Sunday, November 28, 2010

பாகிஸ்தானில் சரக்கு விமானம் மோதி விபத்து: 8 பேர் பலி

கராச்சியிலிருந்து சூடான் தலைநகர் கார்ட்டோம் நோக்கி புறப்பட்ட ரஷ்ய சரக்கு விமானம் புறப்பட்ட சில விணாடிகளிலேயெ கட்டிடம் ஒன்றில் மோதி நொறுங்கி, தீப்பிடித்து எறிந்தது. இதில் விமான ஊழியர்கள் 8 பேரும் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 

உயிரிழந்தவர்கள் ரஷ்ய ஊழியர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்ப்படுகின்றது. மேலும் 7 பேர் இதில் காயமடைந்துள்ளனர். 

யு.ஏ.இ.-யிலிருந்து புறப்பட்டு கராச்சி வழியாக சூடான் செல்லவிருந்த இந்த சரக்கு விமானம் இன்று அதிகாலை 1.45 மணிக்கு விபத்துக்குள்ளானது. 

கடந்த ஒரு மாதத்திற்குள் கராச்சியில் ஏற்படும் இரண்டாவது விமான விபத்து என்பது குறிப்பிடத்தக்கது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF