Tuesday, June 15, 2010

350 கோடி ஆண்டுகளுக்கு முன்பே செவ்வாயில் தண்ணீர் : ஆய்வில் தகவல்

ஹலோ ரொபோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் ஆய்வின் படி 350 கோடி ஆண்டுகளுக்கு முன்பே செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் இருந்திருக்க வேண்டும் என்பது புலனாகிறது. 

அதன் வடக்கு துருவத்தில், அட்லாண்டிக் கடல் அளவு தண்ணீர் இருக்கிறது. இது பூமியில் உள்ள அளவுக்கு சமமானதாகும். 

செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா, இல்லையா என்ற சர்ச்சை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதுகுறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஹலோ ரொபோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் வெளியிட்ட செவ்வாய்க் கிரகத்தின் படங்களை வைத்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.

தவிர, ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்க செயற்கைகோள் வெளியிட்ட தகவல்கள் மூலமும் ஆராய்ச்சி செய்தனர்.

செவ்வாய்க்கிரகத்தில் 54 ஆறுகளின் டெல்டா படுகைகள் உள்ளன. இதனால் அங்கு ஆறுகள் உற்பத்தியாகி ஓடிக்கொண்டிருக்க வாய்ப்பு உள்ளது என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF