Wednesday, October 19, 2011

மனிதர்களுடன் நண்பர்களாய் பழகும் டைனோசர்கள்!!!


டைனோசரும் மனிதர்களும் ஒரு காலத்தில் நண்பர்களாய் வாழ்ந்துள்ளனர் என்றால் நம்ப முடியுமா? ஆனால் அது தான் உண்மை.தென் மேற்கு சீனாவில் இதற்கான சான்றுகள் உள்ளதை சீன மற்றும் அமெரிக்க கூட்டு விஞ்ஞானிகன் கண்டுபிடித்துள்ளனர்.
சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சாங்கிங் நகருக்கு அருகே உள்ள இடம் கிஜியாங். இங்குள்ள லியான்ஹுவா போசாய் பகுதியில் ஜிங்லிடா தலைமையில் சீனா, அமெரிக்கா விஞ்ஞானிகள் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.இதில் தெரியவந்த ஆச்சரிய தகவல்கள் பற்றி ஜிங்லிடா கூறியதாவது: சீனாவின் லியான்ஹுவா போசாய் பகுதியில் மக்கள் சுமார் 700 ஆண்டு காலம் வாழ்ந்துள்ளனர். நாய் வளர்ப்பது போல டைனோசர்களை செல்ல பிராணிகளாக இப்பகுதியினர் வளர்த்திருக்கின்றனர்.
தாமரை இலைக்கோட்டை என்று பொருள் படும் வகையில் லியான்ஹுவா போசாய் என்று பெயரிட்டிருக்கிறார்கள். இப்பகுதியில் பல இடங்களில் 350 முதல் 400 டைனோசர் காலடி தடங்கள் தெளிவாக உள்ளன. கோட்டை போன்ற வீட்டை கட்டி அங்கு டைனோசர்களுடன் மக்கள் தங்கியிருந்திருக்கின்றனர்.இது தவிர மேலும் பல ஆதாரங்களும் கிடைத்துள்ளன. இங்கு கிடைத்த ஏராளமான டைனோசர் மற்றும் மனித தடயங்கள் மூலம் அரிய தகவல்கள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இவ்வாறு ஜிங்லிடா கூறியுள்ளார். அப்பகுதியில் தொடர்ந்து ஆய்வு நடந்து வருகிறது. இதில் மேலும் பல சுவாரஸ்ய தகவல்கள் கிடைக்கும் என்று தெரிகிறது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF