
அஸ்திரேலியாவின் குவாண்டாஸ் ஜெட்லைனர் பயணிகள் விமானத்தில் தீப்பிடித்துவிட்டதாக வெளியான பரபரப்பு தகவலால், குறித்த விமானம் சிங்கப்பூரில் அவசரமாக தரையிறங்கியது.
இன்று (வியாழக்கிழமை) காலை அஸ்திரேலியாவை நோக்கி 459 பயனிகளுடன் குவாண்டாஸ் விமானம் சென்றுகொண்டிருந்தது. இந்தோனேசியாவுக்கு மேலாக பறந்துகொண்டிருக்கையில் விமானத்தின் நான்கு இன்ஜினில் ஒன்று கோளாறினால் நின்று விட்டது. அண்மையில் இந்தோனேசியாவின் மெராபி எரிமலை வெடித்ததன் தாக்கத்தால் விமான எஞ்சின் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக குறித்த விமானம் சிங்கப்பூரில் தரையிறக்கப்பட்டு என்ஜின் மாற்றப்பட்டது. பின்னர் அஸ்திரேலியாவை நோக்கி புறப்பட்டது.
எனினும் குறித்த விமானம் விபத்துக்குள்ளாகிவிட்டதாகவும், தீப்பிடித்து விட்டதாகவும் முன்னர் வந்திருந்த செய்திகளை அஸ்திரேலியா முற்றாக மறுத்துள்ளது.
உடனடியாக குறித்த விமானம் சிங்கப்பூரில் தரையிறக்கப்பட்டு என்ஜின் மாற்றப்பட்டது. பின்னர் அஸ்திரேலியாவை நோக்கி புறப்பட்டது.
எனினும் குறித்த விமானம் விபத்துக்குள்ளாகிவிட்டதாகவும், தீப்பிடித்து விட்டதாகவும் முன்னர் வந்திருந்த செய்திகளை அஸ்திரேலியா முற்றாக மறுத்துள்ளது.