Saturday, December 25, 2010

பூமியின் உட்புற காந்த சக்தி மைய வலிமையின் அளவு முதன்முதலாக ஆய்வில் கண்டுபிடிப்பு


நாம் வாழும் பூமியில் உள்ள புவி ஈர்ப்பு விசைக்கு முழு காரணம் காந்த சக்தி மையமே இந்த காந்த சக்தி மைய வலிமையை பற்றி கலிபோர்னிய பல்கலைகழக பூமி மற்றும் கோள் அறிவியல் துறை பேராசிரியர் புரூஸ் ஏ. பபெட் என்பவர் ஆராய்ச்சி மேற்கொண்டார்.
அதன்படி பூமியின் உட்புறம் ஏறத்தாழ 1800 மைல்கள் (2,896 கி.மீ.) ஆழத்தில் இந்த காந்த சக்தி மையம் அமைந்திருக்கிறது என கண்டறிந்துள்ளார். இது பூமியின் மேற்பரப்பில் காணப்படும் காந்த சக்தி மையத்தை விட 50 மடங்கு வலிமை வாய்ந்தது குறிப்பிடத்தக்கது. வெப்பமானது பூமிக்கு 3 விதமான வழிகளில் கிடைக்கிறது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அவை
1) சுமார் 4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்பு பூமி உருவானபோது ஏற்பட்ட வெப்பம்
2) பூமிக்குள் காணப்படும் தனிமங்கள் வெளியிடும் புவியீர்ப்பு ஆற்றல் வழியாக கிடைக்கும் வெப்பம் மற்றும்
3) நீண்ட காலமாக பூமியில் உள்ள பொட்டாசியம், யுரேனியம் மற்றும் தோரியம் போன்ற கதிரியக்க தனிமங்களின் சிதைவுகளால் வெளிப்படும் வெப்பம் என வெப்பமானது பூமிக்கு கிடைக்கும் காரணிகளாக கூறப்படுகிறது.
மேலும், பூமியின் உட்புறம் உள்ள காந்தபுலம் தொடர்ந்து பல ஆயிரக்கணக்கான வருடங்களாக நீடித்து வருகிறது. அதற்கு பூமியில் காணப்படும் இந்த வெப்பமே அடிப்படை ஆகும். உற்பத்தியாகும் வெப்பமானது தொடர்ந்து காந்தபுலத்தை தோற்றுவிக்கும் ஒரு சிறந்த சக்தியாக விளங்கி வருகிறது. ஏறத்தாழ 1,400 மைல்கள் (2,253 கி.மீ.) அளவிற்கு அடர்த்தி மிகுந்த பூமியின் வெளிப்புற அடுக்கு வெப்பத்தின் உதவியால் கொதிப்படைகிறது. இதனால் உள்ளே உள்ள தனிமங்கள் ஆற்றலை உற்பத்தி செய்து பின்னர் சிறிது சிறிதாக அவற்றை மின்னாற்றலாக மாற்றுகிறது. அந்த மின்னாற்றல் காந்த சக்தி மையம் பூமியில் தொடர்ந்து நீடிக்க உதவுகிறது. இந்த காந்த சக்தி மையம் பின்னர் பூமியின் மேற்புறம் வரை பரவுகிறது. இது பற்றிய தகவல்களை கண்டறிந்துள்ள அறிவியலாளர் புரூஸ் பூமியின் உட்புறம் காணப்படும் அரிய விசயங்கள் பற்றிய தனது ஆராய்ச்சியினை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF