Tuesday, February 2, 2010

எறும்பு

1. எறும்புக்கு 6 கால்கள் உள்ளன. ஒவ்வொரு காலிலும் 3 இணைப்புகள் உள்ளன. எறும்பின் கால்கள் மிகவும் வலிமையானவையாக இருப்பதால் அதனால் மிக வேகமாக ஓடமுடியும். ஒரு மனிதனின் உடல் தகுதிக்கு ஏற்றவாறு எந்த வேகத்தில் ஓட முடியுமோ, அதேபோல் எறும்பினாலும் முடியும். எறும்பினால் அதன் உடல் எடையைப் போல 20 மடங்கு எடையை தூக்கமுடியும்.


2. எறும்பின் மூளையில் 2,50,000 மூளைச் செல்கள் உள்ளன. மனிதனின் மூளையில் 10,000 மில்லியன் எனவே, 40,000 எறும்பு கூட்டங்களின் மொத்த முளை ஒரு மனிதனின் மூளைக்கு சமம்.

3. எறும்புகளின் ஆயுட்காலம் 45 முதல் 60 நாட்கள்.அதன் உணர்வு கொம்புகள், தொடுதலுக்கு மட்டுமல்ல, நுகர்வதற்கும்தான்.

4. இரு தாடைகள் உள்ளன. அவை ஒரு கத்திரிக்கோல் போல பக்கவாட்டில் மூடும்படி இருக்கும். பெரிய எறும்பினால் உணவை மெல்ல முடியாது. எனவே அவைகள் உணவில் திரவத்தை உறிஞ்சிக்கொண்டு திடப்பொருளை துப்பிவிடும்.

5. இரண்டு கண்கள் உள்ளன. ஒவ்வொரு கண்ணிலும் ஏகப்பட்ட கண்கள் உள்ளன. இவற்றை கூட்டுக்கண்கள் என்கிறோம்.

6. அவற்றிற்கு வயிற்றுப்பகுதி இரு பிரிவாக உள்ளது, ஒன்று தனக்கன உணவிற்கும், மற்றொன்று சக எறும்புகளுடன் பகிர்வதற்கும்.

7. எறும்புகளில் 10,000 க்கும் மேற்ப்பட்ட இனங்கள் உண்டு. ஒவ்வொன்றுக்கும் குறைந்தபட்சம் 1 அல்லது அதற்கு மேற்பட்ட ராணி எறூம்புகள் உண்டு.

8. ராணி எறும்பின் வேலை முட்டை இடுவது. அவற்றை வேலைக்கார எறும்புகள் கவனித்துக் கொள்ளும். வேலைகார எறும்புகளுக்கு இனப்பெருக்கத் திறன் கிடையாது. அவற்றின் வேலை உணவு சேகரிப்பது, சிறுசுகளை கவனித்துக் கொள்வது மற்றும் தங்கள் வீட்டை எதிரிகளிடமிருந்து காப்பது.

9. சிலவகை சிவப்பு எறும்புகளுக்கு கூர்மையான கொடுக்கு உண்டு.பிற கறுப்பு மற்றும் மர எறும்புகளுக்கு கொடுக்கு கிடையாது. ஆனால், Formic acid ஐ பீச்சி அடிக்கும். சிலவகை பறவைகளில் உள்ள ஒட்டுண்ணிகளை இந்த Formic. acid அழிக்கவல்லது.

10. எறும்புகளில் இராணுவ எறும்புகளும், விவசாய எறும்புகளும் கூட உண்டு. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF