Saturday, November 20, 2010

மத்திய கிழக்கு நாடான டோகா கட்டாரில் மீண்டும் ஒரு படுகொலை



மத்திய கிழக்கு நாடான டோகா கட்டாரில் மீண்டும் ஒரு படுகொலை இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியைச் சோ்ந்த  நான்கு பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய சந்திரன் என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் இவர் கட்டார் நாட்டுக்கு வேலை பார்ப்பதற்காக வந்திருந்தார். நேற்று பிற்பகல் சுமார் 5 .22 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இறந்தவர் உட்பட நான்கு பேர் மது அருந்திக்கொண்டு இருந்தவேளை, இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக மட்டக்களப்பு நீலாவணையை சொந்த இடமாக கொண்ட ஒருவராலே அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
முதலில் மது போத்தலால் தலையில் அடித்தவுடன் போத்தல் உடைந்ததும் மறுபடியும் வயித்தில் போத்தலால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
 தற்பொழுது இறந்தவரின் உடல் அகமட் மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருக்கிறது.
படுகொலை செய்தவர் உட்பட மது அருந்திய 2 பேரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இச்சம்பவம் இடம்பெற்ற இடம் உம் சலால் அலி. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இதுபோன்ற சம்பவம் கத்தாரில் இடம்பெற்றது குறிப்பிடதக்கது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF