
இரசாயன கழிவுகளினால் உலகின் 18 – 22 மில்லியன் வரையிலான மக்கள் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் கிறீன் க்ரொஸ் அமைப்பும், அமெரிக்காவின் பிளக் ஸ்மித் நிறுவகமும் இணைந்து ஆய்வுகளை நடத்தியுள்ளன.
எரிவாயு போக்குவரத்து, பற்றரி பாவனை, ஏனைய இலத்திரனியல் கழிவுகள் போன்றவற்றினால் ஆபத்து ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இரசாயன கழிவுகளினால் சுமார் 100 மில்லியன் மக்கள் சுகாதார பிரச்சினைகளை எதிர்நோக்கக் கூடுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
புற்று நோய், உள ரீதியான நோய்கள், உறுப்புக்கள் செயலிழக்கின்றமை போன்ற பல்வேறு அனர்த்தங்கள் ஏற்படக் கூடிய அச்சுறுத்தல் நிலவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF