Thursday, August 16, 2012

சோமாலியாவில் மனித வெடிகுண்டுகளாக மாற்றப்படும் குழந்தைகள்: அல்கொய்தா அட்டூழியம்!


சோமாலியாவில் குழந்தைகளைக் கடத்தி, அவர்களை கட்டிப் போட்டு கொடுமைப்படுத்தி தற்கொலைப் படைக்கு தயார்படுத்தி வருவது தற்போது தெரியவந்துள்ளது.வன்முறை மற்றும் வறுமை தலைவிரித்தாடும் சோமாலியாவில் இஸ்லாம் உண்டு, உறைவிடப் பள்ளி என்ற பெயரில், அல்கொய்தா அமைப்பு தீவிரவாத பயிற்சியை அளித்து வருகிறது.

அதுவும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை கடத்தி வந்து சங்கிலியால் படுக்கையில் கட்டி வைத்து கொடுமைப்படுத்துகின்றனர்.மேலும் தற்கொலைப் படையாக மாறி உயிர்விடுவதன் மூலம், சொர்க்கத்திற்கு போக முடியும் என்று கூறி தங்களுக்கு ஏற்றவாறு குழந்தைகளை தயார்படுத்துகின்றனர்.இதுபற்றி தகவல் அறிந்த அந்நாட்டு அரசு, மதப்பள்ளிகளை சோதனையிட உத்தரவிட்டது. இதையடுத்து நடந்த சோதனையில், சர்ச்சைக்குரிய மதப்பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் உள்ளிட்ட 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுபற்றி தீவிரவாத துப்பறிவாளர் நெயில் டோயில் என்பவர் புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.ஆனால் தீவிரவாத பயிற்சி என்பதை ஆசிரியர்கள் மறுத்ததுடன், வகுப்புக்கு ஒழுங்காக வராததால் அவர்கள் கட்டி வைக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.




பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF