Friday, October 15, 2010

கடலுக்குமேல் மாயமாக மறையும் கப்பல்கள்!

விண்வெளியில் என்ன இருக்கிறது, சந்திரனில் என்ன இருக்கிறது, அல்லது செய்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகள், தாம் வசிக்கும் பூமியில் இருக்கும் சில அதிசயங்களை ஆராயத் தயங்குகின்றனர். காரணம் அங்குசென்றால் மரணம் தான் நிகழும் என்று பயமா எனத் தெரியவில்லை. அமெரிக்காவின் மயாமி, வட அட்லாண்டிக் கடலின் மேல்பகுதியில் இருந்து பராமுடா வரையும், அங்கிருந்து சான் -ஜான் -பெரு ரிக்கோ என்ற தீவுகள் அடங்கலாக ஒரு முக்கோண வடிவில் அமைந்திருக்கும் கடல் பகுதியையே பரமுடா முக்கோணம் என அழைக்கப்படுகிறது. உலகிலேயே மிக ஆபத்தான பகுதியாக கருதப்படுவது இதுதான்.

அக் கடல் பிரதேசத்தில் சென்ற கப்பல், சிறு வள்ளங்கள் அடங்கலாக சுமார் 1000 த்திற்கு மேற்பட்ட கப்பல்களை அது விழுங்கியுள்ளது. அப்பிரதேசத்தில் மட்டும் காலநிலை சில நிமிடத்தில் மாற்றமடைவதாகவும், அமெரிக்காவை கண்டு பிடித்த கொலம்பஸ், குறிப்புகளில் கூட அப் பிரதேசத்தில் வித்தியாசமான மின்னல் மற்றும் வெளிச்சங்கள் தோன்றுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மின் காந்த அலைகள் கடுமையாக அங்கு காணப்படுவதால், விமானத்தில் இயங்கும் கம்பியூட்டர் உட்பட பல கருவிகள் உடனடியாகவே பாதிக்கப்பட்டு அவ்வழியில் செல்லும் பல விமானங்கள் மாயமான முறையில், கடலினுள் விழுந்து மறைந்துள்ளது.

அப்பகுதியில் பறப்பில் ஈடுபடும், போர் விமானங்கள் கூட பல மாயமாக மறைந்துள்ளது. பரமுடா முக்கோணப் பகுதியில் கடலில் திடீர் திடீரென பாரிய குழிகள் தோன்றுவதாகவும் அக்குழிகளுக்குள்ளேயே, கப்பல்கள் சிக்குண்டு மறைவதாகக் கூறப்படுகிறது. திடீர் திடீர் எனத்தோன்றும் கரும்மேகக் கூட்டங்களில் இருந்து பலத்த இடிமின்னல்களும் அப்பகுதியில் வருவதால், விமானங்களும் பறப்பில் ஈடுபடுவது இல்லை. எது எவ்வாறு இருப்பினும் இந்த மறைதல்களுக்கு அமானுட சக்தி, அதாவது இயற்பியல் விதியை மீறிய பிரபஞ்சத்திற்கு அப்பாற்பட்ட ஜீவன்களின் நடவடிக்கை காரணமாக இருப்பதாக பொதுமக்கள் நம்புகின்றனர்.

இதுவரை மறைந்த கப்பல்களோ, அல்லது விமானங்களோ ஏன் காணமல் போனது என்று எவராலும் கூறமுடியாத நிலை இருப்பதாகவும், அப்பகுதியில் சில வகை பக்ரீரியாக்கள் கடலுக்கு அடியில் வாழ்வதாகக் கூறப்படுகிறது. பெரும் எண்ணிக்கையில் இவை மைல் கணக்கில் நீண்டு அகண்டு கடலின் அடிப்பகுதியில் காணப்படுவதாகவும் அவைவெளியிடும் ஒருவகை வாயுவால், அப்பகுதியில் கடல்சீற்றம் ஏற்பட்டு பருவமாற்றம், மற்றும் இடி மின்னல் தோன்றுவதாக சில விஞ்ஞானிகள் தெரிவித்தாலும், அதை எவரும் இதுவரை சரியாக நிரூபிக்கவில்லை. மர்மம் தொடர்கிறது.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF