Monday, January 18, 2010

அறிவியல் கேள்வி - பதில்கள்


[1]சூரிய, சந்திர கிரகணம் ஏன் ஏற்பகிறது? இதை வெறும் கண்ணால் பார்த்தால் கெடுதலா?
சூரிய கிரகணம் ! சூரியனுக்கு பூமிக்கும் இடையில் சந்திரன் வரும் பொழுது நிகழ்வது முழுவதுமான சூரிய கிரகணம் மிகவும் அரிதாக நடக்கும் ஒன்று கடந்த 1999ம் ஆண்டு பிரான்சில் முழு சூரிய கிரகணம் நடந்தது. அடுத்தது ஆகஸ்டு 1ம் தேதி (01.08.2008)

சந்திர கிரகணம் பூமியின் நிழல் சந்திரனில் விழுந்து ஏற்படுவது சூரியன் பூமி சந்திரன் இவையாகவும் ஒரே நேர்க்கோட்டிற்கும் வரும் பொழுது மட்டுமே ஏற்படும் சமீபத்திய சந்திர கிரகணம் பிப்ரவரி 21 2008ம் ஆண்டு நடந்தது. முழு சந்திர கிரகணம் அரிதாய் நடக்கும் ஒன்று. அடுத்த முழு சந்திர கிரகணம் டிசம்பர் 21, 2010ம் அன்று ஏற்படும்.

பொதுவாக கிரகணங்கள் ஓரு இடத்தில் பார்ப்பது போல் இன்னொரு இடத்தில் பார்க்க முடியாது உலக உருண்டையில் நாம் இருக்கும் பகுதியை பொறுத்து அதன் பகுதியோ அல்லது முழுவதுமாகவே பார்க்கலாம் 1999ம் ஆண்டு சூரிய கிரகணம் முழுவதுமாக தெரிந்தது பிரான்ஸில் என்பதை வைத்து புரிந்து கொள்ளவும். பொதுவாக கிரகணங்களை வெறும் கண்களால் காண்பது நல்லதல்ல, சென்னையில் பிர்லா கோளரங்கம் போன்ற அறிவியல் கூடங்களில் அதற்கான வசதிகள் உண்டு. வெற்று கண்களாளயோ, கருப்பு கண்ணாடிகளின் மூலமோ பார்ப்பது நல்லதல்ல.

[2]வெங்காயம் வெட்டும் பொழுது கண்ணீர் வருவதேன்?
வெங்காயத்தில் உள்ள ஒரு அமிலம் (ப்ரோப்பேன்தாயல் ஆக்ஸைடு) சுலபமாக ஆவியாகி கண்களை பாதித்து-அதன் பலன் கண்ணீர்.

[3]பறவைகள் மட்டும் எப்படி மின்சார கம்பியில்...?
ஒரு கம்பியில் அமர்ந்தால் பறவைகளுக்கு மட்டும் அல்ல நமக்கும் ஒன்றும் ஆகாது. மின்சாரம் பாய வேண்டுமானால் இரண்டு வகையான கம்பிகளையும் கொஞ்சமேனும் தொடவேண்டும்

[4]கப்பல், விமானம், போன்றவற்றில் பயணம் செய்யும் பொழுது சில பேருக்கு மட்டும் வாந்தி வருகிறதே ஏன்?
பயணத்தின் போது ஆடும் ஆட்டத்தினால் காதுகளுக்கு இருக்கும் பேலன்ஸ் மெக்கானிசம் (இதைப்பற்றி சின்ன கட்டுரையே வரையலாம்) தடைப்பட்டு, ஓரு வித குழப்பத்தில் வெளிவருவதுதான் தலை சுற்றல், வாந்தி
அலர்ஜியை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?
அலர்ஜியை பொருத்தமட்டில் அது ஓன்றும் பாக்டீரியாவை போன்று உடம்பில் உருவாகி வரும் நோய் போன்றதல்ல பொதுவாக நம் உடம்பில் தற்காப்புக்காக இம்யுன் சிஸ்டம் (நோய் எதிர்ப்பு வகையறா) என்பது எல்லோருக்கும் உண்டு. சில நேரங்களில் சில வஸ்த்துக்களை நாம் விழுங்கும் போதே, தூசி போன்ற சமாச்சாரங்களை உடம்புக்குள் ஏதோ ஒரு வழியில் உள்ள போகும் போது இந்த இம்யுன் சிஸ்டம் குளறுபடி பண்ணி அலர்ஜி என்ட்ரி. இந்த வியாதிக்கு அலர்ஜி என பெயர் சூட்டியவ டாக்டர் க்ளெமன்ஸ் ப்செராய்ஹன். அலர்ஜி வருவது ஓவ்வொருவருக்கும் வேறு வேறு வகையில் வரும்.
ஒருத்தருக்கு முள்ளங்கி அலர்ஜி என்றால் இன்னொருவருக்கு கத்திரிக்காய். இது நமக்கு எந்த பொருளால் வருகிறது என்பதை தனிப்பட்ட ஒருவருக்கு ஆராய்ச்சி செய்து கண்டுப்பிடிப்பது என்பது சிரமமான விஷயமே. சில ஆண்டுகளுக்கு முன் இந்த அலர்ஜிக்கு காரணம் ஆராக்கிடோனிக் ஆஸிட் என்றும் கெமிக்கல் சமாச்சாரம்தான் என்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள்

[5]பிளைட்டின் (flight) கருப்பு பெட்டி எதற்கெல்லாம் பயன்படும் ?
பிளைட் டேட்டா ரிக்கார்டர் (flight data recorder) எனப்படும் பிளாக் பாக்ஸ் உண்மையில் ஆரஞ்சு வண்ணத்தில் உள்ள பொருள். எந்த ஒரு விமானமும் விபத்திற்குள்ளான பிறகு இந்த கருப்பு பாக்ஸை (ஆரஞ்சு பாக்ஸ்) தேடிப்பிடித்து அதில் கடைசியில் என்ன மாதிரியான வார்த்தைகள், சப்தங்கள் பதிவாயிருக்கின்றன என்பதை ஆராய்வார்கள், அதற்கு மட்டுமல்லாமல் முதலில் இயக்கி பார்க்கும் விமானங்களின் சேப்டி சம்பந்தப்பட்ட விபரங்களுக்கும் ஜெட் என்ஜீனின் செயல் திறன்களை பரிசோதிக்கவும் பயன்படுத்துகிறார்கள். எந்த மாதிரியான விபத்தாக இருந்தாலும் இந்த பெட்டி மட்டும் பிழைத்துக் கொள்ளும். ரொம்ப அரிதாக சில தகவல்கள்களில் சில குறைகள் நேரிடலாம், அதுவும் அந்த விபத்தின் தன்மையை பொறுத்து.

[6]நன்றாக சாப்பிட்டதும் ஒரு மாதிரி மந்த நிலை (தூக்கம்) வருவதேன்?
சாதாரணமாக தெரியும் நம் மூளை நாம் சுவாசிக்கும் காற்றில் 75% சதவீதக்கும் மேல் உள்ள ஆக்ஸிஜனை எடுத்துக்கொள்ளும், இரத்த ஓட்டத்தை பொறுத்தவரையிலும் கூட அப்படிதான். நீங்கள் நன்றாக சாப்பிட்டால் உடனே உங்கள் வயிறு உணவை செரிமானம் செய்ய இரத்த ஓட்டத்தையும் ஆக்ஸிஜனையும் பங்கு போட வரும் பொழுது, மூளை தனக்கு உரிய இரத்தம் வராமல் கொஞ்சம் ஸ்தம்பிக்க, மந்த நிலை ஆரம்பம். நம் உடம்பிலேயே மிகவும் பசி கொண்ட உறுப்பு மூளைதான். அதற்கு ஆக்ஸிஜனும், இரத்த ஓட்டமும் அதிகமாக வேணும்.

[7]இடி விழுந்து சாவு எப்படி?
நீங்கள் நினைப்பது போல் இடி என்பது ஓரு பெரிய கல் என்பது போன்றோ, அல்லது கனத்த இரும்பு துண்டு என்பது போலவோ, உள்ள விஷயம் அல்ல. மேகங்களில் காணப்படும் ஆயிரக்கணக்கான கிலோ வோல்ட் மின்சக்தி பூமியில் சில உயரமான பொருட்களுடம் ஸ்பார்க் அடிக்கும் அந்த மின்சாரம்தான் இடி, நீங்கள் காதில் இடிசத்தம் கேட்டது என்று சொல்வது, மின்னல் உருவாகும் சமயத்தில் வருகின்ற சத்தம் தான் அது. மின்சாரம் ஒன்று கூடி ஒரு இடத்தில் பயங்கரமான வோல்டேஜ் சக்தியுடன் தாக்குவதுதான் நம்மை காலி செய்யும் இடி .
பச்சைமரம் உட்பட எதுவும் இதன்மூலம் கருகிவிடும். உங்களுக்கு தெரிந்த ஒருவர் இவ்வகையில் இடிதாக்கி இறந்திருந்தால், அதை அவர் உணரும் முன்னே இறந்திருப்பார். அவ்வளவு சக்தி.

[8]மாரடைப்பு பற்றி. !?
பெரும்பாலும் ஆண்களுக்கு, அதிலும் ஐம்பது வயதை தாண்டியவர்களுக்கு இந்த மாரடைப்புக்கான சாத்திய கூறுகள் அதிகம். இதயம் எல்லா பகுதிகளுக்கும் ரத்தம் சப்ளை செய்யும் குழாய்களை கரானரி ஆர்ட்டரிஸ் என்பார்கள், மொத்தம் இரண்டு குழாய்கள் உண்டு. இவைகளை அடைப்பு ஏற்படும் போதுதான் சிக்கல்.

மாரடைப்பு ஏற்பட காரணம் பல. அவைகளில் சில, அதிகம் அலட்டிக் கொள்ளும் போது, நிறைய சாப்பிட்டபின், ரொம்ப குளிர் அனுபவிக்கும் போது,மேற்சொன்னவைகளும் கூடி நின்றால் 90 சதவீதம் மாரடைப்புக்கு வாய்ப்பு. மாரடைப்பை உணரும் வகைகளில் சிலர் பொதுவாக மார்பின் நடுவில் வலி வரும், அதிகமாக வேர்க்கும், மூச்சு திணரும் ரத்தம் இல்லாமல் பல்ஸ் சடாரென்று குறைந்து நினைவிழக்கும், இப்படி சிலவற்றில் ஒன்றை உணர்ந்தால் கூட, அடுத்த ஓரு மணி நேரத்திற்குள் ஐ.சி.யு.வில் (இன்டன்சிவ் கேர் யூனிட் சேர்ந்தால்) பிழைத்துவிடலாம்.

[9]மலைபிரதேசங்களில் குளிர்ச்சியான க்ளைமேட் எப்படி வருகின்றது.?
சூரிய ஒளியை கடல் மட்டத்திற்கு சமமாக இருக்கும் அடர்த்தியான காற்று கிரகித்து நமக்கு தருவதால் கொஞ்சம் வெப்பம் அதிகம். மலைமேல் இருக்கின்ற அடர்த்திக் குறைந்த காற்றுமண்டலம் கிரகிக்க முடியாமல் சூரிய ஒளியின் வெப்பம் குறைந்து குளிர் தெரிகிறது.
ஓரு சின்ன பரிசோதனை இது. நீங்கள் மலை பிரதேசங்களுக்கு செல்லும் போது செய்து பாருங்கள். ஒரு காலி பிளாஸ்டிக் பாட்டிலை நன்றாக மூடி வைத்துக்கொள்ளுங்கள். மலையின் உச்சியை தொட்டபின் பாட்டிலின் அடைப்பட்டிருந்த காற்று மிகுந்த சத்தத்துடன் வெளியே வரும். பின்பு அதே பாட்டிலில் நன்றாக மூடி மலையை விட்டு கீழே இறங்கியவுடன் பாட்டிலை நன்றாக பாருங்கள் அது கண்டிப்பாக சிறுதளவாவது யாரோ கையால் பிடித்து நைத்தது போல் இருக்கும். காரணம் சமமட்டத்தில் இருக்கும் காற்று அடர்த்தியாக இருப்பதால் பாட்டில் உள்ளே இருக்கும் குறைந்த காற்றழுத்தத்தை சமன்படுத்த இந்த காற்று முயற்ச்சித்ததால் பாட்டில் நைத்து போயிருக்கும்.

[10]பூமிக்கும் வானத்துக்கும் எவ்வளவு தூரம்?
வானம் என்பது ஒர முடிவு அல்ல அது முடிவுறா வகையறா (infinte) நீங்கள் அண்ணாந்து பார்க்கும் வான வெளியில் தெரியும் எண்ணில் அடங்கா நட்சத்திரங்களுக்கு அப்பாலும் பல விஷயங்களை இருக்கின்றன நாமாக, நமக்கு மேலுள்ளதை வானம் என்று ஒரு பெயரிட்டிருக்கிறோம். அது ஒரு மனித அறிவுக்குள் அடங்கா பிரம்மாண்ட சமாச்சாரம்.
ஒளியின் வேகம் எவ்வளவு? இதைவிட வேகமாக செல்லக்கூடிய எதேனும் உண்டா?
மனிதன் கண்டுபிடித்த வரையில் ஒளியைவிட வேகமாக செல்லக்கூடிய ஒன்று அறிவியல் ரீதியாக எதுவுமில்லை (மனம் வேண்டுமானால் இதைவிட வேகமாக போகலாம் சந்திரனில் இருப்பது போல் நினைத்தால், 1 வினாடிக்கும் குறைவான நேரத்தில் நீங்கள் சந்திரனில் இருப்பீர்கள்) ஒளியின் வேகம் கொஞ்சநஞ்சமில்லை, ஒரு செகண்டுக்கு சுமார் 1,86,282 மைல்கள் (மணிக்கு அல்ல, கவனம் கொள்ளவும்) இன்னும் எளிமையான சொல்லவேண்டுமென்றால் பூமிலிருந்து 3,84,403 கிலோ மீட்டர் தூரம் இருக்கும் சந்திரனை ஒளியின் வேகத்தில் சென்றால் ஜஸ்ட் 1 1/3 செகண்டில் ‘டச்’ பண்ணிடலாம்.
ஒளியின் வேகம் ஒரு சாதாரண பரந்த அண்ட வெளியில் இருக்கும் அந்த வேகம் ஒரு கண்ணாடியிலோ காற்று நுளைந்த இடத்திலோ சென்றால் கொஞ்சம் குறைவு. சூரியனையும் தவிர்த்து அண்ட வெளியில் (milky ways - பால் வீதி) அறிவியல் உலகத்தில் தோராயமாக 200 முதல் 400 மில்லியன்கள் (3000 கோடிக்கும் மேல்) இருப்பதாக நம்புகிறார்கள். இவைகள் ஒவ்வொன்றுக்கும் உள்ள தூர அளவை கேட்டால் தலை விண்மீன்கள் சுற்றும். இவைகளின் தூரத்தை கிலோமீட்டர் கொண்டு அளந்தால் அவைகளை எண்களில் எழுதிப்பார்க்கும்பொழுது இன்னும் அதிகமாய் தலை சுற்றும் ஆகவேதான் அந்த தூரங்களை ஒளி ஒரு வருடத்திற்கு அதன் ராட்சஸ வேகத்தில் சென்றால் எவ்வளவு தூரமோ அதை ஒரு ஒளி ஆண்டு என்று அதன் மூலம் ஒவ்வொரு விண்மீன்களுக்கும் உள்ளதூரங்களை அளவிடுகிறார்கள்.
julian காலண்டர் (கிரிகோரியன் காலண்டர் என்பது நாம் கணக்கிடும் 365 நாள் கணக்கு) பிரகாரம் 365.25 நாட்களுக்கு ஒளி சென்றடையும் தூரம் 9460730472580 (என்னோட பேங்க் அக்கவுண்ட் நம்பர் இல்லை ) நம்ம கணக்கில் சொல்லவேண்டுமென்றால் ஒன்பது லட்சத்து நாற்பதாயிரத்து எழுபத்து மூனு கோடியே, நாலுலட்சத்து எழுபத்து இரண்டாயிரத்து ஐநூற்று எண்பது கிலோ மீட்டர்) நம் அண்ட வெளியில் இருக்கும் விண்மீன்கள் ஒவ்வொன்றும் இந்த மாதிரி ‘ஒளி ஆண்டு’ தூரங்களை வைத்து கணக்கிட்டால் அவையே பல ஆண்டுகள் சென்றால் தான் ஒன்றிலிருந்து ஒன்றை அடைய முடியும் இவையெல்லாம் கூட மனிதன் கண்டுபிடித்த தூரம் தான் இதற்கு மேலும் உண்டு என்பது அறிவியல் நம்பும் ஒன்று பூமிக்கு மிக அண்மையிலுள்ள விண்மீணான புரோக்சிமா செண்டோரி ( proxima centuri) 4:22 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.

[11]பால் பொங்குவதற்கு என்ன காரணம் ?
ரொம்ப சிம்பிள். பாலை சூடாக்கும் பொழுது, பாலின் மேற்பரப்பில் ஆடை படர்ந்து, ஆவி மேற்கொண்டு செல்ல முடியாமல் ஆவி பாலை சட்டியின் மேலே கொண்டு வருகிறது.

போதைப் பொருட்களை விரும்பி சாப்பிடுகிறார்களே அவற்றில் அப்படி என்ன டேஸ்ட்?
போதைப் பொருட்களில் நாக்குக்கு சுவை தரக்கூடிய சுவையான வஸ்துக்கள் ஒன்றும் இல்லை. அவை போதை தருவது நரம்புகளுக்கு. எல்லாவகையான போதை வஸ்துக்களும் உட்கொண்டபின் அவை நம் நரம்பு மண்டலத்தின் சில சுகமான மந்த நிலையை தருவதால் அதை சிலர் நாடுகிறார்கள்.
சிறிய சுவை குறைவான உணவை வேண்டாம் என்று, சொல்பவர்கள் மதுப்பிரியராக இருந்தால் அவர் குடிக்கும் போதை திரவத்தை வாங்கி குறைந்த பட்சம் வாசனையானது பாருங்கள் இனி ஜென்மத்திற்கும் அந்த பாட்டிலை திரும்ப வாங்கி பார்க்க மாட்டீர்கள் போதை வஸ்துகள் பயன்படுத்தும் (பணக்காரர்கள் தவிர்த்து) எல்லோர்க்கும் ஒரு தகுந்த காரணம் வைத்திருப்பார்கள்., மனைவி தொந்தரவு ஆரம்பித்து கடன் பிரச்சனை வரை.

[12]அறிவியல் கண்டுபிடிப்புகள் ஒவ்வொன்றும் திட்டமிட்டு கண்டுபிடிக்கப்பட்டதா?
உலகில் உள்ள அனேக கண்டுபிடிப்புகள் திட்டமிடாதவைகள்தான். எதையேனும் கண்டுபிடித்தாக வேண்டும் என்பது போல் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் ஆராய்ச்சிகள் மேற்கொள்வார்கள். அவ்வாறாக மேற்கொள்ளும் பொழுது அவர்கள் எதை குறி வைத்தார்களோ, அது கிடைக்காமல் வேறு ஏதேனும் ஒரு கண்டுபிடிப்பு நிகழும். அப்படி நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் ஏராளம்.
அலெக்ஸாண்டர் பிளமிங் பென்சிலின் கண்டுபிடித்தது அவரது உதவியாளர், பிளமிங்கின் மேஜையை சரியாக சுத்தப்படுத்தாமல் இருந்ததால்., எட்வர்ட் ஜென்னர் அம்மை நோய்க்கு எதிர்ப்பு சக்தி (vaccination) மருந்து கண்டுபிடித்ததும் இதே மாதிரியான ஒரு சம்பவத்தினால்தான். அதே வேளையில் மேலே சொன்னவர்கள் தங்களுடைய ஆராய்ச்சியில் இந்த மாதிரியான கண்டுபிடிப்புகள் ஒன்றை கண்டுபிடித்தாக வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர்களாக இருந்தார்கள். எடிசன் பல்பு உட்பட எல்லாவற்றையும் கண்டுபிடித்தாலும், அவரது பல படைப்புகள் வேறொன்றின் படைப்புகளுக்கிடையே கண்டுபிடித்ததுதான்.

[13]மரங்கள் அதிகமாக இருந்தால் மழை அதிகமா?
ஆமாம். மரங்கள் அடர்த்தியால் சுற்றுப்புறச் சூழல் உஷ்ணம் குறைந்திருக்கும். அதனால் வான்வெளி காற்றோட்டத்தில் மாற்றுவிளைவை ஏற்படுத்தி மேகக்கூட்டத்தை குளிர செய்து மழை ஆஜர். மழையின் வருகையால் மரங்கள் அதிகமாகி மழை பெய்து-இப்படியே ஒரு காலச்சக்கரம் நல்லவிதமாய் சுற்றும். மரம் அதிகமாக இருக்கும் இடத்தில் மழையின் தரிசனம் அதிகமே!

[14]விமானங்கள் அதிகப்பட்சம் எவ்வளவு வேகத்தில் போகுது?
உள் நாட்டுக்குள் பறக்கும் விமானங்கள் பொதுவில் மணிக்கு 600-800 கிலோமீட்டர் வேகத்தில் போகும். வியாபார ரீதியிலான ஜெட் விமானங்கள் மணிக்கு 900 கிலோமீட்டர் வேகம். 1969ல் ஆரம்பித்த கான்கார்டு விமானம் சும்மா ‘ஜிவ்’வுன்று பறப்பதில் எல்லா விமானத்திற்கும் அப்பன், மணிக்கு 2000 கிலோமீட்டருக்கு மேல், ஆனால் எரிப்பொருள் மிச்சம் ஆவதில்லை என்றதாலும், 2003ல் பாரீஸில் நடந்த ஒரு பெரிய விபத்தாலும் கான்கார்டை ஓரம் கட்டி மூடுவிழா நடத்திவிட்டார்கள். பொதுவில் விமானங்கள் 8 ஆயிரம் முதல் 12 ஆயிரம் மீட்டர் உயரத்தில் பறக்கும்.

[15]ராசி கற்களில் சக்தி ஏதும் உண்டா? அணிந்தால் அது கிடைக்கும். இது கிடைக்கும் என்கிறார்களே?
கற்கள் என்பது ஒரு வகை இறுகிய கரி. பூமிக்கடியில் பல ஆயிரம் ஆண்டுகளாக புகைந்த பல வஸ்துக்கள் பூமியின் வெப்பத்தினாலும், இன்னும் பிற சூழ்நிலைகளாலும் நன்றாக இறுகி, பெட்ரோல், ராசிகற்கள், தாதுக்கள் இப்படி பல பொருட்களாக கிடைக்கிறது. ராசி கற்கள்?!, கடைசியில் ஜோதிடர்கள் கையில் வந்து சேருகிறது. அவைகளில் விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை.
விஞ்ஞானத்திற்கு சோதனையின் மூலம் கிடைக்கும் சாட்சிகளும், ஆதாரங்களும் வேணும், இல்லையெனில் எதையும் ஒத்துக் கொள்ளமாட்டார்கள். கற்கள் அணிந்தால் பரீட்சையில் பாஸாகி விடுவீர்கள் என்று சொல்லி அதை நீங்கள் மோதிரமாக மாட்டும் பொழுது உங்கள் மனதிற்கு ஒரு ‘தெம்பு’ வருது பாருங்கள். அதுதான் இங்கே முக்கியம். இந்த பாஸிடிவ் சிந்தனை வருவதற்கு அந்த கற்கள் உபயோகப் படலாம். அவ்வளவே, ஆனால் நன்றாக படிக்காமல் போனால் எந்த இராசி கற்களாலேயும் நம்மை காப்பாற்ற முடியாது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF