Monday, March 5, 2012

பிரான்சின் ஆயுதக்கிடங்கில் வெடி விபத்து: 200 பேர் பலி, 1500 பேர் படுகாயம்!

பிரான்சின் இராணுவத் தலைமையகமான காங்கோவில் உள்ள ஆயுதக்கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 200 பேர் பலியாகி உள்ளனர், 1500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.காங்கோ நாட்டின் தலைநகர் பிரேசாவில்லேயின் கிழக்கு பகுதியில் உள்ள இராணுவ வெடிமருந்து கிடங்கில் திடீரென்று வெடி விபத்து ஏற்பட்டது.இதைத்தொடர்ந்து அங்கிருந்த வெடிகுண்டுகள் மற்றும் வெடிபொருட்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறின. நீண்ட நேரம் அவை வெடித்துக் கொண்டே இருந்தன.


இந்த வெடிவிபத்தில் 200 பேர் பலி ஆனார்கள். மேலும் 1500-க்கும் அதிகமான பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக இராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். காயம் அடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.இந்த வெடிவிபத்தில் அருகில் உள்ள சில கட்டிடங்களும் சேதம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்தால் அப்பகுதி மக்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF