Wednesday, November 24, 2010

அமெரிக்க அதிபர் ஒபாமா எழுதிய புத்தகம் அமோக விற்பனை: 5 நாட்களில் 50 ஆயிரம் பிரதிகள் விற்றது



அமெரிக்க அதிபர் பராக் ஓபாமா புத்தகம் எழுதுவதில் ஆர்வம் மிக்கவர், இவர் அதிபராவதற்கு முன்பே பல புத்தகங்களை எழுதியுள்ளார். அப்போது எழுதிய புத்தகங்களில் ஒன்று கடந்த 16-ந்தேதி விற்பனைக்கு வெளியிடப்பட்டது. இது குழந்தைகளுக்கான படத்துடன் கூடிய புத்தகம். இந்த புத்தகத்துக்கு ஆப் தீ ஐ சிங் என ஒபாமா பெயரிட்டுள்ளார். இது அமோகமாக விற்பனை ஆகியுள்ளது.

இப்புத்தகம் வெளியிடப்பட்ட 5 நாட்களில் 50 ஆயிரம் பிரதிகள் விற்றுத்தீர்ந்துள்ளன. மேலும் இன்னும் பரபரப்பாக விற்பனையாகி வருகிறது. புத்தகத்தை குழந்தைகள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை குழந்தைகளின் படிப்புக்கான உதவி தொகையும், போரில் உடல் உறுப்புகளை இழந்த ராணுவ வீரர்களுக்கும் வழங்க அதிபர் ஒபாமா முடிவு செய்துள்ளார்.

மேலும் இப்புத்தகத்தை ஜாக்கிராபின்சன், ஜார்ஜ் வாஷிங்டன் மற்றும் அமெரிக்கர்களுக்கு சமர்ப்பணம் செய்வதாகவும் தெரிவித்துள்ளார். சமீபத்தில், தி அட்டா சிட்டி ஆப்ஹோப் என்ற புத்தகத்தை ஒபாமா எழுதியுள்ளார். ஆனால் அதை விற்பனைக்கு வெளியிட வில்லை.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF