Thursday, December 16, 2010

தேங்காய் விலையை கட்டுப்படுத்த வெளிநாட்டிலிருந்து தேங்காய் இறக்குமதி



தேங்காய் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் வெளிநாட்டிலிருந்து தேங்காய்களை இறக்குமதி செய்யவுள்ளது.
துரித கதியில் தேங்காய் இறக்குமதி செய்யப்பட உள்ளதாகவும், நாட்டில் தேங்காய்க்கு பாரிய பற்றாக்குறை நிலவி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அடுத்த வாரமளவில் தேங்காய் இறக்குமதி செய்யப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
உள்நாட்டு சந்தையில் ஒரு தேங்காய் 55 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாடுகளிலிருந்து தேங்காய் இறக்குமதி செய்யப்பட்ட பின்னர் தேங்காய் ஒன்றை 25 தொடக்கம் 30 ரூபாவுக்கு பெற்றுக்கொள்ளமுடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
மலேஷியா, இந்தியா போன்ற நாடுகளிலிருந்து தேங்காய் இறக்குமதி செய்யப்படவுள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF