Sunday, June 27, 2010

மனிதன் நுரையீரலை செயற்கையாக உருவாக்கும் முயற்சி

மனிதன் நுரையீரலை செயற்கையாக உருவாக்கும் முயற்சியில் அமெரிக்காவில் ஏல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர்.இதற்காக முதலில் எலியின் நுரையீரலை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எலி நுரையீரலின் செல்லை எடுத்து அதை வளரச்செய்து அதன் மூலம் நுரையீரலை உருவாக்கினார்கள்.

அது எலி நுரையீரல் போலவே திறம்பட செயல்பட்டது. ஆய்வகத்தில் வைத்து நடத்தப்பட்ட இந்த சோதனையில் சுவாசிக்கும் காற்றில் இருந்து நுரையீரல் ஆக்சிஜன் மற்றும் கார்பன்டை ஆக்சைடை பிரிக்கும் வேலையை சரியாக செய்தது. அதில் ஆக்சிஜனை ரத்தத்தில் உள்ள ஹீமோ குளாபினில் சேர்க்கும் பணியையும் செய்தது. இந்த நுரையீரல் 215 நிமிடத்தில் இருந்து 120 நிமிடம் வரை சரியாக செயல்பட்டது. 

இதே அடிப்படையில் மனித நுரையீரலையும் உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கி உள்ளனர். 

இதுபற்றி விஞ்ஞானி லாரா நிக்கல்சன் கூறும்போது, செயற்கை எலி நுரையீரல் வெற்றிகரமாக செயல்படுகிறது. இதை அடிப்படையாக வைத்து மனித நுரையீரலை உருவாக்க உள்ளோம். 
இதை உருவாக்கி பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிக காலங்கள் ஆகும். ஆனாலும் இது மருத்துவ முன்னேற்றமாக அமையும் என்றார். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF