Thursday, October 21, 2010

1.5 மில்லியன் கார்களை திரும்பப் பெற்றது டொயோட்டா


உலகம் முழுதிலும் டொயோட்டா நிறுவன கார்களை பயன்படுத்தும் பலர் பிரேக் சரியாக இயங்கவில்லை எனக் கொடுத்த புகாரினை தொடர்ந்து குறையிருப்பதாக கண்டறியப்பட்டுள்ள 1.5 மில்லியன் கார்களை திரும்பப் பெறும் முடிவை அந்நிறுவனம் எடுத்துள்ளது.
இந்த வருடத்தின் முற்பகுதியில் உலகின் மிகப்பெரிய கார் நிறுவனமான டொயோட்டாவின் கார்களில் பாதுகாப்பு சரியான வகையில் இல்லை என்ற சர்ச்சை உண்டானது அந்நிறுவனத்திற்கு பெரும பாதிப்பை உண்டாக்கியது. இதைத் தொடர்ந்து ஜப்பான் , அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் டொயோட்டா காரை வாங்கியோர் இதன் ப்ரேக்கில் இருந்து திரவம் கசிவதாக புகாரளித்தனர்.
இது பெரிய பிரசசினை என்பதை உணர்ந்த அந்நிறுவனம் செப்டம்பர் 2004 முதல் பெப்ரவரி 2006 வரையிலான காலகட்டங்களில் தயாரிக்கப்பட்ட கார்களை திரும்பப் பெறுவதென அறிவித்துள்ளது. பிரிட்டனில் மட்டும் 2,081 லெக்சஸ் மாடல் கார்கள் திரும்பப் பெறப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF