Tuesday, October 16, 2012

மேல் சிகிச்சைக்காக இன்று பிரித்தானியா செல்கிறார் சிறுமி மலாலா!

தலிபானியர்களின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த பாகிஸ்தான் சிறுமி மலாலா, மேல் சிகிச்சைக்காக இன்று பிரித்தானியா அழைத்துச் செல்லப்படுகிறார்.பாகிஸ்தானின் பழங்குடிகள் அதிகம் வசிக்கும் ஸ்வாட் மாவட்டத்தில் மிங்கோரா நகரைச் சேர்ந்த பள்ளிச்சிறுமி மலாலா யூசுப் சாயை(14 வயது ), தலிபான் பயங்கரவாதிகள் கடந்த வாரம் கொலை செய்ய முயற்சித்தனர்.
இவர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் அவருக்கு தலை மற்றும் கழுத்தில் குண்டு பாய்ந்தன.இதில் படுகாயமடைந்த மலாலா, பாகிஸ்தானில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக அவர் இன்று பிரிட்டன் அழைத்துச் செல்லப்படுகிறார்.அமைதி குறித்து பல்வேறு பேச்சுப்போட்டிகளிலும் தன்னார்வ நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்த இவர், பெண்கல்வி குறித்து பேசியதற்காக சுடப்பட்டார் என கூறப்படுகிறது.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF