Wednesday, May 23, 2012

அச்சிட்ட காகிதத்தின் மையை அழிக்கும் தொழில் நுட்பம் அறிமுகம்!


காகிதத்தில் அச்சிட்ட மையை அகற்றி விட்டு, அதே காகிதத்தை மீண்டும் பயன்படுத்தவல்ல, புதிய லேசர் தொழில்நுட்பத்தை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ளது.பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைகழக விஞ்ஞானிகள் புதிய லேசர் தொழில்நுட்பத்தை கண்டறிந்து உள்ளனர். இந்த தொழில்நுட்பம் மூலம், காகிதத்தில் அச்சிட்ட மையை விரைவாக அழித்து விட்டு, அதே காகிதத்தை மீண்டும் பயன்படுத்த முடியும்.இதன் மூலம் காகித உற்பத்திக்கு தேவையான காட்டு மரங்களை அழிப்பதை பெருமளவு குறைப்பதோடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பை அதிகரிக்க முடியும்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF