Saturday, October 9, 2010

கடல் அசுத்தங்களை சுத்தமாக்க ரோபோ மீன்

கடல் அசுத்தங்களைக் கண்டுபிடிப்பதற்கான கருவியை எம்.ஐ.டி நிறுவனம் தயாரித்துள்ளது. கடலில் நீண்ட தூரம் பயணம் செய்யும் கப்பல்களிலிருந்து குறிப்பாக எண்ணெய்க் கப்பல்களிலிருந்து எண்ணெய்க் கசிவு ஏற்பட்டு அது கடலில் அசுத்தங்களை ஏற்படுத்தி கடல்வாழ் உயிரினங்களுக்குப் பெரும் பாதிப்பினை ஏற்படுத்திவிடுகின்றன. 

கடலில் இதுபோன்ற அசுத்தங்களைக் கண்டுபிடிப்பதற்காக கருவியான ரோபோ மீனினை எம்.ஐ.டி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த ரோபோ மீனில் விசேஷமான சென்ஸர்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

அதனூடாக கடலில் எங்கே மாசு படிந்திருக்கின்றது?, எண்ணெய்க் கசிவு ஏற்பட்டிருக்கின்றது என்பதனை துல்லியமாகக் கண்டுபிடிக்கலாம் என்கின்றார்கள் விஞ்ஞானிகள்
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF