Friday, July 22, 2011

வைரங்களில் பள்ளத்தை ஏற்படுத்தும் சூரிய ஒளி: ஆய்வில் தகவல்.


வைரத்தின் மீது புறஊதா கதிர்கள் தொடர்ந்து படுவதால் அதில் பள்ளங்கள் ஏற்படுகிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
பூமியின் மிக விலை உயர்ந்த கொடை வைரம். இதை விரும்பாத பெண்கள் அரிது. பாரம்பரியம், லேட்டஸ்ட் பேஷன் இரண்டுக்கும் ஈடுகொடுக்கிறது. அதனால் தான் விலை அதிகம் என்றாலும் மவுசும் குறையாமல் இருக்கிறது.
வைரத்தின் தன்மை மற்றும் கதிர்வீச்சுகளால் அதில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி அவுஸ்திரேலியவின் சிட்னி நகரில் உள்ள மெக்கரி பல்கலைக்கழகத்தில் வைர ஆராய்ச்சியாளர் ரிச்சர்ட் மில்டர்ன் தலைமையில் சமீபத்தில் விரிவான ஆய்வு நடத்தப்பட்டது.
அதில் தெரியவந்த தகவல்கள் பின்வருமாறு: முத்துக்களை போல வைரங்களும் ஆவியாகும் தன்மை கொண்டது என்பது தற்போது தெரியவந்துள்ளது. குறிப்பாக புறஊதா கதிர்கள் படும் போது வைரம் விரைவில் ஆவியாகிறது.
வேறு சில உலோகங்களைப் போல வைரத்தையும் ஆவியாக்கக்கூடிய சக்தி புறஊதா கதிர்களுக்கு உள்ளது. புறஊதா கதிர்களை தொடர்ந்து செலுத்தியதில் ஒரு சில வினாடிகளிலேயே வைரக் கல்லில் நுண்ணிய பள்ளங்கள் ஏற்பட்டன.
அதிக வெப்பத்தில் நீண்ட நேரம் இக்கதிர்வீச்சில் இருந்த வைரக் கற்கள் அதிகம் கரைந்தன. சூரிய ஒளியில் புறஊதா கதிர்கள் இருந்தாலும், வைரக் கல்லை பாதிக்கும் அளவுக்கு அவற்றின் வீரியம் இருப்பதில்லை. இதனால் வெயிலில் அணிந்து செல்வதால் வைரம் பாதிக்கப்படுவதில்லை.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF