Friday, November 12, 2010

ஜன்னல் வழியே மதுபானக் கடைக்குள் சீறிப் பாய்ந்த மான்; மக்கள் அலறியடித்து ஓட்டம்

ஓஹியோவில் உணவகம் மற்றும் மதுபானக் கடை இணைந்து இருக்கும் ஒரு கடைக்குள் திடிரென ஜன்னல் வழியே மான் ஒன்று சீறிப்பாய்ந்து வந்தது. வந்த வேகத்தில் அங்கிருந்த மேசை நாற்காலிகளையும் உடைத்துத் தள்ளியுள்ளது.

யாரும் அந்த நேரத்தில் உணவருந்திக் கொண்டிருக்கவில்லை என்பதால் தப்பித்தனர்

மது பானங்கள் அருந்திக் கொண்டிருந்த சிலர் மானின் சீற்றத்தைக் கண்டு அலறியடித்து ஓடினர். சிறிது நேரம் அனைவரையும் மிரட்டி பொருட்களை சேதப்படுத்திய மான் மீண்டும் ஜன்னல் வழியே வெளியே சென்றது.

இருப்பினும் ஜன்னலுக்கு வெளியே சில நிமிடங்கள் மான் நின்று கொண்டே இருந்ததால் எந்த நேரத்திலும் உணவகத்திற்குள் பாய்ந்து விடுமோ என்ற திகிலில் பணியாளர்களும் மதுபானம் அருந்துவோரும் உறைந்தனர். இணையத்தில் அனைவராலும் விரும்பிப் பார்க்கப்படுகிறது இந்த வீடியோ.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF