Monday, December 27, 2010

பூமியில் 330 கோடி ஆண்டுக்கு முன்பே உயிரினங்கள் தோற்றம்



மண்ணுக்குள் இருந்து விலங்குகள் மற்றும் தாவரங்களின் புதை படிவங்களில் ஆய்வை மாசா சு செட் தொழிற்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் எரிக் ஆலம் மற்றும் லாரன்ஸ் டேவிட் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர். அதிலிருந்து மரபணு மூலக்கூறுகளை எடுத்து பூமியில் உயிரினங்கள் எப்போது தோன்றின என ஆராய்ச்சி செய்தனர்.

அதன்படி 280 கோடி முதல் 330 கோடி ஆண்டுகளுக்கு இடையே உயிரினங்கள் தோன்றியிருக்க கூடும். அப்போது தற்போதுள்ள 27 சதவீத மரபணு குடும்பங்கள் உருவாகியிருக்கலாம் என தெரிவித்துள்ளனர். உயிரி ரசாயன முறை ஏற்பட்டு உயிரியல் பணி நடைபெற சூரிய ஒளிசக்தி முக்கிய பங்கு வகுத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF