரு துடிப்பிற்கும் ஒரு செயல் மேற்கொள்ளப்படுகிறது. எத்தனை முறை இந்த துடிப்பு ஏற்படுகிறது என்பதுதான் பிராசசரின் கிளாக் ஸ்பீட் என அழைக்கப்படுகிறது. இந்த வேகம் மெஹா ஹெர்ட்ஸ் என்பதில் அளக்கப் படுகிறது.

முதலில் வந்த பெர்சனல் கம்ப்யூட்டர்கள் 4.77 மெஹா ஹெர்ட்ஸ் வேகம் கொண்ட பிராசசர்களைக் கொண்டிருந்தன. அதாவது விநாடிக்கு ஏறத்தாழ 48 லட்சம் கிளாக் துடிப்புகள். தற்போதைய பெண்டியம் 4 கம்ப்யூட்டர் பிராசசர் 3.6 கிகாஹெர்ட்ஸ் வேகம் கொண்டுள்ளன. (ஒரு கிகா ஹெர்ட்ஸ் என்பது 1000 மெஹா ஹெர்ட்ஸ்.) எனவே கணக்குப் போட்டு இந்த அதிவேக துடிப்புகளை உணர்ந்து கொள்க. கிஹா ஹெர்ட்ஸ் Gigahertz (GHz) கம்ப்யூட்டர் உலகில் இது கம்ப்யூட்டர் பிராசசரின் வேகத்தைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு கிகா ஹெர்ட்ஸ் என்பது 1000 மெஹா ஹெர்ட்ஸ். தற்போது வரும் கம்ப்யூட்டர் பிராசசர் வேகம் இந்த அளவிலேயே சொல்லப்படுகிறது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

விமானம் எப்படி பறக்கிறது

இன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான்
பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு முறை பறக்கும்போதும் வரும்.

சரி எப்படித்தான் அந்த மிகப்பெரிய ஊர்த்தி காற்றில் பறக்கிறது?!
இந்த விஷயத்திற்கு போவதுற்கு முன் சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.
ஒரு பறக்கும் பொருளில் நாலு விதமான விசைகள் உண்டு.
ஒரு பறக்கும் பொருளை, மேல்நோக்கி இழுக்கும் லிப்ட் (Lift)
முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட் - Thrust
கீழ்நோக்கி இழுக்கும் எடை - Weight
பின்னோக்கி இழுக்கும் டிராக் - Drag
ஒரு விமானம் ஒரே உயரத்தில் , நேராக பறக்க இந்த கணிதக்கூற்று சமணாக இருக்க வேண்டும்.
Weight=Lift
Drag=Thrust
த்ரஸ்ட், டிரேகைவிட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் கூடும்.
டிராக் த்ரஸ்டை விட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் குறையும்.

விமானத்தின் எடை ''லிப்ட்'' விசையை விட கூடுதலாக இருக்கும்போது விமானம் கீழிறங்கும்.விமானத்தின் ''லிப்ட்'' விசை விமானத்தின் எடையைவிட அதிகமாக இருக்கும்போது விமானம் மேல் எழும்பும்.
சரிஸ பலருக்கு இப்போ ஒன்று நன்றாக புரியும், விமானம் முன்னே செல்வதற்கான விசையை கொடுப்பது விமானத்தின் இஞ்சின் என்று, அதாவது த்ரஸ்ட் விசையை கொடுப்பது இஞ்சின்.அதே போல விமானத்தில் ''டிராக் விசையை கொடுப்பது'' காற்றினால் விமானத்தில் ஏற்படும் உராய்வுகள், இஞ்சின் ஆப் செய்யப்பட்டால் சிறிது நேரத்தில் விமானம் மெதுவாகிவிட காற்றினால் ஏற்படும் உராய்வே கார்ணம் (அதாவது வானத்தில்). ஒருவேளை பூமியில் காற்று இல்லையென்றால், இஞ்சினை ஆப் செய்தாலும் விமானம் மெதுவாக முடியாது.

(பலருக்கு ஒரு விஷயம் ஆச்சரியமாக இருக்கும், ஏன் விமானம் மேலே எழும்பியவுடன் சக்கரத்தை உள்ளே இழுத்துக்கொள்கிறது, வெளியிலேயே இருந்தால் என்ன கெட்டுவிட்டது என்று. இதை செய்வதற்கு காரணம், காற்றினால் சக்கரத்தில் ஏற்படும் உராய்வை தடுப்பதுதான். அந்த உராய்வுடன் பறந்தால் விமான எரிபொருள் செலவு இருமடங்காக இருக்கும், மேலும் அதிக வேகத்தை விரைவில் எட்ட முடியாது)
விமானத்தில் கீழ் நோக்கு விசையை கொடுப்பது இமானத்தின் சொந்த எடை மற்றும் புவி ஈர்ப்பு விசை இது எல்லோருக்குமே தெரிந்திருக்கும்
பலருக்கும் புரியாத புதிராக இருப்பது விமானத்தின் மேலிழுக்கும் விசை எங்கு உற்பத்தி ஆகிறது என்பதுதான். இது சற்று சுவாரஸ்யமானது
ஹெலிகாப்டரின் மேலெழும்பு விசை அதன் மேகிருக்கும் விசிரியால் வருகிரது என பலர் சொல்லிவிடுவார்கள், விமானத்திற்கு முன்னே செல்லும் விசைதானே உள்ளது, மேலே எப்படி எழும்புகிறது என்ற கேள்வி பலர் மனதில் இருக்கும்.

உண்மையில் விமானத்தின் மேலுழும்பு விசையை தருவதும் அதே எஞ்சிந்தான் , சற்று மறைமுகமாகவிமானத்தின் மேல் நோக்கு தூக்கு சக்தி உற்பத்தி செய்யப்படுவது அதன் இறக்கை, விமானத்தின் வேகம், மற்றும் காற்றின் கூட்டணியில்தான் . இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் தூக்கு சக்தி உருவாகாது , விமானம் பறக்காது. அதாவது இறக்கை இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, விமானத்தில் வேகம் இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, காற்று இல்லாமல் மீதி இரண்டும் இருந்தாலும் பறக்க முடியாது.

விமானத்தின் இறக்கையை கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும், (மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும்). விமானத்தின் இறக்கையின் மேல்பாகம் சற்று, மிகவும் சற்று மேல் நோக்கி வளைந்திருக்கும். கீழ்பாகம் தட்டையாக இருக்கும். இதை சாதாரணமாக இறக்கையை பார்த்தால்கூட கண்ணுக்கு எளிதாக தெரியாது, அதை தொட்டுப்பார்த்தால்தான் தெரியும்
இந்த மேல்நோக்கிய வளைவு எதற்காக? இங்குதான் விஷயம் உள்ளது
காற்று அசுரவேகத்தில் விமானத்தின் இறக்கையோடு உராயும்போது, விமானத்தின் இறக்கையின் மேற்புறம் ஒரு குறைந்த காற்றுழத்த மண்டலம் உருவாகுகிறது, கீழ்புறம் காற்றழுத்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு புறம் அதிக காற்றழுத்தம் ஒரு புறம் குறைந்த காற்றழுத்தம் இருக்கும்போது, குறைந்த காற்றுழத்த பகுதியை நோக்கி பொருள் ஈர்க்கப்படுவது அறிவியல் நியதி (Vacuum Cleanerபொருளை உள்ளே இழுப்பது குறைந்த காற்றழுத்தத்தை உள்ளே உருவாக்குவதினால்தான்)

விமானத்தை மேல்நோக்கி இழுக்கும் விசை, விமானத்துக்கும் காற்றுக்குமான ரிலேடிவ் வேகத்தையும், இறக்கையின் பரப்பளவையும் பொருத்தே அமையும்
அதனால்தான் எடை அதிகமான விமானத்தின் இறக்கை பெரியதாக அதிக பரப்பளவுள்ளதாக இருக்கும்
இப்போது காற்றுக்கும் விமானத்திற்குமான ரிலேடிவ் வேகத்தை எது தீர்மாணிக்கிறது? சந்தேகமில்லாமல் விமானத்தின் வேகம், அதை தீர்மாணிப்பது எது? விமானத்தின் இஞ்சின் , எனவே விமானத்தின் மேலெழும்பு சக்தியையும் கொடுப்பது, அதே இஞ்சின் தான் என்பது தெளிவாகிறது அல்லவா?

அதனால்தான் விமானம் மெதுவாக ஓடும்போது அதற்கு பறக்கும் சக்தி இருக்காது. (ஹெலிகாப்டரின் மேலெழும்பு விசைக்கும் வேகத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பதால் அது ஓடாமலே மேலே எழும்புகிறது, ஆனால் விமானத்தின் முன் செல்லும் வேகம் எலிகாப்டருக்கு வராது)
இது எல்லாம் சேர்ந்துதான் விமானம் இப்படி டேக் ஆஃப் ஆகிறது
விமானம் ஓடினால் மட்டும் அல்ல, அதே வேகத்தில் காற்று புயல்போல அடித்தாலும் (அந்த வேகத்திற்கு காற்று அடிப்பது கடினம்தான்) விமானம் நின்றுகொண்டிருந்தால் கூட விமானம் தூக்கப்பட்டுவிடும். கடும் புயல் அடிகும்போது, சில ஓட்டு வீட்டு கூறைகள் பீய்த்துக்கொண்டு மேலெழும்பி காற்றில் பரப்பதற்கான காரணம் இப்போது புரிகிறதா?

அதனால்தான் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விமானம் சென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் எப்போதும் உள்ளது, அப்போதுதான் அதன் இறக்கையில் மேலிழுக்கும் சக்தி தொடர்ச்சியாக அதன் எடையை சமன் செய்யும். அந்த வேகத்திலிருந்து குறைந்தால் விமானம் கீழே இறங்க துவங்கிவிடும். மெதுவாக போவது, சாவகாசமாக போவது எல்லாம் விமானத்திற்கு வேலைக்கே ஆகாதுஒரு டெயில் பீஸ், இந்த இறக்கை மேட்டர் எல்லாம் காற்று உள்ள இடங்களில் மட்டும்தான். பூமியை தாண்டி வின்வெளிக்கு சென்றுவிட்டால் பறப்பதற்கு இறக்கை தேவைப்படாது.

மனிதனால் பறக்க முடிவும் என்பது பற்றி இறைவன் திருமறையில்,
''மனித ஜின் கூட்டமே! வானங்கள் மற்றும் பூமியின் விளிம்புகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெற்றால் கடந்து செல்லுங்கள்! ஆற்றல் மூலம் தவிர நீங்கள் கடந்து செல்ல மாட்டீர்கள்.டாது)'' அல்குர்அன் 55-33

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Wednesday, September 29, 2010

அணுகுண்டுக்கு சவால்விடும் கரப்பான் பூச்சி




அணுகுண்டு ஒன்று வெடித்து பெரும் உயிர் அழிவு ஏற்பட்ட பின் சுடுகாடாக மாறியிருக்கும் பிராந்தியத்தை பார்க்க கூடிய ஒரு உயிரினம் ஒன்று உள்ளது என்றால் அது வீட்டில் வாழும் கரப்பான் பூச்சிதான்.

ஆம்கரப்பான் பூச்சி மனிதனை விட பல ஆயிரம் மடங்கு கதிர் வீச்சை தாங்கிக் கொள்ளும் ஆற்றல் படைத்ததுமனிதனின் அழிவின் பின்னும் வாழப்போகும் இவை தோன்றியது மனித இனம் தோன்றுவதற்கு முன்அதாவது 350 மில்லியன் வருடங்களுக்கு முன் தோன்றியவை.
அன்று முதல் இன்று வரை அதன் தோற்றத்தில் எந்த பரிணாம வளர்ச்சியும் அடையவில்லை(சுறா மீனும் இதே காலப்பகுதியில் தோன்றியவைஅவையும் நீண்ட காலம் தோற்ற மாற்றமின்றி வாழ்கின்றன).உலகின் துருவப் பகுதிகள் தவிர்ந்த ஏனைய எல்லாப் பகுதிகளிலும் வாழும் கரப்பான் பூச்சியின் தாயகம் ஜேர்மனி நாடாக இருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கணிப்பாகும்.
தற்போது உலகில் சுமார் 3490 கரப்பான் இனங்கள் வாழ்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளதுஇவை ஆறு குடும்பங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளனகரப்பான் பூச்சி தலைநெஞ்சுவயிறு எனும் மூன்று பிரதான பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இவற்றிற்கு மூன்று சோடி கால்களும்,ஒரு சோடி உணர்கொம்பும் உண்டு.கரப்பான் பூச்சிக்கு முதுகெலும்பு கிடையாதுஇரண்டு சோடி அல்லது ஒரு சோடி சிறகுகள் கணப்பட்டாலும் சில கரப்பான் பூச்சிக்கு சிறகுகள் கிடையாது.கரப்பான் பூச்சியின் இரத்தம் வெள்ளை நிறமுடையதுஇவற்றால் தலை துண்டிக்கப் பட்டாலும் சுவாசிக்க முடியும்!!(சில கரப்பான் பூச்சிகளால் வளி இல்லாமல் 45 நிமிடங்கள் வழமுடியும்.)
 உலகின் மிகப்பெரிய கரப்பான் பூச்சி இனம் Giant burrowing cockroach ஆகும்இது ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றது.
இது சென்ரிமீட்டர் வரை வளரக்கூடியதுஇதன் நிறை 30 கிராமை விட அதிகமாக இருக்கும்.
இந்த கரப்பான் நிலத்தை அடி(1 மீட்டர்அழத்திற்கு தோண்டி வசிக்கின்றது.
இதன் காரணமாகவே இதற்கு Giant burrowing cockroach என பெயர் வந்தது. (burrow-பூமியில் வளை தோண்டு).இதற்கு சிறகுகள் கிடையாது.இதனை சிலர் செல்லப்பிராணியாகவும் வளர்க்கின்றனர்.
கரப்பான் பூச்சியின் உணர்கொம்புகள் சூழலை அறிய உதவுகின்றதுஇரவில்(இருட்டில்உணவு வேட்டையை செய்யும்இவை எந்த பாகுபாடுமில்லாமல் எல்லாவிதமான உணவையும் வெட்டியும்,அரைத்தும் உண்கின்றனஅப்படி உணவுப் பஞ்சம் ஏற்பட்டால் காகிதம்,சவர்க்காரம் போன்றவை கூட உணவாகும்இதற்கு இதன் வலிமை வாய்ந்த தாடைகள் உதவி செய்கின்றனசில சமயம் உணவே கிடைக்காமல் கரப்பான் பூச்சியினால் மூன்று மாதங்கள் வரை உயிர் வாழ முடியும்! பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

அமெரிக்காவில் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டினால் தண்டனைகளை நிறைவேற்றுவதில் தாமதம்

அமெரிக்காவில் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டினால் தண்டனைகளை விதிப்பதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஊசி மருந்தின் மூலம் மரண தண்டனகளை விதிப்பதற்கு பயன்படுத்தப்படும் சோடியம் தையயோபொன்டல் என்ற மருந்துப் பொருளுக்கு காணப்படும் தட்டுப்பாட்டினால் தண்டனைகளை நிறைவேற்றுவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
நாடு முழுவதிலும் இந்தப் மருந்துப் பொருளுக்கு பற்றாக்குறை நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் 35 மாநிலங்களில் இந்த மருந்துப் பொருள் பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும், தற்போது மாற்று மருந்துகளை பயன்படுத்துவது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
2011ம் ஆண்டளவில் இந்த மருந்துப் பொருட்களை நாடு முழுவதிலும் விநியோகம் செய்ய முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனவரி மாதத்திற்குள் ஒன்பது மாநிலங்களில் 17 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மருந்துப் பொருள் தட்டுப்பாடு காரணமாக சில மாநிலங்களில் மரண தண்டனை உத்தரவுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

மணிக்கு 416.6 கி.மீ. வேகத்தில் மின்னலாக பறந்த சீன ரெயில்

சீனாவில் அதிவேக ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 2008-ம் ஆண்டு ஜூன் 24-ந்தேதி பெய்ஜிங்- தியான்ஷின் நகரங்களுக்கு இடையே மணிக்கு 394.3 கி.மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது.
இதன் மூலம் உலகிலேயே அதிவேக ரெயில் என்ற சாதனையை படைத்தது. தற்போது, அதை விட அதிக வேகமாக இயங்க கூடிய ரெயிலை சீனா உருவாக்கியுள்ளது.
இந்த ரெயில் ஷாங்காய்- ஹாங்ஹீ நகரங்களுக்கு இடையே பரிசோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அப்போது மணிக்கு 416.6 கி.மீட்டர் மின்னல் வேகத்தில் பறந்து சாதனை படைத்தது.
இந்த ரெயில் மணிக்கு 350 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் அளவு வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால் இது ஷாங்காய்- ஹாங்ஹீ நகரங்களுக்கு இடையே 202 கி.மீட்டர் தூரத்தை 40 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன்பு இந்த தூரத்தை ரெயில்கள் 2 மணி நேரத்தில் கடந்து சென்றன. தற்போது மிக குறைந்த நேரத்தில் சென்றதன் மூலம் உலகிலேயே மிக நீளமான அதிவேக விரைவு ரெயில் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.
இதன்மூலம் நவீன ரெயில்வே தொழில் நுட்பத்தை சீனா பெற்றுள்ளது என்று சீன ரெயில்வே அமைச்சகத்தின் தலைமை என்ஜினீயர் கிகுவாவூ தெரிவித்துள்ளார். 
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

கூந்தலை சுத்தப்படுத்தும் நவீன ரோபோ : பெனசொனிக் அறிமுகம்

கூந்தலைக் கழுவி சுத்தப்படுத்தக்கூடியதும் தலையை மசாஜ் செய்யக் கூடியதுமான நவீன ரோபோ ஒன்றை ஜப்பானின் பிரபல 'பெனசொனிக்' நிறுவன விஞ்ஞானிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர். 

இரண்டு கைகளிலும் தலா 8 விரல்கள் வீதம் 16 ரோபோடிக் விரல்கள் இவற்றில் பொருத்தப்பட்டுள்ளன. 

மசாஜ் செய்வதற்காக 3 மோட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதன் 2 கைகளும் முதலில் மனித தலையினை முப்பரிமாணமாக ஸ்கேன்செய்யும். 

பின்னர் தலையினது உருவத்தை அளந்துகொள்வதுடன் ஒவ்வொரு பகுதிக்கும் வழங்க வேண்டிய அமுக்கம் மற்றும் முறைகள் என்பனவற்றை நிர்ணயித்துக்கொள்ளும்.

இங்கு பொருத்தப்பட்டுள்ள மோட்டார்கள் அசைவு மற்றும் அமுக்கத்தை தன்னிச்சையாகக் கட்டுப்படுத்தும். விருப்பமான மசாஜ் முறையை இதில் தெரிவு செய்யவும் முடியும்.

மேற்படி ரோபோக்களானது வைத்தியசாலையில் உள்ள நோயாளர்களின் தலையையும் கூந்தலையும் சாம்போவால் சுத்தப்படுத்தும். இதன் மூலம் வைத்தியசாலைகளில் இத்தகைய ஊழியர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியுமெனத் தெரிவிக்கப்படுகின்றது பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

மெக்சிகோவில் பயங்கரம் நிலச்சரிவில் 1000 பேர் பலி



மெக்சிகோ நாட்டில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாயினர்.மெக்சிக்கோவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதில் ஏற்கனவே வெள்ளத்தில் பல வீடுகள் அடித்து செல்லப்பட்டன. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.

இந்நிலையில் தெற்கு மெக்சிக்கோ மலைப் பகுதிகளில் நேற்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. மலையின் 200 மீட்டர் உயரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு பாறாங்கற்களும் மண்ணும் பயங்கர வேகத்தில் நிலத்தில் வந்து விழுந்தன.

இதில் மலையடிவாரத்தில் இருந்த 300க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்தன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இத்தகவலை கவர்னர் உலிசெஸ் ரூயிஸ் நேற்று தெரிவித்தார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Monday, September 27, 2010

உண்மையான அபூர்வ மனிதர்: மின்சாரம் இவரை தாக்குவது இல்லை!

அமெரிக்காவில் இருந்து ஒளிபரப்பாகும் ஹிஸ்ரி சனல் தொலைக்காட்சியின், நிருபர் இந்தியா சென்று அங்குள்ள அபூர்வ மனிதர் ஒருவரைச் சந்தித்துள்ளார். எலக்ரிசிட்டி மோகம் எனப்படும் இந்நபர் சுமார் 200 வால்ட் மின்சாரத்தை தனது உடல் மூலம் செலுத்துகிறார், ஆனால் அவர் உடலை மின்சாரம் தாக்கவில்லை. சாதாரண மனிதர்களாயின் சுமார் 2 நிமிடத்தில் மரணத்தை சந்திக்க நேரிடும், ஆனால் இந்த அதிசய மனிதர் சர்வசாதாரணமாக 200 வால்ட் மின்சாரத்தை கைகளால் பிடிக்கிறார்.

இதில் ஏதாவது சுத்துமாத்து இருக்கலாம் என்பதற்காக தொலைக்காட்சியின் நிருபரே நேரடியாகச் சென்று, அதனைப் பார்வையிட்டதோடு அவரை பல்வேறு பரிசோதனைக்கும் உள்ளாக்கியுள்ளார். இந்நிலையில் மோகன் என்பவ்ர் உண்மையிலேயே ஒரு அதிசயமான மனிதர் என நிருபர் பகிரங்கமாக ஒப்புக்கொள்கிறார். இது எவ்வாறு சாத்தியப்படும் என்பது யாருக்கும் இதுவரை தெரியவில்லை. காணொளி இணைக்கப்பட்டுள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

1,768 அடி கோபுரத்தில் ஏறும் ஊழியர்கள் : மயிர்க்கூச்செறியும் காணொளி

ஒளிபரப்புக் கோபுரமொன்றின் திருத்தப் பணிகளுக்காக அதன் மீது ஏறும் ஊழியர்கள் இருவரின் மயிர்க்கூச்செறியும் காணொளிக் காட்சியானது உலகம் முழுவதும் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது. 

இக்காணொளியானது சுமார் 6 நிமிடங்கள் வரை ஓடக்கூடியது. 

ஊழியர் ஒருவரின் தலைக்கவசத்தில் பொருத்தப்பட்டிருந்த கமெரா ஒன்றின் மூலமே இக்காட்சி படமாக்கப்பட்டுள்ளது. 

சுமார் 1,768 அடி உயரமான இக்கோபுரமானது பிரான்ஸிலுள்ள ஈபிள் டவர் (1,063 அடி), அமெரிக்காவிலுள்ள எம்பயர் ஸ்டேட்ஸ் கட்டிடம்( 1,453 அடி ) மற்றும் அமெரிக்காவின் வில்லிஸ் டவர் (1730 அடி) ஆகியவற்றை விட உயரமானதென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். 

தனியாக அல்ல, கூடவே சுமார் 13.6 கிலோகிராம் நிறையுடைய ஆயுதங்கள் உள்ளடங்கிய பெட்டியொன்றையும் இவர்கள் சுமந்து செல்லவேண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மேற்படி காணொளி குறிப்பிட்ட ஊழியர்கள் கடமைபுரியும் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத் தளத்திலேயே முதன்முதலில் வெளியிடப்பட்டிருந்தது. 

மேலும் இது போன்ற 2 காணொளிகளை அந்நிறுவனம் வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

புதிய வைரஸ் எச்சரிக்கை

கூகுள், நாசா,டிஸ்னி, கோகா கோலா போன்ற மிகப் பெரிய பாதுகாப்பான நிறுவனங்களை எல்லாம் பாதித்த வைரஸ் ஒன்று இப்போது உலகெங்கும் பரவி வருகிறது.
“Here You Have” என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த வைரஸ், இந்த சொற்களை சப்ஜெக்ட் பெட்டியில் கொண்டு வரும் இமெயில்கள் மூலம் பரவுகிறது. உங்கள் நண்பரின் மின்னஞ்சல் முகவரியிலிருந்து வரும், மின்னஞ்சல் கடிதமாக இது இன் பாக்ஸை வந்தடைகிறது. அதில் “நீங்கள் கேட்ட பட பைல் இதோ இங்குள்ளது’ என்று ஒரு பிடிஎப் பைலுக்கு லிங்க் தருகிறது. இது பிடிஎப் பைலே அல்ல. .scr. என்ற துணைப்பெயருடன் உள்ள ஒரு கோப்பு. விண்டோஸ் ஸ்கிரிப்ட் அடங்கிய வைரஸ் கோப்பு.
இது CSRSS.EXE என்னும் கோப்பினை உங்கள் விண்டோஸ் டைரக்டரியில் பதிக்கிறது. இயங்கத் தொடங்கியவுடன் உங்கள் ஆண்ட்டி வைரஸ் கோப்பின் இயக்கத்தை நிறுத்துகிறது. இது ஒரு பாட்நெட் வகை வைரஸ். ஆனால் பழைய நிம்டா, அன்னா கோர்னிகோவா (2001 ஆம் ஆண்டு) மற்றும் மெலிஸ்ஸா வைரஸ் போல பரவுகிறது. ஆர்வத்தில் அல்லது ஆசையில் இதில் உள்ள லிங்க்கில் கிளிக் செய்தவுடன் இந்த வைரஸ் உங்கள் கம்ப்யூட்டரில் வந்து இறங்குகிறது. அடுத்து உங்கள் இமெயில் முகவரி ஏட்டில் உள்ள அனைத்து முகவரிக்கும் இதே போல ஒரு செய்தியை அனுப்புகிறது. இது கடந்த செப்டம்பர் 10 முதல் உலகெங்கும் பரவி வருகிறது. தேடுதல் தளங்களில் தேடப்பட்ட தகவல்களில் இந்த தகவல் தான் இரண்டாம் இடம் கொண்டிருந்தது. SANS Technology Institute என்ற நிறுவனத்தின் இன்டர்நெட் கண்காணிப்பு பிரிவு, இந்த இமெயில் டன் கணக்கில் பரவுவதாக அறிவித்துள்ளது. மெக் அபி நிறுவனம் இந்த வைரஸ் குறித்து முழுமையாக அறிய சில நாட்கள் ஆகும் என்று தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்பால் Comcast என்ற கம்ப்யூட்டர் நிறுவனம் தன் இமெயில் சர்வர்களை எல்லாம் மூடிவிட்டது.
இந்த வைரஸை அனுப்பிய சர்வர் மூடப்பட்டுவிட்டது. அதிலிருந்து இந்த வைரஸ் கோப்பு எடுக்கப் பட்டிருக்கலாம். ஆனாலும், ஏற்கனவே பரவிய கம்ப்யூட்டர்களிலிருந்து இந்த வைரஸ் இன்னும் உலகம் முழுவதும் பரவி வருகிறது.
இதிலிருந்து எப்படி தப்பிப்பது?
நல்ல ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை பதிந்து இயக்குங்கள். ஏற்கனவே பதிந்திருந்தால், உடனே அப்டேட் செய்திடவும். இமெயில் இணைப்புகள் எது வந்தாலும் திறப்பதற்காக முயற்சி எடுக்க வேண்டாம். அனுப்பியவருக்கு தனி இமெயில் அனுப்பி, அனுப்பியதை உறுதி செய்து கொண்டு பின் திறக்கவும். “Here you Have” அல்லது “Just For You” என்று இருந்தால் எந்த சலனமும் இல்லாமல், முற்றிலுமாக அழித்துவிடவும். இந்த வைரஸ், நார்டன்/சைமாண்டெக் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளால் பாதுகாக்கப்பட்ட கம்ப்யூட்டர்களில் பரவ முடியவில்லை என்று ஒரு செய்தியும் வந்துள்ளது.
இருப்பினும் இமெயில்களைக் கவனமாகக் கையாளுங்கள்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Sunday, September 26, 2010

வரப் போகிறது அடுத்த கட்ட தொழில் நுட்பம்!


இதை பற்றி பார்க்கும் முன் ஒரு நிகழ்வை பற்றி பார்ப்போம்!
சமீபத்தில் கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள ஓர் அலுவலகத்திற்கு சென்று இருந்தார் ஒரு பத்திரிக்கையாளர். வாசலில் அவர் தலையில் ஒரு ஹெட் போன் ஒன்றை மாட்டி அனுப்பினார் காவலாளி.
கதவை திறக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டே சென்றவருக்கு கதவு அதுவாகவே திறந்து வழி விட்டது. கொஞ்சம் பயத்தோடு உள்ளே சென்றவருக்கு லேசாக வியர்த்துக் கொட்ட, FAN சுவிட்ச் எங்கேவென்று தேட தொடங்கினார். அவர் நினைத்த மறு கணமே FAN ஓட துவங்கியது!
என்னடா இது? ..எல்லாம் நினைத்த மாத்திரத்திலே நடக்கிறது என திகைத்து போன அவருக்கு அந்த நிறுவனத்தை சேர்ந்த ஏரியல் கார்ட்டன்(ARIEAL CARTAN) என்கிற உளவியல் நிபுணர் ,"ஆமாம் ....இது சாத்தியம் என்று பேச தொடங்கினார்.
இது போன்ற சின்ன சின்ன வேலைகளை இருந்த இடத்தில இருந்தே அதுவும் மனதில் நினைத்தாலே போதும் ...அது நடக்கும்" என்று சொல்லும் போது நமக்கும் ஒரு சின்ன ஆச்சிர்யம் மற்றும் ஒரு ஆர்வம் தோற்றக் கொள்ள தான் செய்யும்.
அந்த டெக்னாலஜி பற்றி பர்ர்போம் ..."எதையாவது செய்யும் முனைப்போடு நீங்கள் சிந்திக்கும் போது பீட்டா (beta waves ) அலைகளை உங்கள் நினைவகம் உருவாக்குகிறது, ஓய்வு மூடுக்கு வரும் போது ஆல்பா அலைகளை (ALFA WAVES ) உருவாக்குகிறது.இந்த அலைகளை கட்டுப்படுத்துவதின் மூலமாக சுவிட்ச் இல்லாமலே லைட் போடலாம் ...இசை கேட்கலாம். இது எப்படி வேலை செய்கிறது என்று பார்ப்போம்!
நம் காதில் இருக்கும் ஹெட் செட்டில் இருக்கும் சில ஏலேக்ட்ரோடுகள் நம் எண்ண அலைகளைப் படிக்கின்றன.அந்த வாசிப்புகள் கணினிக்கு அனுப்பி அதை ப்ரோசெச்ஸ் செய்து சுவிட்ச்களுக்கு கட்டளைகளை அனுப்புகின்றன.இதன் மூலம் நம் எண்ணங்கள் செயல்படுத்துகின்றன ..
ஆனால், இது இப்போது தொடக்க நிலையில் உள்ள ஆராய்ச்சி! இப்போதைக்கு இது போன்ற விஷயங்கள் மட்டுமே செய்து முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அடுத்த கட்ட நிலைகள் மிக விரைவில் வரும் என்று ஆய்வாளர் கூறியுள்ளார் ....
மனித மூளையை ஒரு கணினியால் படிக்க முடியும் என்பதே
 மிகப் பெரிய விஷயம்ஆனால் இதனால் ஏற்படும் பாதகமான அம்சங்கள் பற்றி இங்கே சொல்ல வேண்டாம் ஒவ்வொரும் நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

23 KG சதையை முகத்தில் கொண்டுள்ள விசித்திர மனிதன்

சீனாவில் மிகவும் பின் தங்கிய கிராமத்தில் உள்ள "ஹோங் சன்சை" என்ற 32 வயதுடைய இளையனுடைய முகத்தில் 23 KG தேவையற்ற சதைகள் காணப்படுகின்றன.
இதை ஆராய்ந்த வைத்திய நிபுணர்கள் இது அவரின் நிறமூர்த்தம் விகாரம் காரணமாக இச் சதைகள் வளர்ச்சி அடைவதாக தெரிவிக்கின்றனர். இதை அகற்ற குறைந்து ஆறு தடவைகள் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து குறித்த நபர் கூறுகையில் இந்த பிரச்சனை காரணமாக தன்னால் ஒரு வேலையும் செய்ய முடியாம உள்ளதாகவும் என் முகம் பார்பதற்கு மிகவும் பயங்கரமாக உள்ளதால் எமது பகுதி மக்கள் என்னுடன் பழகுவதற்கே பயப்படுவதாகவும் கவலை தெரிவித்தார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Saturday, September 25, 2010

15 கொம்புகள் கொண்ட அதிசய டயனோசரஸ் எழும்பு கூடு அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மிகப்பெரிய உயிரினம் டயனோசரஸ். இயற்கை பேரழிவு மற்றும் பருவ நிலை மாற்றம் போன்றவற்றின் காரணமாக அந்த இனம் உலகில் அழிந்து விட்டது. ஆனால் அவை வாழ்ந்த அடையாளங்கள் காலச்சுவட்டில் இருந்து மறைந்து விடவில்லை.
உலகில் வாழ்ந்து மடிந்த டயனோசரஸ்சின் இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தற்போது அரியவகை டயனோசரஸ்கள்கள் வாழ்ந்ததற்கான ஆதாரம் அமெரிக்காவில் கிடைத்துள்ளது.
அமெரிக்காவில் உதா பகுதியில் புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள் பூமியை தோன்டி ஆய்வு மேற் கொண்டனர். அப்போது வினோதமான அறிய வகை விலங்குகளின் 2 ராட்சத எலும்புக்கூடுகளை கண்டெடுத்தனர்.
அதில் முகதாடையின் முன் புறத்தில் காண்டா மிருகத்தை போன்ற ஒரு கொம்பு இருந்தது. மேலும் அதன் கழுத்து பகுதியில் 3 கொம்புகளும், முதுகெலும்பில் மற்ற 11 கொம்புகளும் ஆக மொத்தம் 15 கொம்புகள் இருந்தன. எனவே, அந்த அறிய விலங்கின் எலும்பு கூடுகள் ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டன.
அவையும் டயனோசரஸ் வகையை சார்ந்தது என கண்டறிந்தனர். அது வாழ்ந்த போது 5 மீட்டர் நீளமும், 2500 கிலோ எடையுடனும் இருந்திருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மேலும் உதா மியூசியத்தின் ஆய்வகத்தில் இதுகுறித்து தொடர்ந்து பரிசோதனை நடந்து வருகிறது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

செவ்வாய் மற்றும் நிலவில் விவசாயம் செய்யலாம் : விஞ்ஞானிகள்

செவ்வாய் மற்றும் நிலவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் பயிரிட முடியுமா என்ற ஆராய்ச்சியில், அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.
பல்கலை வளாகத்தில் நிலவின் தட்ப வெப்பத்தை ஒத்த சூழலில் ஒரு பரிசோதனைக் கூடம் உருவாக்கப்பட்டு செடிகள் பராமரிக்கப்பட்டதில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஆராய்ச்சியில் தெரியவந்துள்ள தகவல்களின் விவரம்: பூமியில் இருந்து செடிகளை இரு கிரகங்களுக்கும் எடுத்துச் சென்று வளர்க்க முடியும். இதன் முதல் கட்டமாக உருளை, பட்டாணி, தக்காளி, மிளகு உள்ளிட்ட சில காய்கறிகளை உற்பத்தி செய்ய உரிய நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிலவில் இவற்றை புதைத்து வைத்தால் போதும் செடிகள் துளிர்க்கத் துவங்கிவிடும்.
அதிக அளவு தண்ணீர் தேவைப்படாது. விதை மற்றும் குழல் வடிவ தாவரங்களின் கிளைகளில் உள்ள ஈரப்பதமே அவற்றின் வளர்ச்சிக்கு பெரிதும் துணை புரியும். 30 நாட்களில் காய்த்து குலுங்கத் துவங்கும். ஒரு ரோபோவை பூமியில் இருந்து ரிமோட் மூலம் இயக்கி, நிலவு மற்றும் செவ்வாய் கிரகங்களில் தோட்டத்தைப் பராமரிக்க முடியும். இவ்வாறு ஆராய்ச்சி முடிவுகளை அடுக்குகிறார்கள் விஞ்ஞானிகள்
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

இருதய மாற்று அறுவைச் சிகிச்சைகளில் சுவிஸ் மருத்துவர்கள் புதிய சாதனை

இருதய மாற்று அறுவைச் சிகிச்சைகளில் சுவிட்சர்லாந்து மருத்துவர்கள் புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இறந்த ஒருவரின் இதயத்தை, மற்றுமொரு நபருக்கு பொருத்துவது தொடர்பில் சுவிஸ் மருத்துவர்கள் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இதன் மூலம் இறந்த ஒருவரின் உடலிலிருந்து எடுக்கப்படும் இருதயத்தை நீண்ட நேரத்திற்கு பேணிப் பாதுகாக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
இருதய மாற்று அறுவைச் சிகிச்சைகளின் போது பயன்படுத்தப்படும் இருதயம் 20 நிமிடத்திற்குள் பொருத்தப்பட வேண்டும் என்பதே பொதுவான நியதியாகும்.
எனினும், சுவிஸ் ஆய்வாளர்களின் சோதனைகளின் மூலம் இந்த நேரம் இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் மூளை இறந்த நபர்களின் இருதயங்களை அதிகளவில் இருதய மாற்று அறுவைச் சிகிச்சைகளுக்காகப் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதயத் துடிப்பு நின்றதன் பின்னர் நாற்பது நிமிடங்கள் வரையில் இருதயத்தை பாதுகாக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பேர்ன் மருத்துவ மனையைச் சேர்ந்த மருத்துவர்கள் இந்த ஆய்வினை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Friday, September 24, 2010

திருட முடியாத ஐபோன்

ஒருவருக்கு உரிமையான ஐ–போனை அடுத்தவர் பயன்படுத்த முடிந்தால், கண்டறிந்து இயங்காமல் இருக்கக் கூடிய தொழில் நுட்பத்தினை ஆப்பிள் நிறுவனம் வடிவமைத்து, அதன் காப்புரிமைக்கு மனுச் செய்துள்ளது.
இந்த தொழில் நுட்பம் ஐ போன் ஒன்றின் உரிமையாளரின் முக அமைப்பு, குரல் மற்றும் இதயத் துடிப்பினை அளந்து அறிந்து கொள்கிறது. இவற்றின் அடிப்படையில் பல செயல்பாடுகளை, ஆப்பிள் நிறுவன சர்வர் மேற்கொள்கிறது.
வேறு எவரும் பயன்படுத்த முயற்சிக்கையில் போனின் செயல்பாட்டை முடக்குகிறது. திருட்டுத்தனமாகப் பயன்படுத்துகையில், பயன்படுத்தும் இடத்தினை அறிந்து கொண்டு பதிந்து கொள்கிறது.
அனுமதிக்கப்பட்ட கூடுதல் வசதிகளை மட்டுமே பயன்படுத்த வழி தருகிறது. ஐபோனின் வரையறைகளை திருட்டுத்தனமான சாப்ட்வேர் (ஜெயில் பிரேக்கிங்) மூலம் யாரேனும் மாற்றி இருந்தால் உடனடியாகக் கண்டறிந்து பயன்பாட்டினை முடக்குகிறது.
ஆனால் இந்த தொழில் நுட்பம் வாடிக்கையாளர்களின் தனி நபர் உரிமையில் தலையிடுவதாக சிலர் கண்டித்துள்ளனர். 
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

ஐநா கூட்டத்தில் ஈரான் அதிபர் பேச்சு : அமெ. அதிகாரிகள் வெளிநடப்பு

ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் ஈரான் அதிபரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க அதிகாரிகள் அக்கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
2001 செப்டம்பர் 11 தாக்குதலின் பின்னணியில் அமெரிக்க அரசு இருப்பதாக பெரும்பாலான அமெரிக்கர்கள் நம்புகிறார்கள் என ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் ஈரான் அதிபர் அஹமதிநிஜாத் குறிப்பிட்டார்.
பொருளாதார சரிவை மீட்கவே அமெரிக்க அரசில் உள்ள சில சக்திகள் அந்த தாக்குதலுக்கு ஏற்பாடு செய்ததாகவும், செப்டம்பர் 11 தாக்குதலில் என்ன நடந்தது என்பதைக் கண்டறிய ஐக்கிய நாடுகள் சபை விசாரணை நடத்த வேண்டும் என்றும் அஹமதிநிஜாத் தெரிவித்தார்.
அவரது பேச்சைக் கவனித்துக் கொண்டிருந்த இரு அமெரிக்க அதிகாரிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அவர்களைத் தொடர்ந்து பிரிட்டிஷ் மற்றும் இதர ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்தவர்களும் உடனடியாக கூட்டத்தில் இருந்து வெளியேறினர்.
2001 செப்டம்பர் 11இல் விமானங்களைக் கடத்தி நியூயோர்க்கில் உலக வர்த்தக மையத்தின் மீது அல்-கொய்தா இயக்கத்தின் தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதலில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Thursday, September 23, 2010

அமெரிக்க பணக்காரர்கள் பட்டியல்: பில் கேட்சுக்கு மீண்டும் முதலிடம்

அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலை போபர்ஸ் பத்திரிகை மீண்டும் வெளியிட்டு உள்ளது. இதில் மைக்ரோ சாப்ட் கம்ப்யூட்டர் நிறுவன அதிபர் பில்கேட்ஸ் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. ரூ. 2 லட்சத்து 70 ஆயிரம் கோடி சொத்து இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் தொடர்ந்து 17 ஆண்டுகளாக அமெரிக்காவின் முதல் பணக்காரர் பட்டியலில் இருக்கிறார். 

2-வது இடத்தை வாரன் பப்பெட் பிடித்துள்ளார். அவருடைய சொத்து மதிப்பு ரூ. 2 லட்சத்து 25 ஆயிரம் கோடி. 3-வது இடத்தை ஆரேக்கிர் கம்ப்யூட்டர் நிறுவன அதிபர் லாரன்ஸ் எலிசன் பிடித்து உள்ளார். அவருடைய சொத்து மதிப்பு ரூ. 1 லட்சத்து 35 அயிரம் கோடி. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

டைட்டானிக் மூழ்கிய ரகசியம் தெரிந்தது

இங்கிலாந்தில் இருந்து அமெரிக்கா சென்ற டைட்டானிக் கப்பல் 100 ஆண்டுகளுக்கு முன்பு பனிக்கட்டியில் மோதி மூழ்கியது. இதில் 1500 பேர் உயிர் இழந்தனர். பலர் உயிர்காக்கும் படகு மூலம் தப்பினார்கள்.

இதில் சார்லஸ் மைட்டோலர் என்ற மூத்த கப்பல் அதிகாரியும் ஒருவர். அவருடைய பேத்தி லூயிஸ்பேட்டன் டைட்டானிக் கப்பல் மூழ்கியது தொடர்பாக ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார்.

அதில் டைட்டானிக் கப்பல் ஏன் மூழ்கியது? என்ற ரகசியத்தை வெளியிட்டு உள்ளார். தனது தாத்தா சொன்ன தகவல்களை வைத்து இந்த ரகசியத்தை கூறி உள்ளார்.

டைட்டானிக் கப்பலுக்கு முன்பு பனிக்கட்டி மிதப்பதை கண்டுபிடித்து கப்பலை இடது பக்கமாக திருப்ப சொன்னார்கள். ஆனால் அதை தவறுதலாக புரிந்து கொண்டு வலது பக்கமாக திருப்பிவிட்டார்கள். மேலும் திசை திருப்பும் கருவியும் சரியாக வேலை செய்யவில்லை. இதனால்தான் கப்பல் பனிக்கட்டியில் மூழ்கிவிட்டது என்று அவர் எழுதியுள்ளார். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Wednesday, September 22, 2010

சூரிய சக்தியில் இயங்கும் உளவு விமானம் அமெரிக்கா தயாரிக்கிறது

பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்க ராணுவம் பல புதிய கண்டு பிடிப்புகளை உருவாக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது வானில் பறந்தபடியே உளவு பார்ப்பதற்காக அதிநவீன விமானத்தை தயாரித்து வருகிறது.
அது “போயிங்” ரக விமானத்தை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. ரூ.440 கோடி செலவில் இந்த விமானம் தயார் செய்யப்படுகிறது.
இது ஆளில்லாமல் சூரிய சக்தி மூலம் தானாக இயங்க கூடியது. இதற்கு “சோலார் ஈகிள்” (சூரிய கழுகு) என பெயரிடப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் இது சூரிய ஒளியை உறிஞ்சி சேமித்து வைத்து கொள்ளும்.

அதன் மூலம் இரவு நேரத்திலும் கூட தொடர்ந்து பறக்கும். விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள அதி நவீன கருவிகள் போட்டோ எடுத்து அதன் மூலம் தகவல்களை அமெரிக்க ராணுவத்துக்கு அனுப்பும்.

விமானத்தில் சக்தி வாய்ந்த எலெக்ட்ரிக் மோட்டார்கள் மற்றும் “புரோபல் லர்கள்” (உந்து விசை கருவிகள்) பொருத்தப்பட உள்ளன. இதை ஆளில்லா விமானம் ஆகவும், போர்க்காலங்களில் இதை பயன்படுத்தவும் முடிவும். அடுத்த ஆண்டு (2011) இது பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Tuesday, September 21, 2010

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஒற்றை தலைவலி : மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

தலைவலி மற்றும் ஒற்றை தலைவலி பிரச்னைகளால் பள்ளிக்குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இதனால் அவர்களுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்' என மருத்துவ வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.
குடும்ப சுமை, வேலைப்பளு போன்றவற்றால், பெரியவர்களுக்கு தலைவலி மற்றும் ஒற்றை தலைவலி பிரச்னை ஏற்படுவதாக கருதப்படுகிறது. ஆனால் இந்த பிரச்னைகளால் தற்போது பள்ளிக்குழந்தைகள் பாதிக்கப்படுவதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து குழந்தைகள் மற்றும் மூளை நரம்பியல் மருத்துவ நிபுணர் ஆண்ட்ரூ ஹெர்சி கூறியதாவது:
தற்போதைய காலகட்டத்தில் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்காக அதிகாலையிலேயே எழுந்து விடுகின்றனர். பள்ளியில் நீண்ட நேரம் பாடங்களை கூர்ந்து கவனிக்கின்றனர். மேலும் வீடு திரும்பும் அவர்கள் வீட்டு பாடங்களை முடித்துவிட்டு வெகு நேரம் கழித்து தூங்க செல்கின்றனர். இதுதவிர காலையில் பள்ளிக்கு செல்லும் பதட்டத்தில் அவர்கள் சாப்பிடுவதில்லை.போதிய தண்ணீர் குடிப்பதில்லை. இதனால் அவர்களுக்கு அடிக்கடி தலைவலி ஏற்படுகிறது. ஒற்றை தலைவலி பரம்பரையாக வரக்கூடிய பிரச்னை.அடிக்கடி ஏற்படும் தலைவலியும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்த வல்லது.
ஹார்மோன்களில் மாற்றம், இரத்த நாளங்களை விரிவடைய செய்வது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். தற்போது 10 சதவீத குழந்தைகளுக்கும், 28 சதவீத பெரியவர்களுக்கும் இந்த பிரச்னை உள்ளது.
பெரியவர்களுக்கு 4 மணி நேரமும்,குழந்தைகளுக்கு ஒரு மணி நேரம் முதல் 72 மணி நேரம் வரை கூட ஒற்றை தலைவலி தொடர்ந்து இருக்கும். பெரியவர்களுக்கு தலையின் ஒரு பகுதியிலும் குழந்தைகளுக்கு நெற்றியிலும் ஒற்றை தலைவலி ஏற்படுகிறது.மூன்று வயது குழந்தைகளுக்கு கூட ஒற்றை தலைவலி பிரச்னை ஏற்படுகிறது. சீதோஷ்ண நிலையில் ஏற்படும் மாற்றங்களாலும் அவர்களுக்கு தலைவலி பிரச்னை ஏற்படுகிறது. இவ்வாறு ஆண்ட்ரூ ஹெர்சி கூறினார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

பூமிக்கு அருகில் புதிய கிரகங்கள்

பிரபஞ்சம் குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டாலும், இன்னமும் அதன் ரகசியத்தை ஆய்வாளர்கள் முழுமையாக கண்டுபிடிக்க முடியவில்லை. உலகின் பல நாடுகள் விண்வெளி குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.
விண்வெளி ஆய்வுகளை அமெரிக்கா நீண்டகாலமாக மேற்கொண்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஆயிரத்து 440 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு ஆய்வு திட்டம் அங்கு தீட்டப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், உடா மாநில பல்கலைக்கழக டைனமிக் பரிசோதனை கூடத்தில் 16 அங்குல தொலைநோக்கி உருவாக்கப்பட்டது.
“வைஸ்’ என்று சுருக்கமாக அழைக்கப்படும், “வைட் பீல்டு இன்பிராரெட் சர்வே எக்ஸ்புளோளர்’ என்ற இந்த விண்வெளி தொலைநோக்கி, கடந்த டிசம்பரில் பூமியில் இருந்து 300 மைல் தூரத்தில் விண்வெளியில் சுற்றி வரும்படி ஏவப்பட்டது. 11 நொடிக்கு ஒரு படம் என்ற அளவில் இந்த தொலைநோக்கி விண்வெளியை கேமராவால் சுட்டுத்தள்ளி, படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.
இவ்வாறு அனுப்பப்பட்ட படங்கள் மூலம் விண்வெளி குறித்த பல்வேறு புதிய விஷயங்கள் கிடைத்து வருகின்றன. “வைஸ்’ தொலைநோக்கி அனுப்பிய படங்கள் மூலமாக, கடந்த ஆறு மாதங்களில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 95 கிரகங்கள் பூமிக்கு மிக அருகில் உள்ளன என தெரியவந்துள்ளது. மிக அருகில் என்றால், இக்கிரகங்கள் பூமியில் இருந்து 3 கோடி மைல்கள் தொலைவில் உள்ளன. இவற்றால் பூமிக்கு தற்போது எந்த அபாயமும் இல்லை.
“வைஸ்’ தொலைநோக்கி, விண்வெளியில் தன் முதல் முழுமையான தேடுதலை சமீபத்தில் தொடங்கி உள்ளது. இதன் மூலம், இந்த ஆண்டு இறுதிக்குள், பிரபஞ்சம், நட்சத்திரங்கள், கிரகங்கள் ஆகியவை எவ்வாறு தோன்றின என்ற கேள்விக்கான விடை தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிய கிரகங்களை மட்டும் இல்லாமல் 15 புதிய வால் நட்சத்திரங்களையும் அமெரிக்க தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது. நட்சத்திரங்களை விட அளவில் சிறியதும், கிரகங்களை விட பெரியதுமான வளர்ச்சி குறைந்த நூற்றுக்கும் மேற்பட்ட நட்சத்திரங்களை, “வைஸ்’ ஆய்வு செய்துள்ளது. இவற்றில் 20 குறித்த தகவல்கள் முழுமையாக கிடைத்துள்ளன. 45 ஆயிரம் கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள, ஒளிமிக்க ஒரு பால் மண்டலத்தை, “வைஸ்’ கண்டுபிடித்துள்ளது.
சாதாரண தொலைநோக்கியை விட, “வைஸ்’ தொலைநோக்கி சக்தி வாய்ந்ததாக இருப்பதால், அது அனுப்பி வரும் விண்வெளி தகவல்கள் விஞ்ஞானிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளன. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் இன்பிரா ரெட் தொழில்நுட்ப தொலைநோக்கி உருவாக்கப்பட்டது. அதில் இருந்து இதுவரை உருவாக்கப்பட்ட தொலைநோக்கிகளில், “வைஸ்’ தொலைநோக்கி தான் மிக சக்தி வாய்ந்தது.
“விண்வெளியில் காணப்படும் கடும் வெப்பம் மற்றும் அதிக ஒளி கொண்ட பொருட்களை நோக்கியே பெரும்பாலான தொலைநோக்கிகள் செயல்படும். ஆனால், அடர்த்தியான தூசிகளின் உள்ளேயே ஊடுருவி, தெளிவற்று காணப்படுபவைகளையும் தெளிவாக பார்க்கலாம்; குளிர்ச்சியான மற்றும் இருட்டில் மறைந்துள்ள பொருட்களையும் காணலாம் என்பதுதான், “வைஸ்’ விண்வெளி தொலைநோக்கியின் சிறப்பு!’ என்கிறார் ரிச்சர்டு பின்செல் என்ற விஞ்ஞானி. “பிரபஞ்சத்தில் பூமிக்கு அருகில் காணப்படும் பொருட்களை கொண்டு பால் மண்டலம் உருவானதை சிறிது சிறிதாக அறிந்து வருகிறோம். இனி கிடைக்கும் புள்ளி விவரங்களை கொண்டுதான் உண்மையான கண்டுபிடிப்புகள் வெளிவரும்!’ என்கிறார் நாசா விஞ்ஞானி பீட்டர் இசென்ஹர்டு.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF