Tuesday, November 29, 2011

வாழும்போதே சாதித்திடு!!!



வேட்கையுண்டு வாழ்வில்
வீர் கொண்டெழு மனிதா
வாழும் போது நீ சாதித்திடாத
சரித்திரங்களெதுவும்
சாவுகளோடு நிலைத்திடுவதில்லை


தலைமைகள் எமக்கு வழிகாட்டியாகி
அத்தனையிலும் சாதித்தவர்களாக
அவர்களின் சாகசங்களை
அடுக்கடுக்காய் அசைபோடுகிறோமே


அதிகாலை எழுந்தது முதல்
அந்திமாலை உறங்கும் வரை
உன் பயணத்தின் அசைவுகளோடு
உன்நிலையின் உசிதமதை
கேள்வி கணக்குடன் வகுத்துப்பார்


தீமைகளுக்கு வித்திட்டவனா
நன்மையொன்று செய்திருந்தேனா - என
நாட்களின் நகர்விலும் ஆயுழின் தேய்விலும்
சரிசெய்திடாத வாழ்வில்
ஜெயித்திட முடிந்திடுவதில்லை 


புத்தகப் பூச்சியாய் வெளியுலகறிந்திடாது 
நடப்பது பிறருக்கென்று தன்னலங்கருதி 
ஓடியெழிந்து சந்தோசம் தேடுவதில் 
நாளைய சந்ததிக்கு சரித்திரமாகிடாது!

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF