Saturday, May 22, 2010

சாண எரிவாயுவில் ஓடும் ரெயில்

வேகமாக தீர்ந்து வரும் பெட்ரோல், டீசல் மாற்று எரிபொருள் தேவையை அதிகரித்திருக்கிறது. இதன் எதிரொலியாக காட்டாமணக்கில் இருந்து பயோடீசல் உள்பட பலவிதமான மாற்று எரிபொருட்கள் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.

இதில் ஒரு முன்னோடி நிகழ்வாக மாட்டுச் சாண எரிவாயுவைக் கொண்டு முதல்முதலாக ரெயில் இயக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஒக்லகோமா – போர்ட் வொர்த் நகரங்களுக்கு இடையே இந்த ரெயில் இயக்கப்படுகிறது. ஒரு ஆண்டு காலத்துக்கு பயணிகள் ரெயிலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ள அந்த ரெயில் சமீபத்தில் சோதனை ஓட்டமாக விடப்பட்டது.

முதற்கட்ட ஆய்வில் 20 சதவீத எரிவாயுவும் 80 சதவீத டீசலும் சேர்த்து இயக்கிப் பார்க்கப்பட்டது. அதன்பிறகு அதிகப்படியான எரிவாயு சேர்த்து தற்போது ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த ரெயிலுக்கு `ஹார்ட்லேண்ட் பிளையர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

`பொதுவாக உயிரி எரிபொருளை பயன்படுத்தும்போது என்ஜினுக்குள் அழுத்தம் அதிகரித்து பாதிப்புகள் ஏற்படும். எனவே சில மாற்றங்களுடன் இந்த என்ஜின் தயாரிக்கப்பட்டு உள்ளது. தேசிய அளவில் முதல்முதலாக சாண எரிவாயுவில் இயங்கும் வகையில் ரெயில் விடப்பட்டுள்ளது’ என்று அங்குள்ள ரெயில்வே துறை தெரிவித்துள்ளது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF