Friday, January 20, 2012

செவ்வாய் கிரகத்திலிருந்து பூமியின் மீது விழும் பாறைகள்!

செவ்வாய் கிரகத்தில் இருந்து பாறைகள் பூமியின் மீது விழுகின்றது என்ற அதிர்ச்சித் தகவலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.
இதற்கு உதாரணமாக சமீபத்தில் மொராக்கோவில் 15 பவுண்ட் எடை உள்ள பாறைகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. அவற்றை ஆய்வு செய்த போது அவை ஜூலை மாதம் செவ்வாய் கிரத்தில் இருந்து விழுந்தவை என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.


இது 5வது முறையாக பூமியில் விழுந்துள்ளது. விண்கல் நிபுணர்கள் மற்றும் நாசா விஞ்ஞானிகள் அடங்கிய குழு இந்த பாறைகளை சோதனை செய்து, இவை செவ்வாய்கிரகத்தில் இருந்து வந்தவை தான் என உறுதி செய்தனர்.செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கு சாத்தியம் உள்ளதா என்பது குறித்து ஆராய்ச்சி நடந்துவரும் வேளையில் பாறைகள் பூமியில் விழுவது முக்கிய திருப்பமாகும்.





பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF