Wednesday, November 10, 2010

வொஷிங் மெஷினுக்குள் குழந்தையைப் போட்டுத் துவைத்த தாய் கைது!


வொஷிங் மெஷினுக்குள் துணிகளுடன் குழந்தையையும் சலவை செய்த அதன் தாயார் பொலிசாரல் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
அமெரிக்காவில் உள்ள ஒக்லஹோமாவைச் சேர்ந்த லிண்ட் சே பிட்லர் என்பவரே கைது செய்யப்பட்டவராவா. இவருக்கு ஏற்கனவே 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு முன் மூன்றாவது பெண் குழந்தை பிறந்தது.


இந்நிலையில், தூக்க கலக்கத்தில் இருந்த லிண்ட்சே அழுக்கு துணிகளைச் சலவை செய்ய வொஷிங் மெஷினில் போட்டார். அப்போது, துணிகளுடன் சேர்த்து படுக்க வைத்திருந்த பெண் குழந்தையையும் வாஷிங் மெஷினுக்குள் போட்டு சுவிட்சைப் போட்டார்.


துணியுடன் சேர்த்து குழந்தையையும் மெஷின் துவைத்தது.


இதற்கிடையே, குழந்தையின் அத்தை ரோண்டா தற்செயலாக வீட்டுக்கு வந்தார். அப்போது வாஷிங் மெஷின் சுற்றாமல் சத்தம் போட்டப்படியே இருந்ததைக் கண்ட அவர், அதன் சுவிட்சை நிறுத்திவிட்டுத் திறந்து பார்த்தார்.


உள்ளே பிறந்து 10 நாட்களே ஆன அந்தப் பச்சிளம் குழந்தை இறந்து கிடந்தது.


இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே பொலிசுக்குத் தகவல் கொடுத்தார். பொலிசார் விரைந்து வந்து குழந்தையின் தாயார் லிண்ட் சேவைக் கைது செய்தனர்.


தூக்கக் கலக்கத்தில் கவனக்குறைவால் இச்சம்பவம் நடந்ததாகப் பொலிசார் தெரிவித்தனர். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF