Saturday, March 10, 2012

பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரிப்பு!


பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பெண்களுக்கு பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.அவ்வாறு கட்டுப்பாடுகளை மீறும் பட்சத்தில் தலிபான்களின் தாக்குதலுக்கு ஆளாகுகின்றனர்.பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஸ்வாபியில் கல்லூரியில் தலிபான் தீவிரவாதிகள் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தினர்.இந்த தாக்குதலில் பெண்கள் கல்லூரி தரைமட்டமாக்கப்பட்டது, அதிர்ஷ்டவசமாக எவ்வித உயிர் இழப்பும் ஏற்படவில்லை என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் தீவிரவாதிகள் கல்லூரி கட்டிடத்துக்கு வெளியே வெடிகுண்டை வைத்து வெடிக்க செய்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF