Friday, February 11, 2011

தனது பச்சிளங்குழந்தையை உயிருடன் சாப்பிட்ட மாமனிதன்.


தனது பச்சிளங்குழந்தையை உயிருடன் சாப்பிட்ட பப்புவா நியூ கினியாவைச் சேர்ந்தவரை அப்பகுதி மக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
இந்நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள தபுபில் புறநகரைச் சேர்ந்தவன் ஒரு சூனியக்காரன்.
குடிப்பழக்கத்துக்கு அடிமையான இவன், பில்லி சூனியம் செய்வதை தொழிலாக கொண்டிருந்தான். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டில் ஒரு பூஜை நடத்தி உள்ளான்.
அந்த பூஜைக்கு தனது பச்சிளங்குழந்தையை நரபலியாக கொடுக்க முன்வந்தான். அதுவும், அந்த குழந்தையை உயிருடனேயே கடித்து சாப்பிட்டிருக்கிறான்.
குழந்தையின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
அவனையும் அவனது செயலுக்கு உடந்தையாக இருந்த அவனது மனைவியையும் போலீசார் கைது செய்தனர். எனினும், குழந்தை இறந்து விட்டதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF