Sunday, September 30, 2012

வங்கதேசத்தில் பௌத்த விகாரைகளுக்கு இஸ்லாமியர்கள் தீ வைப்பு!

வங்கதேசத்தில் தென் கிழக்கு பிராந்தியத்தில் பௌத்தர்கள் அதிகம் வாழும் கிராமங்கள் மீது நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் தாக்குதல் நடத்தினர்.
இவர்கள் குறைந்தது ஆறு பௌத்த விகாரைகளுக்கு தீ வைத்துள்ளார்கள்.

மேலும் கொக்ஸ் பஜார் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்கள் தாக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் பயந்து தங்களது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளன.அந்த மாவட்டத்தில் பௌத்தர் ஒருவர், அவரது பேஸ்புக் பக்கத்தில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தியதாக வெளியான குற்றச்சாட்டுகளை அடுத்தே இந்த வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.இந்நிலையில் தனக்கும், பேஸ்புக் பக்கத்தில் வெளியானதற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர் தெரிவித்துள்ளார்.





பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF