
கண்பார்வை அற்றோரின் கண்களுக்குள் (ரெட்டினா வுக்குள்) 3 மில்லி மீட்டர் விட்டமுடைய எலக்ரானிக் கருவி ஒன்றை இடுவதன் மூலம் கண்பார்வையற்றோர் பார்க்கலாம் என தற்போது நிரூமபனமாகியுள்ளது. பிரித்தானியாவில் இத் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டாலும் முதல் முதலாக ஜெர்மனியில் பரீச்சிக்கப்படுப் பார்க்கப்பட்டுள்ளது. 3 மி.மி விட்டம் கொண்ட இச் சிறிய எலக்ரானிக் கருவி, சுமார் 1,500 ஒளிக் கீற்றுகளை உள்வாங்கி, அதனை விம்பமாக மாற்றி மூளைக்குச் செல்லும் உணர்வு நரம்புகளுக்கு நேரடியாகச் செலுத்துகின்றன. இந்த அதீத கண்டுபிடிப்பால் பல பார்வையற்றோர் பயன்பெற இருக்கின்றனர்.
மனித குலமே வியக்கும் வண்ணம் இக் கண்டுபிடிப்பு அமைந்துள்ளதாக வியக்கப்படுகிறது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF