Friday, November 12, 2010

மழை வெள்ளத்தில் இலங்கை பாராளுமன்றம்

நேற்றிரவு முதல் பெய்த கடும் மழை காரணமாகப் பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாகப் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக கித்துல்கொட தெரிவிக்கிறார்.

பாராளுமன்றத்திற்குப் பிரவேசிக்கும் வீதி நீரில் மூழ்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதன்காரணமாகப் பாராளுமன்ற அலுவலகர்கள் தமது போக்குவரத்திற்காகப் படகுகளைப் பயன்படுத்த நேரிட்டதாக அவர் கூறினார்.

இன்று நடைபெறும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் பின்னர் இன்று பாராளுமன்ற அமர்வு இடம்பெறுவது குறித்துத் தீர்மானிக்கப்படுமெனவும் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF