Thursday, January 21, 2010

அம்மா

அம்மாக்களுள் சகாப்தம் என் அன்னை
அரவணைத்த அம் மெய் எங்கே?
ஆசை முத்தமிட்ட கன்னமெங்கே
கட்டித்தழுவிய கரங்கள் எங்கே
இன்று நீ எங்கே?

எங்கே சென்றாய் என்னருமைத் தாயே
கருவானது முதல் கண்ணுக்குள் காத்தாயே
கருணையின் உருவானவளே - என்றும்
அகிலத்தின் பொக்கிசம் தாய்
அந்தததாய்களுக்குள் நீ ஒரு சகாப்தம்!

ஏன் இந்த கொடுமை - விழி
மூடியும் திறந்தும் நான் கண்டேன்
பல கனவு பலித்திடுமா - என்று
எண்ணித் துணிகையில் நீ சென்றாய்
எமைப்பிரிந்து.

தரணிக்கும் தனயனுக்கும் நீ - ஒரு
சகாப்தமே அகிலத்தின் திருவுருவே
நீ என்றும் எப்போதும் என்னுள்............. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF