Friday, November 26, 2010

பலஸ்தீனத்திற்குள் இஸ்ரேல் அத்துமீறல் : பள்ளிவாசல் அழிப்பு

மேற்குக்கரையில் உள்ள பலஸ்தீன கிராமமொன்றில் இருந்த பள்ளிவாசல் ஒன்றையும், கட்டிடங்கள் சிலவற்றையும் இஸ்ரேலிய இராணுவம் இடித்து அழித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.00 மணியளவில் சுமார் 200 சிப்பாய்கள் மற்றும் 3 புல்டோசர் வாகனங்கள் ஆகியன 'கிர்பர்ட் யார்சா' என்ற மேற்படி கிராமத்திற்குள் புகுந்து இவற்றை அழித்ததாக அக்கிராம வாசிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் சுமார் 90,000 அமெரிக்க டொலர் வரை நட்டமேற்படுள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த இஸ்ரேல் மேற்படி பகுதி தமது இராணுவத்திற்குரியதென்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்றதெனவும் தெரிவித்துள்ளது.

இச்சம்பவமானது இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கிடையிலான முறுகல் நிலையை மேலும் அதிகரித்துள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF