Thursday, December 22, 2011

இங்கிலாந்தில் 15 குட்டிகளை ஈன்ற நாய்!

இங்கிலாந்தில் உள்ள கார்மர்ண்டன் ஷயர் நகரை சேர்ந்தவர் சுல்லிவன். இவர் நாய் ஒன்று வளர்த்து வந்தார். இந்த நாய் மொத்தம் 15 குட்டிகள் ஈன்றுள்ளது.இதில் 5 ஆண் குட்டிகள், 10 பெண் குட்டிகள். ஒரே நாய் 15 குட்டிகள் போட்டது அதிசயமாக கருதப்படுகிறது. இதை ஏராளமானோர் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.இதுகுறித்து சுல்லிவன் கூறியதாவது, நாய் வயிறு பெரிதாக இருந்ததால் 7 அல்லது 8 குட்டி போடும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் 15 குட்டி போட்டிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.ஆனால் இத்தனை குட்டியையும் எங்களால் வளர்க்க முடியாது. 2 குட்டிகளை மட்டும் எங்களோடு வளர்க்க போகிறோம். மற்றவற்றை விற்று விடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.






பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF