Thursday, November 17, 2011

மேகக்கூட்டங்களின் நடுவே எடுக்கப்பட்ட புகைப்படங்கள்!!!

வானம், நட்சத்திரம், அதிகாலையில் பறவைகளின் சங்கீதங்கள், அழகான மாலைப் பொழுது போன்றவற்றை ரசிப்பது என்றால் அனைவருக்கும் ஒரு அலாதி பிரியம் தான். மிகவும் திறமைப்படைத்த டெய்லர் என்ற புகைப்பட நிபுணர் வித்தியாசமான புகைப்படங்களை எடுப்பதில் வல்லமை படைத்தவர்.
அவர் தற்பொழுது மேகக்கூட்டங்களின் நடுவே பலவித புகைப்படங்களை எடுத்து சாதனை படைத்துள்ளார். இந்த புகைப்படங்களை எடுப்பதற்காக பல்வேறு திறமைப்படைத்த வல்லுநர்களுடன் சென்றுள்ளார்.ஒவ்வொரு புகைப்படத்தையும் எடுப்பதற்கு 20 நிமிடங்கள் எடுத்துக் கொண்டுள்ளார். மேலும் வானத்தில் பல்வேறு சாகசங்களையும் நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அவர் கூறுகையில், இத்தகைய அரிய புகைப்படங்களை எடுப்பதற்கு வானிலை, சூரிய ஒளி மற்றும் பனிமூட்டம் பெரும் உதவியாக இருந்தது. இதனாலேயே புகைப்படங்கள் மிகவும் அழகாக வந்துள்ளது என்றார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF