Thursday, May 19, 2011

கைத்தொலைபேசியில் கூகுள் ஆண்ட்ராய்ட் ஓபரேடிங் சிஸ்டம் உபயோகிப்பவர்களின் கவனத்திற்கு.


கூகுள் ஆண்ட்ராய்ட் ஓபரேடிங் சிஸ்டத்தில் தகவல்களை எளிதில் களவாட முடியும் என ஜேர்மன் தொழில்நுட்ப பாதுகாப்பு ஆய்வாளர் பாஸ்டியன் கொனிங்ஸ் எச்சரித்துள்ளார்.மேலும் பயன்பாட்டாளர் பொது இணையதள இணைப்பை தொடர்பு கொள்ளும் போது அவரது தொலைபேசி தகவல்கள் அனைத்தும் திருடப்படக் கூடிய அபாயம் உள்ளது எனவும் எச்சரித்துள்ளார்.
இந்த நிபுணர் ஜேர்மனியின் உல்ம் பல்கலைகழகத்தில் பணியாற்றுகிறார். இவர் டெர்ஸ்பைகல் இதழுக்கு அளித்த பேட்டியில் தகவல் திருடப்படும் தொலைபேசியில் உள்ள தொடர்பு விவரங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை பார்வையிட முடியும் என அவர் கூறியுள்ளார்.குறிப்பிட்ட நபர்கள் வெளிநாடு செல்ல திட்டமிடுவதை கண்காணிக்க இணையதள திருடர்கள் இந்த முறையை பயன்படுத்துவதாக கூறியுள்ளார். இந்த ஓபரேடிங் சிஸ்ட செயல்பாடு குறித்து நிபுணர் கோனிங்ஸ் குறிப்பிட்ட நிறுவனத்திடம் எச்சரித்துள்ளார்.
இருப்பினும் நிறுவனம் தரப்பில் இருந்து வரவில்லை. திறன் வாய்ந்த தகவல் திருட்டு நபர்கள் கூகுள் இணைப்புகளையே வெளித் தொடர்புக்கு பயன்படுத்துகிறார்கள் என்றும் கோனிங்ஸ் கூறினார்.கூகுளின் பெரும் சேவையில் உள்ள விவரங்கள் குறிப்பாக அங்கீகார விவரங்கள் போன்ற தகவல்களை தகவல் திருட்டு நபர்கள் எடுக்கும் நிலை உள்ளது என கோனிங்ஸ் கூறியுள்ளார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF