Sunday, September 30, 2012

கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவுகள்


இன்றைய அவசர உலகத்தில் உடல் ஆரோக்கியத்தை சரியாக கவனிக்க முடியாமல் இருக்கிறது. அதிலும் மற்றவைகளை பராமரிக்கிறோமோ இல்லையோ, கல்லீரலை முக்கியமாக சரியாக கவனிக்க வேண்டும்.
ஏனெனில் கல்லீரல் நமது உடலில் செரிமானத்தை சரியாக நடத்தி, உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது.மேலும் இரத்தத்தில் உள்ள கழிவுகளையும் சுத்தப்படுத்துகிறது. அத்தகைய கல்லீரலின் வேலையை சரியாக நடத்துவதற்கு ஒரு சில உணவுகள் உதவுகின்றன. இத்தகைய உணவுகளை உண்டால் உடலில் உள்ள கழிவுகள் எளிதில் நீங்கி, கல்லீரலும் ஆரோக்கியமானதாக இருக்கும்.
பூண்டு: 

உடலை நன்கு சுத்தப்படுத்த பூண்டு ஒரு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் அந்த பூண்டு கல்லீரலில் உள்ள நொதிப் பொருளை சரியாக இயக்குகிறது.அதாவது, உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி, டாக்ஸின்களை வெளியேற்றுகிறது. மேலும் பூண்டில் இருக்கும் அல்லீசின் மற்றும செலினியம் என்னும் பொருட்கள், கல்லீரலின் இயக்கத்திற்கு உதவுகிறது.
கிழங்கு வகை காய்கறிகள்:

உண்ணும் உணவில் கிழங்கு வகை காய்கறிகளான பீட்ரூட், கேரட், உருளைக் கிழங்கு போன்றவற்றை சேர்த்துக் கொண்டால், அந்த காய்கள் கல்லீரலில் பாதிக்கப்பட்டுள்ள செல்களை புதுபிக்கும். ஆகவே இத்தகைய காய்கறிகளை தினமும் உணவில் சேர்த்து, கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

பச்சை காய்கறிகள்: 

உணவில் பயன்படுத்தும் காய்கறிகளிலேயே பச்சை காய்கறிகள் தான், உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்ற சிறந்த உணவுப் பொருட்கள்.ஏனெனில் அவை சூரியகதிர்களிடமிருந்து ஒளிச்சேர்க்கையின் மூலம் குளோரோபிள்களை உற்பத்தி செய்கின்றன.அதனால் அவற்றை சாப்பிடுவதால், உடலில் உள்ள கழிவுகள் எளிதில் நீங்கிவிடுகின்றன. அதிலும் பாவற்காய், கீரைகள் மற்றும் முட்டை கோஸ் மிகவும் சிறந்த காய்கறிகள்.
கிரீன் டீ: 

கிரீன் டீயில் அதிகமான அளவு சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்களான கேட்டசின்கள் இருக்கின்றன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கல்லீரலில் உள்ள ரேடிக்கல்களை நீக்கி, டாக்ஸின்களை வேகமாக வெளியேற்றுகின்றன.
வெண்ணெய் பழம்: 

வெண்ணெய் பழத்தில் உள்ள ஒற்றை நிறைவுறா கொழுப்புக்கள் இருக்கின்றன. அவை கல்லீரலில் உள்ள சுத்தப்படுத்தும் செயல்களில் மட்டும் ஈடுபடாமல், புதிய செல்களை புதுபிக்கவும் உதவுகிறது. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால், அதற்கான பலனை விரைவில் தெரிந்து கொள்ளலாம்.
ஆப்பிள்: 

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் இதில் உள்ள அதிகமாக பெக்டின், செரிமானப் பாதையில் உள்ள டாக்ஸின்களை சரியாக, சுத்தமாக வெளியேற்றுகிறது.
ஆலிவ் ஆயில்: 

ஆலிவ் எண்ணெயின் பயன்களுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. ஏனெனில் இந்த எண்ணெயில் உள்ள கொழுப்புக்கள் கல்லீரலில் உள்ள நச்சுக்களை சரியாக பிரிப்பதற்கு உதவுகிறது. மேலும் எந்த ஒரு டாக்ஸின்களும் அதிகமாக சேராமல் தடுப்பதோடு, இதன் வேலையை நன்கு செயல்படுத்துகிறது.
தானியங்கள்: 

தானியங்களில் உள்ள வைட்டமின் பி- காம்ப்ளக்ஸ், கல்லீரலுக்கு மிகவும் நல்லது.அதிலும் ப்ரௌன் அரிசி, நவதானிய மாவுகள், சோயா மாவு போன்றவை அனைத்தும் அளவுக்கு அதிகமான நன்மையை கல்லீரலுக்குத் தருகிறது.
ப்ரோக்கோலி: 

ப்ரோக்கோலியில் உள்ள க்ளுக்கோசினோலேட்ஸ்(glucosinolates), நொதிப் பொருள் உற்பத்திக்கு உதவுகிறது.இந்த நொதிப் பொருள் உடலில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் புற்றுநோயை ஏற்படுத்தும் கார்சினோஜென் என்னும் பொருளை வெளியேற்றுகிறது.ஆகவே மேற்கூறிய உணவுப் பொருட்களை உண்ணும் உணவில் சேர்த்துக் கொண்டால், கல்லீரல் ஆரோக்கியத்துடன், உடலும் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

வங்கதேசத்தில் பௌத்த விகாரைகளுக்கு இஸ்லாமியர்கள் தீ வைப்பு!

வங்கதேசத்தில் தென் கிழக்கு பிராந்தியத்தில் பௌத்தர்கள் அதிகம் வாழும் கிராமங்கள் மீது நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் தாக்குதல் நடத்தினர்.
இவர்கள் குறைந்தது ஆறு பௌத்த விகாரைகளுக்கு தீ வைத்துள்ளார்கள்.

மேலும் கொக்ஸ் பஜார் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்கள் தாக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் பயந்து தங்களது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளன.அந்த மாவட்டத்தில் பௌத்தர் ஒருவர், அவரது பேஸ்புக் பக்கத்தில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தியதாக வெளியான குற்றச்சாட்டுகளை அடுத்தே இந்த வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.இந்நிலையில் தனக்கும், பேஸ்புக் பக்கத்தில் வெளியானதற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர் தெரிவித்துள்ளார்.





பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Friday, September 28, 2012

ஒளியின் வேகத்தை மிஞ்சி நட்சத்திரங்களுக்குப் பயணிக்க முடியுமா?


Star Trek திரைப் படத்தில் காட்டப் படுவது  போல் விண்வெளியில் ஒளியின் வேகத்துக்கு சமீபமாக அல்லது அதை மிஞ்சும் வேகத்தில் பயணித்து நட்சத்திரங்களை அடைவது சாத்தியமே என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அதாவது warp drives எனப்படும் எனப்படும் Star Trek உயர் மாடல்கள் கொள்கை அடிப்படையிலும் சில மாடல்கள் செய்முறை அடிப்படை இலும் வருங்காலத்தில் இக்கனவை நிறைவேற்ற உள்ளன என அவர்கள் தெரிவித்துள்ளனர்.விண்வெளி ஆராய்ச்சியில் மனித இனத்தின் இலக்குகளை மட்டுப் படுத்துவதற்கு எந்த வரையறையும் கிடையாத நிலையில் ஒளியின் வேகத்தில் நாம் பயணித்தால் கூட நட்சத்திரங்களை நோக்கிச் செல்வது பல வருடங்களை அல்லது நூற்றாண்டுகளை அல்லது ஆயிரம் வருடங்களை எடுக்கக் கூடும் என்பதே யதார்த்தம்.

பிரபஞ்சத்தில் ஒளியின் வேகத்தை மிஞ்சும் பொருள் எதுவுமே இதுவரை இல்லை என்ற போதும் ஐன்ஸ்டீனின் சார்புக் கொள்கைப் படி வெளியையும் காலத்தையும் வளைத்து அதன் ஓட்டைகளுக்கூடாக (loop holes) ஒளியின் வேகத்தில் பயணிக்கும் விண் ஓடங்களின் பல மாதிரிகளைப் பல கோணங்களில் ஆராய்ந்து வருகின்றனர்.சார்புக் கொள்கைப் படியும் சில கணிதச் சமன்பாடுகள் கூறுவதன் படியும் warp speed எனும் இயற்கையை வளைத்துச் செல்லும் வேகத்தில் ஒரு சிறிய விண்வெளி ஓடம் பயணிப்பதற்கு சூரிய குடும்பத்தில் மிகப் பெரிய கிரகமான வியாழனின் திணிவுக்குச் சமனான சக்தி தேவைப் படுகின்றது என கூறப்படுகிறது.

நிகழ்காலத்தின் மெக்ஸிக்கோவைச் சேர்ந்த வான் பௌதிக விஞ்ஞானியான Miguel Alcubierre , கோள வடிவமான விண்கலம் ஒன்று தனக்கு முன்னே உள்ள வெளியை இணைத்து தனக்குப் பின்னால் விரிவடையச் செய்யும் விதி முறையில் பயணிக்கக் கூடிய விதத்தில் சில கொள்கைகளை முன் வைத்துள்ளார்.குறித்த இவ் விண்கலம் ஒரு கிரகத்திடம் இருந்து அல்லது ஒரு சூப்பர் நோவாவிடம் இருந்து சக்தியைப் பெற்று விண்வெளியில் ஒளியின் வேகத்தை விட அதிக வேகத்தில் பயணிக்கக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

ஹபிள் தொலைக்காட்டியால் எடுக்கப் பட்ட பிரபஞ்சம் பற்றிய அதியுயர் படங்கள்!!


விண்வெளியில் பூமியைச் சுற்றி வலம் வரும் அதியுயர் திறனுடைய ஹபிள் விண் தொலைக் காட்டி (HST) பிரபஞ்சம் பற்றிய அதி நுண்ணிய புகைப்படங்களைப் படம் பிடித்து சமீபத்தில் பூமிக்கு அனுப்பியுள்ளது. இப்புகைப் படங்கள் பிரபஞ்சத்தில் மிகுந்த தூரத்தில் உள்ள அண்டங்களையும் நட்சத்திரங்கள் தோன்றிய புதிதில் எவ்வாறு மின்னத் தொடங்கின என்பதையும் தெரிவிக்கின்றன.எனினும் இப்புகைப்படங்கள் மிக எளிமையாகவும் விளக்கமாகவும் அமையவில்லை. இதற்குக் காரணம் இப்புகைப்படங்களில் காணப்படும் சில அடையாளங்கள் அதிக தூரத்திலும் செறிவு குறைவாகவும் உள்ள நட்சத்திரங்களைக் குறிப்பதனால் ஆகும். மேலும் குறித்த இந் நட்சத்திரங்களில் இருந்து வரும் ஒளியை கண்டு பிடிப்பதற்கு வானில் உள்ள ஒரு சிறிய புள்ளியில் 500 மணித்தியாலங்களுக்கு மேல் ஹபிள் தொலைக் காட்டி கவனம் செலுத்தியுள்ளது.

இவ்வாறு எடுக்கப் பட்ட புகைப்படம் மிகவும் தரமாக உள்ளது என பிரிட்டனின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞான ஆராய்ச்சிக் குழுவின் உறுப்பினரான Dr. Michele Trenti கருத்துத் தெரிவித்துள்ளார்.இப்புகைப் படங்கள் யாவும் ஹபிளின் XDF (eXtreme Deep Field ) எனும் நவீன தொழிநுட்ப வசதியுடைய கமெராவால் சுமார் 22 நாட்களாக எடுக்கப் பட்டவையாகும். இத் தொழிநுட்பம் மூலம் அண்டங்கள் தோன்றி எவ்வாறு பரிணாமம் அடைந்து வருகின்றன என்பதை அவதானிக்க முடியும்.எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு விண்ணுக்கு செலுத்தப் படவுள்ள James Webb Space Telescope, ஹபிள் தொலைக்காட்டியை விட அதி உயர் தரமுடைய லென்ஸ் மற்றும் கண்ணாடியை உடையது என்பது குறிப்பிடத்தக்கது.





பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

இஸ்லாமியர்களுக்கு எதிரான படத்தை தயாரித்தவர் கைது : பிணை வழங்கவும் மறுப்பு!!


இஸ்லாமியர்களை புண்படுத்தும் விதத்தில் அண்மையில் வெளிவந்த Innocence of Muslims திரைப்படத்தை தயாரித்த நபரை, கலிபோர்னியாவில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.பஸ்ஸெல்லி நகுலா எனும் 55 வயதுடைய இந்நபர் நேற்று கைது செய்யப்பட்டு லாஸ் ஏஞ்சல்ஸ் சமஷ்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, நீதிமன்றம் அவருக்கு பிணைவழங்க மறுத்துள்ளது. உலகளாவிய ரீதியில் கலகலங்களை தூண்டிவிடும் விதத்தில் நடந்துகொண்டமைக்காகவும், அனுமதி பெறாது,  இணையத்தில் இப்படத்தை பதிவேற்றம் செய்து வெளியிட்ட குற்றத்திற்காகவும், இவருக்கு பிணை வழங்க முடியாது என நீதிபதி கூறியிருப்பதுடன் சமூகத்திற்கு ஆபத்தான விடயத்தை இவர் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நகுலா படம் தயாரிக்க வங்கி நிதி மோசடி செய்ததாக ஏற்கனவே சிறை சென்றிருந்த அவர் 2011 இல் விடுதலை ஆகியுள்ளார்.  கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் கலிபோர்னியாவில் உருவாக்கியிருந்த,  13 நிமிட வீடியோ திரைப்படம் Innocence of Muslims எனும் பெயரில் இணையத்தில் வெளிவந்தது. 

இஸ்லாமியர்களையும், முகம்மது நபி அவர்களையும் அவமரியாதை செய்யும் வகையில் இத்திரைப்படம் சித்தரிக்கப்பட்டுள்ளதை கண்டித்தும், இத்திரைப்படம் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டதன் பின்னணியில் அமெரிக்க சூழலே இருப்பதால் அமெரிக்காவுக்கு எதிராகவும் மத்திய கிழக்கு நாடுகளில் கடுமையான போராட்டம் வெடித்திருந்ததுடன் கடந்த இரு வாரங்களுக்கு மேலாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன. இதன்போது  லிபியாவுக்கான அமெரிக்க தூதுவர் உட்பட நான்கு அமெரிக்கர்களும் 20 க்கு மேற்பட்டவர்களும் கொல்லப்பட்டிருந்தனர். 

கடந்த இரு வாரங்களாக பொதுமக்கள் பார்வையிலிருந்து மறைந்து வாழ்ந்த நகுலா தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை தொடர்ந்து, அவரது உயிருக்கு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக நகுலாவின் வழக்கறிஞர் குற்றம் சுமத்தியுள்ளார். அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள மெட்ரோபோலிடன் தடுப்பு மையம் அதிகமான இஸ்லாமியர்கள் வாழும் இடம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  நகுலாவை படுகொலை செய்பவருக்கு 100,000 அமெரிக்க டாலர் வழங்கப்படும் என பாகிஸ்தானின் ரயில்வே துறை அமைச்சர் குலாம் அஹ்மத் பிலோர் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Thursday, September 27, 2012

சமூக அமைதிக்கு வித்திட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள்!


இன்றைக்கு சமூக நல்லிணக்கம் என்பது என்றால் என்ன? என்று கேட்கும் அளவுக்கு சமூக மாச்சரியங்கள் மலிந்து காணப்படுகின்ற வேளையில், இஸ்லாம் சமூக அமைதிக்கு வழிகாட்டியிருக்கின்றது என்பது பற்றி அறிந்து கொள்ள இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்வு நமக்கு பேருதவி புரிகின்றது.

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மதினாவைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து கொண்டிருந்த நேரமது. இஸ்லாமிய தலைமைக் கேந்திரமான மதினாவிலும், அதனைச் சுற்றிலும் உள்ள பகுதிகளிலும் பல்வேறு மதத்தவர்கள் வாழ்ந்து வந்தார்கள். இவர்கள் அனைவரும் எந்தக் காலத்திலும் எந்தச் சட்டத்திற்கும் கட்டுப்பட்டு வாழ்ந்த வரலாறு என்பதே கிடையாது. இந்த நிலையில், பல்வேறு குழுக்களையும் ஒப்பந்தங்கள் மூலம் ஒருங்கிணைத்து, அதன் மூலம் மதீனாவின் சமூக வாழ்வை அமைதி தவழும் இடமாகவும், மக்கள் தங்களுக்குள் கொள்கைகளில் வேறுபட்டிருந்தாலும், சமூக அமைதி என்ற ஒரே குறிக்கோளை முன்வைத்து அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தலைமையில் ஒருங்கிணைந்து வாழ்ந்ததை நாம் காண முடிகின்றது.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் என்ற மதீனாவிற்கு நாடு துறந்து வந்த பொழுது, மதீனாவில் பல்வேறு கொள்கையைக் கொண்ட மக்கள் வாழ்ந்து வந்தார்கள். அவர்களில் மிகவும் வலுவான சமூக அடித்தளத்தைக் கொண்ட யூதர்களும், மற்றும் கிறிஸ்தவர்களும், தங்களது மூதாதையர்களின் பழக்க வழக்கங்களைப் பின்பற்றி வருபவர்களுமாக, மதீனா நகரம் ஒரு குழம்பிய குட்டையாகத் தான் இருந்தது.

பல்வேறு கொள்கையைக் கொண்டிருந்த இந்த மக்களை ஒருங்கிணைத்து அமைதியான சமூக வாழ்வை ஏற்படுத்த விரும்பிய இறைத்தூதர்(ஸல்) அவர்கள், அந்த பல்வேறு குலத்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நேரடித் தொடர்புகள் அல்லது எழுத்துப்பூர்வமான ஒப்பந்தங்களைச் செய்து கொண்டார்கள். இந்த ஒப்பந்தங்களின் நோக்கம் எதுவாக இருந்ததெனில், மதீனா நகரில் பல்வேறு குலத்தவர்கள் வாழ்ந்து வந்தாலும், பல்வேறு கொள்கையைக் கொண்டவர்களாக அவர்கள் இருந்தாலும், சமூக வாழ்வில் அந்தத் தாக்கங்கள் தலைகாட்டாது, சமூகம் அமைதி தவழும் இடமாக இருந்து வர வேண்டும் என்பதாக இருந்தது.

ஹிஜாஸ் பிரதேசத்தில் வாழ்ந்த மக்களிடம் சமூக அமைதியை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள், இதற்கு முன் எந்த சட்டத்திற்கும் கட்டுப்படாத அந்த மக்களை முழுவதுமாக ஒப்பந்தங்களின் மூலம் கட்டுப்பட வைத்ததன் மூலம், சமூக அரசியல் தளத்தில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தினார்கள். இன்னும் அவர் கூறுகின்றார், சிறிய மற்றும் பெரிய குலத்தவர்களாக சிதறிக் கிடந்த அந்த மக்களை, தங்களுக்குள் எப்பொழுதும் பகைமை பாராட்டிக் கொண்டிருந்த அந்த மக்களை ஒருங்கிணைத்து, சமூக ஒற்றுமையை ஏற்படுத்தினார்கள்.

மக்காவின் வெற்றியைத் தொடர்ந்து, இதுவரை காலமும் முஸ்லிம்களை மரணப்படுக்கையில் தள்ளுவதற்குக் கூடத் தயங்காத இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத அந்த மக்களை மதச் சகிப்புத் தன்மையுடன் நடத்தியதோடு, அவர்களை இரக்கத்துடன் நடத்தினார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள். இத்தைகய சகிப்புத்தன்மையை இதுவரை காலமும் அரபுக்கள் தங்கள் வாழ்நாளிலே என்றுமே கண்டதுமில்லை, கேட்டதுமில்லை. இத்தைகய நற்பண்புகள் முஸ்லிம்களின் மீது மிகப் பெரும் நன்மதிப்பை அவர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.

இஸ்லாம் ஆட்சி செய்து கொண்டிருந்த அந்த பிரதேசத்தில், இஸ்லாமிய நீதியையும், நெறிமுறைகளையும் அமுல்படுத்திக் காட்டுவதில், மற்றவர்களைக் காட்டிலும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தான் ஒரு முன்மாதிரிமிக்கவராகத் திகழ்ந்து காட்டினார்கள். அவர்கள் அந்த மக்கள் மத்தியில் மத சகிப்புத் தன்மையையும், நீதியையும் குர்ஆன் வகுத்துக் காட்டியிருக்கின்ற வழிமுறைப்படி ஆட்சி செய்து காட்டினார்கள். இந்த ஒரு காரணத்திற்காக, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, பல்வேறு குலங்களையும், கோத்திரங்களையும் சேர்ந்த அந்த மக்கள், இஸ்லாத்தின் மதசகிப்புத் தன்மை, நீதி பரிபாலணம், அது வழங்கியிருக்கும் அமைதி தவழும் வாழ்க்கை நெறி ஆகியவற்றினால் கவரப்பட்டு, குறுகிய காலத்தில் தங்களை இஸ்லாத்தினுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டார்கள். இவ்வாறு பல குலங்களையும் ஒருங்கிணைத்த இஸ்லாம், அவர்கள் அனைவரையும் சகோதரத்துவம் என்ற ஒரே கொள்கையின் கீழ் இணைத்து, நீதிபரிபாலணம் என்பது முழு அளவில் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அதற்கு திருமறைக் குர்ஆன் இவ்வாறு பின்புலமாக இருந்தது.

நாம் படைத்தவர்களில் ஒரு கூட்டத்தார் இருக்கின்றார்கள். அவர்கள் சத்திய வழியைக் காட்டுகிறார்கள்; அதைக் கொண்டு நீதியும் செலுத்துகிறார்கள். (7: 181)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மற்ற மக்களிடம் காட்டிய மதச் சகிப்புத் தன்மைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக, நஜ்ரான் பிரதேசத்துக் கிறிஸ்தவர்களிடம் அவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் முஸ்லிம்களின் மத சகிப்புத் தன்மைக்கும், நீதி நெறிமுறைகளுக்கும் சிறந்த சான்றுகளாகத் திகழ்கின்றன. இதனை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அந்த சமூகத்தில் முழுவதுமாக நடைமுறைப்படுத்திக் காட்டினார்கள்.

அத்தகைய ஒப்பந்தங்களின் ஒருபகுதி இவ்வாறிருந்தது :

உயிர்களும், அவர்களது கொள்கைகளும், உடமைகளும், குடும்பங்களும், அவர்களது வழிபாட்டுத் தளங்களும், இன்னும் நஜ்ரானில் வாழ்கின்ற அனைத்து மக்களும், இன்னும் அவர்களுடன் வாழ்ந்து வருபவர்களும் அல்லாஹ்வினதும், அல்லாஹ்வினது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களினதும் பாதுகாப்பின் கீழ் இருக்கின்றார்கள்.

எனவே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இதுபோன்ற ஒப்பதங்கள் மூலமாக, இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளை எவ்வாறு சமூகத்தில் நடைமுறைப்படுத்திக் காட்டுவது என்பதற்கான நடைமுறையையும், இன்னும் முஸ்லிம்களுடன் முஸ்லிம் அல்லாத மக்களான வேதம் வழங்கப்பட்டவர்கள் எவ்வாறு இணக்கமான முறையில் வாழ முடியும் என்பதற்கான உதாரணத்தையும் காட்டி விட்டுச் சென்றுள்ளார்கள்.

முஸ்லிம்களின் நடைமுறைப்படுத்திக் காட்டும் ஒழுக்க மாண்புகள் நீதமானதும், நடுநிiயானதும், இன்னும் அமைதிப்பூர்வமானதும் கூட. இன்னும் அதிகமாக, இத்தகைய ஒப்பந்தங்கள் மூலமாக, அதற்குப் பிரதியீடான இஸ்லாமானது வாழ்நாள் முழுவதற்குமான அமைதியையும், மற்றும் தொல்லைகளற்ற வாழ்வுக்கும் உத்தரவாதம் தருகின்றது. இன்னும் இஸ்லாத்தின் ஒழுக்க மாண்புகளை அடிப்படையாகக் கொண்டதொரு முன்மாதிரி மிக்க சமூகத்தைப் பெற்று அதன் மூலம் கருணை, இணக்கம், சகிப்புத் தன்மை மற்றும் அமைதி மிக்க வாழ்க்கையை இந்தப் பூமிப் பந்தின் மீது நிறுவுதற்கு அனைவருக்கும் அழைப்பும் விடுக்கின்றது.

அனைத்து மக்களும், அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் சரியே, அமைதியான சமூக வாழ்விற்கு ஒத்துழைப்பது அனைவரின் மீதுள்ள மிகவும் பொறுப்பு வாய்ந்த கடமையாகும். முஸ்லிம்கள் என்ற நிலையில், மற்ற மதத்தவர்ளைப் பொறுத்தவரை, முஸ்லிம்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுவது என்னவென்றால், ''அல்லாஹ்வைத் தனித்துவமாக வணங்குவதற்கும் இன்னும் அவனுடன் எந்தவித இணையாளர்களையும் ஆக்காதிருப்பதற்காவும்'', மேற்கண்ட நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக அவர்களுடன் தோள் கொடுத்துச் செயலாற்றும்படிக் கூறுகின்றான் :

(நபியே! அவர்களிடம்) ''வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹவீர்ர்hர்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்'' எனக் கூறும்; (மு.மின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்; ''நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!'' என்று நீங்கள் கூறிவிடுங்கள். (3:64)

முஸ்லிம்களும், யூதர்களும் மற்றும் கிறிஸ்தவர்களும் ஒரு பொதுவான கருத்தின் அடிப்படையில் அதாவது பரஸ்ர நல்லுணர்வு, அன்பு, அமைதி மற்றம் சகிப்புத் தன்மை ஆகியவற்றை பொதுவான நோக்கமாகக் கொண்டதன் அடிப்படையில் இணைந்து விட்டார்களென்று சொன்னால், இந்த உலகம் ஒரு வித்தியாசமானதொரு இடமாக மாறி விடும். பிளவுகளும், பிரச்னைகளும், அச்சமும், மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளும் மறைந்து, அவை எல்லாம் வரலாற்றில் தேடிப்பிடிக்க வேண்டிய நிகழ்வுகளாக ஆகி விடும், அன்பு, மதிப்பு மற்றும் அச்சமற்ற தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட புதியதொரு நாகரீகம் மலர்ந்து விடும்.

அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான் :

நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர்; ''நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம் என்று சொல்பவர்களை, முஃமின்களுக்கு நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே!) நீர் காண்பீர்; ஏனென்றால் அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர்; மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை. (5:82)

சில இறுமாப்புக் கொண்டவர்கள் இந்த உண்மையை அறிந்து கொள்ள இயலாத காரணத்தால், இரு சமூகத்திற்கும் இடையே அவர்கள் மிகப் பெரும் யுத்தத்திற்கு வழி வகுத்து விட்டார்கள். உண்மையான கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் இத்தகைய யுத்தத்தின் மூலம் இரத்தம் சிந்தப்படுவதை விரும்பக் கூடாது, தங்களுக்குள் பரஸ்பரம் ஒத்துழைத்து, அதனை தடுக்கவும் முயற்சி செய்ய வேண்டும்.

அமெரிக்காவில் நடந்து போன துரதிர்ஷ்டவசமான அந்த நிகழ்வுக்குப் பின், இத்தகைய ஒத்துழைப்புகளுக்கான விதைகள் தூவப்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டதை நாம் கண்டோம். வெறுக்கத்தக்க இந்த நாசகாரச் செயல்கள் நடந்து விட்ட பின், இரு சமூகத்திற்கும் இடையே மிகப் பெரும் இணைப்பை உருவாக்கி வைத்ததையும் நாம் பார்த்தோம். முன்னைக்காட்டிலும், இஸ்லாத்தின் பக்கம் மிக நெருக்கமாகச் சென்று அதனை ஆராய்ந்து அறிந்து கொள்ளும்படி பல கிறிஸ்தவர்கள் உற்காசமூட்டப்பட்டார்கள், அதனைப் போலவே முன்னைக் காட்டிலும் தங்களது மார்க்கத்தைப் பற்றி அதிகமான விளக்கத்தையும், குர்ஆன் கூறும் இஸ்லாமிய ஒழுக்க மாண்புகள் பற்றியும் அதிகமாக அளவில் விளக்கங்கள் கொடுக்க அதிக முயற்சியை முஸ்லிம்கள் எடுத்துக் கொண்டார்கள்.இந்த பூமிப் பந்தில் அமைதியை முழுமையாக நிறுவுவதற்கு இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளே உகந்தது என்ற உண்மையை இந்த 21 ஆம் நூற்றாண்டானது விரைவில் கண்டு கொள்ளும்.


ஒவ்வொரு சமுதாயத்திலும் சில ‘தறுதலைகள்’ இருப்பது போல் முஸ்லிம் சமுதாயத்திலும் சில தறுதலைகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அறிவிழந்த தறுதலைகள் செய்யும் தவறை அந்த ஒட்டு மொத்த சமுதாயத் தவறாக வர்ணிப்பது, புண்பட்ட நெஞ்சில் ஈட்டியைப் பாய்ச்சுவது.

முஸ்லிம்களில் சிலர் செய்யும் வன்முறைச் செயல்களை “இஸ்லாமிய வன்முறை, தீவிரவாதம்” என்று மத முத்திரை குத்துவதும் வன்முறைச் செயல்களை வெறுக்கும் பெரும்பான்மை முஸ்லிம்களை துன்பத்திற்குள்ளாக்குவது. எரியும் புண் காக்கையறியாது, என்பார்களே அதை ஒத்திருக்கிறது.இஸ்லாம் ‘தீவிரவாதத்தை” ஆதாரிக்கிறதா..? என்பதைப் பார்ப்பதற்கு முன்..

மத ஆய்வு மனிதனுக்கு அவசியம். ஆய்வின் விமர்சனத்துக்கு அந்த மத ஆதார நூல்களே உரை கல்லாக இருக்க வேண்டும் என்பது அதைவிட அவசியம். எம்மத விமர்சனமும் அம் மதம் போதிக்கும் நூலை நேரடியாக விளங்கி விமர்சிக்க வேண்டும். மதத்தைப் பின்பற்றுபவர்களின் செயல்பாடுகளைக் கொண்டு ஒரு மதத்தை விமர்சிப்பது அறிவுடைமையல்ல! என்பதை மனதில் பதித்துக் கொண்டு தொடர்வோம்.

இஸ்லாம் தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது என்று குற்றம் சாட்டுபவர்கள், தமது விமர்சனத்துக்கு சான்றாக இறைவசனமோ, ஆதராப்பூர்வமான நபிமொழியையோ ஒன்றைக் கூட எவராலும் சமர்ப்பிக்க முடியாது. மாறாக தீவிரவாதத்தை வேரோடு, வேரடி மண்ணோடு துடைத்து எறிவதையே இஸ்லாம் விரும்புகிறது. என்பதை கீழ்காணும் வசனத்தில் விளங்கலாம்.
”நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை (த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் அனைவரையும் கொலை செய்தவன் போலாவான். மேலும் எவனொருவன் ஒரு மனிதரை வாழ வைக்கிறானோ அவன் மனிதர்கள் அனைவரையும் வாழ வைத்தவன் போலாவான்”.. (அல்குர்ஆன் 5:32)

இந்த வசனத்தை ஒரு முறைக்குப் பலமுறைப் படித்துப் பாருங்கள். எந்த விளக்கவுரையும் தேவையில்லாத அளவிற்குத் தெளிவாக – வெளிப்படையாகவே மனிதநேயம் எப்படி இருக்க வேண்டும் என்பதை அழகாக எடுத்து இயம்புகிறது. தீவிரம் – வன்முறை செயல்களுக்கு சாவு மணி அடிக்கிறது. 

தனியொரு மனிதனை எவன் கொன்றானோ அவன் முழு மனித இனத்தையே கொலை செய்து விட்டான் – அதாவது மனிதத்தையே அழித்து விட்டான். அவன் மனிதனாக இருப்பதற்கே லாயக்கற்றவன் என்று ஒதுக்கி விடுகிறது.
எவனொருவன் தனி மனிதனை வாழ வைக்கிறானோ அவன் முழு மனித சமுதாயத்தையே வாழ வைத்தவன் போலாவான் அதாவது மனித இனத்தை – மனிதத்தைக் காப்பாற்றி விட்டான். இதைத்தான் இஸ்லாம் வரவேற்கிறது. இந்த வசனம் நேரடியாக மனிதர்கள் என்று மனித இனத்தை நோக்கிப் பேசுகிறது. விசுவாசம் கொண்டவர்கள், விசுவாசம் கொள்ளாதவர்கள் என பிரித்துச் சொல்லவில்லை.

ஒரு மனிதனை இறப்பிலிருந்து காப்பாற்றுவதற்கு பல வழிகள் உள்ளன. ஒரு மனிதன் நோய்வாய்ப்பட்டவனாகவோ, காயம் பட்டவனாகவோ இருக்கலாம். அவன் எந்த நாட்டை, அல்லது எந்த இனத்தை, அல்லது எந்த நிறத்தைச் சார்ந்தவன் என்பது முக்கியமல்ல. அவனுக்கு உங்களது உதவித் தேவைப்படுகிறது என்று நீங்கள் அறிந்தால், அப்பொழுது அவனது நோய்க்கோ, காயங்களுக்கோ சிகிட்சை அளிக்கும் ஏற்பாடுகளைச் செய்வது உங்கள் மீது கடமையாகும்.அவன் பட்டினியால் செத்துக் கொண்டிருந்தால், அப்பொழுது அவனுக்கு உணவு வழங்கி அவனை மரணத்தின் பிடியிலிருந்து காப்பாற்றுவது உங்கள் கடமையாகும். அவன் நீரில் மூழ்கிக் கொண்டிருந்தாலோ, உயிர் போகும் ஆபத்தில் சிக்கியிருந்தாலோ அந்த ஆபத்துகளிலிருந்து அவனைக் காப்பாற்றுவது உங்கள் மீது கடமையாகும்.

இப்போது சொல்லுங்கள், ‘ஜிஹாத்’(?) என்ற பெயரால் வன்முறைகளில் ஈடுபட்டு மனிதக் கொலைகள் புரியும் பெயர் தாங்கி முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்திற்கும் ஏதேனும் சம்மந்தம் இருக்கிறதா? வன்முறைச் செயல்களால் தனக்கு அறிமுகமே இல்லாத மனித உயிர்களைப் படுகொலை செய்பவன் எப்படி உண்மை முஸ்லிமாக இருக்க முடியும்?
கொலைக்குப் பதிலாக கொலையாளியின் உயிரைப் பறிப்பதாக இருந்தாலும் சரி. அல்லது பூமியில் குழப்பத்தைப் பரப்பியதற்கான தண்டனையாக இருந்தாலும் சரி, அதற்காக அமைக்கப்பட்ட நீதிமன்றம்தான் இதைப் பற்றிக் கட்டளையிட வேண்டும். இந்த உரிமை தனிப்பட்ட மனிதனுக்கு வழங்கப்படவில்லை.

இது போல் பிற நாட்டின் மீது போர் தொடுக்க வேண்டுமென்றால் அதை முடிவு செய்யும் உரிமை முறையாக அமைக்கப்பட்ட அரசுக்கு மட்டுமே உண்டு. பூமியில் குழப்பங்களுக்கு காரணமாக இருந்ததற்காக ஒரு மனிதனின் உயிரை இன்னொரு மனிதன் தன்னிச்சையாகப் பறிப்பதற்கு எவ்வித உரிமையும், அதிகாரமும் இல்லை. எந்தச் சூழ்நிலையிலும் ஒரு மனிதன், உயிரைப் பறித்த குற்றத்திற்கு ஆளாகக் கூடாது என்பது ஒவ்வொரு மனிதன் மீதும் சுமத்துப்பட்டுள்ள கடமையாகும்.

யாராவது ஒருவன், ஒரு மனிதனைக் கொன்று விட்டால் அவன் மனித இனம் முழுவதையுமே வெட்டிச் சாய்த்ததுக்குச் சமமாகும். இதே கட்டளை அல்குர்ஆனின் வேறொரு இடத்தில் மீண்டும் சொல்லப்படுகிறது. ”அல்லாஹ் புனிதமாக்கிய உயிரை முறையான நீதி விசாரணையின்றி கொல்லாதீர்கள்” (அல்குர்ஆன் 6:151)

”இணைவைத்தலுக்கு அடுத்தபடியான மிகப் பெரும் குற்றம் மனித கொலையாகும்” என்று இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.அடுத்து மனிதனின் நீதி பெறும் உரிமையை எவ்வளவு அழகாகச் சொல்கிறது பாருங்கள். இந்த உரிமை மிக முக்கியத்துவம் வாய்ந்ததும் பெரும் மதிப்பும் மிக்கதாகும். இம்மாபெரும் உரிமையை மனிதனுக்கு ‘மனிதன்’ என்ற அந்தஸ்திலேயே இஸ்லாம் வழங்குகிறது.

”ஒரு சாராரின் மீது நீங்கள் கொண்டிருக்கும் வெறுப்பு உங்களை அத்துமீறலான செயல்களுக்குத் தூண்டிவிட வேண்டாம்”.

”நன்மையிலும், பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள். பாவத்திலும் பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்”. (அல்குர்ஆன் 5:2)

ஓ நம்பிக்கையாளர்களே!… ”எந்தவொரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு, நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள், இதுவே இறையச்சத்திற்கு மிக நெருக்கமாகும்”. (அல்குர்ஆன் 5:8)

ஓ நம்பிக்கையாளர்களே! ”நீங்கள் நீதியைக் கட்டிக் காப்போராக விளங்குங்கள். உங்களுக்கோ, அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காக சாட்சி கூறுபவர்களாக இருங்கள்”. (அல்குர்ஆன் 4:135)

இப்படி, மனித நேயத்திற்காக, மனித உரிமைக்காக, இஸ்லாம் வழங்கியுள்ள ”வழிகாட்டல்களை” எழுதிக் கொண்டே இருக்கலாம்.

சில அறிவிலி முஸ்லிம்களின் செயல்பாடுகளை வைத்து இஸ்லாத்தை மதிப்பீடு செய்வது அறிவு சார்ந்த வாதமல்ல. இஸ்லாம் என்பது ‘வழிகாட்டல்’ மாத்திரமே. அதைப் பின்பற்றுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமை. பின்பற்றாதது முஸலிம்களின் தவறே தவிர இஸ்லாத்தின் குற்றமாகாது. 

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

மூன்றாவது பொருளாதாரத் திட்டம்!

முதலாளித்துவத்தின் கொடூரம்.

வட்டியும்,  ஏக போக உரிமையும் இல்லாமல் முதலாளித்துவம் வளர இயலாது. ஆனால் இவ்விரண்டையும் முதலாளித்துவம் தோன்றுவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் ஒழித்து விட்டது என்பதைச் சுட்டிக் காட்டுவதே போதியதாகும்.எனினும் இப்பிரச்னையைச் சிறிது ஆழமாக ஆராய்வோம். இயந்திரம் இஸ்லாமிய உலகில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் அதன் விளைவாக ஏற்படும் அபிவிருத்தியினை இஸ்லாம் எவ்வாறு எதிர்நோக்கியிருக்கும்? வேலையையும் உற்பத்தியையம் இஸ்லாமிய சட்ட வாக்கங்களும் சட்டங்களும் எவ்வாறு ஒழுங்குபடுத்தியிருக்கும்?

தொடக்கத்தில் முதலாளித்துவம் மனித சமுதாயத்தில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தி குறிப்பிடத்தக்க சேவைகளை ஆற்றியது என்பதில், முதலாளித்துவத்தை எதிர்ப்பவர்களிடையே – கார்ல் மார்க்ஸ் உட்பட – கருத்தொற்றுமை இருக்கிறது. முதலாளித்துவத்தின் வருகையினால் உற்பத்தி பெருகிற்று. போக்குவரத்து தொடர்புகள் விருத்தியடைந்தன. தொழிலாள வர்க்கத்தினர் அநேகமான அல்லது முற்றாக விவசாயத்தை நம்பி வாழ்ந்த காலத்தை விட அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தது.ஆனால் இந்தப் பெருமைமிக்க காட்சி வெகுகாலம் நீடிக்கவில்லை. இதற்குக் காரணம் முதலாளித்துவத்தின் இயற்கையான வளர்ச்சி முதலாளிகளின் கைகளில் செல்வம் குவியவும், தொழிலாளர் வர்க்கத்திற்குச் சொந்தமான சொத்துக்கள் படிப்படியாக குறையவும் வழிவகுத்தது என்று கூறப்படுகிறது. இதனால் கம்யூனிஸ்டுகளின் நோக்கில் உண்மையான உற்பத்தியாளர்களான தொழிலாளர்களை பல்வேறு பொருட்களின் உற்பத்தியைப் பெருக்குவதற்கு முதலாளிகள் உபயோகிக்க இயலுமாயிற்று. ஆனால் தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்பட்ட கூலிகள் சீரான வாழ்க்கை நடாத்துவதற்குப் போதியதாக இருக்கவில்லை. எல்லா லாபத்தையும் முதலாளிகளே சுரண்டிக் கொண்டு தம் ஊழல் மிக்க ஆடம்பர வாழ்க்கைக்கு அதனைச் செலவிட்டதே இதற்குக் காரணமாகும்.

அதுவுமன்றி, தொழிலாளர்களுக்குக் கிடைத்த சொற்ப கூலியைக் கொண்டு, முதலாளித்துவ நாடுகளில் உற்பத்தியான எல்லா பொருட்களையும் அவர்கள் வாங்கி நுகரவும் இயலவில்லை. இதனால் மேலதிகமாக உற்பத்தியான பொருட்கள் சேர்ந்து குவியத் தொடங்கின. எனவே முதலாளித்துவ நாடுகள் தம் மேலதிக உற்பத்திப் பொருட்களை விற்பதற்குப் புதிய சந்தைகளைத் தேடின. இது, குடியேற்ற நாடுகள் தோன்றுவதற்குக் காரணமாய் அமைந்தன. இதனால் பல்வேறு நாடுகளிடையே சந்தைகள் சம்பந்தமாகவும் மூலம் பொருள் வளங்கள் சம்பந்தமாகவும் இடையறாத சண்டைகளும் சச்சரவுகளும் ஏற்பட்டன. இவை அனைத்தினதும் விளைவு பேரழிவை ஏற்படுத்திய யுத்தங்களாகும்.மேலும், குறைந்த கூலிகள் காரணமாகவும், அதிகரித்து வரும் உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் பொருட்களை நுகர்வு சொற்பமாகவும் இருப்பதனாலும் பொருளாதார தளர்ச்சி ஏற்படுவதனால் முதலாளித்துவ முறையானது அடிக்கடி நெருக்கடி நிலையை எதிர்நோக்குகிறது.

முதலாளித்துவ முறையின் குறைகள் அனைத்துக்கும் காரணம் முதலின் தன்மையாகும் என்றும் முதலாளிகளின் தீய எண்ணமோ அல்லது சுரண்டல் புத்தியோ அல்லவென்றும் உலகாதாய வாதிகள் கூறுகின்றனர். இத்தகைய அப்பாவித்தனமான, விசித்திர சிந்தனையின் பொருள், பல விதமான உணர்ச்சிகளையும் சிந்தனா சக்தியையும் கொண்ட மனிதன், பொருளாதார பலத்தின் எதிரில் கையாலாகாத – எதுவும் செய்யச் சக்தியற்ற – ஒரு படைப்பாளன் என்பதாகும்.முதலாளித்துவம் முன்பு தேசியக் கடன்களிலேயே தங்கி இருந்தது. பின்பு இது வங்கிகள் உருவாவதற்கு வழி வகுத்தது. வங்கிகள், வட்டியைப் பிரதிபலனாகக் கொண்டு நிதி அலுவல்களை நடத்தியதோடு கடன்களையும் வழங்கின. இக்கடன்களும் வங்கிகள் ஈடுபடும் பெரும்பாலான வேறு பல அலுவல்களும் வட்டியை அடிப்படையாகக் கொண்டவை.

ஒருபுறம், முதலாளித்துவத்தின் மற்றொரு அம்சமான கடும் போட்டி சிறு கம்பெனிகளை ஒழித்து விடுகிறது. அல்லது அவற்றை ஒரு பெரிய கம்பெனியாக இணைத்து விடுகிறது. இது ஏகபோக உரிமைக்குத் தூண்டுகோலாக அமைகிறது.

இஸ்லாம் ஏக போக உரிமைக்கும் தடை விதித்துள்ளது. 'ஏக போக உரிமையை ஏற்படுத்திக் கொள்பவர் தவறு செய்தவராவார்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.இஸ்லாம் வட்டியையும், ஏக போக உரிமையையும் தடை செய்து விட்டதனால், சுரண்டலையும், ஏகாதிபத்தியத்தையும் யுத்தத்தையும் கொண்ட இன்றைய தீய நிலைக்கு முதலாளித்துவம் வளர்வது சாத்தியமாகியிராது.

செல்வம் தனிநபர்களிடம் குவிவதை இஸ்லாம் ஊக்குவிப்பதில்லை. அவ்வாறு குவிவதற்கு அடிப்படையாக இருக்கின்ற வட்டியை முற்று முழுதாக இஸ்லாம் தடையும் செய்திருக்கின்றது. இன்னும் அனைத்து மக்களுக்கும் அடிப்படை உரிமைகள் சரிசமமாக வழங்க வேண்டியது அரசின் கடமை என்றே இஸ்லாம் கூறுகின்றது. இதில் பாரபட்சப் போக்கை இஸ்லாம் தடை செய்கின்றது. வயது மற்றும் சுகவீனம் காரணமாக உழைக்க இயலாதவர்களைப் பராமரிக்கும் பொறுப்பு அரசினைச் சார்ந்ததே என்று இஸ்லாம் கூறுகின்றது. இன்னும் தங்களது வாழ்க்கைத் தேவைகளுக்கு உண்டான செலவினங்களை, பெற்றுக் கொள்ள இயலாதவர்களுக்கு அதனைப் பெற்றுக் கொடுக்கும் பொறுப்பும் அரசின் நிதியகத்தின் பணிகளே என்றும் இஸ்லாம் கூறுகின்றது.

மக்களின் உரிமைகளை சரிசமமாகப் பேணுவதும் மட்டுமல்ல, அரசின் லாப நட்டங்களை பகிர்ந்து கொள்ளும் பொறுப்பும் குடிமக்களுக்கு உண்டு என்றும் இஸ்லாம் கூறுகின்றது. இதன் மூலம் அனைத்து மக்களுக்கு கௌரவமான வாழ்க்கைக்கான உத்ரவாதத்தை இஸ்லாம் அளிக்கின்றது.தற்கால 'நாகரீக' மேல்நாடுகளில் காணப்படுவது போன்ற அரக்கத்தனமான நிலைக்கு முதலாளித்துவத்தை இஸ்லாம் வளர விட்டிருக்காது. தொழிலாளர் வர்க்கத்தைச் சுரண்டும் போக்கையும் அது வளர விட்டிருக்காது. குடியேற்றம், யுத்தம், மக்களை அடிமைப்படுத்துதல் என்பன உட்பட முதலாளித்துவத்தின் எல்லாத் தீமைகளையும் இஸ்லாம் தடுத்திருக்கும்.

வழக்கம் போல இஸ்லாம், பொருளாதார விதிகளையும் சட்டங்களையும் ஆக்குவதோடு திருப்தியடைந்து விடுவதில்லை. அது சட்டங்களுடன், தார்மீக, ஆன்மீகத் தூண்டுகோள்களையும் பயன்படுத்துகின்றது. ஆன்மீக, தார்மீகப் பண்புகளுக்கு ஐரோப்பாவில் செயல் ரீதியான பயனில்லை என்று காண்பதனால் கம்யூனிஸ்டுகள் அதனை ஏளனஞ் செய்கின்றார்கள்.ஆனால் இஸ்லாத்தில் தார்மீக, ஆன்மீகப் பண்புகள் மனிதனின் செயல்களுடன் தொடர்புபடுத்தியே நோக்கப்படுகின்றன. இஸ்லாம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்துதலையும், சமூக அமைப்பைக் கட்டியெழுப்புவதையும் முரண்பாடற்ற வித்தில் ஒன்றிணைப்பதற்கு நிகரற்றதொரு வழியாகக் கையாள்கிறது.

ஒரு சிலரின் கைகளில் செல்வம் குவிவதன் தவிர்க்க முடியாத விளைவுகளான எல்லா வகை ஆடம்பர வாழ்க்கையையும் புலனின்பங்களையும் இஸ்லாம் தடுத்து விடுகிறது. ஊழியர்களுக்கு அநீதமிழைப்பதையும் தடுத்து விடுகின்றது.செல்வந்தர்கள் தங்களது செல்வங்களை இறைவனின் பாதையில் செலவிடுமாறு அறிவுறுத்துகின்றது. செல்வந்தர்கள் தங்களது செல்வங்களை தங்களுக்காகச் செலவிட்டுக் கொள்வதன் காரணமாகத் தான், பெரும்பாலான மக்கள் வறுமையாலும், இல்லாமையாலும் வாடுகின்றனர்.

இஸ்லாம் மக்களிடையே ஏற்படுத்தும் ஆன்மீக மேம்பாடானது, அவர்களை இறைவனுக்கு நெருங்கியவர்களாக ஆக்கி மறுவுலகில் இறைவனின் சன்மானத்தைப் பெற எதிர்பார்த்து, அவனது உவப்பைப் பெற முயற்சிப்பதில் உலக இன்பங்கள் இலாபங்கள் அனைத்தையும் துறக்குமாறு செய்கிறது. இறைவனின் கட்டளைகளை அனுசரித்து நடப்பவனும், மறுவுலகில் நரகம், சுவர்க்கத்திலும் நம்பிக்கை கொண்டுள்ளவனுமான ஒரு மனிதன், செல்வத்தைக் குவிப்பதில் தீவிரமாக ஈடுபடவோ, தனது சொந்த நோக்கங்களை அடைவதற்கு சுரண்டலிலும் அநீதியிலும் ஈடுபடவோ மாட்டான் என்பதில் ஐயமில்லை.இவ்வாறாக, தார்மீக, ஆன்மீக நெறிப்படுத்துகை, முதலாளித்துவத்தின் தீமைகளைக் கட்டுப்படுத்துவதற்கு அவசியமான சட்ட ஆக்கத்துக்கு வழிவகுக்கும். இத்தகைய சட்டங்கள் ஆக்கப்படும் போது, மக்கள் தண்டனைக்கு அஞ்சுவதன் காரணமாகவன்றி, மக்கள் தம் மனச்சாட்சியின்படி நடப்பதன் காரணமாக, அச்சட்டங்களைப் பேணிச செயலாற்றுவர் என்பது உறுதி.
அமெரிக்காவின் வறுமை விகிதம் அதிகரிக்கிறது.


அமெரிக்காவில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. சென்ற ஆண்டு மட்டும் 46.2 மில்லியன் அமெரிக்கர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

செப்டம்பர் 13 அன்று மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் துறை வெளியிட்ட அறிக்கையில் தரப்பட்ட புள்ளி விவரங்கள் அமெரிக்க ஏழைகளின் அவலத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. வறுமை விகிதம் 15.1 சதவீதமாக வளர்ந்து விட்டது. 4 கோடியே அறுபது லட்சம் அமெரிக்கர்கள் அன்றாடம் வெறும் வயிற்றோடு படுக்கப் போகிறார்கள். நடுத்தர மக்களின் ஆண்டு வருமானனும் 49445 டாலராகச் சுருங்கி விட்டது. 

இந்தப் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்படாத அமெரிக்கர்கள் மிகச் சிலரே. சிறப்புத் தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் டாக்ஸி ஓட்டுகிறார்கள். கல்லூரி பட்டாதாரிகளோ வேலை கிடைக்காமல் அலைகிறார்கள். லட்சக்கணக்கானோர் தங்களின் உடல்நலக் காப்பீட்டைத் திரும்பப் பெற்று விட்டார்கள். மருந்துகளின் விலை விண்ணைத் தொடுவதால் அவற்றை வாங்க முடியாமல், பென்ஷனில் காலம் தள்ளும் முதியவர்கள் தத்தளிக்கிறார்கள். கனடாவில் மூன்று ரூபாய்க்கு விற்கும் மருந்து அமெரிக்காவில் முப்பது ரூபாய்க்கு விலை போகிறது.

இது தொடர்பாக புகழ்பெற்ற பத்திரிக்கையாளர் அனிதா பிரதாப் எழுதியுள்ள விமர்சனம் சுவையானது, பொருள் பொதிந்தது.

'முதலாளித்துவத்தின் எழுச்சியாக இதனைச் சொல்ல முடியாது. இது பன்னாட்டு வணிக முதலைகளின் மோசமான பேராசையைத் தான் வெளிப்படுத்துகிறது. கட்டுப்பாடற்ற சுதந்திரச் சந்தையின் விளைவாக, மன்னிக்க முடியாத சமூக அநீதிகள் அமெரிக்காவை வாட்டத் துவங்கி விட்டன. 1980 களின் கடைசி ஆண்டுகள் கம்யூனிஸத்தின் முடிவுக்குக் கட்டியம் கூறின என்றால் 21 ம் நூற்றாண்டின் தொடக்கம் கிழடு தட்டிய முதலாளித்துவச் சிந்தனைக்கு சாவு மணி அடிப்பதாக அமைந்துள்ளது.
அமெரிக்காவின் வருமானப் பரம்பல்.


இதனைத் தானே மௌலான சையத் அபுல் அஃலா 1946 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் நாள் நடந்த கூட்டத்தில் ஆற்றிய உரையில், 'ஒரு காலம் வரும். அப்போது கம்யூனிஸம், மாஸ்கோவில் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதிலேயே கவலை கொள்ளும். முதலாளித்துவ ஜனநாயம் வாஷிங்டன், நியூயார்க் நகரங்களில் தன்னுடைய பாதுகாப்புக்காக நடுநடுங்கத் தொடங்கும்' என்று சொல்லி இருந்தார்.இன்றைய உலகம், கம்யூனிஸமும் வேண்டாம், முதலாளித்துவமும் வேண்டாம், இவை அல்லாத மூன்றாவது பொருளாதாரத் திட்டம் ஒன்று தேவை என்பதில் குறியாக இருக்கின்றது.

அந்த மூன்றாவது திட்டத்தை வழங்குவதற்கு இன்றைய முஸ்லிம் உம்மத் தயாராக வேண்டும். தயாராகுமா? இல்லை இன்னும் விரல் நகத்தில் சாயம் பூசலமா? கூடாதா?, பிறையைப் பார்ப்பாதா? கணக்கிடுவதா?தொழுகையில் விரல் ஆட்டுவதா வேன்டாமா?.பெண்களுக்கு கல்வி கற்பிப்பதா வேன்டாமா?  வீடுகளில் கணினிஇன்டர்நெட் இனைப்பு வேன்டுமாவேன்டாமா(ஓருசிலதீவிரமுஸ்லீம்களின் கருத்து இன்றைய தொழில்நுட்பம் யஹூதிகளின் முஸ்லிம்களுக்கு எதிரான சதிஎன்ரு சில சக்திகலால் தினிக்கப்படுகின்ரமை)என்பதிலேயே தங்களது காலத்தைக் கழித்துக் கொண்டிருக்குமா!! சிந்திக்க வேண்டியது இன்றைய உம்மத்தின் பொறுப்பு.
உலகின் இன்றைய நிலைமை!
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Saturday, August 25, 2012

பழைய சோற்றில் உள்ள மருத்துவ குணங்கள்!!!


நோய் எதிர்ப்பு சக்தி,உடல் சுறுசுறுப்பாக, பன்றிக் காய்ச்சல்,எந்தக் காய்ச்சலும் அணுகாது!, உடல் சூட்டைத் தணிப்பதோடு, குடல்புண், வயிற்று வலி குணப்பட, சிறு குடலுக்கு நன்மை, அலர்ஜி, அரிப்பு போன்றவை சரியாக, சட்டென்று இரத்த அழுத்தம் கட்டுக்குள் வர, உடல் எடையும் குறைய..
முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழையசோற்றில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்காவில் இருக்கும் ஒரு மருத்துவர்.

தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது!

"காலையில் சிற்றுண்டியாக இந்த பழையசோற்றைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது. இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.

அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல் எடையும் குறைந்தது." என்கிறார்.மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.

அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும். அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது. ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்".கொஞ்சம் சைனஸ் நோய் உள்ளவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது ஏன் என்றால் பழையசோற்றில் உடலுக்கு அதிகமான குளிர்ச்சி தரும் .

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

அமெரிக்கா முஸ்லிம் நாடுகளை குறி வைப்பது ஏன்?


ஒரு பரவலான கருத்து நம்மிடையே வலம் வந்து கொண்டிருக்கிறது அது அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் முஸ்லிம் நாடுளின் மீது போர்தொடுப்பது எண்ணெய் வளத்திற்க்காகத்தான் என்பதாகும் .ஆனால் உண்மை அப்படி அல்ல . வரலாறு அதை வேறு விதமாக நமக்கு கூறுகிறது . எண்ணெய் வளம் மட்டுமே காரணம் என்றால் சிலுவை போர்களே தேவைப்பட்டு இருக்காது .

உண்மை என்னவென்றால் எண்ணெய் வளங்களை அவர்கள் கைப்பற்றுவதன் மூலம் முஸ்லிம் நாடுகளுக்கு எதிரான போர்களை முன்னெடுத்து செல்வதற்கு அவர்களுக்கு பொருளாதார பலம் கிடைக்கிறது .பின்னர் ஏன்தான் அவர்கள் முஸ்லிம் நாடுகளின் மீது தொடர் போரை நிகழ்த்துகிறார்கள் ?அத சோசலிசம் என்னும் பொதுவுடைமை சித்தாந்தம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பாவில் மக்கள் ஆதரவை பெருமளவில் பெற்றது . ரஷ்யாவிலும் அதன் அண்டை நாடுகளிலும் கி.பி 1917 ஆம் ஆண்டு அதன் அரசு அமைக்கப்பட்டபோது சர்வதேச அரங்கில் அது ஆதிக்கம் பெற்றது .இந்த அரசுதான் பிற்காலத்தில் சோவியத் யூனியன் என்றழைக்கப்பட்டது .

சோவியத் யூனியன் வீழ்ச்சி அடையும் வரை அது சர்வதேச அரசியல் அரங்கில் ஆதிக்கம் செலுத்தி வந்தது . சோவியத் யூனியன் வீழ்ச்சியுற்றதும் மக்கள் பொது உடமை சித்தாந்தங்களை புறக்கணிக்க ஆரம்பித்தனர் . இதன் விளைவாக முதலாளித்துவ சித்தாந்தம் தொடர்ந்து சர்வதேச அளவில் கொள்கைகளையும் முடிவுகளையும் மேற்கொள்ள போட்டியாக வேறு எந்த சித்தாந்தமும் இல்லை என ஆயிற்று . முதலாளித்துவ சித்தாந்தத்தின் தலைவனாக அமெரிக்க இருக்கிறது .

அது ஒவ்வொரு நாட்டிலும் தனது கொள்கைகளை திணிக்கிறது . அல்லது சில சாதிகளின் மூலம் அரங்கேற்றுகிறது .சோஷலிச கொள்கைகளில் வாழ்ந்த மக்கள் அது வீழ்ச்சியுற்றதும் அதனை முற்றிலுமாக கைவிட்டு வேறு பாதைக்கு திரும்பினர் . ஆனால் முஸ்லிம் நாடுகளில் கிலாபத்துக்கு கீழ் வாழ்ந்த முஸ்லிம்கள் கிலாபத் வீழ்ச்சியுற்றாலும் இஸ்லாத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக இன்னும் தொடர்து கொண்டுதான் இருக்கிறார்கள் .

முதலாளித்துவ கோட்பாட்டை உலக மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற அமெரிக்காவின் திட்டமிட்ட நடவடிக்கைகளுக்கு இஸ்லாமிய நாடுகள் தவிர வேறு எங்கும் அவ்வளவு எதிர்ப்புகள் காணப்படவில்லை . ஏனென்றால் முதலாளித்துவ கோட்பாட்டை அமெரிக்க மக்கள் ஏற்றுக்கொண்டதை பின்பற்றி மேற்கு ஐரோப்பாவும் அதன் வழி நடக்கும் கனடா ,ஆஸ்த்ரேலியா , நியுசிலாந்து மற்றும் ரஷ்யாவும் கிழக்கு திசை நாடுகள் என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட நாடுகள், பொது உடமை கோட்பாட்டை துறந்துவிட்டு முதலாளித்துவ கோட்பாட்டை தங்களது கொள்கையாக மாற்றிகொண்ட நாடுகளும் அடங்கும் . இந்தநாடுகள் முதலாளித்துவ கோட்பாட்டை எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஏற்றுகொண்டார்கள் . மேலும் லத்தீன் அமெரிக்கா தூரக்கிழக்கு நாடுகள் தென் கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் ஆப்பிரிக்காவின் சில பழங்குடி இன நாடுகள் ஆகியவைகளுக்கு எந்த வித சித்தாந்தமும் கிடையாது . முதலாளித்துவ கோட்பாட்டிற்கு அங்கு எந்த எதிர்ப்பும் வருவதற்கு வாய்ப்பே இல்லை .

ஆகவே சித்தாந்தே ரீதியாக இஸ்லாமிய சமூகமே முதலாளித்துவ கோட்பாட்டை ஏற்றுகொள்ளாத நாடுகளாக உள்ளன .இந்த சமூகம் தன் வசம் இஸ்லாம் என்ற உயரிய சித்தாந்தத்தை வைத்திருக்கிறது .நாடோடி கூடங்களாக சரித்திரத்தின் மூலையில் நின்று கொண்டிருந்த காட்டரபி இன மக்களை இஸ்லாம் எவ்வாறு பண்பு நிறைந்தவர்களாகவும் , தனித்தன்மை உடைய சமூகமாகவும் , உலகிற்கு சத்திய ஒளியை எடுத்துசென்றவர்களாகவும் உருவாக்கியதை என்பதை முதலாளித்துவ வாதிகள் நன்கு அறிவார்கள் . அந்த முஸ்லிம்களின் தலைமைத்துவம் பலநூற்றாண்டுகள் கடந்து நின்றது . அவர்களது ஆட்சிகால்த்திலதான் நீதியும் நேர்மையும் , பாதுகாப்பும் நல்ல பண்புகளும் செழித்து வளர்ந்தது .

எனவே முஸ்லிம் சமூகம் மறுமலர்ச்சி பெற்று இந்த உலகில் மீண்டும் தலைமைத்துவம் பெற்றுவிடும் என அஞ்சியே முதலாளித்துவ வாதிகள் முஸ்லிம் நாடுகளை குறி வைத்து இயங்கி கொண்டு இருக்கிறார்கள் என்பதை சிந்தித்து பார்த்தால் இன்னும் பல பல உண்மைகள் வெளிப்படும் .......

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

ஈஸ்டர் தீவின் மர்மங்கள்!


ஈஸ்டர் தீவு, தென் அமெரிக்கா நாட்டிற்கு அருகே உள்ள குட்டி தீவு. 17ஆம் நாற்றாண்டில் இந்த தீவு ஐரோப்பியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இத்தீவு 37 அடி உயர மிகப் பிரம்மாண்டமான சிலைகளுக்கு பெயர் போனது. அத்தீவு ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. தற்பொழுது அத்தீவிலே ஒரு மரம் கூட கிடையாது, ஒரே வகையான புல் வகை மட்டுமே உள்ளது. மொத்தம் 60ற்கும்மேற்பட்ட 200 டன் எடை கொண்ட பிரம்மாண்ட சிலைகள் இருக்கின்றன.இத்தீவுக் கண்டுபிடிக்கப்பட்ட புதிதில், இந்த சிலைகள் எல்லாம் எவ்வாறு வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன என்பது புரியாத புதிராக இருந்ததது.

இத்தீவில் கி.பி. 200 ஆண்டில் 2000 மக்கள் வசித்ததாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், இன்றோ வெறும் இரு நூறுக்கும் குறைவான மக்களே வசிக்கின்றனர். 2000 மக்கள் கி.பி. 200 ஆண்டிலே வசித்தால் இப்பொழுதுஅதற்கும் அதிகமாக மக்கள் வசிக்க வேண்டும் அல்லவா? மக்கள் தொகை குறைவதற்கான காரணம் என்ன? மற்றும் எவ்வாறு இந்த சிலைகளை தொழில்நுட்பமோ கொண்டு சென்றனர்? என்ற கேள்விகள் ஆராய்ச்சியாளர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தின.கேள்விக்கு பதில் தேடும் விதமாக, அத்தீவில் தொல்பொருள், தாவரவியல் ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். நிறைய மரங்களும், உயிரினங்களும் அத்தீவில் இருந்தன என்பதைக் கண்டறிந்தனர். புவியைத் தோண்டி ஆராய்ந்தபோது, நிறைய விதைகள், பறவைகள் மற்றும் வேறு பல உயிரினங்களின் எச்சங்களும், தொன்மங்களும் கிடைத்தன.

இவையெல்லாவற்றையும் விட உருளை வடிவிலான மரம் ஒன்றின் விதையும் கிடைத்தது. இன்று அம்மரம் இவ்வுலகில் இல்லை. அவற்றின் வழி தோன்றலான, சில மரங்களும், அம்மரத்தின் குடும்ப மரங்களும் உள்ளன. எவ்வாறு உருளை மரம் காணாமல் போனது? பல வகை உயிரின்ஙகள் என்ன ஆயின என்பது விஞ்ஞானிகளுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை அளித்தது. பல்வேறு ஆய்வு முடிவுகளை மேற்கொண்ட பின், சில உண்மைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். ஈஸ்டர் தீவு பழங்குடியினர் டால்பின் மீன்களை விரும்பி உண்டனர். கடலின் ஆழப் பகுதியில் தான் டால்பின்கள் கிடைக்கும். ஆழப்பகுதியில் மீன் பிடிப்பதற்காக உருளை மரங்களை வெட்டி, கட்டு மரம் செய்வதற்கு பயன்படுத்தினர்.டால்பின் கறி சுவை காரணமாக, நிறைய கட்டுமரங்கள் செய்தனர். அதிகமான கட்டுமரங்கள் தேவைப்பட்டதால், நிறைய மரங்களை வெட்டினர்.

நாகரீகத்தின் உச்சமாக கலைகள் வளர ஆரம்பித்தன. ஈஸ்டர் தீவு மக்கள் சிற்பக் கலையில் கை தேர்ந்து விளங்கினர். அவர்கள் மிகவும் பிரம்மாண்டமான சிலைகளை செய்தனர்.அவர்கள் செய்த சிலைகளின் எடை 200 டன்னிற்கும் மேலாக இருந்தது. சிலைகளை தீவின் எல்லையோரங்களில் நிறுவினர். சிலைகளை நகர்த்தி செல்வதற்கு அவர்கள் உருளை மரங்களை வெட்ட ஆரம்பித்தனர். மனித பேராசை காரணமாக, அளவு தெரியாமல் உருளை மரங்களை வெட்டினர். உருளை மரங்கள் மீண்டும் இனப்பெருக்கம் செய்து பெருக முடியாத அளவிற்கு வெட்டிச் சாய்த்தனர்.அத்தீவில், ஒரு கால கட்டத்தில் உருளை மரங்களே இல்லாமல் போனது.உருளை மரங்கள் அழிந்தபின், அத்தீவில் இருந்த ஆறு பறவை இனங்கள் அழிந்து போயின. அவை அழிந்த பின் தான் தெரிந்தது; அப்பறவை இனங்கள் அனைத்தும் உருளை மரங்களைச் சார்ந்து இருந்தன. பறவை இனங்கள் அழிந்தபின், தீவில் இருந்த தாவரங்கள் எல்லாம் அழிந்துவிட்டன. பறவைகள் உண்டு போட்ட பழத்தில் இருந்த விதைகளினால் தான், பெரும்பாலான செடி, கொடிகள் மற்றும் தாவரங்கள் வளர்ந்தன. தாவரங்கள் இனப் பெருக்கத்திற்கு காரணமான, பறவை இனங்கள் அழிந்ததால் அனைத்து தாவரங்களும் அழிய ஆரம்பித்தன. தாவர இனங்களை நம்பி வாழ்ந்த அனைத்து உயிரினங்களும் அழிய ஆரம்பித்தன.

உருளை மரங்கள் இல்லாததால், பழங்குடியின மக்களால் டால்பின்களை வேட்டையாட முடியவில்லை. தாவரங்களும் மற்ற அனைத்து பயிர் வகைகளும் அழிந்ததால், உணவு உற்பத்தியே இல்லாமல் போனது. உணவு தட்டுப்பாடு நிலவியது. இதையடுத்து ஏற்பட்ட பசி, பட்டினியாலும், உணவிற்கு ஏற்பட்ட சண்டையாலும் மக்கள் நிறைய பேர்கள் இறந்தனர்.இங்கு ஒரு உண்மையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.உருளை மரங்களை பழங்குடியின மக்கள் உணவிற்காக பயன்படுத்தவில்லை. உணவிற்காக பயன்படாத ஒரு மரத்தை வெட்டியதாலே, ஒரு தீவில் மனித இனம் அழிந்தது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Friday, August 24, 2012

மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…


1.காலையில் உணவு உண்ணாமல் இருப்பது: காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர் களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல், மூளை அழிவுக்குக் காரணமாகும்.
2. மிக அதிகமாகச் சாப்பிடுவது:
...
இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.
3. நிறைய சர்க்கரை சாப்பிடுதல்:
இது புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

4. தூக்கமின்மை :
நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். நீண்டகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

5. மாசு நிறைந்த காற்று :
மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.

6. புகை பிடித்தல் :
மூளை சுருங்கவும், அல்ப்ஸமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

7. மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது :
மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

8. தலையை மூடிக்கொண்டு தூங்குவது :
தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள், சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

9. நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது :
உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆன பின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

10. பேசாமல் இருப்பது :
அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Thursday, August 16, 2012

மணிக்கு 4,500 கி.மீ வேகத்தில் செல்லும் விமானம்: அமெரிக்காவிலிருந்து இங்கிலாந்திற்கு ஒருமணிநேரத்தில் செல்லலாம்!


இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு 1 மணி நேரத்தில் விமானத்தில் செல்ல முடியுமா? என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.அமெரிக்காவின் நாசா மற்றும் பென்டகன் நிதி அளிப்புடன் 140 மில்லியன் டொலர் செலவில் “எக்ஸ்-51-ஏ வேவ் ரைடர்” என்ற ஜெட் விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் மணிக்கு 4,500 கி.மீ வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை ஹைப்பர் சோனிக் என அழைக்கின்றனர். இந்த விமானத்தில் பி-52 குண்டு வீசும் விமானத்தின் இறக்கை பொருத்தப்பட்டுள்ளது.இந்த விமானம் இன்று தெற்கு கலிபோர்னியாவின் எட்வர்டு விமானப்படை தளத்தில் இருந்து சோதனை ஓட்டத்தை தொடங்குகிறது. இது 70 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் திறன் பெற்றது.இச்சோதனை வெற்றி பெற்றால் விமான வரலாற்றில் இது புதிய மைல் கல் ஆக கருதப்படும்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

சோமாலியாவில் மனித வெடிகுண்டுகளாக மாற்றப்படும் குழந்தைகள்: அல்கொய்தா அட்டூழியம்!


சோமாலியாவில் குழந்தைகளைக் கடத்தி, அவர்களை கட்டிப் போட்டு கொடுமைப்படுத்தி தற்கொலைப் படைக்கு தயார்படுத்தி வருவது தற்போது தெரியவந்துள்ளது.வன்முறை மற்றும் வறுமை தலைவிரித்தாடும் சோமாலியாவில் இஸ்லாம் உண்டு, உறைவிடப் பள்ளி என்ற பெயரில், அல்கொய்தா அமைப்பு தீவிரவாத பயிற்சியை அளித்து வருகிறது.

அதுவும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை கடத்தி வந்து சங்கிலியால் படுக்கையில் கட்டி வைத்து கொடுமைப்படுத்துகின்றனர்.மேலும் தற்கொலைப் படையாக மாறி உயிர்விடுவதன் மூலம், சொர்க்கத்திற்கு போக முடியும் என்று கூறி தங்களுக்கு ஏற்றவாறு குழந்தைகளை தயார்படுத்துகின்றனர்.இதுபற்றி தகவல் அறிந்த அந்நாட்டு அரசு, மதப்பள்ளிகளை சோதனையிட உத்தரவிட்டது. இதையடுத்து நடந்த சோதனையில், சர்ச்சைக்குரிய மதப்பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் உள்ளிட்ட 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுபற்றி தீவிரவாத துப்பறிவாளர் நெயில் டோயில் என்பவர் புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.ஆனால் தீவிரவாத பயிற்சி என்பதை ஆசிரியர்கள் மறுத்ததுடன், வகுப்புக்கு ஒழுங்காக வராததால் அவர்கள் கட்டி வைக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.




பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Tuesday, July 31, 2012

அதிகமாக பழத்தை விரும்பி சாப்பிடுபவர்களுக்காக!

அதிகமாக பழத்தை விரும்பி சாப்பிடுபவர்களா நீங்கள்? அதிலும் அந்த பழத்தை மட்டும் சாப்பிட்டுவிட்டு, தோலை தூக்கி போடுபவர்களா? அவர்களுக்கு ஒரு முக்கியமான விடயம் உள்ளது.அப்படி தோலை தூக்கி போடாமல் அதையும் சாப்பிடும் பழக்கத்தை கொண்டு வாருங்கள்.ஏனெனில் பழத்தை விட பழத்தில் தோல்களிலேயே அதிகமான அளவு ஊட்டச்சத்தானது இருக்கிறது. அந்த தோலானது சுவையான இல்லாமல் இருக்கலாம், ஆனால் அதை கண்டிப்பாக சாப்பிடுங்கள்.ஏனென்றால் அதனை உண்பதால் ஆரோக்கியமாக இருக்க முடியும். அதிலும் முக்கியமாக பழத்தை சாப்பிடும் முன்பு நன்கு கழுவிய பின்னரே சாப்பிட வேண்டும். அத்தகைய பழங்களில் எவற்றின் தோல்களை முக்கியமாக சாப்பிட வேண்டும்.

மாம்பழம்: பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் மாம்பழத்தின் பழத்தில் மட்டும் ஊட்டச்சத்தானது இல்லை, அதன் தோலிலும் சத்துக்கள் நிறைந்துள்ளன.இதன் தோலை சாப்பிட்டால் நீரிழிவு, புற்றுநோய் போன்ற நோய்கள் குணமாவதுடன், இரத்தத்தில் உள்ள கொழுப்புகளின் அளவை குறைத்துவிடும். ஆகவே இந்த மாம்பழத்தை தினமும் ஒரு துண்டுகளை தோலோடு சாப்பிட்டால் நல்லது.

ஆப்பிள்: நிறைய பேர் ஆப்பிளை சாப்பிடும் முன் அதன் தோலை நீக்கி விட்டு, பின் அதனை சாப்பிடுவர். ஆனால் அந்த ஆப்பிளின் தோலானது அவ்வளவு கடினமாக இருக்காது, இருப்பினும் அவ்வாறே உண்பர்.அத்தகைய ஆப்பிளின் தோலை சாப்பிடுவதால் விரைவில் செரிமானமடைவதுடன், பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளது. ஆப்பிளின் தோலில் கால்சியம் மற்றும் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது.மேலும் அது டயட் மேற்கொள்வோருக்கு ஏற்ற அதிகமான நார்ச்சத்தானது உள்ளது. அதிலும் அளவுக்கு அதிகமான ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால், உடலில் இருக்கும் செல்கள் வலுவடைவதுடன், இதய நோய் மற்றும் நீரிழிவு ஏற்படாமல் பாதுகாக்கிறது. இது தோலுடன் சாப்பிடும் பழங்களில் மிகவும் எளிதாக விழுங்கக்கூடிய பழம்.

எலுமிச்சை: எலுமிச்சையின் தோலை சாப்பிட்டால், உடலில் செரிமானமானது நன்கு நடைபெறும். இது வயிற்றில் ஏற்படும் தசைப்பிடிப்புகளை நீக்கும்.ஒரு சிறு துண்டு எலுமிச்சை தோலை தினமும் சாப்பிட்டால், உடலில் இரத்த சுழற்சியானது நன்கு நடைபெறும்.மேலும் ஆயுர்வேதத்தில் கல்லீரலில் ஏற்படும் நோய்க்கு, இந்த எலுமிச்சையின் தோலில் இருந்து சாற்றை எடுத்தே கொடுப்பர். அதிலும் ஆயுவேதத்தில் ஸ்கர்வி நோயை சரிசெய்ய, இந்த சாற்றையே கொடுப்பார்கள். தினமும் ஒரு சிறு துண்டுகளை சாப்பிட்டால் சருமமும் அழகாக இருக்கும்.

ஆரஞ்சு: ஆரஞ்சு பழத்தோலில் அதிக அளவு தாவர ஊட்டச்சத்துகள் மற்றும் ஃப்ளேவனாய்டுகள் உள்ளன. இதுவும் செரிமானத்திற்கு சிறந்தது.மேலும் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, புற்றுநோய் ஏற்படுவதையும் தடுக்கும். அதிலும் இதனை சமையலில் பயன்படுத்தினால், ஒரு நல்ல சுவையானது கிடைக்கும். இந்த ஆரஞ்சு பழத்தோலை அப்படியே சாப்பிட முடியாதவர்கள், அதனை சமையலில் சேர்த்து உண்ணலாம்.

கிவி: கிவி பழத்தின் தோலில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் அளவுக்கும் அதிகமாக இருக்கிறது.அதிலும் இதனை உண்பதால் இரத்தமானது லேசாக இருப்பதோடு, உடலில் எளிதாக நன்கு சுழற்சியானது நடைபெற்று, இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.ஆகவே இந்த பழத்தை தினமும் உண்டால், உடலுக்கு தேவையான சத்துக்களை எளிதாகப் பெற்றுக் கொள்ளலாம்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

பகலில் தூங்குபவர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி!


உடல் பருமனாக இருப்பவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவது இயல்பு. அதே சமயம் பகலில் தூங்குபவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.உடல் பருமனாக இருப்பவர்கள் எளிதில் சோர்வடைவதோடு பகலில் அதிக நேரம் தூங்குவதை விரும்புகின்றனர் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவில் வசிக்கும் 20 சதவிகித இளைஞர்கள் பகல் நேர தூக்கத்தைவிரும்புகின்றனராம். இதுதொடர்பாக பகலில் தூங்கும் 1,173 இளைஞர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, அந்த இளைஞர்களுக்கு உயர்ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்றவை இருந்தது கண்டறியப்பட்டது. இரவில் சரியாக உறக்கம் வராமல் தவிப்பவர்கள் பலரும் பகல்நேரத்தில் தூங்கி பொழுதை கழிக்கின்றனர் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


அதேபோல் வீட்டில் மனோநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகளை கொண்டிருப்போருக்கு மன அழுத்தம் ஏற்படுவது இயற்கையான ஒன்று என்று மற்றொரு ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.பெரியவர்களுக்கு மன அழுத்தம் எவ்வாறு ஏற்படுகிறது என்பதை கண்டறிவதற்காக, அமெரிக்காவைச் சேர்ந்த அதிகாரிகள் 83 ஆண்/பெண்களிடம் பரிசோதிக்கப்பட்டது. அவர்களுக்கு மூளை பாதிப்புக்குள்ளான குழந்தைகள் இருப்பதால், பெரியவர்களின் மனோநிலையிலும் மாற்றம் ஏற்படுவது தெரிய வந்தது.


குழந்தைகளின் பாதிப்புகளால் வீட்டில் இருப்பவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவது தெரிய வந்துள்ளது. அதேசமயம் மனோநிலை பாதிப்பு ஏதுமில்லாமல் உள்ள குழந்தைகளுடன் வசிப்போருக்கு எவ்வித மன அழுத்தமும் இருப்பதில்லை என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.சகோதரரோ அல்லது சகோதரியோ மனோநிலை பாதிக்கப்பட்டிருப்பாரேயானால், வீட்டில் உள்ளவர்களுக்கு இயல்பாகவே மன அழுத்தம் ஏற்பட்டு விடுவதும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Google Handwrite: இணைய உலகில் புதிய புரட்சி!


இணையங்களைப் பயன்படுத்தி தேடுதல்களை மேற்கொள்ளும் போது, ஒவ்வொரு தேடு பொறியினுள்ளும் கொடுக்கப்படும் சொற்களை கீ போர்ட்களைப் பயன்படுத்தி இதுவரை காலமும் உட்புகுத்தி வந்துள்ளோம்.ஆனால் தற்போது கூகுள் அதிலும் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கூகுள் தேடுபொறியைப் பயன்படுத்தி தேடும் போது பயனர் தனது விரல்களின் உதவியுடனேயே குறிப்பிட்ட சொல்லை திரையின் மீது எழுதி தேடுதலை மேற்கொள்ள முடியும்.எனினும் இவ்வசதியானது அன்ரோயிட் இயங்குதளத்தின் 2.3 பதிப்பிற்கு பின்னர் வந்த பதிப்புக்கள் மற்றும், அன்ரோயிட் 4.0 ஆகியவற்றினைக் கொண்ட கைப்பேசிகளுக்கு மட்டுமே இவ்வசதி தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

HP அறிமுகப்படு​த்தும் புதிய Slate 8 கணினிகள்!


கணனிகளை உற்பத்தி செய்யும் பல்வேறு நிறுவனங்களுக்கு மத்தியில் முன்னணியில் திகழும் நிறுவனங்களில் ஒன்றான HP ஆனது Slate 8 எனும் நவீன ரக கணனிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.விண்டோஸ் இயங்குதளத்தில் செயற்படவல்ல இந்த புதிய கணனியானது 10.1 அங்குல திரையைக் கொண்டதாகக் காணப்படுவதுடன், இதனுடன் இணைக்கப்பட்டுள்ள மின்கலமானது தொடர்ச்சியாக எட்டு தொடக்கம் பத்து மணித்தியாலங்கள் வரை செயற்படக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

பூமியின் மீது மோதிய கிரகத்தின் சிதறல் தான் சந்திரன்: ஆய்வின் மூலம் நிரூபணம்!


பூமியின் மீது மோதிய கிரகத்தின் சிதறல் தான் சந்திரன் என்பது தற்போது ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.நாம் வாழும் கிரகமான பூமியின் துணைக்கோள் சந்திரன் எப்படி உருவானது என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருகின்றது.பூமியின் சிதறலே சந்திரன் என முந்தைய ஆய்வு தெரிவித்தது. அந்த சிதறல் எப்படி உருவானது என்பது குறித்து விஞ்ஞானிகள் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர்.இதற்காக சந்திரன் மற்றும் பூமியிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.


அதில் சந்திரனில் உள்ள மாதிரியில் பூமியில் இருப்பது போன்றே இரும்பு தாதுக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் இவைகள் ஒரே அளவில் இல்லை. சற்று வித்தியாசத்துடன் காணப்பட்டது.இவைகள் தியா என்ற கிரகத்தின் மாதிரியுடன் தொடர்புடையதாக உள்ளன. எனவே, பூமி அதிவேகமாக சுற்றிய போது தியா என்ற பெரிய கிரகம் மோதியதில் விபத்து ஏற்பட்டிருக்கலாம்.அதில் இருந்து விழுந்த சிதறலே சந்திரனாக மாறி இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Saturday, July 21, 2012

நீரின்றி அமையாது உலகு!


தவித்த வாய்க்குத் தண்ணீர் கொடுப்பது புண்ணியம் என்று சொல்வார்கள். தமிழர் பண்பாட்டில் வீட்டிற்கு வருபவர்களுக்கு, முதலில் தண்ணீர் கொடுப்பது வழமை. கோடைக்காலத்தில் குடி தண்ணீர், மோர் இவையெல்லாம் வைத்து வெப்பத்தையும், தாகத்தையும் தணிக்க மக்கள் பொது நல மனப்பான்மையோடு பொது இடங்களில் வைக்கப்படுவதும் நாம் அறிவோம். ஆனால் காலப்போக்கில் இந்த நற்செயல்கள் காணக்கிடைக்குமா என்பது சந்தேகத்தில் நிற்கும் நிலை. மக்களுக்கு பொது நலம் குன்றிவிட்டது, சுயநலவாதிகளாக அனைவரும் மாறிவிட்டனர் என்பது மட்டும் இதன் பின்னணி காரணமாக இருக்கமுடியாது என்பது மட்டும் உண்மை. ஆம் நேயர்களே.


இன்றைக்கு உலக வரைபடத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் நாளடைவில் பெருகி வருவதும், பூமியின் முக்கால் பகுதி நீரால் சூழப்பட்டது ஆனால் குடிநீரின் அளவோ அருகிக்கொண்டிருக்கிறது என்ற நிதர்சனமும், உலக வெப்ப ஏறல் உள்ளிட்ட சுற்றுச் சூழல் தொடர்பான அச்சுறுத்தல்கள் மெதுவாக அதிகமாகி வருகிற உண்மையும், உலகில் அடுத்த நிகழும் மாபெரும் போர், நில எல்லைகளை ஆளுமைப்படுத்தும் நோக்கிலோ, அல்லது பொருளாதார வளங்களை தன்வயப்படுத்தும் நோக்கிலோ அமையாது ஆனால் தண்ணீருக்காக உயிர்பலிகள் நிகழும் கொடும்போர் மூளும் என்று சொல்லும் அறிஞர்கள், வல்லுனர்களின் கூற்றை நம்பசெய்கிறது.


வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் எவை என்று தேட புறப்பட்டால் உலகின் பல்வேறு நாடுகளின் பெயர்கள் நமது பட்டியலில் இடம்பிடிக்கும். உலக மக்கள் தொகையின் இருபெரும் புள்ளிகளான சீனாவும், இந்தியாவும், உலகின் மிக முன்னேறிய நாடாக மதிக்கப்படும் அமெரிக்காவும், ஏழைக் கண்டமான ஆப்பிரிக்காவின் பல நாடுகளும் வறட்சிக்கு முகம் கொடுத்துக்கொண்டிருக்கும் நிலை நாம் காணமுடிகிறது. இன்றைக்கு சீனாவின் சொங்சிங் மற்றும் சிச்சுவான் பகுதிகள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சந்தித்திராத வறட்சிக்கு உட்பட்டுள்ளன.


சுட்டெரிக்கும் வெப்பநிலை சொங்சிங் நகராட்சியின் மூன்றில் இருபகுதி ஆறுகள் மற்றும் நீரூற்றுகளையும், 471 நீர்த்தேக்கங்களையும், 10 ஆயிரம் கிணறுகளையும் வற்றச்செய்துள்ளது. இந்நகராட்சியின் மின் உற்பத்திக்கான நீர்த்தேக்கங்கள் அனைத்தும் செயலற்றுள்ளன. 1.31 மில்லியன் ஹெக்டேர் நிலப்பகுதி இந்த வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 80 லட்சம் மக்களும், 73 லட்சம் கால்நடைகளும் தற்காலிக தண்ணீர் பற்றாக்குறைக்கு உள்ளாயினர். சொங்சிங்கில் மட்டுமே இந்த வறட்சியால் 6.13 பில்லியன் யுவான் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.


ஒரு பகுதியின் இழப்பும், பாதிப்பும் இவ்வளவு, ஆனால் சீனாவின் மொத்தம் 11.13 ஹெக்டேர் நிலப்பரப்பு வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. 1 கோடியே 75 லட்சம் மக்களும், 1 கோடியே 66 லட்சம் கால்நடைகளும் குடிநீர் பற்றாக்குறைக்கு ஆளாயினர். சீனாவில் இழப்பு இப்படி என்றால், மற்ற நாடுகளும் இதே ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதை அறியும் போது நமது சிந்தனை கொஞ்சம் அச்சம் கலந்த கேள்விக்குறியில் சிக்கிக்கொள்கிறது.


கிட்டத்தட்ட 75 ஆண்டுகளுக்கு பிறகு கூடுதலான வெப்பநிலையுடன்கூடிய கோடைக்காலத்தை அமெரிக்க மக்கள் அனுபவித்துக்கொண்டுள்ளனர். அமெரிக்காவில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி நிலை, விவசாயத் தொழிலில் ஈடுபட்டவர்களை பாதிக்கும் என்பதோடு, இதன் தொடர்ச்சியாக உலக உணவு பொருள் வினியோகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நிலை ஏற்படுமோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. ஆய்வாளர்களை பொருத்தவரை சந்தேகம் என்ற நிலையைக் கடந்து, வறட்சியால் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறை, தண்ணீர் பற்றாக்குறையால் ஏற்படும் குறைவான வேளான் உற்பத்தி, குறைவான வேளான் உற்பத்தியால் ஏற்படும் உணவு பொருள் தட்டுப்பாடு என்று சங்கிலித் தொடராக பிரச்சனைகள் நீண்டு கடைசியில் உலக உணவு பெருள் வினியோகம் கடுமையாக பாதிக்கப்படும் நிலையும், நீலத்தங்கம் எனப்படும் தண்ணீர் எப்படி உலகை ஆட்டுவிக்கப்போகிறது என்பதும் எதிர்காலத்தில் நிகழப்போகும் உண்மைகள்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Friday, July 20, 2012

பூமி எவ்வளவு அழகானது?


Terra Sacra புனித பூமி எனும் பெயரில் Sean F.White எனும் புகைப்படகாரர் வெளியிட்டுள்ள டைம் லேப்ஸ் முறையிலான டாக்குமெண்டரி இது. உலகை இதைவிட இவ்வளவு அழகாக யாராலும் காண்பிக்க முடியுமா எனும் ஆச்சரியத்தை தருகிறது.2006 முதல் 2012 வரை உலகின் உலகின் 7 கண்டங்களிலும் உள்ள 24 நாடுகளின், புராதன நகரங்களுக்கும், எழில்கொஞ்சும் இயற்கை பிரதேசங்களும் சென்று டைம்லேப்ஸ் முறையில் எடுத்த புகைப்படங்களை கொண்டு இவர் இவ்வீடியோவை உருவாக்கியுள்ளார். 


கனடாவில் பெரிய ஸ்கிரீனில் இந்த டாக்குமெண்டரியை முதன் முறையாக வைட் திரையிட்ட போது, அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து இணையத்திலும் தற்போது வெளியிட்டுள்ளார். இன்னமும் தான் செல்லாத நாடுகளுக்கு சென்று அடுத்த டைம்லேப்ஸ் வீடீயோவை தயாரிக்க இப்போதே தயாராகிவிட்டார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF