Monday, January 18, 2010

செவ்வாய் கிரகத்தில் மனிதன் குடியேறமுடியும் : அமெரிக்க விஞ்ஞானிகள்


செவ்வாய் கிரகத்தில் மனிதன் குடியேறமுடியும் : அமெரிக்க விஞ்ஞானிகள்
[ ஞாயிற்றுக்கிழமை, 17 சனவரி 2010, 09:09.47 மு.ப GMT ]



செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்துள்ளது. இதற்கான ஆய்வில் அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
இது போன்ற ஆய்வுகளை ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் விஞ்ஞானிகளும் மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தில் மனிதன் குடியேறி அங்கு வாழ முடியும். அதுவும் இந்த ஆண்டு இறுதிக்குள் அது நடைபெற வாய்ப்பு உள்ளது என்று அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் ஹூஸ்டனில் உள்ள நாசா ஜான்சன் விண்வெளி மையத்தின் விண்வெளி உயிரியல் துறையின் தலைமை விஞ்ஞானி டேவிட் மெக்கேயின் தலைமையிலான குழுவினர் இதற்கான ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

இவர்கள் சக்தி வாய்ந்த புதிய மைக்ராஸ்கோப்புகள் மற்றும் உபகரணங்கள் மூலம் எரிநட்சத்திர கற்களை பரிசோதனை செய்தனர்.

மேலும் அங்குள்ள பாறைகளையும் சோதித்து பார்த்தனர். இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் வாயுக்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. எரிநட்சத்திர கற்களை சோதித்து பார்த்ததில் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக அங்கு ஐஸ்கட்டிகளால் ஆன குளிர்ந்த பாலைவனம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பூமியில் விழுவதற்கு முன்பு 3 எரிநட்சத்திர கற்களும் 10 லட்சம் ஆண்டுகள் சூரியனை சுற்றியபடியே இருந்துள்ளது. இதற்கிடையே செவ்வாய் கிரகத்தில் இருந்து எடுக்கப்பட்ட பாறையில் நுண்ணுயிர்கள் இருந்தது. எனவே, அங்கு உயிர்கள் வாழ முடியும் என்று கருதப்படுகிறது.
இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ முடியும் என்று நாசாவிஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF