Sunday, April 18, 2010

அணுவாயுத பாதுகாப்பு குறித்த மாநாடு சாதகமான முறையில் அமையப் பெற்றது : சுவிஸ் ஜனாதிபதி

அணுவாயுத பாதுகாப்பு தொடர்பில் வொஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச மாநாடு சாதகமான முறையில் அமையப் பெற்றதாக சுவிட்சர்லாந்து ஜனாதிபதி டொரிஸ் லூதார்ட் தெரிவித்துள்ளார்.


அணு உற்பத்திகளை மிகவும் பாதுகாப்பான முறையில் பேண வேண்டுமென்ற பரக் ஒபாமாவின் கோரிக்கையை உலக நாடுகளினது தலைவர்கள் ஏற்றுக் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அணு உற்பத்திப் பொருட்களை சட்டவிரோதமான முறையில் கடத்துவோருக்கு எதிராக கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எரிசக்தி பாவனைக்காக பல நாடுகள் அணுசக்தியை பயன்படுத்தி வருகின்ற போதிலும், பிழையான நபர்களின் கைகளில் அணு உற்பத்திப் பொருட்கள் சென்றடையக் கூடாது என சுவிஸ் ஜனாதிபதி மாநாட்டில் வலியுறுத்தியுள்ளார். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF