
சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் அசாத்தின் ஆதரவாளர்கள் இளைஞன் ஒருவனை உயிருடன் மண்ணுக்குள் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்ள ஷின் அல் அபிடின் நகரில் உள்ள மசூதியில் தொழுகையை முடித்த பின், அனைவரும் போராட்டத்தில் ஈடுபட சென்றனர்.
அப்போது மக்கள் கூட்டத்துக்குள் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. அதில் 11 பேர் உடல் சிதறி பலியாகினர், 28 பேர் காயம் அடைந்தனர். இதேபோன்று டமாஸ்கஸ், பனியாஸ் உள்ளிட்ட பல இடங்களில் போராட்டக்காரர்கள் கூடிய இடங்களில் குண்டுகள் வெடித்தன.இந்த சம்பவங்களுக்கு மத்தியில் இளைஞர் ஒருவன் நடுத்தெருவில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டான்.இந்நேரத்தில் ஐ.நாவின் பிரதிநிதிகள் சிலரும் அங்கு கூடியிருந்தனர், இளைஞனை காப்பாற்ற பல்வேறு முயற்சிகள் எடுத்தும், தோல்வியில் முடிந்தது.
இந்த தாக்குதலுக்கு ஐ.நா பொது செயலாளர் பான் கி மூன் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசின் இதுபோன்ற செயல்கள் சமாதான நடவடிக்கைக்கு ஊறு விளைவிக்கும் எனவும் கூறியுள்ளார். ஆனால் இதனை சிரியா அரசு மறுத்துள்ளது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF