
இரத்தக்குழாய்களான நாடி, நாளம் என்பனவற்றில் உண்டாகும் கட்டிகள் காரணமாக இரத்த ஓட்டம் தடைப்படுவதனால் "ஸ்ரோக்" போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. இதனால் சில சந்தர்ப்பங்களில் இறப்புகளும் ஏற்படலாம்.
தற்போது இவ்வாறான நோய்களுக்கு இலகுவாக சிகிச்சை அளிப்பதற்கென டொக்டர்.ஜெப்ரி சேவர் என்பவரின் தலமையில் இயங்கும் குழுவினால் விசேட உபகரணமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இக்கருவிகள் மிக மெலிதாக காணப்படும் இரத்தக்குழாய்களுள் செலுத்தக்கூடியவாறு மெல்லிய தடிப்பம் உடையனவாகவும், அதன் முனைகள் இரத்தக்குழாய்களை சேதப்படுத்தாத வண்ணமும் அமைக்கப்பட்டுள்ளது.



